Monday 10 October 2016

#கேள்வி இரண்டு; #பதில் ஒன்று :- -- #நகரத்தார்__மரபு__வழிப்__பண்பாட்டில் __எதிர்கொள்ளும்__சிக்கல்களும்__ தீர்வுகளும்ஒரு__பார்வை.

#கேள்வி இரண்டு; #பதில் ஒன்று :-
-- #நகரத்தார்__மரபு__வழிப்__பண்பாட்டில்
__எதிர்கொள்ளும்__சிக்கல்களும்__
தீர்வுகளும்ஒரு__பார்வை. 

#ஆக்கம் : --- மேலவட்டகை மெய் கண்டான்.

#கேள்வி :-
1.) ஆண்கள் இல்லாத பெண்கள் மட்டுமல்ல, பெண்கள் இல்லாத ஆண்களும் 60 அல்லது 80 போன்றவை செய்துகொள்கின்றார்கள், ஒற்றுமை இல்லை.
2.) அதுவும் அல்லாமல் வெளியில் வேற்று நாடுகளில், இனத்தில் திருமணம் செய்தவர்கள் படைப்பு வீடுகளை ஆட்டிப்படைக்கின்றனரே...?? தீர்வே இல்லையா ??



#பதில் :- 

ஆண்கள் இல்லாத பெண்கள் மட்டுமல்ல, பெண்கள் இல்லாத ஆண்களும் 60 அல்லது 80 போன்றவை செய்வது தேவையில்லை. மாறாக பிறந்த நாள் கொண்டாடுவதில் தவறு இல்லை.
அது அவரவர் வசதி. இந்த இடத்திலும் ஒட்டுமொத்த சமூகமும் கொண்டிருக்கும் சில நியதிகளை விடாமல் பின்பற்றலாம். அதாவது சிக்கனம் என்பதில் இன்று நமது மரபு மாறிவிட்டது.
அதுவும் இல்லாமல் மற்ற அனைத்து சிக்கல்களும் ஒற்றுமை குறைவின் இரண்டு தலைமுறை இடைவெளி.
இங்கே நாம் சமூக ஒற்றுமை என்பதில் இருந்து, வெகு தொலைவு வந்துவிட்டோம்.
ஆகவே தான் தொழில் முனைவிலும் பின் தங்கி, ஒரு சராசரி வாழ்விற்கு வந்துவிட்ட பின், நமது மரபு வழிப் பெருமைகளை நினைத்துப் பார்க்க கூட முடியாத நிலைக்கு வந்துள்ளோம்.
இரண்டு அல்லது மூன்று தலைமுறைகளில் விட்டுப்போன கட்டுக்கோப்பு, இன்று வெறும் சடங்கு என்ற மேங்கோப்பில் மட்டுமே ஒட்டி நிற்கின்றது.
நாம் யாருடன் இருக்க வேண்டும், நம்முடன் யார் இருக்க வேண்டும் என்ற தெளிவில்லாமல், பணமே முதல் என்று வாழ்வை நகர்த்துவது நகரத்தார் அழகல்ல.
மாறாக மரபு வழிக் கட்டமைப்பில் கட்டி வைத்த வரையறைகள் எல்லாம், மீறாமல் வாழ நினைப்பதுதான் முடிவான முதலாக இருக்கும். அதைத்தான் ஐயாக்களும், அப்பத்தா / ஆயாக்களும் நமக்காக காலம் காலமாய் நெறிப்படுத்தி வாழ்ந்து விட்டுச் சென்றுள்ளனர்.

இன்றோ,

அழகாய் இருக்கின்றாள் என்று, வேற்று மொழி / வேற்று நாடு / வேற்று இனம் என்று சிலர் சென்ற இடத்தில் பிடித்து வந்து, வளவிற்குள் விடுவதானாலும், இந்திய அரசியல் சட்டம் கொடுக்கும் பாதுகாப்பிலும் அப்படிப் பிறந்தவர்கள் எல்லாம், முறையாகப் பிறந்து மரபு வழிப் வந்தவர்களை, எல்லாம் அற்றுப்போனது போல நடுத்தெருவில் நிற்க வைத்துள்ளனர்.
பல ஊர்களில் மரபு வழி வந்த குடும்பப் பெயர் என்பதை எப்படியோ, எங்கிருந்தோ வந்தவர்கள் அரசியல் சட்டம் கொடுக்கும் பாதுகாப்பில் மட்டுமே சூட்டிக்கொள்வது முறையற்றது.
காரணம், முறையாக தமிழ் இனக்கூறுகளில் பிறந்த நகரத்தார் பெண்ணிற்கும் நகரத்தார் ஆணிற்கும் பிறந்தவர்களுக்குத்தான் குடும்பப் பெயர் கொள்ள முடியும். இடையில் இடைச் செறுகளாக வந்தவர்கள் அந்தக் குடும்ப அடையாளத்தை திருடுவதற்கோ, களவு செய்வதற்கோ தார்மீக அருகதையற்றவர்கள் ஆவார்கள்.
மேலும் ஒருவன் செய்த ஒரு தவறுக்காக அதற்கு தொடர்பே இல்லாத ஐயாக்களின் / அப்பத்தா - ஆயாக்களின் குடும்ப மரபு வழிப் பெயரை, செட்டிக்குப் பிறந்த ஒரே காரணத்தால் அடைய முடியாது. அதற்கு கிஞ்சித்தும் உரிமையும் கிடையாது.
பணம் / காவல்துறை / அரசியல் என்ற ஒன்றை மட்டுமே வைத்து, வல்லடியாய் மாற்றார் அடையாளங்களை அடைவது, முடவனின் கைகளைக் கட்டி கத்தியால் குத்தி வெற்றி கண்ட கயமை மட்டுமே.
இன்று நகரத்தார் சமூகத்தில், தமிழர் மரபு சாராத, ஒட்டி வந்த வாரிசுகள், நிறம் / பணம் / செல்வம் / அரசியல் பலம் / காவல் துறை வைத்து, நகரத்தார் பங்காளிகளை மிரட்டி படைப்பு வீட்டைக் கைப்பற்றுவதும், அதனை துப்பாக்கி முனையில் பட்டா மாற்றுவதும், போலி தன்னைத்தானே அசலாக நினைத்துக்கொள்ளும் மடமையைத் தவிர வேறு இல்லை.
கோழைகளாய் இருக்கும் நகரத்தார்களையும் ஏழைகளாய் இருக்கும் பங்காளிகளையும் மிரட்டிப் பணியவைக்கலாம், தலையில் துப்பாக்கி வைத்து சரிக்கட்டலாம் -- மனதில் வைத்துக்கொள்ளுங்கள்....!!!!


 படைப்பு தெய்வங்கள் ஒரு போதும் ஒட்டி வந்த வெட்டி வெடுவாலிகளை ஏற்காது.
பகட்டாக வந்து பட்டா கத்தகிகளை வைத்து மிரட்டி பொங்கல் வைப்பதனால் மட்டுமே படைப்பு தெய்வங்கள் மனமிறங்காது.
தங்களின் உண்மை வாரிசுகளை வதைத்து அடையாளம் மாற்றி ஆட்டிப்படைக்கும் வந்தேறிகளை ஒரு போதும் தெய்வங்கள் ஏற்காது. காலத்தால் பதில் வந்து சேரும். அந்த நிகழ்வுகளை படைப்பு தெய்வங்கள் காற்றாக / ஊற்றாக வந்து, காலத்தால் செய்து முடிப்பார்கள். அதுவரை முறைவழி வந்த குலக்கொடிகள் காத்திருக்கத்தான் வேண்டும். விலைபோகவேண்டாம்.
அதுவும் அல்லாமல்,ஊரில் ஊடுருவிய பிறப்புகள், படைப்பு வீடுகளை மிரட்டிப் பட்டயம் வாங்கினால், அதற்குத் துணைபோகும் பங்காளிகளை சேர்த்து ஊர்ப் பங்காளிகளிடம் முறையிட வேண்டும், அதுவும் அல்லாமல் அந்தக் குறிப்பிட்ட பங்காளிகள் தங்களின் கோவில் பிரிவு காரியாக் காரர்களிடம் பிராது கொடுக்க வேண்டும்.
இதனை தனி ஒரு பங்காளியாகவும் செய்யலாம். பிராது கொடுக்கும்போது, தங்களின் உயிர் - உடமைகளுக்கும், பாதுகாப்பற்ற நிலையினையும், தாங்கள் எந்த ஊர், எந்தக் கோவில்பிரிவு, எந்த கரப்பிரிவு என்பதனையும் விளக்கமாக சொல்லித்தான் பிராது கொடுக்க வேண்டும்.
கோவில் காரியக்காரர்களும், தங்களின் முதலாவதும், தலையாயதுமான கடமையாக, தங்கள் கோவில் பங்காளிகளின் முறையீட்டை சீர்தூக்கி, அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளையும், விசாரணையும் மேற்கொள்ள வேண்டும்.
பல இடங்களில் ஊடுருவிய போலிகள், சிலபலருக்கு கல்லூரி சீட்டு தருகின்றார்கள், அதற்காக சரிக்கட்டலாம் என்றோ, அல்லது மேடையில் பேச்சாளர்கள் புகழ்ந்து பேசுகின்றார்கள், ஆகவே வந்தேறிகளும் செட்டிக்குப் பிறந்தவர்கள் தான் என்றும் நினைப்பது கோவில் முறைமைகளுக்கும், நகரத்தார் கட்டமைப்புகளுக்கும் எதிரானது, தவறானது.
மேடைப் பேச்சாளர்களை சிந்தனையாளர்களாகவோ, தர முத்திரை குத்தும் நியாயஸ்தர்களாகவோ கருதுவது அவலம். மேலும் இவர்களை போன்றவர்களை பணம் படைத்தவர்கள் பணம் கொடுத்து விலைக்கு வாங்கிவிட்டால்..., தமிழில் பேசும் ஒரே திறமையினை வைத்து, பணம் பண்ணுபவர்கள், ஒரு லெட்டர்பேடை எடுத்து பக்கம் பக்கமாக எழுதி இவரும் நகரத்தார் தான் என்று ஏழைகளை ஏமாற்றுவதற்கும், பண முதலைகளை சரிக்கட்டுவதற்கும் துணிந்து விடுவார்கள்.
மற்றபடி, இவர்களைப் போன்றவர்களால் நகரத்தார் கட்டமைப்பிற்கு பாதகம் மட்டுமே வரும். பிரச்சினைகளில் இருந்து மீள முடியாது.


பிரச்சினைக்கு தீர்வு என்ன ??

எல்லோரும் விமர்சிக்கின்றனர், யாரும் தீர்வு சொல்லவில்லை என்று சந்தடியில் நியாயமான கேள்வி எழுப்பும் சில பல நாட்டாமைகள், கூடவே சொல்வது, இளைஞர்கள் எதையும் பொறுமையாகக் கையாள வேண்டும். உணர்ச்சிவசப்படுதல் கூடாது.
நிகழ்ந்த தவற்றிற்கு இப்போது உள்ளவர்கள் எப்படி காரணம் ஆவார்கள் ?? தந்தை செய்த தவற்றுக்கு இன்று உள்ளவர்கள் என்ன செய்வார்கள் ??
மேலும் அவர்கள் வலிமையாக இருப்பதனால் அனுசரித்துப்போகலாமே, அல்லது பிரச்சினையில் மாட்டாமல் கடந்து செல்லலாமே...???

இப்படி நமது சந்ததியில் விஷமிறக்கி இளைஞர்களை, அவர்களின் நியாயமான கேள்விகளை, வெள்ளமாய் வடியவிட்டு, ஒரு சிலருக்கு கிடைக்கும் ஒரு சில கல்லூரி சீட்டுகளுக்கும், ஒரு சில லெட்டர்பேடு மேடைப் பேச்சாளர்களுக்குமாய், ஒட்டு மொத்த சமூகத்தையும் தமிழர் மரபு சாராத துரோகக் கூட்டத்திடம் ஒப்படைப்பது என்பது, சொந்த வீட்டில் கண்ணம் வைப்பதே.
சரி இவர்கள் செய்யும் மடைமாற்றம் என்ன ?? ஒவ்வொரு கேள்விக்காய் விடை காண்போம்.

1. எல்லோரும் விமர்சிக்கின்றனர், யாரும் தீர்வு சொல்லவில்லையே....!!!!

முதலில் பிரச்சினைகளை / நிகழ்வுகளின் அடிப்படையில் விவாதிக்க வேண்டும். ஆனால் இங்கே நாட்டாமை செய்பவர்கள் என்னவோ விவாதிப்பதே இல்லை. மாறாக கேள்வி கேட்ப்பவர்களை முடக்குவதும், பேசவிடாமல் செய்வதுமே முனைப்பாக உள்ளதால், இளைஞர்கள் சொல்வது அவர்களுக்கு வெறும் விமர்சனம் என்று மட்டுமே தெரிகின்றது.
அதுவும் அன்றி விமர்சனம் இல்லாமல் அடுத்த கட்டத்திற்கு நகர முடியாது. விமர்சனங்கள் நாட்டாமைகளுக்குப் பிடிக்காது. இது இயல்பே.


2. தந்தை செய்த தவறுக்கு இன்று உள்ளவர்கள் என்ன செய்வார்கள் ??

அது சரிதான். தந்தை செய்த தவறுக்கு இப்போது உள்ளவர்கள் என்ன செய்வார்கள். ஆனால் குடிவழி முறைமைகள் என்பது எல்லா நாடுகளிலும், எல்லா இனத்திலும்,எல்லா சமூகத்திலும் உள்ள ஒன்றுதான். ஆகவே ஊடுருவிய ஒரே காரணத்தை வைத்தும், அவர்கள் தரும் சிலபல சலுகைகளை வைத்தும் தமிழர்களாய், தமிழ் குடியில் என்றென்றும் மகுடமாய் மதிக்கப்பட்ட நகரத்தார்கள், சம்பந்தமே இல்லாத ஒருவரை ஏற்கலாமா ?? அதற்கு என்ன வகையான நியாயம் உள்ளது ???

3. மேலும் அவர்கள் வலிமையாக இருப்பதனால் அனுசரித்துப்போகலாமே, அல்லது பிரச்சினையில் மாட்டாமல் கடந்து செல்லலாமே...??? 

இங்கேதான் நாட்டாமைகளின் துலாக்கோல் ஒரு பக்கமாய், அதுவும் வெள்ளை நிறம், கொள்ளைப்பணம், அரசியல் சவடால், காவல்துறை மிரட்டல், தூக்கிப்போட்ட பணத்திற்கு எழுதும் லெட்டர் பேடு அறிஞர்கள் சகிதமாய் நியாமற்றதை நியாயப்படுத்தும் வக்கிரம் ஒளிந்துள்ளது. என்ன செய்வது ...?????
பிரச்சினையிலும் மாட்டாமல், மேற்படி முறையற்ற ஊடுருவலை சந்தடியில்லாமல் சபையில் அரங்கேற்றிவிட்டால் அது உண்மையாகிவிடுமா..??? இப்படி கடந்து செல்லும் கயமை உள்ளவர்கள் தான், சமூகத்தின் ஒட்டுமொத்த வீழ்ச்சிக்கும் காரணம். கடந்து செல்லக்கூடாது. எதிர்கொள்ள வேண்டும் என்பதை மனதிற் உறுதியாகக் கொள்ள வேண்டும்.
மேற்படி முறையற்ற சிந்தனைகளுக்கு காரணம் எப்படியோ வாழ்ந்தால் போதும் என்று நினைப்பதும், பணம் இல்லை - இன்று சங்கத்திலோ, அல்லது நகரத்தார் அமைப்புகளிலோ பரிவட்டம் காட்டினால் மேற்படி ஊடுருவல் ஏவலர்கள் ஏதாவது நமக்கும் செய்வார்கள் என்று, கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேல் ஓடியதால்தான் - இன்று புதிது புதிதாய் நகரதர்களுக்கு சேவை செயகின்றேன் பேர்வழி என்று பத்திரத்தில் பதிந்து, கூட்டமைப்பாக வந்து, எல்லோரும் கடந்து செல்லலாம், பிரச்சினைகளை எதிர்கொண்டால் வம்புதான் என்று நயம்புள்ளிகள் நட்டுவாங்கம் செயகின்றனர்.

சரி அப்படியென்றால் எழுதும் உங்களிடமும் தீர்வு இல்லைதானே...????

ஆம், என்னிடமும் தீர்வு இல்லை, காரணம் எல்லாவற்றிற்கும் தீர்வை செய்து, ஆய்ந்து, உணர்ந்து அறிந்து தீர்வு சொன்னவர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளாய் கோவில்பிரிவு, உட்பிரிவு என்று வாழ்ந்து காட்டிய நமது பாட்டன் மார்களே....!!!!! ஆகவே எழுதும் நானும், இன்னும்பல ஏழை எளிய , பரிவட்டம்தரிக்காத உண்மை நகரத்தார்கள் யாரும் தீர்வு சொல்ல வேண்டாம்.
ஏற்கனவே தீர்வு சொல்லி வைத்துள்ளார்கள். இதுகாறும் வாழ்ந்து, உணர்ந்து, பட்டறிந்து பெற்ற அனுபவத்தை நியமங்களாய், சட்டகமாய் சாற்றியுள்ளதை தொடர்ந்தாலே போதும். அதுவே தீர்வாக உள்ளது.

அது என்ன ??

தகப்பன் செய்த தவறுக்கு, பிள்ளையை தண்டிக்கவில்லை, மாறாக குலவழி பெருமைகளை அடைவதற்கு உரிமை இல்லை என்றுதான் சொன்னார்கள். அதனால்தான் ஒருவன் செய்த தவற்றை அவனோடு வைத்துவிட்டு, இருக்கின்ற உண்மை வாரிசுகளுக்கு மட்டுமே படைப்பு, மரபு வழி குலப்பெருமை ஆகியவைகளை கோயில் மாலை என்றும், கோயில் காரியதானத்தில் உள்ளவர்கள் மரபு மீறாமல் வருகின்ற பிராதுகளை ஏற்று, அறம் பிறழாமல் நீதி சொல்வது. ஆகவே புதிதாக சிந்தித்து தீர்க்க வேண்டியது எதுவும் இல்லை. எல்லாம் உள்ளது. மனதில் நேர்மை மட்டுமே வேண்டும்.

சரி, இதற்கு நாம் என்ன செய்ய முடியும் ?? இந்திய அரசியல் சட்டத்தில் பாபிக்கு கொடுக்க வேண்டும் என்று உள்ளதே...???

இந்திய அரசியல் சட்டம் என்பது சொத்து என்ற ஒற்றை சொத்தை மட்டுமே குறிவைக்கும் சொத்தை மட்டும்தான்.
அதாவது, பணத்தையும், வீடு,பொருள் ( அசையும் / அசையா ) மட்டுமே. அப்படியிருக்க, உலகம் முழுக்க எத்தனையோ இனங்களில், பற்பல இனக்கூறுகள் உள்ளன. அதாவது சாதி அல்லது இனக்குழுக்கள் என்று அதனை அறிஞகர்கள் சொல்கின்றனர் ( மேடைப்பேச்சாளர்களோ/ லெட்டர் பேடு அறிஞர்களோ அல்ல ). அவர்களுக்கான அகமண முறைமைகள், சடங்குகள், மரபு வழி பண்பாட்டு உரிமைகளை தடுப்பதற்கோ, கெடுப்பதற்கோ உரிமைகள் கிடையாது என்றும் ஆய்ந்து தெளிந்துள்ளனர்.
அதுமட்டுமல்லாமல், உலக பண்பாட்டு அமைவனம் இதற்கான தெளிவான வரையறைகளும் செய்துள்ளன. இதே நியதிகளை இந்திய அரசியல் சட்டமும் கொண்டுள்ளது. அதன்படி மரபுவழி பண்பாட்டு நிகழ்வுகளில் ஒட்டுமொத்த இனக்குழுகைளை விடுத்து, மாற்று பண்பாட்டுடையவர்கள், கலப்புற்றவர்கள் உரிமை கோரமுடியாது.
காரணம் பண்பாட்டு விழுமியங்கள் அசையும் / அசையா சொத்துக்களோ அல்லது உடமைகளோ அல்ல. இதனை ஏழை எளிய நகரத்தார்களுக்கு, பணம்படைத்த நகரத்தார்கள் எடுத்துச் சொல்ல வேண்டும். அதனை விடுத்து,
ஒரு சில கல்லூரி பொறியியற் பட்டபடிப்புகளுக்காய் ஒட்டுமொத்த சமூகத்தையும் மாற்றானிடம் ஒப்படைப்பது மடமை அல்ல, கயமை.

சரி, கலப்பில் பிறந்த குழந்தைகள் தந்தை வழியில் தானே அடையாளம் காணப்படுவார்கள், அப்படியெனில் தந்தை வழி வந்தவர்களை செட்டிக்குப் பிறந்தால் செட்டி என்று நாம் ஏற்கலாமா ??

முடியாது.

அப்படி தந்தை வழி பிறந்த, தமிழ் இனக்குழுக்களில் மணமுடித்துபிறந்த எத்தனை பேரை நீங்கள் கோயில்மாலை கொண்டு ஏற்றுக்கொண்டீர்கள் ?? அதாவது, மாறிவிட்ட அரசியல் சூழலில், இருக்கின்ற அரசியல் அதிகாரத்திற்குப் பணிந்து இப்படி நயந்து போவது எந்த வகை நியாயம் ?? வெள்ளைத்தோல், கொள்ளைப்பணம் என்பது ஒரு இழிவுதான். பெருமையல்ல.

அப்படிப் பார்த்தாலும் கூட, உங்களால் விடுபட்டவர்களை அழைத்து வந்து மீண்டும் சேர்த்துக்கொள்ள முடியுமா ??? சரி, இன்று சட்டதிட்டங்களை மாற்றிவிட்டால் எல்லாம் சரியாகிவிடுமா என்ன ??

இல்லை, மாறாக தற்போதைய சூழலில் எங்கள் பிள்ளைகள் உள்ளூரில் உள்ள கருப்பான தமிழச்சிகளை தேடவில்லை, ரெட்டிகளையும் ரொட்டிகளையும், நாயுடுக்களையும், நாயர்களும், சீனர்களையும் கொண்டுவருகின்றார்கள், ஆகவே உள்ளூரில் இந்தியாவில் வேற்று மாநிலத்தவரை முதலில் மெதுவாக நுழையவிட்டால், இனி எல்லாம் சுகமே, என்று சுபம் போட்டுவிடலாம் என்று மனப்பால் குடிப்பதுதான் தவறு.

தந்தை வழியில்தான் குழந்தைகளுக்கு இனக்குழு அடையாளம் என்பது கிடையாது.


இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால், தந்தை வழியில் வந்த ஒரே காரணத்திற்காக குலவழி பெருமைகளையும், அடையாளத்தையும் தாரை வார்க்க முடியாது. அதாவது பட்டனுக்குப் பிறந்தவர்கள் பட்டினத்தார் அடையாளத்தை களவாட முடியாது.

துணை போகும் நாட்டாமைகளை அப்படியே ஏற்கவும் முடியாது.

--- அருள்மிகு நித்ய கல்யாணி உடனாய கைலாச நாதர் துணை.
--- மேலவட்டகை மெய்கண்டான்.
       09-10-2016.

No comments:

Post a Comment