Thursday 24 September 2015

கொண்டி என்றால் என்ன ???








கொண்டி என்றால் என்ன என்று எனது நண்பர் அலைபேசியில் கேட்டார்.
அவருக்கு எனது #பதில்:-

கொண்டி என்றால் பணம் அல்லது கைப்பொருள் - முதலீடு என்பதாகும்.

பண்டமாற்றுப் பொருளாதாரம் பணம் - அதாவது காசு என்ற நாணய செலாவணிக்கு மாறியபோது வந்த தமிழ் வழக்குச் சொல். தொன்றுதொட்டுநாட்டுக்கோட்டை நகரத்தார்கள் கடலாடி அயல் நாடுகள் சென்ற போது தங்களின் முதலீடுகளாகக் கொண்டிருப்பவையே கொண்டி எனப்படுவது.


நாட்டுக்கோட்டை நகரத்தார் வீடுகளில், சென்ற கணவன் அங்கேயே இறந்து போனால் கொண்டிவிற்கச் சென்ற கணவனை நினைத்து இந்தச் சொல்லாட்சிகளுடன் கூடிய அழகிய ஒப்புமை இல்லா இறங்கற்பாடல்கள் தன்னுணர்ச்சியாய் வெளிப்படுத்தியுள்ளனர் ஆச்சிமார்கள்.


கணவன் கொண்டி விற்க கப்பலேறிய பின், அவனைப் பிரிந்து வாடும் ஆச்சி, மகனையோ அல்லது மகளையோ மடியில் கிடத்தி உறங்க வைக்கப் பாடும்தால்லாட்டுப் பாடலிலும் இந்தச் சொல்லைப் பயன்படுத்தி தன் குழந்தைக்கு கணவன் சென்ற காரணத்தை நல்ல தமிழில் பாலூட்டுவது போல் தமிழை குழந்தையின் செவிகளில் ஊட்டுவாள்.


சொல்லிய தமிழும், பாடிய பாடலும் எங்கள் நகரத்தார் வீடுகளின் தூண்களில் எதிரொலித்து ஆண்டாண்டுகளாய் கொண்டிருக்கும் உணர்வுகளை, கர்ணம் (காதுகளைக் கொண்டிருக்கும் சிற்பத் தூண்கள் ) வைத்த வளவுத் தூண்கள் சங்கப் பலகைபோல் பதித்திருக்கும். பண்பாட்டின் வேர்களுக்கும் விழுதுகளாய் தன் கால்பதித்து நிற்கும் விழுமியங்களே அவை என்பதை இன்றைய தலைமுறை செவிமடுக்காமல் போவதென்ன ?????

கோயில் மாடு - கொண்டி மாடு என்று இரண்டு வகை உண்டு. கோயில் மாட்டிற்கு விலை கிடையாது. கொண்டி மாட்டிற்கு சந்தையில் விலை உண்டு. அடங்காத மாடு என்பதற்கும் வாய்ப்புண்டு. சந்தைக்கு போகும் மாடு நமக்கு இல்லை என்பதே அது. கொண்டி என்பது பொருள், கைப்பணம், முதலீடு, செலாவணி,அடக்கமுடியத.

வேணும் அருள்மிகு பொய்சொல்லா மெய்யர் துணை.


---- நெற்குப்பை காசிவிசுவநாதன்.

Tuesday 22 September 2015

நெருஞ்சி_முள்ளும், #மென்று விழுங்கும் #வெற்றிலை__பாக்கும் நெருடிக் கொண்டுதானிருக்கும்.

#நெருஞ்சி_முள்ளும், #மென்று விழுங்கும் #வெற்றிலை__பாக்கும் நெருடிக் கொண்டுதானிருக்கும்.

நாட்டுக்கோட்டை நகரத்தார் சமூகத்தை குறிவைக்கும் வடுக நாயர்களையும், வடுக நெல்லிகளையும் எப்படி அனுசரித்து வாழ்வது என்று சிந்திக்கும் நாட்டுக் கோட்டை நகரத்தார்களுக்குப் பதியப்பட்ட பதிவு. நேருடலாக இருக்கின்றது என்று நினைப்பவர்களுக்கு எழுதப்பட்ட பதிலுரை:-



#நெருடலாக இருப்பதை அப்படியே பார்த்துக்கொண்டு இருந்து, பின்னர் எழுத்தில் இடித்துரைத்தால் சமூகம் கெட்டுவிடும் என்ற வகையான உளவியல் தாக்கம் என்பது நம்மவர்களிடம் சில பலரிடம் உள்ளது.
எதுவாகிலும் நல்லிகளையும், நாயர்களையும் வெட்கமின்றி நமதுஇனக்குழு சார்ந்த பத்திரிகைகளில் வெளியிட்டு பரிவட்டம் கட்டி, நமது கோவில்களில் அனுமதித்து, விழா நிகழ்ச்சிகளில் அரங்கேற்றி, கட்டிட நிதி வாங்கி பின் அவர்கள் பெயரை நமது ஐயாக்கள் அடிக்கல் இட்டு கட்டிய அற நிலையங்கள் அனைத்திலும் வெட்கமின்றி போட்டுவிட்டு, பின்னர் இதன் அடிப்படை உரிமைகளை முறையாகப் பிறந்தவர்கள் கேட்காமல் யார் கேட்பது ???
முறையற்ற வன்மங்கள் திட்டமிட்டு அரங்கேற்றம் செய்யப்படுகின்றன. படைப்பு வீடுகளில் இனக்குழு சாராதவர்களை புள்ளிக் கணக்கில் இல்லாதவர்களை பரிவட்டதாரிகள் வந்து கலக்க விடுவதில் இனிமேல் என்ன இருக்கின்றது???? 

நெருடல்களை மென்று விழுங்குவதால் செரிமானம் ஆகிவிடும் என்று நம்பினால் இனிமேல் இந்தப் பீற்றல் வகையான பெருமைகளை தவிர்த்துவிடலாம். #நெருஞ்சி_முள்ளும், #மென்று விழுங்கும் #வெற்றிலை__பாக்கும் நெருடிக் கொண்டுதானிருக்கும்.
கண்களைக் கட்டிக் கொண்டிருந்தால் செரித்துவிடாது, இல்லை அப்படியே விட்டுவிட்டால் #நம்மையே__அரித்து__செரித்துவிடும். எழுதுவதை தவிர்ப்பது எந்த வகை நியாயம் என்பதை உறவுகள் சிந்திக்கட்டும்.
வேணும் அருள்மிகு பொய் சொல்லா மெய்யர் துணை.

---- நெற்குப்பை காசிவிசுவநாதன்.

Sunday 20 September 2015

படைப்பு :




நம் வேள்வணிகர் நகரத்தார் பழக்க வழக்கங்களில் மிகவும் தொன்மையான ஒன்று படைப்பு வழிபாடு. நம் வீட்டில் வாழ்ந்து காலத்தால் இறைவனடி சென்ற நம் வீட்டின் மூதாதையர்களை நினைத்து ஆண்டிற்கு ஒருமுறை அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை என்று, கருப்பட்டிபணியாரம் / பாற்சோறு /சைவ(மரக்காய்கறிகள்) /அசைவம் என்று மூதாதையற்கு பிடித்த வகை உணவுகளை சமைத்து கோடிச்சீலை கோடிவேட்டி மூதாதையர்கள் அணிந்து கொண்ட ஆபரணங்களை வைத்து வழிபடப்படும் வழிபாடு .இந்த வழிபாடு நம் வாழ்வில் நல்லது கெட்டது என்று அனைத்திலும் படைப்பு வழிபாடு என்பதற்கு ஒரு முக்கிய இடம் கொடுக்கப்படும். நம் செட்டிநாட்டுப் பகுதிகளுள் பல பிரபலமான பெரும் படைப்புகள் நிகழ்த்தி வழிபாடுகள் செய்யப்பட்டு வருகின்றனர். அடக்மையாத்தாள் படைப்பு / சோனையன்கோவில் படைப்பு / தெய்வானையாத்தாள் படைப்பு / இராசாத்தாள்படைப்பு / மங்களகாரிபடைப்பு /அக்கினியாத்தாள் படைப்பு என்று பற்பல படைப்பு விழாக்கள் நகரத்தார் ஊர்தோறும் நிகழ்ந்து வழிபாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. இன்றும் இந்த படைப்பு வழிபாடு எந்தவொரு தொய்வின்றி சிறப்பாக பாரம்பரிய முறையில் முடிந்தவரை நிகழ்த்தி வருகின்றோம்.



‪#‎படைப்பு_யாரால்_யாருக்கு_நிகழ்த்தப்படுகிறது_‬???
பெரும்பான்மையான படைப்பு என்பது தமிழ் சமூகத்தின் அங்கமாக விளங்கும் நம் நகரத்தார் வழிதோன்றல்களில் பிறந்து வாழ்ந்து காலத்தால் இறைவனடி சென்ற ஆணையோ பெண்ணையோ நினைத்து வழிபடப்படும் வழிபாடு. இந்த வழிபாட்டை படைப்பு தெய்வத்தின் வழியில் வந்த நகரத்தார் ஆணுக்கும் நகரத்தார் பெண்ணுக்கும் பிறந்த வழித்தோன்றல்கள் இந்த வழிபாட்டை மேற்கொள்வர். இந்த வழிபாடு மூதாதையர் வாழ்ந்த அதே ஊரில் அவர்கள் வாழ்ந்த வீட்டில் நிகழ்த்துவார்கள் படைப்பு வழிபாடு நிகழ்த்தக் காரணம் தங்கள் வாழ்வு சிறக்கவும் குடி தழைக்கவும் நிகழ்த்தப்பெரும் வழிபாடு.
‪#‎இன்றைய_படைப்பு_வீட்டின்_நிலை‬ :
நம் வேள்வணிகர் நகரத்தார்கள் இன்றும் படைப்பு வழிபாட்டை கைவிடாமல் மேற்கொள்கின்றனர். வெகுசிலர் வெள்ளை நிறமோகத்தால் தங்கள் சமூகத்தையும் மறந்து தமிழர் அடையாளம் சாராத நாயர் /நாயிடு /சவுராஷ்டிர வகைகளில் தங்களின் சுய ஆசைக்காகவும் தேவைக்காகவும் தங்கள் அடையாளம் மறந்து வெளியில் சென்று திருமணம் முடித்து வாழ்வு நடத்துபவர்களாக இன்று உள்ளனர். வெளியில் சென்று கட்டிவந்தது / ஓட்டிவந்தவைகள் எல்லாம் எப்படி புள்ளியாக கணக்கில் கொள்ளமுடியும் இதுபோன்றவர்களை முன்பு வீட்டு விழாக்கள் / படைப்பு என்று எதற்கும் அழைக்கமாட்டார்கள் அப்படியே அழைத்தாலும் அவர்களும் விழாவில் கலந்துகொள்ள தயங்குவர் ஆனால் தற்போது நகரத்தார்கள் இதுபோன்ற கலப்புகளை இரத்தின கம்பளம் விரித்து தங்கள் வீட்டின் திருமணம் விழாக்கள் முற்றோதல்கள் போன்றவற்றில் நடுவளவும் வரை கொண்டுவந்து வைத்து அழகுபார்கின்ற சம்பவங்கள் ஆங்காங்கே நிகழ்கின்றது .அது அவரவர் தனிப்பட்ட விருப்பம் .இதனை தொடர்ந்து இதுபோன்ற நாயர் நம்பூதரி வகை/ நாயிடு ரெட்டி சௌராஷ்டிர கன்னட கலப்புகளை தற்போது படைப்பு வீட்டின் உள்ளே அனுமதித்து இந்த வகை பெண்பிள்ளைகளையும் நிறத்தின் மோகத்தாலும் தன் சுயதேவைக்காக வெளியில் ஆண்மகனை தேடிச்சென்ற பெண்பிள்ளைகளும் படைப்புக்கு பாணியார மாவு இடிக்கவும் / பணியாரம் ஊத்தவதும் / படைப்பு தெய்வத்திற்கு சமயல் வேலை செய்யவும் சில இடங்களில் அதிகாரத்தில் உள்ள நகரத்தார்கள் அனுமதிக்கின்றனர் இதன் நோக்கம் என்ன ??? ஆக நிறத்திற்காக வெளியில் சென்று தமிழர் அடையாளம் சாராத கூட்டத்தில் வெளியில் திருமணம் முடித்து தன் சமூகத்தின் வரைமுறைகளை கட்டுடைத்து வெளியேறிய கூட்டத்தை புள்ளியாக்கும் முயற்சியாக இது நிகழ்கிறதா ??? அதோடு ஒரு மரபுசார் தெய்வத்திற்கும் அந்த மரபுசார் வழியில் வந்த ஆணோ பெண்ணோ அந்த பூசையில் ஒன்றிணைந்து படைப்பு வேலைகளை செய்யும் போது அந்த படைப்பு படைப்பதன் நோக்கம் நிறைவேறும். இப்படி வெளியில்இருந்து இழுத்து வந்ததைகளை படிதாண்டி ஓடியவைகள் ஒட்டிவந்தவைகளை படைப்பு வழிபாட்டில் அனுமதித்து இந்த கூட்டத்துடன் கைகோர்த்து படைப்பு படைப்பதன் மூலம் நாம் படைக்கும் படைப்பின் நோக்கமே அங்கு மறைந்து (பயனற்று ) போகிறது. ஏன் இதுபோன்ற செயலை ஆதரிக்கும் நகரத்தார்களுக்கு இவைகள் ஏன் உரைக்கவில்லை ??? இதுபோன்ற செயல்கள் மூலம் தன் சமூகத்தின் பண்பாட்டு அடையாளங்களை தங்கள் சுயதேவைக்காக சிதைத்து கட்டுடைக்கும் தடிக்கோல் கூடத்திற்கும் நம் படைப்பு தெய்வங்கள் இதுபோன்ற துர்சிந்தனைகளை மாற்றி நற்சிந்தனைகளை விதைக்கச் செய்யட்டும். இதுபோன்ற செயல்கள் எல்லாம் படைப்பு வீட்டிலும் தற்போது நிகழ்வது இல்லை பெரும்பான்மையான இடங்களில் மிகுந்த கவனத்துடன் பக்தியுடன் இனச் சிந்தனையுடன் நடத்துகின்றனர். ஆனால் ஒரு சில இடங்கலில் இதுபோன்ற வெடுவாளிக் கூட்டத்தை உள்ளே விட்டு பண்பாட்டை சிதைக்கும் செயல்கள் தலைதூக்கியுள்ளது. இவற்றை நாம் இன்று கண்டுகொண்டு கிள்ளியெறியா விட்டால் இந்தப் புல்லுருவிகள் எல்லா இடத்திலும் பரவி முளைக்கும் என்பதை நினைவில் கொள்வோம். நம் வீட்டு படைப்யு தெய்வத்தின் அருளால் இவைகளை கிள்ளியெறிவோம்.
வேணும்
‪#‎பெரியகருப்பர்_துணை‬
-----------கரு.இராமநாதன் வேள்வணிகன்

சத்குருவின் பேச்சில் எழுந்த கேள்வியும் அதற்கு பதிலும்

கேள்வி : ////////////சத்குரு அவர்கள் தனது உரையின்போது, “சிறிய சமூகமே ஆனாலும் தன் கால்தடங்களை பரவலாக பதித்துள்ள ஒரு சமூகம் நகரத்தார் சமூகம். புதிய தலைமுறைக்கு, புதுவிதமாய் அறிவை வழங்கும் ஒரு பாரம்பரியம் நமக்கு தேவை. பழையதை பற்றிப் பேசுவது பாரம்பரியம் அல்ல, மாறாக புது சாத்தியங்களைத் தேடி அறிவதுதான் பாரம்பரியம்,” என்றார்.////////// எல்லாம் சரி நகரத்தார் சமூகவிழாவில் ஏன் வெளியாட்கள் நகரத்தார் சமூகத்தை சாராதவர்கள் கலந்துகொள்ளவைப்பதன் நோக்கம் என்ன ??? பழமையை மட்டும் யாரும் இங்கு பேசவில்லை அதன் மூலம் முன்னோர்கள் அடிச்சுவட்டில் நடைபயணம் மேற்கொள்ள அது ஒரு அடிக்கோளாக அமையும் பழமையை பேசுவது பாரம்பரியம் இல்லை என்று கூறக்காரணம் என்ன ??
-------------கரு.ராமனாதன் வேள்வணிகன்

பதில் : பாரம்பரியம் என்பதன் பொருளே முன்னோர் காத்த பண்பாட்டினை கடைபிடிப்பது அதனோடு நகரத்தார் ஏற்கத்தக்க புதிய பண்பாடுகள் இணைக்கப்படலாம் அதனை விடுத்து புதியதை கைக்கொள் என்று சொல்வது மரபழிப்பு தூண்டுதலாகும் வஞ்சனையொடு நஞ்சு ஊட்டபட்டிருக்கிறது

இது குழுமச் சாமியார் சத்குரு தவறல்ல அழைத்தவர்கள் தவறு நமது பண்பாடான பிள்ளையார் நோன்பு , படைப்பு,குலதெய்வ வழிபாடு ,கோவில்களில் திருப்பணிகள் , செவ்வாய் பொங்கல் ,மகர்நோம்பு இவற்றை விட்டுவிட்டு இவருடைய இசை என்னும் புதியபண்பாட்டு வெள்ளத்தில் மூழ்கி காணாமல் போகவேண்டுமா அன்மைக்கால பட்டினத்தார் ,பாடுவாரும் தொன்மையான இயற்பகை நாயனார் காரைக்கால் அம்மையாரும் இன்னும் பல நகரத்தார் பெரியோர்களும் சொல்லிச்சென்ற பாரம்பரிய பண்பாடு காத்து கோவலன் கண்ணகி வழிவந்த நம் குலம் சிவ சிந்தையோடு தழைக்கவேண்டும்

இவர் போன்ற செல்வதில் புரளும் தெண்டுல்கர் விளம்பர குழுமசாமியார்களின் பின் செல்லல் நகரத்தார்கு அறிவுடமையாகாது தீங்கு விளையும் எச்சரிக்கை அவசியம்
------------சந்திரசேகன்  v

தமிழர்அடையாளம் காப்போம்:(கயிலை வாத்தியத்தை ஆதரிப்போம் )


தற்போது நம் நகரத்தார் குடமுழுக்கு விழாக்களில் மலையாள பகவதிகளில் வாத்தியமான செண்டமேளத்திற்கும் தான் சில இடங்களில் முன்னுரிமை தரப்படுகிறது இது தமிழ்வளர்த்த நகரத்தார் சமூகத்திற்கும் அழகல்ல முன்பு நம் ஆலயகுடமுழுக்கு விழாக்களில் நாதஸ்வரதிற்கும் பிற தமிழர்கலைகளை வளர்க்கும் விதமாக அவைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வந்தன ஆனால் இன்றோ நம் மண்ணுக்கு பொருந்தாத வேற்று மண்ணின் அடையாளங்களை நம் மண்ணில் மாற்றம் என்ற பெயரில் செண்டைமேளம் கும்மாட்டிக்களிகளை நாம் கொண்டுவந்து இறக்கி நம் மண்ணின் அடையாளமாக விளங்கும் நம் பழந்தமிழ் கலைகளை அழிக்கிறோம். இதற்குபதிலாக நாம் ஏன் ஆலயகுடமுழுக்கு விழாக்களில் கயிலாயவாத்தியக்குழுக்களை கொண்டுவந்து ஆதரிக்கக் கூடாது தமிழ் சைவசமையத்வர்களால் வாசிக்கப்படும் இந்த இசையை ஏன் கொண்டுவரக்கூடாது??

 கயிலாயவாத்தியம் என்பது “சங்கு, எக்காளம், திருச்சின்னம், பிரம்மதாளம், உடல் ஆகியவை கூட்டு இந்த வாத்தியம் சிவனுக்கு உகந்த வாத்திம். இவற்றை கயிலையில் பூதகணங்கள் இசைத்து சிவனை மகிழ்ச்சிப்படுத்துகின்றதாக நம்பப்படுகிறது. இந்த வாத்தியம் நம் மண்ணின் பழம்பெரும் இசைவாத்தியம் செண்டைமேளத்திற்கு மாறாக இவற்றை நாம் ஏன் நம் மண்ணில் ஒலிக்க்கச்செய்து நம் தமிழரின் இசையைவளர்க்கக்கூடாது ???? சிந்திப்போம் தமிழராய் தமிழரின் அடையலாம் பேணிக்காக்க ஒன்றுபடுவோம் 

------------கரு.இராமநாதன் வேள்வணிகன்