Saturday 6 December 2014

பிள்ளையார் நோன்பு இன்றைய நிலையில் மாற்றம் தேவை

அனைத்து நகரத்தார்களுக்கும் வணக்கம் .


இன்னும் சில  நாட்களில் பிள்ளையார் நோன்பு வரவுள்ளது . பிள்ளையார் நோன்பு நமது கலாச்சாரத்தின் பாரம்பரியத்தின் ஒரு இன்றியமையாத முக்கியமான அடையலாம் .அப்போது வீடுகளில் உள்ளஅனைவரும் ஒன்றிணைந்து தம்தம் வீடுகளில் எளிமையாக உற்சாகத்துடன் கொண்டாடும் விதம் தற்போது கால மாற்றத்தால் மறைந்து வருகின்றது....நமது வீட்டு பெரியவர்களிடம் கேட்டு பாருங்கள் அவர்கள் கொண்டாடும் விதத்தை கதை கதையாக சொல்லுவார்கள்....கருப்பட்டி பணியாரம் , கல்கண்டு வடை , வெள்ளை பணியாரம் என்று பலகாரங்களை தேவைக்கு அதிகமாவே செய்யும் விதம் .... கோலம் இடுதல் முதல் இலை எடுக்கும் வரை உள்ள அந்த சிறு சிறு சந்தோசங்களை இப்போது உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அவர்களிடம் தற்போது அந்த மகிழ்ச்சியை காண முடிவதில்லை இவை மறைந்து வருகின்றது என்பது மறுக்க முடியாத உண்மை ...



ஒரு விழாவாக நாம் கொண்டாடியது இன்றைய தலைமுறையில் ஒரு நிகழ்வாக வெறும் சாமி குமிடும் தினமாக கொண்டடுகிறனர்.இது எதோ ஒரு கெட் டுகெதர் நிகழ்வு போல் நடைபெறுகிறது. நீளமாக வருசையில் குடும்பம் குடும்பமாக கூடம்மாக நிற்கின்றனர் இழையை பெறுவதற்காக காத்து கொண்டு நிற்கின்றனர் ..இது எல்லாத்துக்கும் காரணம் நமது இயந்திர வாழ்க்கை என்று மட்டும் சொல்லி விட முடியாது... இது அனைத்தையும் எடுத்து செய்ய வீடுகளில் தயங்குகிறனர் ...ஒரு கோவிலிலோ அல்லது ஒரு சங்கத்திலோ போய் எடுத்தால் சரி என்ற ஒரு எண்ணம் மட்டுமே மேலூங்கி உள்ளது . நம்ம ஆயா அப்பாதா செய்யும் கை பக்குவம் நமது இளைய தலைமுறைகளிடம் இல்லை. நம் ஆயாள் , அப்பத்தாகள் எல்லாம் ஒரே நாளில் கற்றுக்கொள்ளவில்லை சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் என்பது போல் பழக பழக பக்குவமும் பதமும் சரியாக வந்துவிடும் என்பதை நாம் மனதில் கொண்டு இனி வரும் வருடங்களிலாவது வீடுகளில் எடுக்க வேண்டும்.


பிள்ளையார் நோன்பு இழை எடுப்பதை நாம் நம் வீட்டிலேயே எளிய முறையில் எடுக்கலாமே .இந்த வழிபாடு மிகவும் எளிய வழிபாடு . நம் வீட்டை சுத்தம்செய்து பூசையறையில் நடுவீட்டுக்கோலமிட்டு பூசைக்கு பூ , பழம் , வெள்ளைப்பணியாரம் , கருப்பட்டிபணியாரம் (இதில் செய்ய பயன்படுத்தும் மூலப்பொருள் ஒன்று தான் ) உளுந்துவடை , மாவிளக்கில் சிறிது நெய்சேர்த்து பிசைந்து நூல்இழைகள் வைத்து சிறுபிள்ளையார் பிடித்து இழையை செய்யவேண்டியதும். ஐந்து வகை பொரி(நெல்லுப்பொரி , அவல்பொரி , கம்புபோரி,எள்ளுப்பொரி ,சோளப்பொரி)கிடைப்பதை வைத்து வழிபடலாம் , எள்ளுருண்டை ,கடலை உருண்டை மற்றும் ஆவாரம்பூ (இன்றைய சுழலில் அருகில் கிடைத்தால் பயன்படுத்தலாம் .) இவைகளே நம் பிள்ளையார் நோன்புக்கும் தேவயானை இவற்றை செய்து வழிபட நம்மில் பலர் ஏன் தயங்குகிறார்கள் என்று தெரியவில்லை .


வெளி நாடுகளில் இப்போது ஒரு GET TO GATHER நிகழ்ச்சியாகவும்
பண்பாடு பேணும் நிகழ்ச்சியாகவும் ஒருவரை ஒருவர் அறிமுகம் கொண்டு உறவுமற்றும் நட்பு பேணும் நிகழ்ச்சியாகவும் அமைந்துள்ளது . வெளிநாடுகளில் நம் தொன்மை மாறமால் குழுவாக சேர்ந்து விழாவை செய்கிறார்கள் .இது பாராட்டுதற்குரியது முடிந்தவரை நாம் எங்கு சென்றாலும் நம் காலசாரத்தையும் நம் தமிழ் மொழியையும் விட்டுகொடுக்காமல் இருப்போம் தமிழில் உரையாடுவோம் . பிள்ளைகளுக்கும் ஏன் பிள்ளையார் நோன்பு எடுக்கிறோம் . பிள்ளையார் நோன்பு எடுக்கும் முறை பிள்ளையார் நோன்புன் வரலாறு இவற்றை எல்லாம் எடுத்து சொல்லுங்கள் . ஒரு விழா என்பது ஏன் கொண்டாப்படுகிறது அதன் வராலாறு தொன்மை இவைகளை எடுத்து சொல்லுங்கள் அப்போது அந்த விழா இன்னும் சிறப்பாகவும் பிள்ளைகள் வரலாறு அறிந்து அந்த விழாவில் முழு ஈடுபாடு கொள்வர் அப்போது அந்த விழா முழுமைபெரும்.


தமிழத்தில் உள்ள நகரத்தார்ககளும் பிற பகுதிகளில் உள்ள நகரத்தார்களும் முடிந்த வரை வீட்டில் இழை எடுப்போம் . இளைய தலைமுறைக்கும் சொல்லுங்கள் நம் இல்லத்தில் எடுக்க வேண்டிய நோன்பு தற்போது நாம் வெளிநாட்டில் பணிநிமித்தமாக உள்ளோம் அதனால் நாம் இங்கு விடுதியில் சங்கத்தில் வந்து இழை எடுக்கிறோம் என்று சொலுங்கள். நம் இல்லத்தில் வைத்து ஒரு விழா செய்வது என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது .முடிந்த வரை வீட்டில் இழையை எடுப்போம் .வீட்டில் எடுத்த பின் கோயிலில் அல்லது விடுதியில் (சங்கத்தில் ) சென்றும் எடுத்துக்கொள்வோம் . இன்று நாம் நம் வீடுகளில் எடுக்க தவறினால் நாளை நம் பிள்ளைகள் மத்தியில் பிள்ளையார் நோன்பு என்றால் நகர விடுதியில் (சங்கத்தில் ), கோயில்களில் சென்று வழிபட்டு இழையை பெற்று வரவேண்டும் என்று ஒரு எண்ணம் விதைகாப்படும். இது இந்த தலைமுறையில் இல்லையில் என்றாலும் வரும் தலைமுறையில் அவர்கள் மத்தியில் அரங்கேறிவிடும் .

புரட்டாசியில் நவராத்திரி 9 நாளும் கும்பம் வைத்தும் படிக்கட்டு கட்டிவைத்து கொலு வைத்து வழிபட தற்போது பலரும் விரும்பி செய்கின்றோம் ஆடியில் வரலெட்சுமி பூசை என்று நமக்கு தொடர்பற்ற பல வித பூசைகளும் நோன்புகளையும் நம்மால் வீட்டில் எடுக்க முடிகிறது ஆனால் தொன்மை மிகு நம் பண்பாட்டு அடயாலமான பிள்ளையார் நோன்பை நம்மால் வீட்டில்    எடுக்க மன்மில்லாது இன்று நொண்டி சாக்கு சொல்கிறோம்.

முடிந்தளவு பிள்ளையார் நோன்பை வீடுகளில் எடுப்போம் நம் பண்பாடு காப்போம்.

இந்த கூற்று சரி எனில் சிந்தியுங்கள் .
தவறு என்றால் மன்னியுங்கள்.

- ஆ.தெக்கூர் கரு.கண.இராம.நா.இராமு

Friday 7 November 2014

நகரத்தார்களும் சாயமும் (தாய்லாந்து )

நகரத்தார்களும் தாய்லாந்தும் :

நம் நகரத்தார்கள் மலயா , சிங்கப்பூர், பர்மா , செய்கோன் போன்ற நாடுகளில் மட்டுமா நகரத்தார்கள் கொண்டுவிற்க சென்றனர் , இல்லை நாம் சென்ற நாடுகளில் சாயம் நாட்டிலும் வணிகம் செய்தனர் . சாயம் தான் தற்போதைய தாய்லாந்து அங்கு 1860 முதல் சாயம் (தாய்லாந்து ) நாட்டிற்கும் தொடர்பு இருக்கிறது .. ஆம் சாயம் நாட்டின் தலைநகர் பாங்காக் .

பாங்காக் நகரின் தற்போதைய மையப்பகுதியில் உள்ள சீலம் சாலையில் ஒரு மாரியம்மன் கோயிலை நகரத்தார்கள் நிர்மானித்தார் .இந்தகோயில் 1890களில் இந்த கோயிலை நிர்மாணித்தனர்.

நகரத்தார்கள் கொண்டு விற்க சென்றபோது தங்கள் வழிபாடிற்காக ஒரு ஆலயம் நிர்மாணிக்க நினைத்தனர் அப்போது இந்த கோயிலை கட்டுவதற்காக அப்போதைய தாய்லாந்து நாட்டின் மன்னரான சவுலங்க்கானை வேண்டினர் . அந்த மன்னர் நகர்தர்களின் வேண்டுகோளை ஏற்றும் தற்போது கோயில் உள்ள இடத்தை வழங்கினார் .அதோடு நிறுத்திக்கொள்ளாமல் கட்டப்படும் கோயிலுக்கும் வரி செலுத்த வேண்டியதில்லை என்ற ஒரு சிறப்பான சலுகையை வழங்கினார் என்பது சிறப்புக்குரிய செய்தி .

இங்கு நம் நகரத்தார்கள் முருகன் , விநாயகர் மற்றும் மாரியம்மன் , நடராஜர் சிவகாமி அம்மன் ஆகிய தெய்வங்களுக்கும் சிறியதாக ஆலயத்தை நிர்மாணித்தார் . இங்கு திருகார்த்திகையின் போது வேலுக்கு அன்னாபிஷேகம் செய்து வழிபட்டு வந்தனர் . இங்கு இரண்டு காலபூசையுடன் வாணிபம் செய்துவந்தனர் . பின் சில ஆண்டுகளுக்கு பின் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களாளும் அதிகம் பொருள் ஈட்ட வேண்டி நகரத்தார்கள் அனைவரும் இந்த நாட்டை விட்டு வெளியேறி பர்மா , மலையா , சிங்கை போன்ற பகுதிகளில் வாணிபத்திற்கும் சென்றனர் . இந்த கோயிலை நகரத்தார்கள் வெளியேறும்போது இந்த கோயில் நிர்வாகத்தை அங்கு வாழ்ந்த தமிழர்களிடம் தந்து விட்டு வெளியேறினர் .

அன்று இந்த கோயிலுக்கும் அரண்மைகும் சற்று தொலைவில் உள்ளதால் இந்த ஆலயத்துக்கும் வரிவிலக்கு செய்யப்பட்டது .நாளடைவில் பாங்காக் நகரம் விரிவடையத் துவங்கியதும் இந்த பகுதி தற்போது பாங்காக் நகரின் மையமான இதையப் பகுதியாக விளங்குகிறது .

தற்போது இந்த ஆலயம் மிகவும் சிறப்பான நிர்வகிக்கப் பட்டு வருகிறது . இந்த ஆலயத்தில் மகார்நோன்பு விழா பத்து நாட்கள் சிறப்பான நிகழ்கிறது . இந்த ஆலயம் தமிழ் முறைப்படி தமிழக அந்தணர்களை கொண்டு வேத மந்திரங்கள் ஓதப்பட்டு விழாக்களை நடத்துகின்றனர் இங்கு தமிழகர்கள் மட்டுமல்லாது தாய்லாந்து மக்களும் வந்து வழிபடுகின்றனர் . இங்கு விழாவின் தமிழகத்தில் இருந்து 6 அல்லது 7 நாதஸ்வரக் குழுக்கள் , பம்பை , உடுக்கை , பறை , கொம்பு போன்ற தமிழரின் பாரம்பரிய இசைக்கருவிகள் வாசிக்கும் 6 அல்லது 7 குழுக்கள் வரவழைக்கப்பட்டும் இந்த விழாவை சிறப்பாக நிகழுத்து கின்றனர் .அது மட்டும் இல்லது இங்கு நவராத்திரியின் ஒன்பது நாளும் சிறப்பு வழிபாடு நிகழ்கிறது . முதல் மூன்று நாட்கள் மாலை பார்வதி தேவியாக சிம்ஹா வாகனத்திலும் அடுத்த மூன்று நாட்கள் மகாலட்சுமியாக தாமரை மலரிலும் இருபுறம் யானையுடனும், அடுத்த மூன்று நாட்கள் ஒரு நாள் சரஸ்வதியாக , எட்டாம் நாள் சிம்ஹா வாஹினியாக , ஒன்பதாம் நாள் சிவபூசை செய்யும் கோலத்திலும் 1௦ ஆம் நாள் தேர் திருவிழா இரவு மிகவும் சிறப்பாக நிகழகிறது .அப்போது ஊர்வலத்தில் முன்பு தமிழக பாரம்பரிய வண்ணவண்ண கொடிகள் , குடைகள் , தீவட்டி இசைக்கருவிகள் , காவடி , கருபரின் அம்ம்சமான அரிவாள்கள் , சூலம் , கரகம் முதலியவை முன்செல்ல தேரில் பரிவார மூர்த்திகளுடன் அம்மன் பவனிவந்து அம்பு போட்டு செல்கிறாள் .

இந்த விழாவில் கொண்டுவரப்படும் வெள்ளிக்கரகம் நம் காரைக்குடியில் இந்த வருடம் தமிழ் ஆசாரிகளின் கைவண்ணத்தில் உருவானது . அதுமட்டும் இல்லது இங்கு உள்ள மூர்த்திகள் தமிழகத்தில் காரைக்குடியில் இருந்து கொண்டுவரப்பட்டவை , .

பத்தாம் நாள் இரவு இச்சா கிரியா ஞான ஆகிய மூன்று சக்தியின் வடிவான மூன்று தேவியரும் ஒரே தேரில் பவனியாக வருகின்றனர் . இவர்களுக்கும் முன்பு விநாயகர் மற்றும் முருகனும் தேரில் முன் செல்லுகின்றனர் . அம்மனை பின் தொடர்ந்து கன்னன்பிறான் தேரும் மதுரை வீரனும் செல்லுகின்றனர்.

இந்த நவராத்திரி விழாவில் பாத்தாம் நாள் விழாவன்று இங்கு உள்ளூர் விடுமுறை அளிக்கபடுகிறது . அதுமட்டும் இல்லது இந்த ஆலயத்தை ஆடைய தாய்லாந்த் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் சிறப்பு பேருந்து வசதியும் செய்யப்படுகிறது . இந்த விழாவை காண சும்மார் 2௦௦௦௦ இருந்து 5௦௦௦௦௦ மக்கள் கூடுகின்றனர் .

இந்த ஆலயத்தில் அமாவசை அன்று சண்டி ஹோமமும் இரவு சிறப்பு வழிபாடும் , பௌர்ணமி அன்று சிறப்பு அபிஷேகம் அலங்காரம் அம்பாள் பவனியும் ,
சித்திரை மாதம் பௌர்ணமி அன்றும் மீனாட்சி திருக்கல்யாணம் சிறாப்பாக நிகழ்கிறது .
தமிழ் புத்தாண்டு , ஆங்கிலப் புத்தாண்டு ஆகிய தினங்களில் மூன்று தேவியரும் ஆலயத்தில் இருந்து வெளியில் வந்து வெளிப்புராரம் சுற்றி வந்து உள்ளே செல்லுகின்றனர் .

தைபூசம் , கார்த்திகை போன்ற நாட்களில் இங்கு முருகனுக்கு சிறப்பு வழிபாடும் திருகார்த்திகையன்று அன்னாபிஷேகமும் சிறப்பாக நிகழ்கிறது .

மற்றபடி ஒவ்வொரு தெய்வத்திற்கும் என்ன விஷேச பூசை தமிழகத்தில் நிகழுமோ அவை இங்கும் சிறப்பாக நிகழ்கிறது .

இங்கு ஆகஹம விதிகளின் படியே பூசை நிகழ்கிறது . தமிழகத்தில் இருந்து சிவாச்சாரியார்கள் கொண்டுவரப்பட்டு பூசைகள் நிகழ்த்திவைக்கின்றனர் .

தற்போது இந்த ஆலயம் புனரமைக்கப்பட்டு இரண்டு ராஜகோபுரங்கள் மகாமண்டபம் அர்த்தமண்டபம் கொடிமரம் , போன்றவை அமைக்கப்பட்டு இங்கு தற்போது விநாயகர் , முருகன் ,கண்ணன் (விஷ்ணு ), பிரம்மா , சிவன் , அனுமன் , நவக்கிரகங்கள் ,மதுரைவீரன் , அஷ்டதிக் பாலகர்கள் , மகாலட்சுமி , சரஸ்வதி , நடராஜர் சிவகாமி அம்மன், ஸ்ரீ சக்கரம், லக்ஷ்மி சக்கரம் போன்ற சந்நிதிகள் உள்ள . இங்கு உள்ள மக்கள் இந்த கோயிலை உம்மா தேவி கோயில் என்றே அழைகின்றனர்.

ஆலயமுகப்பு
தேர்
 









இந்த அம்மன் மிகவும் சக்தி வாய்த்த அம்மனாக கருதி வழிபாடுகள் செய்கின்றனர் .இங்கு உள்ள மக்கள் அபிராமியந்தாதி , சகலகலாவல்லி மாலை , தேவாரம் , திருவாசகம் போன்றவைகளை பாடித்து வழிபடுகின்றனர் .

                                                       ஆ.தெக்கூர் கண.இராம.நா.இராமு 

Monday 20 October 2014

ஐப்பசி மாதமும் செட்டிநாட்டும் :



நம் செட்டிநாட்டில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு விழாக்களும் விஷேசங்கள் நிகழும். அதில் இந்த மாதத்தில் சிவபெருமான் வழிபாட்டிற்கும் காவேரி வழிபாட்டிற்கும் உரிய மாதமாக வைத்துள்ளனர் நம் முன்னோர்கள் .

இந்த துலா (ஐப்பசி ) மாதத்தில்  புனித நதிகளில் நீராடுதல் , சிவன் வழிபாடு செய்வதற்கும் மிகவும் உகந்த மாதம் .கந்தன் சூரனை வைத்தது  இந்த மாதத்தில் தான் மற்றும்  தீபாவளி கொண்டாடப்படுவது இந்த ஐப்பசியில் 

இந்த மாதத்தில் நம் நகரத்தார்கள் அமைத்த சிவாலயகளில்  காலையில் காவேரிப்புராணம் தினமும் இந்த ஐப்பசி மாதத்தில் படிப்பது வழக்காக கொள்வர்  இந்த மாதத்தில் நகரத்தார் ஊர்களில் உள்ள எல்லா சிவன்கோயில்களிலும் இந்த மாதத்தில் காலையில் காவேரி அன்னையை போற்றி கூறும் காவேரிப் புராணம் படிப்பர் . அப்போது நம் ஆச்சிகள் வீட்டில் இருந்து அவர் அவர் தங்களால் இயன்ற அளவு கொஞ்சம் துவரம்பருப்பு ,பாசிப்பருப்பு , புளி , அருசி , கோதுமை , கடலைப்பருப்பு ,  சிறுதானியங்கள் , நவதானியங்கள் அல்லது காய்கறிகள் போற்றவைகளை  கொஞ்சம் கொண்டும் சென்று துலா புராணம் படிக்கும் ஐயருக்கு தானமாக கொடுத்து காவேரிப் புராணக் கதையை கேட்பார்கள் . கார்த்திகை முதல் நாள் முடவன் கடைமுழுக்கு மிகவும் விசேசம் . அன்று மாயவரம் , சங்குமுகம் (பூம்புகார்) , ஸ்ரீரங்கம் போன்ற தலங்களில் நம் நகரத்தார்கள் சென்று நீராடி சிவனை வழிபடுவர் .

இதுமட்டும் இல்லது இந்த மாதத்தில் காவேரிக் கரைகளுக்கு சென்று நீராடுவர் . இந்த மாதத்தில் கங்கையே தான் ஏற்று கொண்ட எல்லா பக்தர்களுக்கு பாவத்தையும் இந்த மாதத்தில் காவேரியில் நீராடி சிவபெருமானை வழிபட்டு தன் பாவத்தை போக்கிக்கொள்கிறாள் என்பது ஐதீகம். அதனால் இந்த மாதத்தில் காவேரியில் நீராடுதல் மிகவும் நற்பலன்கள் தரக்கூடியது .
அது மட்டும் இல்லது இந்த மாதத்தில் நகரத்தார்கள் காவேரி கரைகளில்  நீராடி ஆற்றில் இருந்து மண் கொண்டு கரையில் சிவலிங்கமாக பிடித்து அவற்றுக்கும் தும்பை பூ சாற்றி சிவபெருமானை வழிபடுவர் .
மேலும் இந்த மாதத்தில் அனைத்து நகர சிவாலயங்களிளும் சோமவார  சங்காபிஷேகம் சிறப்பாக நிகழும். பொதுவாக நகரத்தார்கள் முருகனையும் சிவனையுமே தம் தலையாய தெய்வாமாக கொண்டு வழிபடுகின்றனர் . அதனால் இந்த  மாதத்தில் சிவன்பெருமானை வழிபடுவோர் சோமவார விரதத்தை கடைபிடித்து வழிபடுவோர் . ஐப்பசி மாதத்தில் வரும் திங்கள்கிழமையன்று சிலர் உண்ணா நோன்பிருந்தும் ஒருவேளை உண்ணா நோன்பிருந்து சிவனை வழிபடுவர் . இந்த ஐப்பசி பௌர்ணமி நாளில் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகமும் எல்லா நகரத்தார் சிவாலயங்களிலும் நிகழும் . அன்று  மாலை சோறு வடித்தும்  அதிரசம் , முறுக்கும்  போன்ற இனிப்புகள் செய்தும் , காய் கனி மாலைகள் , புடலங்காய் , காரட் , போன்ற காய்கறிகளை அவித்து வைத்து சிவனுக்கும் அன்னத்தை கொட்டி அபிசேகமாக  செய்யப்படும் அன்னம் ஒவ்வொன்றும் சிவனாககே காட்சி தருகிறார் என்பது ஐதீகம். பின் அந்த அன்னத்தை பத்தர்களுக்கு , காக்கை குருவிக்கு , மீன்கள் போன்ற ஊயிர்களுக்கும் அன்னத்தை அளிப்பது வழக்கம் .

மற்றும்  இந்த மாதத்தில் நகரத்தார்கள் தீபாவளி திருநாளை  சிலர் காசிக்கு சென்று புனித நீராடி விஸ்வந்தர் விசாலாட்சி அன்னையை வழிபட்டு இங்கு நிகழும் மிட்டாய் திருவிழா என்று அழைக்கப்படும் திருவிழாவை  காண செல்வர் . தீபாவளி யன்று காசி நகரில் அண்ணபூரணி லட்டு தேரில் பவனி வருவதைக் காணக் கண்கோடி வேண்டும் . அது மட்டுமா இந்த தீபாவளியை யொட்டி நம் காசி நாட்டுகோட்டை நகரத்தார் சத்திரத்திற்கும் தங்க அண்ணபூரணி , காசி விஸ்வநாதர்  மற்றும் விசாலட்சி அன்னை ஆகிய போர்த்திருமேனிகள் இந்த மூன்று நாட்களுக்கு மட்டும் நம் நகர விடுதிக்கும் கொண்டு வந்து சிறப்பாக பூசைகள் நிகழும் இதை கானைவும் நகரத்தார்கள் பலர் இங்கு வருவது வழக்கம் . இது சிவனை வழிபடுவோருக்கும்

தீபாவளிக்கும் முதல் நாள் இரவே அண்டாகளில் நீரி நிரப்பி அதில் ஆலிலை , அத்திஇலை , வேம்பு , மாவிலை , அரச இலை  போன்ற இலைகளை நீரில் போட்டு வைத்திருப்பர் . அதனுடன் வேம்பாகளில் நீர் நிரப்பி தயாராக வைத்து இருப்பர் . நல்லெண்ணெய்யில் சிறிது சீரகம் , வெள்ளைபூடுஓர் இரண்டு பல் போட்டு எண்ணையை காய்ச்சி முதல் நாள் இரவே தயார் செய்து வைத்திருப்பர் . இன்று நகரங்களில் குடியேறிய பின் சற்று மாறுதல்கள் ஏற்பட்டு உள்ளது ,. சிலர் இந்த முறைகளை இன்றும் செய்து வருகின்றனர் . சிலர் இருக்கும் இடத்தில இவைககள் கிடைக்கவில்லை என்பதால்  வெறும் வெந்நீரில் தலை முழுகி இந்த தீபாவளி நாளை துவங்குகின்றனர் .
மற்றும் தீபாவளி திருநாளில் நகரத்தார்கள் தங்கள் இல்லங்களில் அதிரசம், தேன்குழல் , மனலோம் , மைதா சிப்ஸ் , மாவுருண்டை , தட்டை , சீப்பு சீடை , சீடை  போன்ற பலகாரங்களை செய்தும் காலையில் வெள்ளனா எழுந்து நம் ஆச்சிகள் கவுன்அருசி அவித்து , வெள்ளப்பணியாரம் , சீயம் , உளுந்து வடை போன்ற பலாரங்கள் தங்களால் இயன்றவற்றை செய்து காலையில் குபேரன் , லக்ஷ்மிக்கும் பூசை செய்து வழிபடுவர்  சில வீடுகளில் கும்பம் வைத்து லட்சுமியை பூசை செய்வர் . பின் பெரியவர்கள் வீட்டில் விளக்கேற்றி வைத்து பிள்ளைகளுக்கும் மஞ்சள் தடவி வைத்த புத்தாடைகளை தருவர் . புத்தாடையை பெறும்போது பெரியவர்கள் காலில் விழுந்து ஆசிகள் பெற்று பெரியவர்கள் திருநீறு பூசி அவற்றை பெற்றுக்கொள்ளவர் . இந்த வழக்கம் இன்றும் நம் வீடுகளில் நடைமுறையில் உள்ளது .
அதன் பின் அருகில் உள்ள ஆலயம் சென்று வழிபட்டு வருவது வழக்கமாக உள்ளது .  தலை தீபாவளி என்றால் நம் செட்டிநாட்டில் மாப்பிள்ளை வீட்டிற்கும் தீபாவளி பலகாரங்ளுடன் கெண்ட வேட்டி , சேலை எடுத்துக் குடுத்து தீபாவளிக்கும் முன்பு வந்து பெண்வீட்டார் அழைத்து விட்டு செல்வர் . புதிதாக திருமண மாணவர்கள் தங்கள் மாமியார் வீட்டுக்கு மணமகன் சென்று அவர்களுடன் தீபாவளி கொண்டாடுவதும் அவர்கள் தங்கள் வீட்டில் அன்று காசப்பு எடுத்து விருந்து வைப்பதும் வழக்கம் .

ஐப்பசி மாதத்தில் வரும் அமாவாசைக்கு அடுத்து வரும் நாட்களில் கந்த சஷ்டி மிகவும் கோலாகலமாக நிகழும் இந்த விழாவை காணவும் பல நகரத்தார்கள் விரதம் இருந்து முருகனை வழிபட திருச்செந்தூர் நகரவிடுதிக்கும் வந்து தங்கி  சூரசம்ஹாரத்தை காண்பர் .இது மட்டும் அல்லது பரவலாக நகரத்தார்கள் பல முருகன் கோயில்களில் இந்த விழாவை நிகழ்த்தி முருகனை வழிபடுவர் . இந்த விரத நாட்களில் நகரத்தார்கள்  கந்தபுராணம் படித்தல் , சஷ்டிக்கவசம் படித்தில் போன்றவைகளை படிப்பர் . இந்த விரத நாட்களில் சிலர் ஒரு வேலை மட்டும் உணவு மாலையில் உண்டும் , சிலர் வெறும் பால் பழங்களை மட்டும் முருகனை வணங்கி அர்ச்சனை செய்த பின் உண்டு நோன்வு இருப்பர்  இந்த மாதத்தில்

நகரத்தார்கள் இந்த மாதத்தில் காவரிப்புராணம் , கந்தபுராணம் படித்து நல்ல வழியில் வாழ்வை எதிர்கொள்ளவேண்டும் என்ற நோக்கில் இத்தனை கோட்பாடுகள் கொண்டிருந்தனர் .முன்பு  இந்த காவிரிப் புராணம் படித்தல் என்பது தற்போது உள்ள தலைமுறையினர் அறியாத ஒன்றாகவும் மறந்து வரும் ஒன்றாக உள்ளது . தற்போது இந்த நிகழ்வு நம் சென்னை மயிலை காபாலீஸ்வரர் ஆலயத்திலும் இந்த நிகழ்வும் ( காவேரிப் புராணம் படித்தல் ) நடைபெறுகிறது .

-ஆ.தெக்கூர் கண. லெனா. நா. இராமநாதன்

மேலும் காவேரிப் புராணம் pdfஇல் படிக்க
 இதோ லிங்க் கீழே உள்ளது

http://tamilheritage.org/old/text/ebook/thula.pdf

Wednesday 8 October 2014

குழந்தைக் கவிஞர்" அழ.வள்ளியப்பா

மிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் ராயவரம் என்ற சிறுகிராமத்தில் அழகப்ப செட்டியார்-திருமதி உமையாள் ஆச்சி ஆகியோருக்கு மகனாக அழ.வள்ளியப்பா 1922ம் ஆண்டு நவம்பர் 7ம்தேதி பிறந்தார்.
திரு .அழ.வள்ளியப்பா அவர்கள் (61வது வயது )சாந்தியின் போது



ராயவரத்தில் உள்ள எஸ்.கே.டி.காந்தி துவக்கப்பள்ளியில் தனது ஆரம்ப நிலைப் படிப்பைத் துவக்கினார். கட்டிடத்துக்கு எப்படி அஸ்திவாரம் முக்கியமோ அதுபோல கல்வி பயில்வதில் அரம்பக்கல்வி என்ற அஸ்திவாரத்தை ஆசிரியர்கள் இவருக்கு வசப்படுத்தினர். ராயவரத்திலிருந்து 4கி.மீ தூரத்திலுள்ள கடியபட்டி பூமீஸ்வரசுவாமி உயர்நிலைப்பள்ளியில் தனது உயர் நிலைக் கல்வியை பயின்றார். நாள்தோறும் தன் கிராமத்திலிருந்து சக மாணவர்களுடன் நடந்தே சென்று உயர்நிலை படிப்பை படித்துவந்தார்.

இவ்வாறு நடந்து செல்லும்போது ஒருநாள் அழகான பாடல் ஒன்றை சிறுவன் வள்ளியப்பா இயற்றினார். சகமாணவர்களிடம் அந்த எளிய பாடலைச் சொல்ல, அவர்களூம் உற்சாகமாக அதைப் பாட்டாகப் பாடியவாறே பள்ளிக்கு வந்தனர். இப்படி பாடிக்கொண்டே வந்ததில் தூரம் குறைந்து போனதாக உணர்ந்தனர் அனைவரும்! சகமாணவர்கள் தந்த உற்சாகம் எளிய வார்த்தைகளைக் கோர்த்து பாடல்களைப் புனைவதும் பாடும்போது பாடுவதற்கு சிரமப்பட்டால் அதனை மாற்றி அமைத்து தரப்படுத்துவதும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக பாடல் இயற்றும் திறனை வளர்த்துக்கொண்டார். பாடல்களில் எளியசொற்களைப் பயன்படுத்துவது முக்கியம் என்பதை அந்தப் பிராயத்திலேயே உணர்ந்த வள்ளியப்பா தனது வாழ்நாளில் கடைசிவரை இயற்றிய பாடல்களில் இதைக் கடைப்பிடித்தார்!

பாட்டு இயற்றும் இந்தத் திறமையை வளர்த்தெடுக்க பேரா.மதுரை முதலியார், திரு.இளவழகனார் மற்றும் இராசமாணிக்கனார் போன்றோரை அணுகி தம் பாட்டெழுதும் தாகத்தை வெளிப்படுத்த இந்த ஆன்றோர்களும் அவருக்கு உறுதுணையாக இருந்து வழிகாட்டினர்!
சாதாரணக் குடும்பத்திலிருந்து சென்னை சென்று கல்லூரிப்படிப்பு என்ற எட்டாக்கனியை அடைவதில் சிரமப்பட்ட காலம் அவருடைய காலம்! அதனால் தன் படிப்புக்கு ஏற்ற ஒரு வேலையை 400 கி.மீ. பயணித்து சென்னை நகரில் வேலை கிடைக்க அவர் பெற்ற மதிப்பெண்கள் துணையாக இருந்தது!

1940ல் திரு.அழ.வள்ளியப்பா சென்னைக்கு வந்தார். சென்னை பாரிமுனைப் பகுதியில் நாட்டுக்கோட்டை நகரத்தார் வசித்த பகுதியை தற்காலிக முகவரியாக கொண்டு எதையாவது சாதிக்கவேண்டும் என்ற வெறியோடிருந்த ஏராளமான இளைஞர்களோடு கரம்கோர்த்து எதிர்காலத்திற்கான நிரந்தரத் தீர்வை அடையும் முயற்சியில் இறங்கினார்.
சக்தி காரியாலயம் என்ற நிறுவனத்தில் காசாளராக முதன்முதலில் சேர்ந்தார். வேலையில் சேர்ந்துவிட்டாலும் தனது அபிலாசையான பாடல் புனைவதையும் இணையாக வளர்த்து வந்தார். கொஞ்ச காலம் கழித்து, 1941ல் இந்தியன் வங்கியில் எழுத்தராக இணைந்துகொண்டார்!
 
திருமதி.வள்ளியம்மை ஆச்சி 1944ம் ஆண்டு பிப்.4ம்தேதி இவருடைய வாழ்க்கையில் இணைந்த பொன்னான நாளாகும்! குடும்பம் என்ற சுமை வண்டியை மூச்சுத் திணறலோடு இழுக்க விடாமல் தன் பங்குக்கு திறம்பட நடத்தியதில் திருமதி வள்ளியம்மை ஆச்சிக்கு பெரும் பங்குண்டு! ஒவ்வொரு ரூபாயாக எண்ணிப்பார்த்துச் செலவழித்தாலும் சிக்கனமாகச் செலவழித்து அதிலும் சிறுகச் சிறுகச் சேமித்து குடும்பப் பொருளாதாரத்தை சிறப்பாக நிர்வகித்தார் என்றால் மிகையாகாது!

அலமேலு, அழகப்பன், கஸ்தூரி, உமையாள் மற்றும் தெய்வானை என்று அய்ந்து குழந்தைகளோடு இல்லம் நிரம்பியிருந்த நேரத்தில் குடும்பப் பொறுப்பை தன் தோளில் ஏற்றிக்கொண்டு குழந்தைகளுக்கான இலக்கியப் பணியை தம் கணவர் மேற்கொள்ள ஏதுவாக ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளித்தார்!

1944-54 ஆண்டுகளில் தம்மை முழுமையாக குழந்தைகளுக்கான இலக்கியப் படைப்புகளில் ஈடுபடுத்திக்கொண்டார்! "பால மலர்", "டமாரம்", "சங்கு", மற்றும் "பூஞ்சோலை", ஆகிய சிறுவர் இதழ்கலுக்கான கெளரவ ஆசிரியராகப் பணியாற்றினார்.

1950களில் திரு.வள்ளியப்பா அவர்களும் ஒரு சில குழந்தை எழுத்தாள நண்பர்களுமாகச் சேர்ந்து சிறார் எழுத்தாளர் அமைப்பை 1950ல் தோற்றுவித்தார்கள்! சக்தி வை.கோவிந்தன் இந்த அமைப்பின் முதல் தலைவர் ஆவார். இந்த அமைப்பானது சிறுவர் இலக்கிய வளர்ச்சிக்கு தமிழில் பாடுபட தங்களை அர்ப்பணித்துக்கொண்டது. தமிழ் மொழியில் சிறுவர் உரைநடையும் பாடல்களும் இடம்பெற இந்த அமைப்பு வெற்றிகரமான சிறார் இலக்கிய எழுத்தாளர்களது படைப்புகளை வெளிக்கொணர்ந்தது. இந்த அமைப்பில் பொதுச் செயலாளர், தலைவர் மற்றும் ஆலோசகராகப் பல்வேறு பொறுப்புகளில் திரு.அழ.வள்ளியப்பா வெகு சிறப்பாகச் செயல்பட்டார். 650க்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கான புத்தகங்களை வெளியிட்டது இந்த அமைப்பு!
 
"தென்னிந்திய மொழிகளின் புத்தக அமைப்பு" ஒன்றை ·போர்டு அறக்கட்டளை துவக்கி தென்னிந்திய மொழிகளில் புத்தகங்களை கொண்டு செல்ல திட்டமிட்டது. இது தொடர்பாக ·போர்டு அறக்கட்டளை நிர்வாகம் திரு.அழ.வள்ளியப்பாவை தொடர்புகொண்டு இந்தப் பணியில் ஈடுபட அழைப்பு விடுத்தது! இதனைத் தொடர்ந்து இந்தியன் வங்கி இதன் திட்ட அலுவலராய் நியமித்தது. திரு.அழ.வள்ளியப்பா அவர்களின் ஓராண்டுச் சேவையால் பெரிதும் கவரப்பட்ட ·போர்டு அறக்கட்டளை இன்னும் ஒருவருடம் இன்னும் ஒருவருடம் உங்கள் சேவை எங்களுக்குத் தேவை என்று சொல்லி 5 ஆண்டுகளுக்கு இந்தப் பணியை நீடித்தது! அவருடைய சேவையை எழுத்தில் வடித்துவிட இயலாது. சிறிதும் பெரிதுமான பல்வேறு திட்ட பணிகளைக் கையாள்வதில் அவர் எடுத்துக்கொண்ட முயற்சியும் அயராத உழைப்பும் இன்றைக்கும் மதித்துப் போற்றப்படும் வகையில் அமைந்தது. சாகித்திய அகாதெமியின் டெல்லி புத்தக திருவிழாவில் தமிழ் பிரிவுக்குப் பொறுப்பாளாராக இருந்ததோடு சர்வதேச புத்தகத் திருவிழாவை கொழும்புவில் துவக்கி வைத்தார்.

யுனஸ்கோ மாநாட்டில் இந்திய எழுத்தாளர்களின் பிரதிநிதியாகக் கலந்துகொண்டு "தமிழ் எழுத்தாளர்கள் யார்? யார்?" என்ற வெளியீட்டிற்கு பெரும் முயற்சிகலில் தன்னை ஈடுபடுத்தி வெளிக்கொணரந்தார்! இந்தக் காலகட்டத்தில் தமிழ் எழுத்தாளர்கள் அமைப்பில் செயலர், பொதுச்செயலர், துணைத்தலைவர், தலைவர் என்ற பொறுப்புக்களையும் வகிக்க நேர்ந்தது குறிப்பிடத்தக்கது! தமிழ் எழுத்தாளர்கள் அமைப்பையும் தமிழ் எழுத்தாளர் பேரவையையும் ஒருங்கிணைத்து மாநாடுகளை நடாத்தியது அனைவராலும் பாராட்டும் செயலாக மிளிர்ந்தது.
பாரதியாரின் 81வது பிறந்த தினத்தை சிறப்பாகக் கொண்டாட தமிழக் அரசு நியமித்த குழுவில் இடம்பெற்றார். 1979ல் "வளர்ந்து வரும் குழந்தை இலக்கியம்" என்ற தலைப்பில் கல்கி நினைவு நாள் விழாவில் பேருரை நிகழ்த்தியது அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது! மதுரையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் கலந்து கொண்டு அரசின் விழாக்குழுவின் சார்பில் "குழந்தை இலக்கியத்தில் தமிழ்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தி மாநாட்டுப்பார்வையாளர்களைக் கவர்ந்தார்!
"குழந்தைகள் கவிஞர்" என்ற சிறப்புப் பட்டத்தை அளித்து தமிழ் எழுத்தாளர் தமிழ்வாணான் திரு.அழ.வள்ளியப்பாவைக் கெளரவித்தார்!



கவிஞருக்கு கெளரவமும், பட்டங்களும் தேடி வரத்துவங்கியது.1961ல் மேதகு குடியரசுத் தலைவர் டாக்டர்.ஜாகீர் உசேன், திரு.அழ.வள்ளியப்பா நடத்திய மூன்றாவது குழந்தைகள் இலக்கிய மாநாட்டைத் துவக்கிவைத்து கெளரவித்தார். திரைத்துறை வித்தகரும் வள்ளலுமானதிருஏவி.மெய்யப்பச் செட்டியார் திரு.அழ.வள்ளியப்பா அவர்களின் 25 வருட குழந்தைகள் இலக்கியச் சேவையைப்பாராட்டி விழா எடுத்து கெளரவித்தார்! 1973ல் குழதைகளுக்கான எழுத்தாளர்கள் அமைப்பு திரு.அழ.வள்ளியப்பா அவர்களின் 51வது பிறந்த தினத்தன்று பாராட்டிக் கெளரவித்தது! 1975ல் தமிழ் கவிஞர் மன்றம் பாராட்டிச் சிறப்பித்தது. 1976ல் மேதகு குடியரசுத் தலைவர் ·ப்க்ருதீன் அலி அகமது அவர்கள் குழந்தைகள் எழுத்தாளர் அமைப்பின் வெள்ளிவிழாவில் கலந்துகொண்டு திரு.அழ.வள்ளியப்பாவைகெளரவித்து விருது வழங்கிச் சிறப்பித்தார்! "பிள்ளை கவியரசு" மற்றும் "மழலை கவிச்செம்மல்" போன்ற பட்டங்கள் திரு.அழ.வள்ளியப்பா அவர்களைத் தேடி வந்தது! 1982ல் "தமிழ் பேரவைச் செம்மல்" என்ற பட்டத்தை மதுரை காமராஜ் பலகலைக்கழகம் வழங்கிச் சிறப்பித்தது. 1985ல் இந்தியக் குழந்தைகள் கல்விச் சபை நடத்திய விழாவில் திரு.அழ.வள்ளியப்பா அவர்களை நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் திரு.பல் ராம் ஜாக்கர் பாராட்டிச் சிறப்பித்தார்! 1988ல் தஞ்சாவூர் தமிழ் பலகலைக் கழகம் "தமிழ் அன்னை" என்ற சிறப்பு பரிசை வழங்கிப் பாராட்டியது!1982ல் சஷ்டியப்த பூர்த்தியை பிள்ளையார்பட்டியில் வெகு சிறப்பாக திரு.அழ.வள்ளியப்பா தம்பதியர்க்கு நடைபெற்றது. இதில் பிள்ளைகள், பேரக்குழந்தைகள், நண்பர்கள், உற்றார் உறவினர்கள், எழுத்தாளர்கள், நலம்விரும்பிகள் என்று ஏகமாய் திரண்டு தம்பதியரை வணங்கி ஆசிபெற்றும் அளித்தும் அன்பால் திளைக்கவைத்தனர்

திரு .அழ வள்ளியப்பா அவர்களும் திரு .AVMமெய்யப்ப செட்டியாரும்


.·போர்டு அறக்கட்டளைக்காக பணியாற்றிய பிறகு 1962லிருந்து மீண்டும் இந்தியன் வங்கிப் பணிக்குத் திரும்பினார். சென்னையில் ஆழ்வார்பேட்டை, ஆயிரம்விளக்கு, ஹாரீஸ் சாலை இந்தியன் வங்கி மேலாளராகப் பணியாற்றிவிட்டு காரைக்குடி இந்தியன் வங்கியின் காரைக்குடி பகுதியின் மேலாளராகப் பணியாற்றி 1982ல் பணி ஓய்வு பெற்றார்.பணி ஓய்வுக்குப் பிறகு தனது முழு நேரத்தையும் குழந்தைகளுடைய தமிழ் இலக்கியத்திற்க்காக அரும்பாடுபட்டார். அத்தோடு கோகுலம் சிறுவர் மாத இதழில் கெளரவ ஆசிரியர் பொறுப்பையும் ஏற்று திறம்படச் செய்தார்.

திடீரென்று மரணம் நேர்ந்த1989 வரை தமது வாழ்நாளைக் குழந்தைகளுக்கான இலக்கியத்துக்காகவே பணியாற்றி மறைந்தார்.
58 தலைப்புகளில் பாடல்கள், சுய வரலாறு, நாவல்கள் மற்றும் நாடகம் என்று வெளியீடுகண்டது; 1000க்கும்மேற்பட்ட குழந்தைகள் பாடல்கள் படைத்து வெளியிட்ட பெருமை திரு.அழ.வள்ளியப்பா அவர்களையே சாரும்! "நதிகளினுடைய கதை" பகுதி ll என்ற புத்தகத்தை தேசிய புத்தக அறக்கட்டளை மொழிபெயர்த்து 14மொழிகளில் வெளீயிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது! "மலரும் உள்ளம்", "பாட்டிலே காந்தி கதை" மத்திய அரசின் விருதுகளைப் பெற்றுள்ளது. "நல்ல நண்பர்கள்", "பெரியோர் வாழ்விலே", "சின்னஞ்சிறு வயதில்" மற்றும் "பிள்ளைப் பருவத்திலே" தமிழக அரசின் விருதுகளைப் பெற்றது.

"வாழ்ந்தார், மறைந்தார் என்ற இயல்பைத் தாண்டி காலம்காலமாய் குழந்தைகள் வாழும் உலகில் என்றென்றும் வாழ்ந்திருக்கும் வரலாறாக இவர் நிலைத்து நிற்கிறார்; நிற்பார். வெற்றிகரமான குழந்தைகளுக்கான புதினங்களைப் படைத்த அவர் மனதளவில் குழந்தையாகவே வாழ்ந்தவர் என்பதும் இங்கே குறிப்பிட்டாகவேண்டும்! குழந்தைகள் மகிழ்ச்சிக்காக, அவர்களின் குதூகலத்துக்காக அவர்களைக் கவர்ந்திட தன் பாட்டாலும், கதையாலும் தம் இறுதி மூச்சுவரை பாடுபட்டவர்! குழந்தைகள் உலகம் உலகம் இருக்கும்வரை இவரது புகழும் இந்த உலகில் இருக்கும் என்பது அய்யமில்லை!

உலகம் சுற்றிய தமிழர் அ.கரு.செட்டியார் (எ)ஏ.கே.செட்டியார்


'உலகம் சுற்றும் தமிழர்’ என்றவுடன் நம் நினைவுக்குச் சட்டென வருபவர் - அ.கரு.செட்டியார் என்னும் பெயருடைய ஏ.கே.செட்டியார் அவர்களே. இவர் உலகத்தைச் சுற்றியது எதற்காக? பயணம் செய்து பல நாடுகளைப் பார்த்து மகிழவேண்டும் என்பதற்காகவா?


இல்லவே இல்லை; வாழ்விக்க வந்த காந்தி மகாத்மாவின் வரலாற்றுக்குரிய வாழ்க்கைச் சம்பவங்களைச் செய்திப் படமாக்கிச் சிறப்பிக்க வேண்டும் என்ற தணியாத ஆவலே இவரைத் தரணியை வலம் வரச் செய்தது.

‘உலகத்தினர் இந்தியாவை மதிப்பதற்குக் காரணமே காந்தியடிகள்தான்’ என்ற கருத்தை அவர் அறிந்து வைத்திருந்ததினாலேதான் இவர் காந்தியைப் பற்றிய செய்திப்படம் தயாரிக்க உலகம் முழுதும் சுற்றினார். ‘‘உலகம் சுற்றும் தமிழன்’’ என்ற பயண நூலையும் எழுதினார்.

மேல்நாடு என்றால் இங்கிலாந்து மட்டுமே என்றிருந்த பிரிட்டிஷ் அரசாட்சிக் காலத்தில் அமெரிக்காவிற்குப் போய்வந்த புரட்சிவீரர் இவர். கொழுத்த பணக் காரர்கள்தான் மேல்நாடு பயணம் செய்ய முடியும் என்கின்ற காலகட்டத்தில்-சராசரி வகுப்பைச் சேர்ந்த செட்டியார் வெற்றிகரமாக உலகைச் சுற்றி வந்தது ஒரு சாதனையே.

இந்திய அரசு செய்திப்படம் ஒன்று எடுப்பதற்கு முன்னரே மகாத்மா காந்தியைப் பற்றிய புகைப்படங்களை எல்லாம் பாடுபட்டுச் சேகரித்து டாக்குமெண்டரியாகத் தொகுத்த முன்னோடி.

‘குமரிமலர்’ என்ற மாத இதழை இலட்சியப் பிடிப்போடு 40 ஆண்டுகள் நடத்திய பத்திரிகையாளர். இப்படி இவர் பெருமையைச் சொல்லிக் கொண்டே போகலாம்.இவர் பிறந்தது 3.11.1911 இல் கோட்டையூரில்; இவர் மறைந்தது 10.9.1983 இல் சென்னையில். பள்ளிப் படிப்பு 8 ஆண்டுகள் (1920 - 1928) திருவண்ணாமலையில் இரங்கூனில் ‘தனவணிகன்’ என்ற இதழுக்கு ஆசிரியராகப் பொறுப்பேற்று குறைந்த காலம் பணியாற்றினார். இளமையிலேயே தமிழில் கதை,கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவராகத் திகழ்ந்தார்.

1928 இல் எஸ்.எஸ்.வாசன் நடத்திய ஆனந்த விகடனில் ‘சாரதாம்பாள்-சிறுதமாஷ்’ என ஒரு சிறுகதையை இவர் எழுதினார். இவர் எழுதிய முதல் கதையும் இதுதான்;கடைசிக் கதையும் இதுதான்.ஆங்கில வாரப் பத்திரிகை ஒன்றில் வெளிவந்த கதையைத் தழுவி அதனை எழுதினார்.

1936 ஆம் ஆண்டு, புகைப்படப் படிப்பின் பொருட்டு ‘ஜப்பான்’ சென்றார். படிப்பு முடிந்ததும் ‘பர்மா’ வந்தார். அப்போதுதான் தமது முதல் பயண நூலான ‘ஜப்பான்’ என்ற நூலை இவர் எழுதி இரங்கூனில் வெளியிட்டார். பின்னர் இந்த நூல், ஆங்கில அரசால் தடைசெய்யப்பட்டது.

இந்த நூலின் மூலம் கிடைத்த வருவாயைக் கொண்டு அமெரிக்கா சென்றார். அங்கே பகுதி நேர வேலை செய்து புகைப்படத் தொழில் பற்றிய மேல் படிப்பைத் தொடர்ந்தார். தமது ஜப்பான் பயண அனுபவத்தை நூலாக எழுதினார்.

தமது முதல் நூலான ‘ஜப்பான்’ முன்னுரையில் ‘‘ஒரு நாட்டைப் பற்றி எழுதுவது என்றால் - அந்நாட்டில் குறைந்தது இரண்டு ஆண்டுகள் தங்கி, அந்நாட்டு மொழியை நன்கு பயின்று, அந்நாட்டு மக்களோடு நெருங்கிப் பழகுதல் வேண்டும். ஆனால், நான் ஜப்பானில் தங்கி இருந்தது ஒரு மாத காலம்தான். நுனிப்புல்லை மேய்வது போன்ற இந்நிலையில், நான் அதிகம் எழுத முடியாது என்றாலும்,ஜப்பானைப் பற்றித் தமிழர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தாலேயே இந்நூலை எழுத முன் வந்தேன்!’’ என்று திறந்த மனத்தோடும் பொறுப்புணர்ச்சியோடும் இவர் எழுதினார்.

2.10.1937 இல் - நியூயார்க்கிலிருந்து டப்ளினுக்கு ‘சமரியா’ என்னும் கப்பலில் இவர் பிரயாணம் செய்தார். அப்போது, கப்பலில் பிரயாணம் செய்தவர்கள் காந்திஜியின் பிறந்த நாளைக் கொண்டாடி மகிழ்ந்தார்கள். 2.10.1937 என்பது காந்தியின் 68வது பிறந்த நாள் ஜெயந்தி அல்லவா!

இந்த காந்தி ஜெயந்தி விழாவில் கலந்து கொண்ட இவருக்கு,அப்போது ஒரு எண்ணம் உதித்தது. ‘புகைப்படத் தொழில் படிப்புப் படித்தவனாகிய நான், ஏன் காந்திஜி பற்றிய செய்திப்படம் ஒன்றைத் தயாரிக்கக் கூடாது?’ இந்த எண்ணம் இவருக்குத் தோன்றியவுடன் இவருக்கு காந்திப் பைத்தியம் பிடித்துவிட்டது.

அதே நினைவாக மூன்றாண்டுகள் உழைத்தார்.இந்தியாவைச் சுற்றிப் பல முறைகள் பயணம் செய்தார். உலகத்தின் பாதி நாடுகளுக்குக் கப்பலில் பயணம் செய்தும்,விமானத்தில் சுற்றிப்பறந்தும் வந்தார். அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் பயணம் செய்து சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட செய்திப்பட கம்பெனிகளுக்குச் சென்று வந்தார். அவர்களோடு கலந்து ஆலோசித்தார்.

இப்படியாகக் கடுமையாக உழைத்து - முதலில் 50,000 அடி காந்திப்படம் எடுத்தார். பிறகு அதிலிருந்து 12,000 அடியில் காந்தி செய்திப் படத்தை உருவாக்கினார்.

இப்படத்தைத் தயாரிக்க நான்கு கண்டங்களில் இவர் இலட்சம் மைல் பிரயாணம் செய்தார்;பற்பல செய்திப் பட கம்பெனிகளில் ஏறி இறங்கினார்; ஒரு நூறு கேமராக்காரர்கள் எடுத்த படங்களைச் சேகரித்தார்.

ரோமன்ரோலந்து, போலிக் போன்றவர்களைப் பேட்டி கண்டார். காந்தி பற்றிய உலக அறிஞர்களின் கருத்தைக் கேட்டறிந்தார். அவற்றையெல்லாம் உரிய இடத்தில் இணைத்து ‘மகாத்மா காந்தி’ செய்திப்படத்தை 24.08.1940இல் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முதலில் வெளியிட்டார். இந்தப் படத்தை 1952 இல் மீண்டும் ஆங்கிலப் பின்னை உரையுடன் தயாரித்தார். காந்தியின் புகழைப் பரப்பினார்.

மகாத்மா காந்தி உடலுடன், உயிருடன், உள்ளத்துடன் வாழ்ந்தபோது, அவருக்குச் செலுத்தப்பட்ட ஒரு தமிழனின் மகத்தான காணிக்கையாக இச்செய்திப் படம் ஏ.கே.செட்டியாரால் இந்தியாவிலேயே முதன் முதலில் உருவாக்கப்பட்டது.இதற்காக ஒவ்வொரு தமிழனும் பெருமை கொள்ளலாம்.
இத்தகு சாதனையைச் செய்த செட்டியாரின் நூற்றாண்டு விழாவினை மத்திய அரசும்,மாநில அரசும் கொண்டாட வேண்டும் என்பதை அரசியல்வாதிகளுக்கு நான்,அப்போதைக்கு இப்போதே நினைவுபடுத்துகின்றேன். 2011இல் இவருடைய நூற்றாண்டு வருகிறது அல்லவா!

மகாத்மா காந்தி பற்றிய செய்திப்படத்தை எடுப்பதற்காகவே உலகின் பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்தார். அதன் விளைவே இவர் பயண நூல்கள் பலவற்றை எழுதக் காரணமாக அமைந்தது. பயண நூல்களின் முன்னோடியாக இவர் போற்றப்படுகிறார்; புகழப்படுகிறார்.

ஆம்! "இன்று எத்தனையோ விதமான பயண நூல்கள் வெளியாகின்றன. ஆனால், இலக்கியமாய் மதிக்கக் கூடிய பிரயாண நூல் வடிவெடுத்தது சந்தேகமின்றி ஏ.கே.செட்டியாரின் பேனாவில் தான் என்பதைப் பாரபட்சமில்லாத நெஞ்சங்கள் ஒப்புக்கொள்ளும்!"என்று அறிஞர் கி.சந்திரசேகரன் எழுதுகிறார்.

மாதப்பத்திரிகையான ‘குமரிமலர்’ தோன்றியது இரண்டாம் உலகப் போர்க் காலமான 1943இல். அந்நாளில் புதிதாக பத்திரிகை தொடங்க ஆங்கில அரசு அனுமதிக்காது என்பதனால் இங்கிலாந்து நாட்டில் வெளியான பெங்குவின் ரீடர் கட்டுரைக் களஞ்சியத்தைப் பின்பற்றி தமிழ்நாட்டில் ‘குமரிமலர்’ மாதம் ஒரு புத்தகமாக மலர்ந்தது.

தமிழில் முதன்முதலாக போட்டோ ஆப்செட் முறையில் படங்களையும், விளம்பரங்களையும் - அசோசியட் பிரஸ்ஸின் உதவி கொண்டு குமரிமலர் - தனது ஆண்டு மலரில் வெளியிட்டது. உலக மகாயுத்தத்தின் காரணமாக தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் திருக்கழுக்குன்றத்தில் வசித்த போது,அவருடைய அருமையான புகைப்படத்தை குமரிமலர் வெளியிட்டது. ஐயர் கடைசியாக எடுத்துக்கொண்ட புகைப்படமும் அதுவே ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

‘குமரிமலர்’ 1943 ஏப்ரல் முதல் 1983 ஏப்ரல் வரை ஏறக்குறைய 40 ஆண்டுகள் நடைபெற்றது. இடையில் 1.4.1945 முதல் 1.1.1946 வரை குமரிமலர் வெளிவருவது தடைப்பட்டது.மீண்டும் 1.2.1946 இல் வரத்தொடங்கியது. ஏ.கே.செட்டியார் வெளிநாடு சென்றபோது, அறிஞர் வெ.சாமிநாத சர்மா ஆசிரியப் பொறுப்பேற்று குமரிமலரை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகம் சுற்றிய தமிழரான ஏ.கே.செட்டியார் எழுதிய நூல்கள் இருபதிற்கு மேலாகும்.அவற்றில் சக்தி கோவிந்தன் பதிப்பகத்தாராலும் மற்றும் டி.வி.எஸ்.நிறுவனத்தாராலும் சில நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இனி இவர் எழுதிய நூல்களின் பட்டியலைக் காண்போம்.

1. ஜப்பான் (1936), 2. திரையும் வாழ்வும் (1943), 3. பிரயாணக் கட்டுரைகள் (1947), 4. மலேயா முதல் கானடா வரை (1955), 5. அமெரிக்க நாட்டில் (1956), 6. கரிபியன் கடலும் கயானாவும் (1957), 7. உலகம் சுற்றும் தமிழன் (1958), 8. அண்டை நாடுகள் (1958), 9. ஐரோப்பா வழியாக (1961), 10. இட்டபணி (1962), 11. குடகு (1967), 12. புண்ணியவான் காந்தி (1969).

பின்வருபவை சக்திமலர் வெளியீடுகள்.இவை சக்தி வை.கோவிந்தனால் வெளியிடப்பட்டவை ஆகும்.

1. ஜப்பான் (1940),

2. உலகம் சுற்றும் தமிழன் (1940),

3. அமெரிக்கா (1940) பின்வருபவை - இலவச வெளியீடுகளாக டி.வி.எஸ்.நிறுவன உதவியுடன் பள்ளி,கல்லூரி நிறுவனங்களுக்கு அன்பளிப்பாகத் தரப்பட்டன.

1. உணவு, 2. பண்பு, 3. கொய்தமலர்கள், 4. அவ்வையார்

பின்வருபவை - ஏ.கே.செட்டியாரால் விழாக்களின் போது தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டவை. இவைகளும் இலவச வெளியீடுகளே ஆகும்.

1. புத்தகம், 2. திருமணம்

இவற்றைத் தவிர - ஏஷியன் டிராவல்ஸ் பிரைவேட் லிமிடெட் - என்ற சென்னை நிறுவனம் இவருடைய தொகுப்பு நூலான ‘பயணக்கட்டுரைகள்’ என்ற நூலை 15.08.1968இல் வெளியிட்டுள்ளது. சென்ற 100 ஆண்டுகளில் தமிழ்நாட்டைப் பற்றி தமிழர் எழுதிய 140 பயணக் குறிப்புகளையும், கட்டுரைகளையும், பாடல்களையும் பழைய தமிழ் நூல்களிலிருந்தும், தமிழ் பத்திரிகைகளிலிருந்தும் இயன்ற அளவு திரட்டி இந்நூலில் ஏ.கே.செட்டியார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மலேயா முதல் கானடா வரை

இந்த நூல் ஏப்ரல் 1955 இல் வெளிவந்தது, 231 பக்கங்கள். நாற்பது மாதங்கள் வெளிநாடுகளில் பயணம் செய்த செட்டியார்,நான்கு புத்தகங்கள் வெளியிட எண்ணினார். இந்த நூலை முதலில் எழுதினார். தனது நண்பர்கள் வீட்டில் தங்கியபோது, திருப்பூரில் இந்த நூலை எழுதினார்.

உலகத்தின் பல நாடுகளில் பிரயாணம் செய்த போது ஜாதி, மதம், நிறம், மொழி என்கின்ற பேதம் இல்லாமல்,மனிதனை மனிதனாக நினைத்து, மதித்து,அன்போடு உபசரித்து,அரிய உதவிகள் புரிந்து எண்ணற்ற அன்பர்களுக்கு நன்றி.எல்லாவற்றிற்கும் மேலாக ஆண்டவனின் அருளுக்கு நன்றி என இந்த நூலின் முன்னுரையில் இவர் எழுதியுள்ளார்.

கரிபியன் கடலும் கயானாவும்

நாற்பது மாதங்கள் வெளிநாடுகளில் பயணம் செய்த செட்டியார் அந்த அனுபவம் பற்றி நான்கு நூல்கள் எழுதத் திட்டமிட்டார் அல்லவா? அந்த வரிசையில் மூன்றாவதாக எழுதப்பட்ட புத்தகம் இது.இதை 14.03.1957இல் வெளியிட்டார். 92 பக்கங்கள்; 16 படங்கள் தமது நூல்களில் படங்கள் இல்லாமல் செட்டியார் எந்த நூலையும் வெளியிட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நூலில் கயானாவைப் பற்றியும்,அங்கு ஏற்பட்ட அரசியல் கொந்தளிப்புக்குக் காரணமான பின்னணிச் சம்பவங்களையும் விளக்கமாக எழுதியுள்ளார். கண்ணுக்குத் தெரியாத தூரத்தில் வாழும் நமது மக்களைப் பற்றித் தெரிந்துகொள்ளவே இப்புத்தகங்களை எழுதியதாக ஏ.கே.செட்டியார் கூறுகிறார்.

பஹாமத்தீவுகள் - ஜமைக்கன் - பார்படோஸ் - டிரினிடாட் - பிரிட்டிஷ் கயானா - சூரிணம் - வெனிஸுவோல் ஆகிய பகுதிகளைப் பற்றி விரிவாகவும் அங்குள்ள தமிழர்கள் பற்றியும் சுவைபடக் கூறுகிறார்.

மலேயா - இந்தோனேஷ்யா - பாலித்தீவு ஜோக்ள காந்தா சுமத்ரா - ஆஸ்திரேலியா - பிஜித்தீவு - கானடா போன்ற நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்ட அனுபவங்களையும், அங்கு தாம் கண்ட காட்சிகளையும், மக்களின் நடை, உடை, பாவனை, உணவு, பழக்க வழக்கங்களையும் விரிவாக எழுதியுள்ளார்.

இந்த நூலுக்கு வேறு எந்த நூலுக்கும் எழுதாத அளவு பதினேழு பக்கங்கள் மிக நீண்ட முன்னுரையை இவர் எழுதியுள்ளார்.இந்நீண்ட முன்னுரையானது இப்பயணங்களின் முக்கியத்துவத்தையும் இவர் கொண்ட பெருமிதத்தையும் வெளிப்படுத்துகின்றன என்றே சொல்லலாம்.

‘‘இப்புத்தகத்தில் உள்ளதெல்லாம் உண்மை என்று சொல்ல வேண்டாம். என்னால் காணப்பட்ட காட்சிகளே ஆகும். ஒவ்வொருவரும் உண்மையைத் தத்தமக்குத் தெரிந்தவாறு உணருகின்றனர். உண்மையை வரையறுத்துக் கூறுவது கடினம். கடவுள் ஒருவரே உண்மை!’’ என்று இவர் கூறுகிறார்.

இந்த வையத்தில் எத்தனையோ பேர் பிறந்து மறைகிறார்கள். ஆனால் ஒரு சிலரே தாங்கள் வாழ்ந்த காலத்தின் அடிச்சுவடுகளைப் பிறருக்குப் பயன் படும்படியாக விட்டுச் செல்கிறார்கள். அப்படி எண்ணக்கூடிய சிலரில் ஒருவர் புண்ணியவான் ஏ.கே.செட்டியார் அவர்கள்.

சுய விளம்பரத்தை என்றுமே விரும்பாத இவர் தமது புகைப்படத்தைக் கூட பத்திரிகைகளுக்குத் தந்ததில்லை. புகழையும் வேண்டாத புனிதராகப் பொலிந்தார். இப்பேர்ப்பட்ட மாமனிதர் எங்கள் குடும்பத்தில் ஒருவராக இருந்து என்னுடன் பழகினார் என்பதும், எங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார் என்பதும் பெருமை தரும் செய்திகள் ஆகும்.

தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தின் தமிழியல் பண்பாட்டுப் புலத்தில் ஏ.கே.செட்டியார் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட கட்டுரை.

Tuesday 7 October 2014

வித்வத் சிகாமணி' சிந்நயச் செட்டியார்:



பெரும்புலவர் என்று 19-ஆம் நூற்றாண்டில் புலவர்களால் புகழப்பெற்றவர் "வித்வத் சிகாமணி' சிந்நயச் செட்டியார். இவர் தேவகோட்டையில் "மேலவீடு' எனப்படும் செல்வக் குடும்பத்தில், மாற்றூர்க்கோயில் - உறையூர் பிரிவில், 1855-ஆம் ஆண்டு இலக்குமணன் செட்டியார்-லெட்சுமி ஆச்சிக்கு நான்காம் பிள்ளையாகப் பிறந்தார். இவரது அண்ணன்மார் மூன்று பேர். பிறந்த தேதியும் மாதமும் அறியக் கிடைக்கவில்லை.

சிந்நயச் செட்டியார் ஓர் ஆசுகவி. இவரது குரு, தேவகோட்டை "வன்றொண்டர்' நாராயணன் செட்டியார். இந்த வன்றொண்டர், மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் மாணவர். சிந்நயச் செட்டியாரின் மானசீக குரு யாழ்ப்பாணம் ஆறுமுகநாவலர். "சிலேடைப் புலி' பிச்சுவையர், காரைக்குடி சிவபூசகர் சொக்கலிங்கம், இராமநாதபுரம் ரா.ராகவையங்கார் ஆகியோர் சிந்நயச் செட்டியாரின் மாணவர்கள்.

இவருடைய உருவத் தோற்றம் யாரையும் ஈர்க்கக் கூடியது. நல்ல சிவப்பு நிறம், விபூதி, ருத்ராட்சம் அணிந்து பஞ்சகச்ச மேலாடையில் சிவப்பழமாய்க் காட்சி அளிப்பார். கையில் எப்பொழுதும் ஓலைச்சுவடி இருக்கும். ரத்தினக் கம்பளத்தில் வீற்றிருப்பார்.

இராமநாதபுரம் அரசர் பாஸ்கர சேதுபதியின் உறவினர் பாண்டித்துரைத் தேவர் மிகச் சிறந்த புலவர். அவர், சிந்நயச் செட்டியாரின் இனிய தோழர். இருவரும் அடிக்கடி சந்தித்து அளவளாவுவர். பாண்டித்துரைத் தேவர் நான்காம் தமிழ்ச் சங்கத்தை மதுரையில் நிறுவ முயன்றபோது, அவருக்கு உறுதுணையாக நின்றவர் சிந்நயச் செட்டியார்.

அவர் எழுதியுள்ள நூல்கள், மதுரை மீனாட்சி அம்மைப்பதிகம், நகரத்தார் வரலாறு, திருவொற்றியூர்ப் புராணம், குன்றக்குடி மயின்மலைப் பிள்ளைத் தமிழ், தேவகோட்டை சிலம்பைப் பதிற்றுப்பத்து அந்தாதி, இராமேசுரம் தேவைத் திரிபு அந்தாதி, திருவண்ணாமலை அருணைச் சிலேடை வெண்பா, காசி யமக அந்தாதி, வெளிமுத்திப் புராணம், கும்பாபிஷேக மகிமை, ஐம்பெரும் காப்பிய ஒப்பீடு, கண்டனூர் மீனாட்சி அம்மை பாடல் முதலியன.

ரா.ராகவையங்கார் தன் மாணவர் மு.ராகவையங்காருக்குப் பாடம் கற்பித்தபொழுது, சிந்நயச் செட்டியாரின் சில நூல்களையும் கற்பித்தது குறிப்பிடத்தக்கது.

சிந்நயச் செட்டியாரின் மனைவி பெயர் மீனாட்சி. இவர்களுக்குப் பிள்ளை இல்லாததால், இருவரும் காசிக்குச் சென்று ஓராண்டு பிள்ளைவரம் வேண்டி, தினந்தோறும் கங்கையில் நீராடி, காசி விசுவநாதரைத் தொழுது வந்தனர். குழந்தை பிறக்க வேண்டி ஒரு வாழை மரக்கன்று நட்டனர். அது வளர்ந்து, குலைதள்ளியபொழுது இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்குக் "காசி' என்று பெயரிட்டனர். பின்னாளில் தேவகோட்டைக்குத் திரும்பி, தமிழ்ப் பணியிலும், ஆன்மிகப் பணியிலும் ஈடுபட்டார். குழந்தை காசி, மூன்றாண்டுகளுக்குப் பின் காலமானது விதி வசமே!

பிறகு, சிந்நயச் செட்டியார் திருவாரூரில் சில காலம் வசித்தார். பெருமளவு தேவகோட்டையில்தான் வாழ்ந்தார். அக்காலத்தில் அங்கு யாராவது புலவர்கள் சொற்பொழிவாற்ற வந்தால், முதலில் சிந்நயச் செட்டியாரைச் சந்தித்து அவரது ஆசிபெற்றே செல்வது வழக்கம்.

சிந்நயச் செட்டியார் மிகவும் அவையடக்கம் உள்ளவர். அவர், தனது மயின்மலைப் பிள்ளைத் தமிழ் அவையடக்கப் பாடலில், "கடையடுத்த மடமையினேன்' என்று தன்னைப் பற்றிக் கூறிக்கொள்கிறார்.

நகைச்சுவையாகப் பேசுவதிலும் வல்லவர்; வாக்குப் பலிதமும் உடையவர். ஒருமுறை வெளிமுத்தி என்ற ஊருக்குச் சென்றபொழுது, அவ்வூர் மக்கள் சிலர் அவரைச் சூழ்ந்துகொண்டு, ""நீங்கள் ஆசுகவியானால் இங்குள்ள ஆண் பனையைப் பழுக்க வைக்க வேண்டும்'' என்றார்கள். உடனே அவர், ""பங்குக்கு மூன்று பழம்தர வேண்டும் பனந்துண்டமே'' என்று கவிபாடினார். என்ன அதிசயம்! ஆண் பனை பெண் பனையாக மாறிப் பூத்துக் காய்த்துப் பனம்பழம் மூன்று கீழே விழுந்த காட்சியைக் கண்டு ஊரே வியந்தது.

திருவாரூரில் இவர் வாழ்ந்த காலத்தில் பதஞ்சலியும் வியாக்கிரபாதரும் பூஜை செய்த இடமான "வினமல்' என்ற திருத்தலத்தில் உள்ள சிவன் கோயிலைப் புதுப்பித்தார்.

சிந்நயச் செட்டியார் தேவகோட்டையில் இருந்தபொழுது ஒருநாள் காலையில் சிவபூஜை முடித்துக் கம்பளத்தில் அமர்ந்தபொழுது, ஜெர்மானியர் இருவர் வந்து, தமிழில் பேசி, அவரிடம் இருந்து சில சுவடிகளைப் பெற்றுச் சென்றுள்ளனர். சில தினங்களில் அவர்கள், இவருக்கு ஜெர்மனியில் இருந்து சுவடிக்கான பணம் அனுப்பி உள்ளனர். சிந்நயச் செட்டியார் காலமாகுமுன் அப்பணம் வந்திருக்கிறது.

இவரை, நகரத்தார் குருபீடமாகிய கோவிலூர் ஆதீனம் போற்றி இருக்கிறது. அக்காலத்தில் கோவிலூர் ஆதீனத்துக்குச் சொத்துகள் வாங்கியபொழுது சிந்நயச் செட்டியார் பெயரில் வாங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, உ.வே.சாமிநாதய்யர் போன்றோர் இவரைப் பாராட்டியுள்ளனர். "வன்றொண்டர்' நாராயணன் செட்டியார், ""தன் மாணவர்களில் ஆசுகவி பாடக்கூடியவர் சிந்நயச் செட்டியார் ஒருவரே'' என்று தன்னிடம் கூறியதாக உ.வே.சா., தமது சரித்திரத்தில் கூறியிருக்கிறார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் திருப்பணி செய்த "வயிநாகரம்' குடும்பத்தைச் சேர்ந்த ராமநாதன் செட்டியார், தமது "கவிதைமலர்' என்ற நூலில், சிந்நயச் செட்டியாரைப் போற்றிப் பாடல் எழுதியுள்ளார்.

ஒருமுறை அன்பர்கள் சிலர் அவரைப் பார்த்து, ""செல்வத்தின் முன் கல்வி நிற்குமா?'' என்று கேட்டனர். அதற்கு அவர், ""செல்வம் எடைக்கு நிற்கும்; கல்வி உறைக்கு நிற்கும்'' என்றார். தன் பெயருக்கு அவர் விளக்கம் கூறினாராம் இப்படி, "சித்துடனே நயம் சேர்ந்தால் - சிந்நயம்' ஆகும்.

தேவகோட்டை அருகில் "இறகுசேரி', "கண்டதேவி' என்ற இரு கிராமங்கள் உள்ளன. அவற்றை அவர், ராமாயணத்துடன் ஒப்பிட்டுக் கூறுவார். ""ஜடாயுவின் இறகு வீழ்ந்த இடம் இறகுசேரி'', அனுமன், ""கண்டேன் தேவியை என்று கூறிய இடம் கண்டதேவி. ஆகவே தேவகோட்டை என்பது தேவிகோட்டை ஆகும்'' என்பார்.

இவருடைய சாதனைகளில் மேலும் இரண்டு உள்ளன. அவை: திருவாமாத்தூர் வண்ணச்சரபம் ஸ்ரீதண்டபாணி சுவாமிகளை தேவகோட்டைக்கு அழைத்து வந்து, தேவகோட்டைச் சிவன் கோயிலில் உள்ள ஸ்ரீதண்டபாணி பேரில் பிள்ளைத்தமிழ் பாடச்செய்தார். வேலங்குடிக் கல்வெட்டில் இருந்து நகரத்தார் வரலாற்றை முதலில் எழுதி வெளியிட்டார்.

சிந்நயச் செட்டியார் 1900-ஆம் ஆண்டு காலமானார். இவர் இறந்த மாதமும் தேதியும் கூட அறியக்கிடைக்கவில்லை என்பது பெரும் குறையே! என்றாலும் அவரது தமிழ்த்தொண்டின் புகழ் என்றென்றும் குறையாது என்பது உண்மையிலும் உண்மை!
Photo: வித்வத் சிகாமணி' சிந்நயச் செட்டியார்:

பெரும்புலவர் என்று 19-ஆம் நூற்றாண்டில் புலவர்களால் புகழப்பெற்றவர் "வித்வத் சிகாமணி' சிந்நயச் செட்டியார். இவர் தேவகோட்டையில் "மேலவீடு' எனப்படும் செல்வக் குடும்பத்தில், மாற்றூர்க்கோயில் - உறையூர் பிரிவில், 1855-ஆம் ஆண்டு இலக்குமணன் செட்டியார்-லெட்சுமி ஆச்சிக்கு நான்காம் பிள்ளையாகப் பிறந்தார். இவரது அண்ணன்மார் மூன்று பேர். பிறந்த தேதியும் மாதமும் அறியக் கிடைக்கவில்லை.

  சிந்நயச் செட்டியார் ஓர் ஆசுகவி. இவரது குரு, தேவகோட்டை "வன்றொண்டர்' நாராயணன் செட்டியார். இந்த வன்றொண்டர், மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் மாணவர். சிந்நயச் செட்டியாரின் மானசீக குரு யாழ்ப்பாணம் ஆறுமுகநாவலர். "சிலேடைப் புலி' பிச்சுவையர், காரைக்குடி சிவபூசகர் சொக்கலிங்கம், இராமநாதபுரம் ரா.ராகவையங்கார் ஆகியோர் சிந்நயச் செட்டியாரின் மாணவர்கள்.

  இவருடைய உருவத் தோற்றம் யாரையும் ஈர்க்கக் கூடியது. நல்ல சிவப்பு நிறம், விபூதி, ருத்ராட்சம் அணிந்து பஞ்சகச்ச மேலாடையில் சிவப்பழமாய்க் காட்சி அளிப்பார். கையில் எப்பொழுதும் ஓலைச்சுவடி இருக்கும். ரத்தினக் கம்பளத்தில் வீற்றிருப்பார்.

  இராமநாதபுரம் அரசர் பாஸ்கர சேதுபதியின் உறவினர் பாண்டித்துரைத் தேவர் மிகச் சிறந்த புலவர். அவர், சிந்நயச் செட்டியாரின் இனிய தோழர். இருவரும் அடிக்கடி சந்தித்து அளவளாவுவர். பாண்டித்துரைத் தேவர் நான்காம் தமிழ்ச் சங்கத்தை மதுரையில் நிறுவ முயன்றபோது, அவருக்கு உறுதுணையாக நின்றவர் சிந்நயச் செட்டியார்.

  அவர் எழுதியுள்ள நூல்கள், மதுரை மீனாட்சி அம்மைப்பதிகம், நகரத்தார் வரலாறு, திருவொற்றியூர்ப் புராணம், குன்றக்குடி மயின்மலைப் பிள்ளைத் தமிழ், தேவகோட்டை சிலம்பைப் பதிற்றுப்பத்து அந்தாதி, இராமேசுரம் தேவைத் திரிபு அந்தாதி, திருவண்ணாமலை அருணைச் சிலேடை வெண்பா, காசி யமக அந்தாதி, வெளிமுத்திப் புராணம், கும்பாபிஷேக மகிமை, ஐம்பெரும் காப்பிய ஒப்பீடு, கண்டனூர் மீனாட்சி அம்மை பாடல் முதலியன.

  ரா.ராகவையங்கார் தன் மாணவர் மு.ராகவையங்காருக்குப் பாடம் கற்பித்தபொழுது, சிந்நயச் செட்டியாரின் சில நூல்களையும் கற்பித்தது குறிப்பிடத்தக்கது.

  சிந்நயச் செட்டியாரின் மனைவி பெயர் மீனாட்சி. இவர்களுக்குப் பிள்ளை இல்லாததால், இருவரும் காசிக்குச் சென்று ஓராண்டு பிள்ளைவரம் வேண்டி, தினந்தோறும் கங்கையில் நீராடி, காசி விசுவநாதரைத் தொழுது வந்தனர். குழந்தை பிறக்க வேண்டி ஒரு வாழை மரக்கன்று நட்டனர். அது வளர்ந்து, குலைதள்ளியபொழுது இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்குக் "காசி' என்று பெயரிட்டனர். பின்னாளில் தேவகோட்டைக்குத் திரும்பி, தமிழ்ப் பணியிலும், ஆன்மிகப் பணியிலும் ஈடுபட்டார். குழந்தை காசி, மூன்றாண்டுகளுக்குப் பின் காலமானது விதி வசமே!

  பிறகு, சிந்நயச் செட்டியார் திருவாரூரில் சில காலம் வசித்தார். பெருமளவு தேவகோட்டையில்தான் வாழ்ந்தார். அக்காலத்தில் அங்கு யாராவது புலவர்கள் சொற்பொழிவாற்ற வந்தால், முதலில் சிந்நயச் செட்டியாரைச் சந்தித்து அவரது ஆசிபெற்றே செல்வது வழக்கம்.

  சிந்நயச் செட்டியார் மிகவும் அவையடக்கம் உள்ளவர். அவர், தனது மயின்மலைப் பிள்ளைத் தமிழ் அவையடக்கப் பாடலில், "கடையடுத்த மடமையினேன்' என்று தன்னைப் பற்றிக் கூறிக்கொள்கிறார்.

  நகைச்சுவையாகப் பேசுவதிலும் வல்லவர்; வாக்குப் பலிதமும் உடையவர். ஒருமுறை வெளிமுத்தி என்ற ஊருக்குச் சென்றபொழுது, அவ்வூர் மக்கள் சிலர் அவரைச் சூழ்ந்துகொண்டு, ""நீங்கள் ஆசுகவியானால் இங்குள்ள ஆண் பனையைப் பழுக்க வைக்க வேண்டும்'' என்றார்கள். உடனே அவர், ""பங்குக்கு மூன்று பழம்தர வேண்டும் பனந்துண்டமே'' என்று கவிபாடினார். என்ன அதிசயம்! ஆண் பனை பெண் பனையாக மாறிப் பூத்துக் காய்த்துப் பனம்பழம் மூன்று கீழே விழுந்த காட்சியைக் கண்டு ஊரே வியந்தது.

  திருவாரூரில் இவர் வாழ்ந்த காலத்தில் பதஞ்சலியும் வியாக்கிரபாதரும் பூஜை செய்த இடமான "வினமல்' என்ற திருத்தலத்தில் உள்ள சிவன் கோயிலைப் புதுப்பித்தார்.

  சிந்நயச் செட்டியார் தேவகோட்டையில் இருந்தபொழுது ஒருநாள் காலையில் சிவபூஜை முடித்துக் கம்பளத்தில் அமர்ந்தபொழுது, ஜெர்மானியர் இருவர் வந்து, தமிழில் பேசி, அவரிடம் இருந்து சில சுவடிகளைப் பெற்றுச் சென்றுள்ளனர். சில தினங்களில் அவர்கள், இவருக்கு ஜெர்மனியில் இருந்து சுவடிக்கான பணம் அனுப்பி உள்ளனர். சிந்நயச் செட்டியார் காலமாகுமுன் அப்பணம் வந்திருக்கிறது.

  இவரை, நகரத்தார் குருபீடமாகிய கோவிலூர் ஆதீனம் போற்றி இருக்கிறது. அக்காலத்தில் கோவிலூர் ஆதீனத்துக்குச் சொத்துகள் வாங்கியபொழுது சிந்நயச் செட்டியார் பெயரில் வாங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

  மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, உ.வே.சாமிநாதய்யர் போன்றோர் இவரைப் பாராட்டியுள்ளனர். "வன்றொண்டர்' நாராயணன் செட்டியார், ""தன் மாணவர்களில் ஆசுகவி பாடக்கூடியவர் சிந்நயச் செட்டியார் ஒருவரே'' என்று தன்னிடம் கூறியதாக உ.வே.சா., தமது சரித்திரத்தில் கூறியிருக்கிறார்.

  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் திருப்பணி செய்த "வயிநாகரம்' குடும்பத்தைச் சேர்ந்த ராமநாதன் செட்டியார், தமது "கவிதைமலர்' என்ற நூலில், சிந்நயச் செட்டியாரைப் போற்றிப் பாடல் எழுதியுள்ளார்.

  ஒருமுறை அன்பர்கள் சிலர் அவரைப் பார்த்து, ""செல்வத்தின் முன் கல்வி நிற்குமா?'' என்று கேட்டனர். அதற்கு அவர், ""செல்வம் எடைக்கு நிற்கும்; கல்வி உறைக்கு நிற்கும்'' என்றார். தன் பெயருக்கு அவர் விளக்கம் கூறினாராம் இப்படி, "சித்துடனே நயம் சேர்ந்தால் -  சிந்நயம்' ஆகும்.

  தேவகோட்டை அருகில் "இறகுசேரி', "கண்டதேவி' என்ற இரு கிராமங்கள் உள்ளன. அவற்றை அவர், ராமாயணத்துடன் ஒப்பிட்டுக் கூறுவார். ""ஜடாயுவின் இறகு வீழ்ந்த இடம் இறகுசேரி'', அனுமன், ""கண்டேன் தேவியை என்று கூறிய இடம் கண்டதேவி. ஆகவே தேவகோட்டை என்பது தேவிகோட்டை ஆகும்'' என்பார்.

  இவருடைய சாதனைகளில் மேலும் இரண்டு உள்ளன. அவை: திருவாமாத்தூர் வண்ணச்சரபம் ஸ்ரீதண்டபாணி சுவாமிகளை தேவகோட்டைக்கு அழைத்து வந்து, தேவகோட்டைச் சிவன் கோயிலில் உள்ள ஸ்ரீதண்டபாணி பேரில் பிள்ளைத்தமிழ் பாடச்செய்தார். வேலங்குடிக் கல்வெட்டில் இருந்து நகரத்தார் வரலாற்றை முதலில் எழுதி வெளியிட்டார்.

  சிந்நயச் செட்டியார் 1900-ஆம் ஆண்டு காலமானார். இவர் இறந்த மாதமும் தேதியும் கூட அறியக்கிடைக்கவில்லை என்பது பெரும் குறையே! என்றாலும் அவரது தமிழ்த்தொண்டின் புகழ் என்றென்றும் குறையாது என்பது உண்மையிலும் உண்மை!

Thursday 2 October 2014

சகலகலாவல்லி மாலை

 அனைவருக்கும் ஆயுத பூசை வாழ்த்துகள் .



 குமரகுருபரர் அருளிய சகலகலாவல்லி மாலை

வெண் தாமரைக்கு அன்றி நின் பதம் தாங்க என் வெள்ளை உள்ளத்
தண்டாமரைக்குத் தகாது கொலோ சகம் ஏழும் அளித்து
உண்டான் உறங்க வொழித்தான் பித்தாக உண்டாக்கும் வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே.

நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய் தர நாற்கவியும்
பாடும் பணியிற் பணித்தருள் வாய் பங்கயாசனத்திற்
கூடும் பசும்பொற் கொடியே கனதனக் குன்றுமைப் பாற்
காடும் சுமக்கும் கரும்பே சகல கலாவல்லியே.

அளிக்கும் செழுந்தமிழ்த் தெள்அமுதுதார்ந்து உன் அருட் கடலில்
குளிக்கும் படிக்கென்று கூடும் கொலொ உளங் கொண்டு தெள்ளித்
தெளிக்கும் பனுவற் புலவோர் கவிமழை சிந்தக் கண்டு
களிக்கும் கலாப மயிலே சகல கலாவல்லியே.

தூக்கும் பனுவற் துறைதோய்ந்த கல்வியும் சொற் சுவைதோய்
வாக்கும் பெருகப் பணித்தருள் வாய்வட நூற்கடலும்
தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர் செந்நாவினின்று
காக்கும் கருணைக் கடலே சகல கலாவல்லியே.

பஞ்சப் பிதந்தரு செய்ய பொற்பாதம் பங்கேருகம் என்
நெஞ்சத் தடத்து அலராது என்னே நெடுந்தாட் கமலத்
தஞ்சத் துவசம் உயர்த்தோன் செந்நாவு மகமும் வெள்ளைக்
கஞ்சத்தவி சொத்திருந்தாய் சகல கலாவல்லியே.

பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும் யான்
எண்ணும் பொழுதெளிது எய்த நல் காயெழு தாமறையும்
விண்ணும் புவியும் புனலும் கனலும் வெங்காலும் அன்பர்
கண்ணும் கருத்தும் நிறைந்தாய் சகல கலாவல்லியே.

பாட்டும் பொருளும் பொருளால் பொருந்தும் பயனும் என்பால்
கூட்டும் படிநின் கடைக்கணல் காயுளங் கொண்டு தொண்டர்
தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால் அமுதம் தெளிக்கும் வண்ணம்
காட்டும் வெள்ளோதிமப் பேடே சகல கலாவல்லியே.

சொல்விற் பனமும் அவதான முங்கவி சொல்ல வல்ல
நல்வித்தையும் தந்து அடிமை கொள்வாய் நளினாசனஞ்சேர்
செல்விக்கு அரிது என்றொரு காலமும் சிதையாமை நல்கும்
கல்விப் பெரும் செல்வப் பேறே சகல கலாவல்லியே.

சொற்கும் பொருட்கும் உயிரா மெய்ஞ் ஞானத்தின் ஒற்றமென்ன
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார் நிலந்தோய் புழைக்கை
நற்குஞ் சரத்தின் பிடியோடு அரசன்ன நாணநடை
கற்கும் பதாம்புயத் தாயே சகல கலாவல்லியே.

மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும் என்
பண்கண்ட அளவிற் பணியச் செய்வாய் படைப்போன் முதலாம்
விண்கண்ட தெய்வம் பல்கோடி உண்டேனும் விளம்பிலும் உன்போல்
கண்கண்ட தெய்வம் உளதோ சகல கலாவல்லியே.

Monday 29 September 2014

சப்தரிஷி ராமாயாணம்


சப்தரிஷி ராமாயாணம்
குழிபிறை ஆதினம் அண்ணாமலை செட்டியார் இல்லத்தில் இராமர் திருக்கல்யாணத்தின் பொது


சப்தரிஷி ராமாயணம் சுருக்கமானது. ஏழு மகரிஷிகளால் இயற்றப் பெற்றதால் சப்தரிஷி ராமாயணம் என பெயர் பெற்றது. சமஸ்கிருத ஸ்லோகங்களாக இயற்ற பெற்ற இதை ஸ்ரீ ராமரின் திருவருளால் தமிழில் கவிதையாக்கியிருக்கிறேன். இதை படிப்பவர் யாவரையும் காத்தருள வேண்டுமென ஸ்ரீ ராமரை வேண்டி அவர் பொற்பாதங்களில் இதை சமர்ப்பிக்கிறேன்.

காஷ்யப மகரிஷியின் பால காண்டம்:

வாரிசு வேண்டுமென தசரதர் வேண்டினார்
சூர்ய குலத்தில் ஸ்ரீ ராமர் தோன்றினார்
விஸ்வாமித்திரரிடம் வித்தைகள் கற்றார்
அஸ்திரங்கள் பல அன்போடு பெற்றார்
கன்னி யுத்தத்தில் தாடகையை கொன்றார்
கௌசிகன் வேள்விக்கு காவலாய் நின்றார்
சுபாகு மாரீசன் இருவரையும் வென்றார்
அகலிகா கல்லின் மேல் அவர் பாதம் பட்டது
பெண்ணாகி நின்றாள் பெற்ற சாபம் விட்டது
ஜனகர் ஆளும் மிதிலை புகுந்தார்
சிவபெருமானின் வில்லை வகுந்தார்
மண்ணின் மகளாம் சீதையை மணந்தார்
ஜானகி ராமனாய் ஊர்வலம் நடந்தார்
வழியில் பரசுராமருக்கு பணிவை தந்தார்
அயோத்தி திரும்பினார் நலமாக
பல்லாண்டு வாழ்ந்தார் வளமாக

அத்ரி மகரிஷியின் அயோத்யா காண்டம்:

ஸ்ரீ ராமரின் பட்டாபிஷேக வேளையில்
சூழ்ச்சி தோன்றியது கூனியின் மூளையில்
அதை கைகேயி புத்திக்குள் திணித்தாள்
இரண்டு வரங்களை கேட்கும்படி பணித்தாள்
கைகேயி ஆசையால் ராமர் பாசத்தை மறந்தாள்
மன்னனிடம் இரண்டு வரங்களையும் இரந்தால்
உன் ராமன் காடாள வேண்டும்
என் பரதன் நாடாள வேண்டும்
இதை கேட்டதும் தசரதர் கலங்கினார்
துக்கத்தால் தரையில் விழுந்து மயங்கினார்
பரத்வாஜ மகரிஷியின் ஆரண்ய காண்டம்
தந்தை சொல் காக்க மனம் உகந்தார்
சீதா லக்ஷ்மண சமேத ராமர் வனம் புகுந்தார்
பாவம் போக்கிடும் கங்கையை கடந்தார்
வேடன் குகனின் நட்பை அடைந்தார்
மரவுரி சடை முனி போல தரித்தார்
சித்ரகூடத்தில் சில நாள் வசித்தார்
காண வந்த பரதனை அணைத்தார்
தந்தைக்கான ஈமக்கடன் முடித்தார்
வனத்தில் வசித்தோர்க்கு நன்மை செய்தார்
பின் அகஸ்திய முனிவரின் ஆசிரமம் எய்தார்
முனிவரிடம் பெற்றார் இனிதான அருளும்
அக்ஷ்யவில் எனும் அரிதான பொருளும்

விஸ்வாமித்திர மகரிஷியின் கிஷ்கிந்தா காண்டம் :

அகஸ்தியர் சொல்படி பஞ்சவடி சென்றார்
பஞ்சவடியின் முனிவர்களிடம் அபயம் என்றார்
சூர்ப்பணகையின் காதையும் மூக்கையும் சிதைத்தார்
திறம் மிக்க கர தூஷணர்களை வதைத்தார்
மாயம் செய்த பொன்மானை அதம் செய்தார்
வானர தலைவன் வாலியை வதம் செய்தார்
வன ராஜ்யத்தை குண தாரையோடு சுக்ரீவனுக்கு வழங்கினார்
ஆபத்தில் உதவும் நண்பனாக விளங்கினார்

கௌதம மகரிஷியின் சுந்தர காண்டம் :

ஆஞ்சநேயர் விளையாட்டாக கடல் தாண்டி குதித்தார்
அசோகவனத்தில் அன்னையை கண்டு துதித்தார்
ஸ்ரீ ராமர் தந்த மோதிரத்தை எடுத்தார்
ஜனகன் மகள் ஜானகியிடம் கொடுத்தார்
அக்ஷன் முதலான அரக்கரை ஒழித்தார்
இலங்கையை நெருப்பால் எரித்தார்
பின் ஸ்ரீ ராமரிடம் வேகமாக பறந்தார்
கண்டேன் சீதையை என மகிழ்ச்சியோடு பகர்ந்தார்

ஜமதாக்னி மகரிஷியின் யுத்த காண்டம்:

ஸ்ரீ ராமர் நளன் மூலமாக சேது அணை செய்வித்தார்
வீரம் மிக்க வானரருடன் இலங்கை சென்று கர்ஜித்தார்
கும்பகர்ணன் முதலான அசுரருக்கு எமனாக நின்றார்
ராவணன் அழிந்த அப்பெரும்போரில் வென்றார்
இலங்கை அரசை விபீஷணன் தலையில் முடிந்தார்
ஜெய ராமர் சீதையோடு புஷ்பக விமானத்தில் பறந்தார்
அயோத்யாவின் சிம்மாசனத்தில் மன்னனாய் அமர்ந்தார்

விசிஷ்ட மகரிஷியின் உத்தர காண்டம்:

சக்ரவர்த்தி திருமகனான ஸ்ரீ ராமர் மன்னனாய் சிறந்தார்
லக்ஷ்மண பரத சத்ருக்கனரோடு நல்லாட்சி புரிந்தார்
அவர் ஆட்சியில் அஸ்வமேதம் போன்ற வேள்விகள் நடந்தன
மக்கள் மட்டுமல்ல அணில் போன்ற ஜீவன்கள் கூட மகிழ்ந்தன
ஊரார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் பிழைக்கச் செய்தார்
உயிர்களின் தலைவனான் ஸ்ரீ ராமர் தர்மத்தை தழைக்கச் செய்தார்
பல்லாண்டுகளுக்குப் பின் தம் ராஜ்யத்தை இரண்டாக்கினார்
தம் புதல்வரான லவ குசரை அவற்றுக்கு அரசனக்கினார்
தன்னை நேசித்த மக்களோடு சரயு நதியில் இறங்கினார்
மீண்டும் பரம பதம் சென்று மீண்டும் மஹாவிஷ்ணுவாக விளங்கினார்

பாராயண பலன்

அமுதம் நிகரான ராம காதை ஜபித்தவர்
செய்த பாவங்கள் அனைத்தையும் அழித்தவர்
அறம் பொருள் இன்பம் மூன்றையும் வெல்வர்
தேவர்கள் விஷ்ணுவை துதிக்கும் வைகுண்டம் செல்வர்

Sunday 28 September 2014

அகர வரிசையில் இராமாயணம்

இந்த புண்ணிய மாதமாமன் புரட்டாசியில் பெருமாளை வணங்குவதும் ராமாயணம் படிப்பதும் கேட்பதும் மிகவும் புண்ணியம் தரும்செயலாகும். அதிவேகமாக மனிதன் காலில் சக்கரம் கட்டிக்கொண்டு பறக்கும் காலம் இது . சற்று எளிமையாகவும் சுருக்கமாகவும்
இன்று இங்கு சற்று வித்தியாசமான முறையில் ராமாயணத்தின் கதைச் சுருக்கம் அ வரிசையில் . அமுதுக்கு நிகரான நம் தமிழ் மொழியில் செழுமையை இதில் நாம் காணமுடிகிறது .
இராமர் பட்டாபிஷேகம்


"அனந்தனே அசுரர்களை அழித்து,அன்பர்களுக்கு அருள அயோத்தி அரசனாக அவதரித்தான். அப்போது அரிக்கு அரணாக அரசனின் அம்சமாக அனுமனும் அவதரித்ததாகஅறிகிறோம்.அன்று அஞ்சனை அவனிக்குஅளித்த அன்பளிப்பு அல்லவா அனுமன் ? அவனே அறிவழகன்,அன்பழகன்,அன்பர்களை
அரவ-ணைத்து அருளும் அருட்செல்வன்! அயோத்தி அடலேறு,அம்மிதிலை அரசவையில் அரசனின்
அரிய வில்லை அடக்கி, அன்பும்அடக்கமும் அங்கங்களாக அமைந்த அழகியைஅடைந்தான் . அரியணையில் அமரும் அருகதை அண்ணனாகியஅனந்த ராமனுக்கே!அப்படியிருக்க அந்தோ !அக்கைகேயி அசூயையால் அயோத்தி அரசனுக்கும் அடங்காமல் அநியாயமாக அவனை அரண்யத்துக்குஅனுப்பினாள். அங்கேயும் அபாயம்!அரக்கர்களின் அரசன் ,அன்னையின் அழகால் அறிவிழந்து அபலையைஅபகரித்தான் அத்தசமுகனின் அக்கிரமங்களுக்கு, அட்டூழியங்களுக்குஅளவேயில்லை. அயோத்தி அண்ணல் , அன்னைஅங்கிருந்து அகன்றதால் அடைந்த அவதிக்கும்அளவில்லை. அத்தருணத்தில் அனுமனும், அனைவரும் அரியைஅடிபணிந்து, அவனையே அடைக்கலமாக அடைந்தனர். அந்த அடியார்களில் அருகதையுள்ள அன்பனைஅரசனாக அரியணையில் அமர்த்தினர். அடுத்து அன்னைக்காக அவ்வானரர் அனைவரும் அவனியில் அங்குமிங்கும் அலைந்தனர், அலசினர். அனுமன், அலைகடலை அலட்சியமாக அடியெடுத்து அளந்து அக்கரையைஅடைந்தான். அசோகமரத்தின் அடியில் ,அரக்கிகள் அயர்ந்திருக்கஅன்னையை அடி பணிந்து அண்ணலின் அடையாளமாகிய அக்கணையாழியை அவளிடம் அளித்தான் அன்னை அனுபவித்த அளவற்ற அவதிகள்அநேகமாக அணைந்தன.அன்னையின் அன்பையும் அருளாசியையும் அக்கணமே அடைந்தான் அனுமன். அடுத்து, அரக்கர்களை அலறடித்து , அவர்களின்அரண்களை , அகந்தைகளை அடியோடு அக்கினியால் அழித்த அனுமனின் அட்டகாசம் , அசாத்தியமான அதிசாகசம். அனந்தராமன் அலைகடலின் அதிபதியை அடக்கி ,அதிசயமான அணையைஅமைத்து,அக்கரையை அடைந்தான். அரக்கன் அத்தசமுகனை அமரில் அயனின் அஸ்திரத்தால் அழித்தான். அக்கினியில் அயராமல் அர்பணித்த அன்னை அவள் அதி அற்புதமாய் அண்ணலை அடைந்தாள். அன்னையுடன் அயோத்தியை அடைந்து அரியணையில் அமர்ந்து அருளினான் அண்ணல். அனந்த ராமனின் அவதாரஅருங்கதை அகரத்திலேயே அடுக்கடுக்காக அமைந்ததும் அனுமனின் அருளாலே. "

Thursday 25 September 2014

கண்ணதாசன் அவர்கள் மொழிபெயர்த்த கனகதாரா ஸ்தோத்திரம்





மாலவன் மார்பில் நிற்கும் மங்கலக் கமலச் செல்வீ!
மரகத மலரில் மொய்க்கும் மாணிக்கச் சுரும்பு போன்றாய்
நீலமா மேகம் போல நிற்கின்ற திருமாலுந்தன்
நேயத்தால் மெய் சிலிர்த்து நிகரிலாச் செல்வம் கொண்டான்!
மாலவன் மீது வைத்த மாயப்பொன் விழிஇ ரண்டை
மாதுநீ என்னி டத்தில் வைத்தனை என்றால் நானும்
காலமா கடலில் உந்தன் கருணையால் செல்வம் பெற்று
கன்ணிறை வாழ்வு கொள்வேன் கண்வைப்பாய் கமலத்தாயே.
நீலமா மலரைப் பார்த்து நிலையிலா(து) அலையும் வண்டு
நிற்பதும் பறப்ப தும்போய் நின்விழி மயக்கம் கொண்டு
கோலமார் நெடுமால் வண்ணக் குளிர்முகம் தன்னைக் கண்டு,
கொஞ்சிடும் , பிறகு நாணும் கோதையார் குணத்தில் நின்று!
ஏலமார் குழலி அந்த இருவிழி சிறிது நேரம்
என்வசம் திரும்பு மாயின் ஏங்கிய காலம் சென்று
ஆலமா மரங்கள் போல அழிவிலாச் செல்வம் கொண்டு
அடியவன் வாழ்வு காண்பேன் அருள்செய்வாய் கமலத்தாயே !
நற்குடி பிறந்த பெண்கள் நாயகன் தனைப் பார்த்தாலும்
நாணத்தால் முகம்புதைத்து நாலிலோர் பாகம் பார்ப்பார்!
பற்பல நினைத்தபோதும் பாதிக்கண் திறந்துமூடி
பரம்பரைப் பெருமை காப்பார் !
பாற்கடல் அமுதே! நீயும் அற்புத விழிகளாலே
அச்சுத முகுந்தன் மேனி அப்படிக் காண்பதுண்டு
ஆனந்தம் கொள்வதுண்டு !
இப்பொழு(து) அந்தக் கண்ணை என்னிடம் திருப்பு தாயே !
இருமையும் செழித்து வாழ இகத்தினில் அருள்வாய் நீயே !
மதுஎனும் பெயரில் வாழ்ந்த மனமிலா அரக்கன் தன்னை
மாபெரும் போரில் வென்ற மாலவன் மார்பி லாடும்
அதிசய நீலமாலை அன்னநின் விழிகள் கண்டு
அண்ணலும் காலந்தோறும் ஆனந்தம் கொள்வதுண்டு !
பதுமநேர் முகத்தினாளே! பதுமத்தில் உறையும் செல்வி!
பார்கடல் மயக்கும் கண்ணை பேர்த்தெடுத்தென்மேல் வைத்தால்
பிழைப்பன்யான் அருள்செய்வாயே,
பேரருள் ஒருங்கேகொண்ட பிழையிலாக் கமலத்தாயே !
கைடப அரக்கன் தன்னை கடித்தநின் கணவன் மார்பு
கார்முகில் அன்னந்தோன்றி கருணைநீர் பொழியுங் காலை
மைதவழ் மார்பில் வீசும் மயக்குறும் மின்னல் ஒன்று!
மயக்குவான் திருமால்; பின்னர் மகிழ்வநின் விழிதா னென்று!
செய்தவப் பிருகு வம்சச் சேயெனப் பிறந்து எங்கள்
திருவென வளர்ந்த நங்காய்! தினமும்யாம் வணங்கும் கண்ணாய்!
கொய்தெடு விழியை என்மேல் கொண்டுவந் தருள்செய் வாயே
கொற்றவர் பணிகள் செய்யும் கோலமார் கமலத் தாயே !
போரினில் அரக்கர்கூட்டம் புறங்கண்ட நெடியோன் தன்னை
போரின்றிக் குருதி யின்றிப் புறங்காணத் துடித்து வந்த
மாரனை ஊக்குவித்த வாளெது கமல நங்காய் ?
மங்கையின் விழிகளன்றோ ! மாலவன் தன்னை வென்ற
தேரிய மாரன் உன்னைத் தேரெனக் கொண்டதாலே
திருமலை வேங்க டேசன் திறத்தினை வென்றான் அன்றோ!
கூரிய விழியாய் உன்றன் குறுவிழி தன்னை என்பால்
கொண்டுவந் தால்யான் உய்வேன் கொடுத்தருள் கமலத் தாயே !
மாந்தருக் (கு) அருள்வேன் என்று மலர்மகள் நினைத்தால் போதும்
இந்திர பதவி கூடும்; இகத்திலும் பரங்கொண் டாடும்;
இணையறு செல்வம் கோடி இல்லத்தின் நடுவில் சேரும்
சந்திரவதனி கண்கள் சாடையிற் பார்த்தாற் போதும்
தாய்விழிப் பட்ட கல்லும் தரணியில் தங்கமாகும் !
எந்தவோர் பதவி வேட்டேன்! எளியனுக்(ககு) அருள் செய்வாயே!
இகத்தினில் செல்வம் தந்து இயக்குவாய் கமலத் தாயே!
எத்தனை பேர்க்குக் கிட்டும் இறையருள் ஆன்மசாந்தி ?
இகமெனும் கடலில் வீழ்ந்து எவர்பிழைத் தார்கள் நீந்தி ?
தத்துவப் படியே யாவும் தலைமுறை வழியே கிட்டும் !
தவமெனும் முயற்சியாலெ பவவினை தணிந்து போகும் !
அத்தனை முயற்சி என்ன அன்ணல்மா தேவி கண்ணில்
அருள்மழை வந்தாற் போதும் அகம்புறம் முக்தி யாகும் !
இத்தனை சொன்ன பின்னும் இன்னுமா தயக்கம் தாயே !
இல்லத்தைச் செல்வ மாக்கி இன்னருள் புரிவாய் தாயே !
நீருண்ட மேகக்கண்கள் நிழலுண்ட கரிய கூந்தல்
நேர்கொண்ட மாந்தர்வீட்டில் நிலைகொண்ட செல்வப் பந்தல்!
சீர்கொண்ட அமுதச்செல்வி சில்லென்ற காற்றுப் பாய்ந்தால்
சேர்கின்ற மேகத் தண்ணீர் சிதறுண்டு பாய்வதைப் போல்
வேர்கொண்ட பாவமேனும் வினைகொண்ட பாவமேனும்
வேய்கொண்ட தோளினாய் உன் விழிகண்டால் தீர்ந்து போகும்!
தேர்கொண்டேன் புரவி இல்லை; செல்வமாம் புரவியாலே
திருவருள் செய்வாய் நீயே தேப்பெரும் கமலத்தாயே !
ஆக்கலும் அழித்தல் காத்தல் அருள்நிறை இறைவன் சக்தி!
அன்னவன் தோளில் நீயே அனைத்துமாய் விளங்கும் சக்தி !
ஆக்கலில் வாணியாவாய்; அளித்தலில் திருவாய் நிற்பாய்!
அழிக்கின்ற வேளை வந்தால் அந்தமில் துர்க்கை யாவாய்!
தீக்கொண்ட கரத்து நாதன் திருப்பரா சக்தி யாக
திரிபுரம் ஏழுலோகம் திருவருள் புரிந்து நிற்பாய்!
வாக்குயர் கமலச் செல்வி வாடைநீ, தென்றல் நீயே !
வளமென இரப்போர்க்கெல்லாம் வந்தருள் புரிகின்றாயே!
வேதத்தின் விளைவே போற்றி ! வினைப்பயன் விளைப்பாய் போற்றி !
சீதத்தா மரையே போற்றி ! செம்மைசேர் அழகே போற்றி !
கோதைப்பண் புடையாய் போற்றி ! குளிர்ந்ச்தமா மழையே போற்றி !
ஓர்தத்துவத்தில் நிற்கும் உமையவள் வடிவே போற்றி !
பாதத்தைக் கமலம் தாங்கப் பல்லுயிர் காப்பாய் போற்றி !
நாதத்து நெடியோன் கொண்ட நங்கை நீ போற்றி ! போற்றி !
பாதத்தில் சிரசை வைத்துப் பணிகின்றேன் போற்றி ! போற்றி !
மாதத்தில் ஒருநாள் கூட மறந்திடாய் போற்றி ! போற்றி !
அன்றலர் கமலம் போன்ற அழகிய வதனி போற்றி !
அலைகடல் அமுதமாக அவதரித் தெழுந்தாய் போற்றி !
குன்றிடா அமுதத் தோடு கூடவே பிறந்தாய் போற்றி !
குளிர்ந்தமா மதியி னோடும் குடி வந்த உறவே போற்றி !
sமன்றத்து வேங்கடேசன் மனங்கவர் மலரே போற்றி !
sமாயவன் மார்பில் நின்று மயிலெனச் சிரிப்பாய் போற்றி !
என்றைக்கும் நீங்காதாக இருக்கின்ற திருவே போற்றி !
எளியவன் வணங்குகின்றேன் இன்னருள் போற்றி ! போற்றி !
தாமரை மலரில் நிற்கும் தளிரன்ன திருவே போற்றி !
தாமரை வதனங் கொண்ட தங்கமா மணியே போற்றி !
தாமரை கரத்தில் ஏந்தித் தவமென நிற்பாய் போற்றி !
தாமரைக் கண்ணன் காக்கும் தரணியைக் காப்பாய் போற்றி !
தாமரை போலே வந்த தவமுனி தேவர்க்கெல்லாம்
தாமரைக் கைகள் காட்டி தயைசெயும் திருவே போற்றி !
தாமரைக் கண்ணால் செல்வம் தந்தருள் புரிவாய் போற்றி !
தாள் , மறை, நானோ வார்த்தை; தர்மமே போற்றி ! போற்றி !
பெண்ணெனப் பிறந்தா யேனும் பெரும்திறன் கொண்டாய் போற்றி!
பிருகுவம் சத்தில் வந்த பீடுடை வதனம் போற்றி!
தண்ணளி வேங்க டத்தான் தழுவிடும் கிளியே போற்றி!
தத்துநீர்க் குளத்தில் ஆடும் தருணியே லக்ஷ்மீ போற்றி!
சித்திரக் கொடியே போற்றி! செம்மணி நகையே போற்றி!
ஸ்ரீதரன் திருப்பா தங்கள் சேவைசெய் குயிலே போற்றி!
பத்தினிப் பெண்டிர் தம்மைப் பார்வையில் வைப்பாய் போற்றி!
பக்தருக் (கு) அருள்வாய் போற்றி! பணிந்தனம் போற்றி! போற்றி!
கண்களைப் பறிக்கும் காட்சி கவிந்தநின் வடிவம் போற்றி!
கமலப்பூ வதனம் போற்றி! கமலமா விழிகள் போற்றி!
மண்ணிலும் விண்ணு ளோர்க்கும் மங்கலம் நிறைப்பாய் போற்றி!
மண்டல இயக்கத் திற்கே மந்திர(ம்) ஆனாய் போற்றி!
விண்ணவர் வணங்கும் தேவி விந்தையின் மூலம் போற்றி!
விரிமலர் கண்ணன் தேவன் விரும்பிடும் நகையே போற்றி!
எண்ணிய படியே உன்னை ஏத்தினேன் போற்றி! போற்றி!
இசைபட வாழ வைப்பாய் இலக்குமி போற்றி! போற்றி!
மைவழிக் குவளக் கண்ணாய் வரையிலாத் திருவே போற்றி !
வானவர் மண்ணோர்க் கெல்லாம் வணக்கமாய் நின்றாய் போற்றி !
மெய்வழி செவிவாய் நாசி விழைந்திடும் இன்பம் போற்றி !
விரித்தமேற் புலனுக் கெல்லாம் விளங்காத பொருளே போற்றி !
கைநிறை செல்வம் யாவும் கடைக்கணால் அருள்வாய் போற்றி !
காக்கையை அரச னாக்கும் கைமலர் உடையாய் போற்றி !
செய்ததீ வினையை எல்லாம் தீர்க்கின்ற நெருப்பே போற்றி !
சிறுமையைப் பெருமை யாக்கும் திருப்பதம் போற்றி ! போற்றி !
மோகனன் துணையே போற்றி ! முழுநில வடிவே போற்றி !
மூவுல கங்கள் தேடும் முதற்பெரும் பொருளே போற்றி !
தேகத்தே ஒளியை வைத்த செம்மணிக் குன்றே போற்றி !
தீராத ஆசைக் குள்ளே திருவென நிற்பாய் போற்றி !
ஓர்கணம் தொழுதாற் கூட ஓடிவந் தளிப்பாய் போற்றி !
ஊர்ந்தமா மேக வண்ணன் உவப்புறச் சிரிப்பாய் போற்றி !
தாள்களில் பணிந்தே னம்மா தண்ணருள் தருவாய் போற்றி !
தலைமுதல் பாதம் மட்டும் தாழ்கின்றேன் போற்றி ! போற்றி !
கண்பட்டால் மனது பாடும் கார்குழல் அலையே போற்றி!
காதள வோடும் கண்ணால் காசினி அளந்தாய் போற்றி!
வெண்பட்டால் அழகை மூடும் வியத்தகும் சிலையே போற்றி!
வெண்மல்லி கைப்பூ மாலை விளையாடும் தோளீ போற்றி!
பண்பட்டார் இல்லா தார்தம் பக்குவம் அறிவாய் போற்றி!
பணிப்பவர் இதயத் துள்ளே பாசுரம் படிப்பாய் போற்றி!
விண்முட்டும் ஞானம் பெற்ற வேதநா யகியே போற்றி!
வேயிரு தோளின் சக்தி விரித்தருள் போற்றி! போற்றி!
மண்டலத் திசைகள் தோறும் மதகரி குடங்கள் ஏந்தி
மங்கைக்கு நன்னீராட்ட கங்கைநீர் குடத்தில் மாந்தி
தண்டலக் கூந்தல் ஊற சர்வமங் களநீ ராட்டி
தாமரைப் பூவின் மேலோர் தாமரைப் பூவைச் சூட்டி
மண்டிய தூய்மைத் தாய்க்கு மற்றுமோர் தூமை நல்கி
மறுவிலாப் பளிங்fகின் மேனி மாசறத் துலங்கச் செய்யும்
அண்டமா நெடியோன் தேவீ, அலைகடல் அரசன் பெண்ணே!
அரிதுயின் கொள்ளும் காலை அடியவன் வணங்குகின்றேன்!
பூவினில் உறையும் பூவே! பொன்னிடை உறையும் பொன்னே!
பூஜைக்கே உரியோன் பூஜை புரிகின்ற காதற் செல்வீ!
ஏவுமோர் உலகத் துள்ளே இன்மையோன் ஒருவ னேதான்
இவனுனை இரந்தி நிற்க இதுவொரு நியாயம் போதும்!
தாவுநீர்க் கடலை போல தண்ணருள் அலைகள் பொங்கும்
சநிதிரப் பிறைப்பூங் கண்ணி சற்றுநீ திரும்பிப் பார்த்தால்
மேவிய வறுமை தீர்ப்பேன்; மெல்லிடைப் பூங்கோதாய், நின்
மின்னிடும் விழிகள் காண விழைந்தனேன் போற்றி! போற்றி!
முப்புவி ஈன்ற தாயே, மோகனச் சிரிப்பின் செல்வி!
மூவிரண் டொன்றாய் வந்த பிரமத்தின் மொத்தமாக
அற்புதம் காட்டி நிற்கும் அழகிய சிற்பச் சோதி
ஆனந்தத் தெய்வமாதா அரும்பெறல் அன்னை பேரில்
இப்பொழுது ரைத்த பாடல் எவரெங்குபா டினாலும்
இப்புவி உளநாள் மட்டும் இன்பமும் அறிவும் செரும்;
நற்பெரும் பேறும் கிட்டு! நன்னிலை வளரும்; என்றும்
நாட்டுக்கே ஒருவ ராக நாளவர் உயர்வார் உண்மை!


Tuesday 16 September 2014

புரட்டாசி மாதமும் செட்டிநாடும் :



பொதுவாக நம் செட்டிநாட்டில் ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் ஒவ்வொரு விழாக்கள் நிகழும் இந்த புரட்டாசி மாதம் சற்று விசேஷம் நிறைந்த மாதம் .இந்த மாதம் பிறப்பதற்கு முன்பே ஓர் இரு நாட்களின் முன்பே அமைத்து பொருட்களும் சுத்தம் செய்து அடுப்படி சாமான்கள் கழுவி சுத்தம் செய்தும் . புது பாத்திரங்கள் இந்த மாதத்திற்கு என்று தனியாக பாத்திரங்கள் வைத்திருப்பர் .அவற்றையே இந்த புரட்டாசி மாதத்தில் மட்டும் பயன்படுத்துவர் . இந்த மாதத்தில் மிகுந்து செட்டிநாட்டு பகுதி மக்கள் அனைவரும் சைவ உணவே எடுதுகொள்வர்.

செட்டிநாடும் ராமாயணமும் :

இந்த மாதத்தில் நம் செட்டிநாட்டுப் பகுதியெங்கும் (ஏடு படித்தல் ) இராமயணம் ஊரின் பொதுவில் உள்ள கச்சேரிகூடம் , பிள்ளையார்கோயில் , சிவாலயம் , வீடுகள் , அரசமரத்தடிகள் போன்ற இடங்களில் ஓதப்படும் .சில இடங்களில் காலையிலும்
மிகுந்து இந்த இராமாயணம் படிப்பது மலையிலும் நிகழும் . இந்த நிகழ்வி அணைத்து சமூகத்தவர்களாலும் நிகழ்த்தப்படும்.
இந்த விழா ஊரின் பொதுவில் அனைவரும் ஒன்றாக இணைத்து 1௦ ,15 , 21 என்று இராமர் பட்டாபிஷேகம் படம் வைத்து மாலையில் படிப்பர் . அப்போது தங்களால் இயன்றதை நாட்டார்களும் நகரத்தார்களும் தினம் ஒருவராக கதை கேட்க வருபவர்களுக்கும் ராமருக்கு நிவேதனமாக சுண்டல் , வடை , பாயசம் , போன்ற நிவேதம் செய்தும் தருவர் .

இதை தொடர்ந்து மற்றும் நகரத்தார்கள் தங்கள் வீடுகளில் ஏடு படிப்பர் . தங்கள் வீடுகளில் 7 , 9 , 11 நாட்கள் என்று ஏடு படிப்பர் . இந்த நிகழ்விற்கு நகரத்தார்கள் தங்கள் வீடுகளில் மாலையில் ஏடு படிப்பர் .இதற்கு நகரத்தார்கள் தங்களும் தெரிந்தவர்கள் , சுற்றத்தார்கள் , பங்காளிகள் , தாயபிள்ளைகள் என்று இந்த நிகழ்விற்கும் அனைவரையும் வீட்டிற்கு திருமணத்திற்கு அழைப்பது போல் அனைவரையும் அழைப்பர்

மாலையில் வீட்டில் விளக்கேற்றி ராமர்(பட்டாபிஷேகம் ) படத்திற்கு மாலைகளும் பூக்களும் சாற்றி பூரணகும்பம் வைத்து வழிபடுவர் . நாள் ஒன்றுக்கு ஒரு விதமாக இராமர் பிறப்பு முதல் பட்டாபிஷகம் வரையான நிகழ்வுகளை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகுதியாக படிப்பர் .இதை கேட்க அருகில் உள்ள நகரத்தார்கள் மற்றும் தெரிந்தவர்கள் வந்து மாலையில் கதை கேட்பார்கள் . இந்த நிகழ்வில் மூன்று நாட்கள் சிறப்பாக நிகழும் . இராமர் பிறப்பு நிகழ்வு .மற்றும் சீதா கலியாணம் சிறப்பாக நிகழும் . வீடுகள் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு மாலையில் ஏடு படித்து இராமர் சீதை திருமணம் சிறப்பாக நிகழும் .திருமனத்திற்கு தாயபிள்ளைகள் பங்காளிகள் என்று அனைவரையும் அழைத்து சிறப்பாக நிகழ்த்துவார் . சீதா கலியாணத்தில் மலையில் வீட்டில் திருமண விருந்தும் நிகழும் . இதேபோல் இறுதி நாள் பட்டாபிஷேகம் நிகழும்போது சிறப்பாக இருக்கும்

ஏடு படித்தலின் தாத்பரியம் :

இராமாயணம் படிப்பதில் ஒரு சூட்சமம் வைத்திருந்தனர் நம் முன்னோர்கள். இராமாயணம்தில் இராமர் மற்றும் அவர் தம்பிகளின் ஒற்றுமையை காட்டுகிறது .நம் செட்டிநாட்டில் முன்பு வீட்டில் 5 அல்லது 6 பிள்ளைகள் இருக்கும் . அவர்கள் ராமன் , லெட்சுமணன் , பரதன் , சத்ருகன் ஆகிய நால்வர் போன்று ஒற்றுமையாய் வாழவேண்டும் அறவழியில் நடக்கவேண்டும். என்பதையும் .குடும்ப ஒற்றுமை பலப்பட வேண்டும் என்பதை மனதில் கொண்டு இந்த நிகழ்வை தொடங்கிவைத்தனர் .
மேலும் ஊர் பொதுவாக இராமாயணம் படிப்பது நிகழ்வதன் நோக்கம் . அணைத்து மக்களும் ஒற்றுமையாக இருக்கவேண்டும்.அயோத்தி மற்றும் மீதலை நகரத்தில் எப்படி மகிழிச்சி நிலவியோதோ அதுபோன்று நம் ஊரிலும் நிலவவேண்டும் என்றும் மக்கள் நல்வழியில் செல்லவேண்டும். தவறான வழியில் சென்றால் ஏற்படும் விளைவுகளை ராமாயணத்தில் கதையில் மூலம் உணர்ந்து நல்வழியில் செல்லவேண்டும் என்பதன் நோக்கில் நிகழ்த்தப்படுகிறது .
மேலும் தற்போது நகரதர்களும் நாட்டார்களும் சரி தொழில் வேலை நிமித்தமாக நாம் நம் கிராமங்களை விட்டு வெளியேறி பல பகுதிகளில் வசிக்கிறோம் . நம் இந்த மாத்ததில் நாம் உள்ள வீட்டில் ராமர் படம் வைத்து ராமாயணம் படிக்கலாம் . நம் ஐயாக்களும் ஆயாககள் , அப்பதாகள் நமக்கும் சொல்லி சென்றவரை நாமும் நம் பிள்ளைகளும் சொல்லி புரிய வைக்க வேண்டும் . இது நம் பண்பாடு . நம் பண்பாடை நாம் தான் பாதுகாக்க வேண்டும் .

மற்றும் இந்த மாதத்தில் வரும் அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்தது.
மற்றும் அதை தொடர்ந்து 9 நாட்கள் நவராத்திரி விழா சிறப்பாக நிகழும் மாலையில் அம்மனை சிறப்பாக அலங்காரத்தில் திருவீதி உலாவும் நிகழும். 1௦ நாள் விஜய தசமி விழா மிகவும் கோலாகலமாக நிகழும்

செட்டிநாட்டில் விஜதசமி (மகர்நோன்பு ):

இந்த விழாவின் போது கோயிலில் இருந்து அம்மன் குதிரை வாகனத்தில் ஏறி கையில் வில் அம்பு ஏந்தி பவனிவருவாள் . அதற்கும் முன்பு மக்கள் மாவிளக்கு வைத்து அர்ச்சனை செய்வர் பின் நகர்வலம் வந்த அம்பாள் மகர்நோன்பு பொட்டலை நோக்கி செல்வர் . அங்கு ஒரு வாழை மரத்துடன் வன்னிமரம் கிளைகளை ஒன்றாக கட்டி வைக்கப்பட்டிருக்கும். நாட்டார்கள் மற்றும் நகரத்தார்கள் ஒன்றாக இணைந்து இந்த விழாவை சிறப்பாக நிகழ்த்துவர். கோயிலில் இருந்து மகர்நோன்பு போட்டால் செல்லும் வழியெங்கும் நீர்மோர் ,பானகம் ,சர்பத் , பழங்கள் , புளிசாதம் , கதம்பசாதம் , எலுமிச்சசாதம் ,பொங்கல் [போன்ற வகை வகையாக செய்து தம்மால் இயன்றவற்றை மக்களுக்கு கொடுப்பர் . மற்றும் மகர்நோன்பு பொட்டலில் சுவாமி வாழை மரத்தை நோக்கி மூன்று முறை அம்பு எய்துவார் . எய்த அம்பை வீட்டிற்கும் பிடித்து சென்றால் தங்கள் அந்த ஆண்டு சுபிட்சமாக இருக்கும் என்பது நம்பிக்கை .
சுவாமி அம்பு போட்ட பின் சுவாமி அங்குள்ள கொட்டகையின் சில மணிநேரம் தங்கி பக்தர்களுக்கு அருள்புரிவார் .

நகரத்தார்களும் மகர்நோன்பு :

நகரத்தார்கள் வீடுகளில் வாசலில் அழகான பெரிய கோலங்கள் இடப்பட்டு வாயில்களில் தொரணங்கள் தொங்கவிடப்பட்டும் . வீட்டில் திருமணமான புதிய தம்பதிகள் தங்கள் குழந்தையுடன் இந்த விழாவில் பங்கு பெறுவார் . இதற்காகவே திருமணத்தின் போது பெண்ணுக்கு வெள்ளியில் ஒரு அம்பு(அ) கிளுக்கி செய்து வைத்திருப்பார்கள். இந்த அம்பை கையில் எடுத்துக் கொண்டு வீட்டின் உள்ள படைக்கிற அறையில் விளக்கேற்றி வைத்துவிட்டு வாசலின் முகப்பில் ஒரு தீபமும் ஆலம் கரைத்து வைத்து பிள்ளையை தூக்கி கொண்டு செல்வர் . சுவாமி அம்பு இட்டபின் அனைவருக்கும் தங்கள் பிள்ளைகளை தூக்கிகொண்டு அம்பு போடுபர் (பிள்ளையின் கையில் அம்பை கொடுத்து பெற்றோர் குழந்தையின் கையை பிடித்து அந்த வாழை மாரத்தில் குத்திவிட்டு அந்த வாழை மரத்தில் இருந்து சிறிது நாரை எடுத்தும் வன்னிமாரத்தில் இருந்து சிறுது இலையை எடுத்து அந்த அம்பின் முன்பு கட்டிவிடுவர் .

அம்புடன் பிள்ளையை கொட்டகையில் உள்ள சுவாமியை தரிசித்து விட்டு வீடு திரும்புவர் .வீட்டில் வாசலில் பெற்றோரும் குழந்தையும் நிற்கசெய்து ஆலத்தி எடுத்தி வீட்டிற்குள் பிரவேசித்து . படைக்கும் வீட்டில் சென்று அம்பை வைத்து வழிபாடுசெய்வர் .செட்டிநாட்டில் தாய்க்குத் தலைமகன் அம்பு போடுதல் விசேஷம். “ என்னப்பா, தாய்க்குத் தலைமகன், எண்ணெய் தேய்ச்சுக் குளிச்சுட்டு கசாப்புக் குழம்பு சாப்பிட்டு அம்பு போடப் போகலையா ?” என்று கேட்டபர் இந்த நிகழ்வுகள் 2௦ முதல் 3௦ வருடகளுக்கு முன்பு வரை சிறப்பாக அணைத்து நகரத்தார் இல்லங்களிலும் நிகழும் . தற்போது இந்த நிகழ்வு குறைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- ஆ.தெக்கூர் கண.இராம.நா.இராமு

Thursday 11 September 2014

கொழும்பு நாட்டுகோட்டை நகரத்தார் கோயில் ஆடிவேல் பூசை

கெட்டாலும் செட்டி! கிழிந்தாலும் பட்டு! என்பதைப்போல நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் வர்த்தகத்தில் சிறப்புற்று விளங்கியதோடல்லாமல் வழிபாட்டுத் தலங்களை அமைப்பதிலும் தனியிடம் பிடித்தவர்கள்.

தமிழகத்தின் செட்டி நாட்டிலிருந்து 1790 ஆம் ஆண்டு வர்த்தக நோக்குடன் இலங்கைக்கு வந்த நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் தமது சொந்தச் செலவில் நாட்டின் பல நகரங்களில் கோயில்களைக் கட்டி நிர்வகித்து வந்தார்கள். செட்டியார்கள் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த கொழும்பு, காலி, கதிர்காமம், கண்டி, திருகோணமலை, மாத்தளை, யாழ்ப்பாணம், கம்பளை, இரத்தினபுரி, குருணாகல், புசல்லாவை, நாவலப்பிட்டி, நீர்கொழும்பு, மாதம்பை, புத்தளம் ஆகிய நகரங்களில் கோயில்களை அமைத்தார்கள்.
பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சிக் காலத்தில் நாட்டுக் கோட்டைச் செட்டியார்கள் கதிர்காமக் கந்தன் ஆலய உற்சவத்திற்காகக் கொழும்பிலிருந்து வருடா வருடம் யாத்திரை சென்று வந்தார்கள்.

1874 ஆம் ஆண்டு காலரா நோய் பரவியதன் காரணமாக கொழும்பிலிருந்து கதிர்காமத்திற்கு யாத்திரை செல்வதற்கு பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் தடுத்துவிட்டனர். இதனால் அந்த ஆண்டு பழைய கதிரேசன் ஆலயத்தில் கதிர்காமக் கந்தன் உற்சவத்தை நடத்தத் தீர்மானித்தார்கள் நாட்டுக்கோட்டை நகரத்தார். இதுதான் கொழும்பில் ஆடிவேல் பிறந்த வரலாறு.

கொழும்பு செட்டியாளர் தெருவில் 1939 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட ஸ்ரீ புதிய கதிரேசன் ஆலயம், முதலாம் குறுக்குத் தெரு சம்மாங்கோடு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்துடன் இணைந்து ஆடிவேல் விழாவினை நடத்துகிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக 1983 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆடிவேல் விழா பக்தர்கள் மத்தியில் இன்னமும் மறக்க முடியாத காட்சியாக இருக்கின்றது.

‘செட்டியார் தெரு புதிய கதிரேசன் ஆலயத்திலிருந்து பம்பலப்பிட்டி பழைய கதிரேசன் ஆலயத்திற்குச் சென்ற வெள்ளி ரதம் 1983 யூலை 24 ஆம் திகதி இரவு மீண்டும் ஆலயம் திரும்புவதற்காக கொள்ளுப்பிட்டி வரை வந்துகொண்டிருக்கிறது. வர வர உடன் வந்த பக்தர்கள் சிறிது சிறிதாகக் காணாமற் போகிறார்கள். பின்னர்தான் தகவல் கிடைத்தது.

பொரளை மயானத்தில் இராணுவ வீரர்களின் இறுதிக் கிரியைகளில் கலந்துகொண்ட சில குண்டர்கள் கலவரத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று. உடனே வெள்ளி ரதத்தை மீண்டும் பம்பலப்பிட்டிக்கே கொண்டு சென்றனராம்  அன்றிரவு வானொன்றில் சுவாமிச் சிலையைக் கொண்டு சென்றனராம். ஒரு வாரம் கழித்து ரதத்தைக் கொண்டு வரப்பட்டதாம் .’

நம்மவர்களால் சிறப்பாக நிகழ்த்த பட்ட இந்த விழா மிகவும் சிறப்பாக நிகழ்ந்து வருகிறது


ஆடிவேல் பூசை ஆடி மாதத்தில் வரும் பௌர்ணமி நாளில் முருகன் தேரில் பவனி வருவார் முருகனின் திரு உருவுடன் அவரது கைவேலும் தேரில் வைத்து பவனி வருவர் .இங்கு ஆடி வேல் பூசை பழைய கதிர்வேலாயுதசுவாமி மரத் தேரிலும் புதிய கதிர்வேலாயுதர் வெள்ளித் தேரிலும் பவனி வருவார் . மாசி மகத்தின் போது நம் சென்னை மண்ணடி பவளக் காரத்தெருவில் உள்ள பழைய தன்னடாயுதபாணி புதிய தண்டாயுதபாணி வளம் வருவது போல் இங்கும் பழைய புதிய என இரண்டு முருகன் உள்ளனர் . இங்கு உள்ள வெள்ளித் தேரின் வயது 140 இந்த தேர்

1983வரை இந்த விழா தொடர்ந்து மிகவும் கோலாகலமாக நிகழ்த்து வந்தது .கரகாட்டம் , காவடியாட்டம் , மயிலாட்டம் , போன்ற நிகழ்சிகளுடன் நிகழும் .1983 ஆம் ஆண்டு விழாவின் இரவு ஊர்வலத்தில் ஏற்பட்ட இனக் கலவரத்திற்கு பின் இந்த விழா 1983க்கு பின் நிகழ வில்லை. இந்த விழா 1993, 2002, 2004 ,2010 ஆண்டுகளில் விழா நடைபெற்றிருக்கிறது. பின் 2012 பின் இந்த விழா இலங்கையின் தேசிய விழாவாக அறிவிக்கப்பட்டு(சுற்றுலா துறையில் வருமானம் குறைந்ததால் தேசிய விழாவாக அறிவிக்கப்பட்டது) . நிகழ்ந்துவருகிறது. இந்த ஆலயம் இலங்கையின் தலைநகராம் கொழும்புவில் உள்ளது . இது சிங்களவர்கள் அதிகம் உள்ள பகுதி .

வண்ண அலங்காரத்தில் யானை

தீவட்டி பிடிக்கப்படுகிறது 

தேரில் பவனிக்கு வரும் புதியகதிர்வேலாயுதர் 

வள்ளி தெய்வானையுடன் புதியகதிர்வேலாயுதர் 

புதியகதிர்வேலாயுதர்  தேரில் பவனி வரவுள்ள காட்சி 

தேரின் மீதுள்ள கலைவெளிப்பாடுகள்














மேலே உள்ளவை புதிய கதிர்வேலாயுதர் வெள்ளித்தேரில் பவனிவந்த காட்சிகள் கிழே உள்ளவை பழைய கதிர்வேலாயுதர் ஆலய பழைய கதிர்வேலாயுதர் மரத்தேரில் பவனி வந்த காட்சி