Friday 18 December 2015

நான் கண்ட ஆச்சிகள்-4


நான் கண்ட ஆச்சிகள்-4
தேனம்மை ஆச்சி
என்பது வயதில் கணவர் சிவபதவி அடைந்தபின் குழந்தைகள் இல்லாததால் எடுத்து வளர்த்த கொழுந்தன் பிள்ளை, அயித்தியாண்டி ,ஆச்சி மக்கள் ஆதரவோடு 70வயதை கடந்தாச்சு

கட்டிக்கொண்ட கணவருக்கு இறப்பர் தோட்ட நிர்வாக வேலை இளவயதில் மகிழ்வான வாழ்கை வரும் உறவினர் நண்பர்களுக்கு ருசியான நல்லுணவோடு விருந்தோம்பல்
கொழுந்தன் மணைவி இழந்து இரண்டாம் திருமணம் செய்கிறார் அவருக்கு அப்போது 5வயது பையனும் கைக்குழந்தையாய் ஒரு பையனும் பெரியவனை விடுதியில் சேர்த்து கைகுழந்தையை வளர்க்கும்படி அண்ணன் காலில் விழுந்து அழுகிறார்
கொழுந்தன் சுயநலம் இளம் மனைவியோடு சுகமாகவாழ குழந்தையை இடைஞ்சலாக கருத, இந்த ஆச்சி கணவனிடம் குழந்தையை நாம் வளர்ப்போம் என்று கணவனை ஏற்க சொல்லுகிறார் எந்தவித ஒப்பந்தமும் எதிர்பார்ப்பும் இல்லாமல்
பையன் வளர்ந்து 6ம் வகுப்பு படிக்கையில் ஓரகத்தி கொழுந்தன் மூலம் பையனை இவர்களிடமிருந்து பிரித்து கூட்டி செல்கிறார் பின் அவனை காண அனுமதிக்கவும் இல்லை
இந்நிலையில் கணவரின் உடலில் மாற்றங்கள் பரிசோதித்ததில் தொழுநோய் என தெரியவருகிறது கணவனின் நல் வேலை போய் சொற்ப சம்பளத்தில் வேலை
தான் பிறந்த வீட்டில் இருந்து கொண்டுவந்த சாமான்களை விற்று பற்றாக்குறையை சரி செய்து வாழ்க்கை ஓட்டம் ஆச்சிக்கு அப்போதும் தன்னல எண்ணம் வரவில்லை எப்போதும் போல் உறவு நண்பர்களுக்கு விருந்தோம்பல்
கல்கி சாண்டில்யன் கதைகள் படிப்பார் வார இதழ்கள் குமுதம் கல்கியில் வரும் தொடர்கதைகளை படித்து அவைகளை தைத்து வைப்பார் திரைப்படம் ஒன்று விடாமல் பார்ப்பார் புதிய சேலைகள் பூ இவைகளில் சராசரி பெண்டிரைவிட அதிக நாட்டம் உள்ளவர் இவைகள்தான் அவரது மன அழுத்த வடிகால்களாக இருந்திருக்கும்
நோயுள்ள கணவரை வெறுப்பு ஏதுமின்றி நேசித்து உடன் வாழ்ந்தார் அவரின் வாழ்வின் மகிழ்வு இறுதி காலத்தில் தான் வளர்த்த கொழுந்தன் மகன் தன்னை தாயக ஏற்று கொண்டதே
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கிடைத்த வாழ்வை பிறழாமல் வாழும் இவர்களே நம் பண்பாட்டின் காவல் தெய்வங்கள்

----------தெய்வானை சந்திரசேகரன் 

Wednesday 16 December 2015

நான் கண்ட ஆச்சிகள் -3

நான் கண்ட ஆச்சிகள் -3
ஞானம்பாள் ஆச்சி
திருமணம் முடிந்து புகுந்தவீட்டிற்கு சென்றவர்கள் கனவுகளோடு சென்றவர்கள் குடும்பவாழ்க்கை கனவாகவே போனது
கணவன் புத்தி சுவாதீனமில்லை அவருடனே வாழ்க்கை வாழ்ந்து முடித்தார் இளமை முழுதும் வீண் என்று நினைக்கவில்லை
காட்டு கத்தல் கத்தும் கணவனை உள்வீட்டில் பூட்டிவைத்து முகப்பின் வெளியே முற்றத்தில் ஓரமாய் அடுப்படி அமைத்து சமையல்
புத்தி சுவாதீனமில்லாத கணவனுக்கு நேரத்திற்கு உணவளித்து நியமங்கள் எல்லாம் பயமின்றி தனி ஆளாய் உடனிருந்து செய்தார்கள்
வெண்மை வண்ணம் வெற்றிலை மென்ற வாய் உறவினரை குழந்தைகளை காணும்போது முகம் முழுதும் புன்னகை கண்கள் சுருக்கி பார்வை எப்போதும் எதிர் நிற்பவர் மனதை ஆராய்வதுபோல்
ஒரு கட்டத்தில் கணவன் நிலை கொள்ளாது ஆட்டமிட சங்கிலியால் வளவில் பிணைத்து வைத்து பார்த்தார் ஊர் ஆயிரம் பேசியது உறம் மிகுந்த நெஞ்சம் கலங்கவில்லை களங்கமில்லை

உறவுகள் வீட்டிற்கு வந்து போய் உறவாய் இருந்ததை பலமாக மனதில் கொண்டு காலம் சென்றது முதுமை காலத்தில் கணவர் இயற்கை அடைந்தார்
அதன் பின் உறவுகள் பங்காளிகளை வைத்து பிள்ளை கூட்டினார் பேரன் பேத்திகள் கண்டார் வாழ்வில் மகிழ்ச்சியின் முகம் காலம் கடந்து கண்டார்
அவரின் கிடைத்தவாழ்வை ஏற்று கடமை செய்து இறுதியில் மன இன்பம் பேரன் பேத்திகள் மூலம் அடைந்த பூமா தேவி பொறுமை
பண்பாட்டினுள் வாழ்ந்திருந்த தன்மை பகர விளக்க முடியாத அதிசயம் உண்மை ஒருவர் தன் விருப்பமின்றி கட்டாயத்தில் இப்படி வாழ முடியாது
என்னால் இயன்றவரை எழுதி அப் பண்பாட்டு தெய்வத்தை வணங்குகிறேன்

--------- தெய்வானை சந்திரசேகரன் 

Tuesday 15 December 2015

நான் கண்ட ஆச்சிகள் -2

நான் கண்ட ஆச்சிகள் -2
பரிபூரணாச்சி இளமையில் கணவரை இழந்தவர்கள் கருத்த வண்ணம் கடுத்த முகம் வெள்ளை சேலை நகை ஒன்றும் அணியாத ஆச்சி
சிடுசிடுப்பான பேச்சே பிறர் அவரிடம் பேசினால் வரும் அவராக வந்து பேசும்போது அமைதியாக பேசுவார்கள் பெரும்பாலும் பேசமாட்டார்கள்

அடுத்த அடுப்படியில் பிள்ளைக்கு சாப்பாடு போட்டு கொண்டிருக்கும் சற்று எதவான ஆச்சியிடம் அடி இவளே கத்திரிக்காய் குழம்பு இருக்குடி பிள்ளைக்கு ஊத்தி சோறு போடுடி ரசம் வேண்டாண்டி என்று கொடுக்கும் குணம்
கொழுதுனாமிண்டி வெளியூரில் வாழ்பவள் வாவரசி ஊருக்கு கணவனுடன் வந்து இவர் முன்னாள் சிலுப்புவார் ஒரே அடுப்படியில் சமைக்கும் போது ஆச்சி மன அடுப்பில் ஆற்றாமை வெடித்து வார்த்தையாய் சிதறும்
அவள் சென்றபின் பாத்தியாடி இவளே என்று பக்கத்து அடுப்படியில் கொட்டி பழைய நிலைக்கு வருவார்கள் இரு பெண் ஒரு ஆண் பிள்ளைகளை பெற்றவர்
அடுத்த வீட்டு அதிகம் பிள்ளையுள்ள ஆச்சிக்கு பொருள் கடன் கொடுப்பார் தன் பிள்ளைகளை படிக்கவைத்து திருமணம் செய்துவைத்து பேரன் பேத்திகள் கண்டார்
முதுமையடைந்து நோய்வாய்பட்டு சென்றார் இளமையில் இச்சமூக பண்பாட்டை காத்து வாழத்தான் சிடு சிடு கடுத்த முகம் காட்டி வாழ்ந்தாரோ என்ரெண்ணத்தொன்றுகிறது
இப் பண்பாடு காப்பதற்கு இப்படி எத்தனை தியாகங்கள் நினைத்து காப்போம்
------------தெய்வானை சந்திரசேகரன்

நான் கண்ட ஆச்சிகள்



நான் கண்ட ஆச்சிகள்
நாச்சம்மை ஆச்சி
 மூக்குத்தி மின்ன மஞ்சள் பூசிய மகாலக்சுமி சிரிப்போடு வாழ்ந்தவர்கள் ஆண் பெண் பிள்ளைகள் பெற்ற வாஞ்சைஉள்ள மகராசி
கொண்டுவிற்க சென்ற கணவன் வெளிநாடு சென்று ஆண்டுகள் பல ஆகியும் ஊர்வரவில்லை பணங்காசு வந்தாலும் கணவன் பசித்த முகம் பார்த்து பரிமாற வாய்ப்பில்லை என ஏங்கும் மனத்தோடு வாழ்ந்தார்கள்

பிள்ளைகள் கல்யாணங்கள் பேசி முடித்து பெற்றவர் வராமலே நடத்த வேண்டிய நிலை வந்த போதும் வாழ்வை எளிதாக எதிர் கொண்ட வாழ்வரசி
சம்மந்தங்கள் அனைத்தையும் சரிசெய்து கொண்டு பிள்ளைகளின் பிள்ளை பேறு பார்த்து பேரன்பேத்தி கண்டார் நல்லதும் கெட்டதும் தனித்து நின்றே கண்டார்
சுமார் முப்பது ஆண்டுகள் கழித்து வந்தார் கணவர், முகம் மலர்ந்தார் ஆச்சி வயதுகள் போனபின்பும் வருத்தமில்லா வரவேற்பு, மனதில் ஆழமாய் கண்ட கனம் முதல் வரித்த காரணத்தால் இருக்குமோ?
வயதான காலத்தில் கணவரோடு சிலகாலம் வாழும் பேரே கிடைத்தாலும் பண்பாடு காத்து பாசத்தோடு குடும்பம் காத்த மாதரசி இப்படி எத்தனை மாதரசிகள் எம் குலத்தில் இருந்து சென்றார் அறியேன்
நானும் இக்குலத்தின் பண்பாட்டை காப்பதே அவர்களுக்கு நானளிக்கும் மரியாதை

----------தெய்வானை சந்திரசேகரன் 

Saturday 12 December 2015

‪#‎புள்ளி___மாறிய‬ (அலங்) கோலங்கள்

‪#‎புள்ளி___மாறிய‬ (அலங்) கோலங்கள் :
***************************************************
புள்ளி வைத்துக் கோலமிடுபவர்கள், வைக்கின்ற புள்ளிகளை சரியான வரிசையில், முறையாக வைத்து நிறைவாகக் கோலமிடுவார்கள். நடுவீட்டுக் கோலமும் சரி மணவறைக் கோலமும் சரி, மாகோலம்மிட்டாலும், நீர்கோலமிட்டாலும் புள்ளி பிசகாமல், அள்ளித் தெளிக்காமல் பாண்டி முத்துப் பரவியது போல், தொட்ட கோலம் தொடர்ந்திடவே அவர்கள் அன்று இட்ட கோலங்கள் புள்ளி மாறாமல் சீர்குலையாமல் மரபாக வந்துள்ளது.
எத்தனை படையெடுப்பு ? எத்தனை அரசியல் மாற்றங்கள் ? எத்தனை எத்தனை வாழ்வியல் சிக்கல்கள் ? சோழர் குடி, வடுகர்வசமாகும் போதும், தமிழர் அறம் மாறாமல் பாண்டி மணடலம் அடைந்த நகரத்தார்கள், இன்று எடுத்து வைக்கும் கோலங்கள் எல்லாம் ஏன் இப்படி புள்ளி மாறிய அலங்கோலங்களாக இருக்கின்றன ??


பதினாறாம் நூற்றாண்டில் ‪#‎ஏழகப்___பெரு____வீடு‬ முடக்கப்பட்ட போதும், தங்கள் தமிழர் மரபுமாறாமல் வாழ்ந்த நகரத்தார்கள் (வேள்வணிகர் என்ற நாட்டுகோட்டை நகரத்தார்கள் ) இன்று வடுக மலையாள நாயர்கள் வீட்டில் பெண் தேடுவது, மராட்டியர் படையுடன் வந்தேறிய சௌராஷ்டிரர்கள் வீட்டில் பெண் தேடுவது, நாயுடுக்கள் வீட்டில் பெண் எடுப்பது என்று வெள்ளைத் தோல் தேடி இன அடையாளம் தொலைக்கும் விடலைகளும், எங்கோ எப்படியோ பணத்தோடும், நிறத்தோடும் வாழ்ந்தால் போதும் என்ற நிற மோகம், பண மோகம் என்ற ரெட்டை மோக வலையில் வீழ்ந்தவர்கள் இன்று என்ன செய்கின்றனர் ?????

கையில் உள்ள பணத்தைக் கட்டாகக் கட்டி வைத்து, ஊர் நகரப் புள்ளியில் நாயுடு மருமகளை சேர்க்கின்றேன், நாயர் மருமகளை சேர்க்கின்றேன், கழுத்துருவில் திருப்பூட்டுகின்றேன், படைப்பு வீட்டில் புள்ளி வரி கட்டுகின்றேன் என்று தமிழர் மரபுகளை வடுகர்களுடன் கைகோர்த்து விலைபேசும் பண முதலைகளே....!!!! ஒரு இனக்குழு வானது ஒரு போதும் பண பலத்தை வைத்து வாழ்ந்து விடுவதில்லை. வரலாறு தோறும் கடந்து வந்த பாதைகளில் பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை என்பதனை நம் ஐயாக்கள் வாழ்ந்து உணர்ந்து அதற்கான வழி வகைகளைச் செய்துள்ளனர். அவர்கள் ஒரு போதும் வேற்று இனத்தில் பெண் தேடி நடுவளவு கொண்டு வந்து சேர்த்ததில்லை. அப்படி சேர்த்தால் குடியழியும் என்பதனையும் உணர்ந்தே இருந்தனர். கேடுற வேண்டும் என்றால், தமிழர் குடி அழிக்காமல், மாற்றார் பெண்டுகளைச் சேர்ந்தவர்கள் அப்படியே போய்ச் சேரவும். உள்ளே வந்து கோடாரி வேலைகள் செய்ய வேண்டாம்.
புள்ளிக் கணக்கில் சேர்ப்பதற்கு உங்களிடம் பணம் இருக்க வேண்டும் என்பதில்லை. அதற்கு மரபு வழியாகப் பிறந்துவர வேண்டும். அது மட்டுமே போதுமானது.
வடுகப் பதர்களை ஊர் வந்து சேர்த்து, நிறம் காட்டி, பலம் காட்டும் வந்தேறிகள் இன்று அரசியல் பலம் கொண்டும், பண பலம் கொண்டும் படைப்பு வீட்டையும், பங்காளிப் புள்ளிப் பட்டியலையும் சூரையாடினால் மரபு வழி தெய்வங்கள், துணை போகும் துரோகிகளையும் சேர்த்தே ‪#‎தீர்ப்பெழுதும்‬. மறவாதீர்...!!!!
படைப்பு வீடுகளும், படைப்பு தெய்வங்களும் மரபு வழி தெய்வங்கள். அவைகள் வடுகப் பீடைகளுக்காக திறக்கபடுவதில்லை. இனம்- இனக்குழு மரபு என்பவற்றை மீறும் பணப்பேய்கள் எதன் காரணத்திற்காய் அங்கே சென்றார்களோ, பிறகு இங்கே வந்து கலப்புற நினைப்பது அற்பம். கயமை.
பணம் வைத்திருந்தால் எதையும் வாங்கலாம், ஆனால் குடி மரபு என்பதனை அல்ல. இன்று ஊரில் வடுகர்களுக்குப் பிறந்தவர்கள் வடுகக்காவலர் சகிதமாய் படைப்பு வீடுகளை ஆளலாம் என்று நினைப்பதும், அதற்கு மரபுவழி நகரத்தார்கள் துணை போவதும் தவறு. ஊரில் பொருளாதார பலமற்றவர்கள் நகரப் பங்காளிகள், கோவில் பங்காளிகள் என்று படிப்படியாய் ஒர்மையடைய வேண்டும். அதனை விட்டுவிட்டு அரசியல்பலம், பணபலம் என்பதெல்லாம் கவைக்குதவாது. விரைவில் காலங்கள் மாறும் காட்சிகள் மாறும்.அப்போது தமிழர் குடியின் ஊடுருவல் செய்தவர்கள் பதில் சொல்ல வேண்டிய நேரம் வரும். படைப்பு வீடுகள் மஞ்சள் நீர்தெளித்து (கிருமி நாசினி) புதுப்பொலிவு பெறும்.
‪#‎பணம்‬ தின்னும் பேய்கள் உண்டு. ஆனால் ஒரு போதும்‪#‎பிணங்கள்‬ பணம் திண்பதில்லை. இது ‪#‎இயற்கையின்‬ நியதி.

---வேணும் அருள்மிகு பொய்சொல்லா மெய்யர் துணை.
---நெற்குப்பை காசிவிசுவநாதன். 12-11-2015.

மெய்கீர்த்தி





‪#‎ஐயா‬ அவர்களுக்கு எழுதப்பட்ட ‪#‎மெய்கீர்த்தி‬ :-

அண்ணாமலையரசன் மடி தவழ்ந்து
முத்தைய வேள் மார் புரண்டு – சிலம்பு
நெறிச் செல்வர் தனக்கே மைந்தன் என,
தன்னை வரித்துக் கொண்டு ஆதரவாய்
அண்ணவரின் தோள் சேர்ந்த வரலாறு..
ஆகட்டும் உனக்கு மெய்கீர்த்திஎன..!!!
ராணி சீதையவள் செய்வித்த அரண் வளர்ந்து,
மெய்யம்மை மகனாக எங்கள் ஐயா ராமசாமி
வேழத்தின் முடியமர்ந்து, இசைக் காவலர் அரண்
காத்து, கொற்றத்தின் கொடி பறக்க – முற்றத்தின்
முன் வந்த, கூற்றத்தை எதிர்கொண்டு, நாளும்
சோராத வாழ்வதனை வாழ்வாங்கு வாழுகின்ற
நெஞ்சுரத்தின் உறைவிடம், தேற்றத்தால் தேடியதை
நாட்டத்தால் நற்கதிக்கு மனமுவந்து கொடுத்தானை,
பாசமென்ற சொல்லிற்கு பாங்குடனே தேடியவன்,
பணமென்று ஒன்றிற்காய் வேடிக்கை பார்த்திருக்கும்
விந்தை மனிதர்களையும் தான் பார்க்க, செய் திருவின்
நோக்கத்தால், நோகவில்லை, முட்டா(த) காழ்புணர்ச்சி,
மிகு வஞ்சம் கொண்டலையும், பித்தர்கள் முன் நிற்கும்
உலகினையும் பார்த்திடுவாய் மகனே...!!!!
என்று, நாளும் நீ வணங்கிச் செய்வித்த
பூசையினை ஏற்று, தில்லை
அம்பலத்தான் மனமுவந்து,

நன்றி கொன்று வாழுகின்றோர்,

உன்னிடம் நத்திப் பிழைத்த,
பிழைபட்ட மனிதர்களாய்வாழ்ந்து

வரும் பிணங்களையும் பார்த்திடுவாய்

என்றே பணித்திட்டார்.
செத்தாரை போலே நடைப் பிணங்கள் உலவுகின்ற
மானிடர்க்கு நன்றி உண்டோ....!!!???

கேள்...!!!!! ஐயா...


பட்டத்து யானை உனக்காக... பரிவட்டக் குதிரையும்
உனக்காக... கைகட்டி வேடிக்கை பார்த்த குருடருக்கெல்லாம்
மீண்டெழுந்த கதை கேட்க...
செவிட்டுப் பறை கிழிந்தனவே..
தெரு முட்டும் சந்தியிலே, முதுகுரசும் கழுதைக்கு தெரிந்திடுமோ..??!!!
யானையது படுத்தால் குதிரையது மட்டம்....
பட்டத்து யானைக்கும், பரிவட்டக் குதிரைக்கும் கழுதைகளா குஞ்சம்..???!!!
இசைத்தமிழ் ஒலித்திருக்க, சிலம்பின் ஓசையினால் முத்தைய வேள்
மகனுக்கு, சிதம்பரனார் மகன் முத்தையா துணை நிற்கும் கோலத்தில்,
கொற்றத்து முற்றத்தில், தேற்றத்தால் தேடியவை உன் நாட்டத்தே
இருக்கட்டும்....!!! வரலாற்றில் முழுமை பெற்றாய், வஞ்சகத்தை
உணர்வதற்கு சிற்றம்பலத்தான் சொல்வதெல்லாம் நடக்கட்டும்

நல்லவிதமாய், வாழிய வாழ்வாங்கு....!!!!


----வேணும் அருள்மிகு பொய்சொல்லா மெய்யர் துணை.

---- நெற்குப்பை காசிவிசுவநாதன்.
21-06-2015 ‪#‎தந்தையர்__தினம்‬. அன்று எழுதப்பட்ட ஒரு கவிதை

தமிழ்நாடு ஆவணக்காப்பகம்

தமிழ் நாடு ஆவணக் காப்பகம் என்று அறியப்படும், MADRAS RECORD OFFICE என்று முதலில் தொடங்கப்பட்ட சென்னை ஆவணக் காப்பகம் கடந்த 2004 ஆம் ஆண்டு ஆழிப் பேரலை பேரிடருக்குப் பின்னர் இடமாற்றம் செய்யும்படி பல வரலாற்று ஆய்வாளர்களாலும், அறிஞர்களாலும் விடுக்கப்பட்ட வேண்டுகோள்.


 இதுவரை திராவிட அரசுகள் இது குறித்து சிந்திக்கவும் செவிசாய்க்கவும் இல்லை என்பது வருந்தத் தக்கது. தற்போதைய சென்னை, கடலூர், திருநெல்வேலி, நாகர்கோவில் ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பெருமழையும் அதனைத் தொடர்ந்த பேரிடர் நெருக்கடியும் இயல்பு வாழ்க்கையினையும் அளவில்லாத பொருள்,உடமைகள் சேதத்தையும் விளைவித்துள்ளது. இந்த நேரத்தில் தமிழர்களின் ஆவணங்கள் நிறைந்த சென்னை எழும்பூர், தமிழ் நாடு ஆவணக் காப்பகத்தை முழுமையாக,‪#‎புதுகோட்டை‬ நகருக்கு விரிவான பாதுகாப்பான கட்டிடம் ஏற்படுத்தி, மாற்ற வேண்டுமாய் தமிழ் நாடு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

மக்களின் துயர் துடைத்து, இயல்பு வாழ்க்கை வந்த பின்னர் தமிழக அரசு இது குறித்து முனைப்புடனும், முதன்மையாகவும் சிந்திக்க வேண்டிய அவசியத்தில் உள்ளதையும், வரலாற்றைத் தொலைத்து, அடையாளத்தை இழந்து ஒரு தேசிய இனம் இருக்க முடியாது என்பதனையும் கருத்தில் கொண்டே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதுகாறும் திராவிட அற நிலையம் என்ற பெயரில் தமிழர் வழிபாட்டுத் தலங்கள், கல்வெட்டுகள் கேட்பாரின்றி துடைத்தெறியப்படுவதையும் கருத்தில் கொண்டு இந்த அவசியமான வேண்டுகோள்‪#‎நகரத்தார்___வரலாற்று____நடுவத்தால்‬ முன் வைக்கப்படுகின்றது. தமிழர்களும், தமிழர் அமைப்புகளும் கைகோர்த்து இந்தக் கோரிக்கையின் இன்றியமையா தன்மையினை உணர்ந்து இதனை அடுத்த செயல் கட்டத்திற்கு நகர்த்தும்படியும் வேண்டுகிறேன். நன்றி.

--- வேணும் அருள்மிகு பொய்சொல்லா மெய்யர் துணை.
--- நெற்குப்பை காசிவிசுவநாதன். 12-12-2015.

Friday 9 October 2015

நாடுகள் கடந்த நகரத்தார் வீடுகள் :





கடல் கடந்து அய்யாக்கள் கட்டி காத்த பொருளினால்
கட்டி வைத்த வீடுகளை !
அப்பத்தா , ஆயாவும் அழகழகாய் பேணிக்காத்து !
தோழ்களினால் தைத்த உரை தூண்களுக்கு பாதுகாப்பு !
இரும்பு கதவென்றால் இடுக்குகளில் கலை அழகு !
மறக்கதவேன்றால் மன்னவரே திகைப்பதுண்டு !
நடக்கும்போது நிழல் என்று தரை
பார்த்தால் முகம் தெரியும் பளிங்கு கல் நடையினிலே !
உத்திரத்தில் உற்று பார்த்தால் ஒவ்வொன்றும் ஓவியங்கள் !
ஓவியங்கள் என்னவென்றால் அவை அனைத்தும் கதை
சொல்லும் காவியங்கள் !
முகப்பிநிலே இரு திண்ணை எதிர் எதிரே அமைந்திருக்க !
திருமண நேரத்திலே கலை கட்டும் அந்த இடம் !
சன்னல்கள் திறந்திருந்தால் திண்ணையிலே அமர்ந்தபடி மன மேடை
தான் தெரியும் அவ்வளவு நேர்கோடு !
முகப்பு , வளவென்று மூன்றாம் கட்டு வரை ஒவ்வொரு இடங்களிலும்

கலை அழகு காட்சி கண்டால் அய்யாக்கள் தொழில் திறமை
கண் முன்னே வந்துபோகும் !
தொழில் செய்த காரணத்தால் கண்டனரே இவ்வளவு !
அவர்கள் வழி செல்லும் போது நமக்கு என்றும் பாதுக்காப்பு !
சாதித்த காரணத்தால் தமிழ் இனத்தின் பெருங்குடியோ !
என்று எண்ணி பார்கைலே !
எந்த இடம் சென்றாலும் செய்கின்ற திருப்பனியால்
அய்யாக்கள் புண்ணியங்கள் தந்ததுவே இந்த இடம் !
சிதறாத சிந்தனையும் , சீரான யோசனையும் , அல்ல அல்ல
குறையாத ஆழ்கடலில் ஆலம்போல் அய்யாக்கள் அடிமனது !
அன்பும் பண்பும் அய்யாக்கள் பெற்றிடவே
அப்பத்தா,ஆயாவும் அகலாத காரணமே !
பெற்ற பிள்ளைகளும் , அவர் பெற்ற பேரன்களும் கூடி சேர்ந்து
வரும் வேளையிலே வீடுகளும் பெற்றிடுமே கோடி இன்பம் !
அந்த அய்யாக்கள் நினைப்புகளை தாங்கி நிற்கும் விலாசம்களை
விசாலத்தில் காட்டி வரும் அரண்மனை அம்சமாக
அமைந்த நம் வீடுகளை காத்திடவே !
செய்திடுவோம் தொழில்கலினை அய்யாக்கள் வழி சென்று !
காத்திடுவோம் குலப்பெருமை நம் சந்ததிக்கு தந்திடவே !!

------- வீர-வீரப்பன்

Wednesday 7 October 2015

வேள் வணிகர் நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு பற்றிய சிறு குறிப்பு:-

வேள் வணிகர் என்றும், நாட்டுகோட்டை நகரத்தார் என்றும், நானாதேசிக வணிகர் என்றும், ஆயிரத்தைநூற்றுவர் என்றும் அறியப்படும் தமிழர்குடிமரபு நகரத்தார்கள், நிலத்தால் ஒரு காலத்தில் ஒன்றுபட்ட, இன்று நீரிணையால் பிரிக்கப்பட்ட இன்றைய தமிகத்தின் அருகில் இருக்கும், ஈழத்தின் நாக நாட்டில் வாழ்ந்த தமிழ் வணிகர் குடியினர். நாக நாட்டு வணிகர் என்றும், மன்னர் பின்னோர் என்றும் பெருமைகளைத் தங்கள் மரபு வழிப் பண்பாட்டின் விருதுகளாய்க் கொண்ட “நாக நீள் நகரொடு அதனொடு போக நீள் புகழ் மண்ணும் புகார் நகர்......” ( சிலம்பு.. ) என்ற வரிகளைச் சான்றாகக் கொண்டவர்கள். மிகப் பழமையான பண்பாட்டு எச்சங்களைத் தங்கள் வாழ்வியலிலும், சொல் வழக்கிலும் கொண்டிருக்கும் ஒரு இனக்குழுவாக இன்றளவும் தமிழர் பெருமைகளைக் கடைபிடிக்கும் மரபாகவும் இருப்பவர்கள், காலத்தால் மிக முந்தைய கி.மு. மூன்றாம் நூற்றாண்டுகளுக்கு முன்னர், ஈழத்து நாகநாட்டில் வணிகக் குடியாகவும், பொருள் வணிகத்தையும், ஈழத்து மலைப்பகுதிகளின் ரத்தினப் படிவங்களை எடுத்து தெற்காசியா, சீனா முதலிய நாட்டினருடன் வணிகத் தொடர்பும் கொண்டிருந்தனர். இதற்கான தொல்லியல், புவியியல் தரவுகள் மிகத் தெளிவாகவே கிடைத்து வருகின்றன. அதனையும் மீறிய நகரத்தார்களின் சொல் வழக்கு (Anthropology), மரபு வழியில் இன்றுவரை கடைபிடிக்கும் பண்பாட்டுப் பதிவுகளே இவர்களின் தொன்மைக்கும், கிடைத்து வரும் தொல்லியல் – புவியியல் சான்றிற்கும், ஐயமின்றி ஒப்புமை கூறும் தரவுகளாகும்.
நாக நாட்டிலிருந்து சோழர்குடிக்குட்பட்ட தொண்டை மண்டலத்திற்கு குடிபெயர்ந்த காரணமும், பின்னர் புகார் நகர் வந்த காரணமும் முழுமையாக அறிய முடியவில்லை. ஆனால் புகார் நகரம், தங்களின் நெடிய மரபுவழிக் கடல் வாணிபத்திற்கு உகந்ததாக இருப்பதனாலும், தேர்ந்த துறைமுகமாக இருப்பதனாலும் இடம் பெயர்ந்தனர் என்பது உறுதி. கண்ணகி-கோவலன் காலத்திற்குப் பிந்தைய காலங்களிலும் கி.பி. 12 ஆம் நூற்றாண்டு வாக்கில்இவர்களின் பாண்டி மண்டல இடப் பெயர்வும் பல காரணங்களைக் கொண்டதாகக் கூறப்படுவதில் ஆய்வுகள் நடக்கின்றன. ஆனால் ராஜேந்திர சோழனது மறைவிற்குப் பின் வந்த சோழர்களின் போக்கில் ஏற்பட்ட மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, பல சோழர்குடிகள் குறிப்பாக நகரத்தார்கள், முத்தரையர், தஞ்சை ஆ-நிரைக்கள்வர் ஆகியோர் பாண்டிய நாட்டிற்கு குடிபெயர்ந்தனர். இந்த வருகைக்குப் பின்னர் பிற் கால பாண்டியர்களின் எழுச்சியும், குலோத்துங்க சோழனின் வீழ்ச்சியும் தொடங்கியது. கம்பர், நாட்டரசன் கோட்டை வந்தடைந்ததும் நகரத்தார் எனும் சோழர்குடி மக்களின் அணுக்கத்தை நாடியதேயாகும். # ( மூன்றாம் இராஜராஜனின் படுதோல்வியும், பின்னர் அமராண்டான் நகரில் {பொன்னமராவதி} இளைப்பாறிய சடையவர்மன் சுந்தர பாண்டியனிடம் கப்பம் கட்டியதோடு சோழர் வரலாறு தேக்கம் காண்கின்றது.)
நகரத்தார்களின் இடப்பெயர்ச்சி பெரும்பாலும் அரசியல் காரணங்களுக்காகவும், ஆழிப் பேரலையின் சீற்றம் கண்டும் நிகழ்ந்துள்ளன. ஆகவே தான் தங்களது வள மனைகளை, நீர் பெருக்கால் அழிந்துபடாத கோட்டைகளாகவே அமைத்தனர். வளம் மிக்க குடிமனைகளைக் கொண்டதனால் நகரம் என்ற நகரத்தார்களாகவும், வளம் கொழிக்க சீர்மையுடன் வாழ்ந்த குடிமக்கள் வளவினர் – (வளவு) என்றும் குறிக்கப்பெற்றனர். எத்தனை இடப்பெயர்வுகள் வந்தாலும் தங்கள் மரபு வழிப்பட்ட தமிழர் தாய் நிலப்பகுதிகளிலேயே நடத்தினர். மரபு வழி வந்த வழிபாடுகளையும் விட்டுக் கொடுப்பதில்லாமல், வீடு, வணிகம்,பண்பாடு என அனைத்திலும் தங்களின் தொன்றுதொட்ட மரபினைத் தேக்கி, சடங்குகளாகவும், வாழ்க்கை முறைகளாகவும் கடைபிடிப்பது, எந்த ஒரு நிகழ்வினையும் ஒற்றுமையுடன் சேர்ந்து முடிவெடுப்பது, புதிய கருத்து / மாற்றம் ஆகியவற்றினை நீண்ட ஆய்விற்குட்படுத்தி ஒரு மனதாய் முடிவெடுப்பது என்பவையே இவர்களின் பாரிய வெற்றிக்கும், பண்பாட்டு நெறிக்கும் மன்னர்களையும் திரும்பிப் பார்க்கச் செய்யும் அறமும்கொண்டிருந்த பெருமைக்குரியவர்களாக வரலாறு இன்று வரை பதிவு செய்கின்றது. பாண்டிய நாட்டின் இடப்பெயர்விற்குப் பின் நகரத்தார்களின் முடிவுகளை, சுண்டைக் காட்டு வேலங்குடிக் கல்வெட்டு சாசனம், அவர்களின் தொன்றுதொட்ட இனக்குழு முடிவுகள் எடுக்கும் வழக்கத்தையும், எந்த எந்த காலங்களில் என்ன வகையான வணிகம் செய்வதென்பதனையும், கொண்டி விற்கும் தொழில் என்றால் அதில் நியாயமான வட்டி விதிப்பது குறித்தும் பதிவாகி உள்ளன. வேலங்குடிக் கல்வெட்டு கி.பி. 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகவும், ஏனைய எட்டி (செட்டி) என்று வணிகர்களைக் குறிக்கும் கல்வெட்டு சங்க காலத்திற்கு (இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு ) முந்தியதாகவும், அது திருச்சியை அடுத்த புகளூர் கல்வெட்டு சான்று சொல்கின்றது.
நகரத்தார்களில் கடலாடிக் கடல் கடந்து செய்யும் வணிகமும், அதன்பால் ஈட்டிய பொருட்களை வணிகச் சாத்துகள் வைத்து ( குழுக்களாக வண்டிகளில் ஏற்றி ) பாதுகாப்புடன் செய்யப்படும் உள் நாட்டு வணிகம். இவையே முந்நீர் கடத்தல் என்பதாகவும் அதற்கு காவற்படை கொண்டிருக்க அரசுரிமையும் பெற்றனர். வணிகச் சாத்துகளாக வண்டிகளில் செய்யப்படும் வாணிபத்திற்கும் காவற்படை அமைத்துக்கொள்ள உரிமை பெற்றனர். இவைகளை சோழப் பேரரசர்கள் நகரத்தார்களுக்கு வழங்கிய பல கல்வெட்டுகள் சோழ மணடலம் மட்டுமின்றி சங்க இலக்கியங்கள், கடல் கடந்த தெற்காசிய நாடுகளில் கிடைத்த கல்வெட்டுகளும் சான்று சொல்கின்றன.
கலம் கொண்டு செய்யும் வணிகர்களை நாயகன் என்றும் தரை வழியாகச் செய்யப்படும் பெரு வணிகத்தை சாத்து-சாத்தான் என்றும் குறித்தனர். இது போன்ற சொல்லாட்சிகளை நகரத்தார் இனக்குழுவினர் சிலபதிகாரம் காலம்தொட்டு இன்றுவரை வழக்கில் கொண்டுள்ளது தெளிவு. மாநாய்கன் மகள் மாணிக்க கண்ணகி, மாசாத்துவன் மகன் கோவலன், கண்ணகி ஆத்தாள் கண்ணாத்தாள், சாத்தப்பன், என்று இன்றும் வழக்கில் இருந்து வருகின்றது.

பாண்டியர் வீழ்ச்சிக்குப் பின், அந்நியர் ஆட்சிகாலங்களில் நகரத்தார்களின் காவற்படையினை விஜய நகர அரசர்கள் முடக்கினர். பாண்டியர்கள் அனுமதித்த ஏழகப்பெரு வீடு என்ற தனிப்படை, பாண்டியர்களுக்காய் மிகப்பெரும் போர் நடத்தியது. அதில் மாலிகபூர் படையுடன் நடந்த உக்கிரப் போரில், நகரத்தார்களின் ஒன்பது கோவில் புள்ளிகளுக்காகவும் வயிரவன் கோவில் நகரத்தார்களால் பரிபாலனம் செய்யப்பட்ட ஏழகப்பெரு வீடு என்ற தனிப்படை உக்கிரமாய் போர் புரிந்து தோல்வியைத் தழுவியது. வயிரவன் கோவில் முற்றாக அழிந்தது. பின்னர் அந்தக் கோவில் அதே ஊரில் பல காலம் கழித்து புணரமைக்கப்பட்டது. இடிந்த பழைய கோவில் கல்வெட்டுகள் நமக்கு மேற்படி வரலாற்றை தாங்கி நின்றது. இதனைக் காரைக்குடி கம்பன் அடிப்பொடி சா.கணேசன் அவர்களின் ஆய்வுகள் வெளிக் கொணர்ந்தன.
பாண்டியர் வீழ்ச்சிக்குப் பின்னர் ஏற்பட்ட தொடர்ச்சியான அயலார் ஆட்சிக் காலங்களில் நகரத்தார்கள் சைவ மடங்களுடன் இணைந்து தமிழ் கோவில்களைக் காப்பதில் முனைப்பு காட்டினர். தங்கள் குழந்தைகளுக்கு தமிழர் பண்பாடு, சைவாகம நெறி, தமிழ்ப் பெருந்தச்சர்களைக் கொண்டு கோவில்களைப் பராமரிப்பது என்று மிகபெரும் பண்பாட்டு அரண் அமைத்தனர். இதுவே இன்றுவரை தமிழர் பண்பாடு அயலார் தாக்கத்திலிருந்து நமது தனித்துவத்தைக் தற்காத்து நிற்க உதவியது. அதன் தொடர்ச்சியே இன்றைய கல்விக்கொடை, கோவில், குளம் வெட்டுதல், நீர் நிலை பெருக்குதல் என்ற தொடர்ச்சியுமாகும்.
வெள்ளையர் ஆட்சியும் நகரத்தார் மீட்சியும்.
விஜயநகர ஆட்சிக் காலத்தில் தேக்க நிலை கண்ட நகரத்தார்கள் தங்களின் திறமையாலேயே, வெள்ளையனை மாமன்னர் மருதிருவருக்காக, ஒக்கூர் நகரில் படை நடத்திகொடுத்து கடும் போர் புரிய உதவினர். அந்தத் தோல் விக்குப் பின்னரும், வெள்ளையர்கள் நகரத்தார்களின் கடலாடும் திறன் கண்டு தங்களின் ஆளுகைக்குட்பட்ட தெற்காசிய பகுதிகளான பர்மா, மலேயா உள்ளிட்ட நாடுகளுக்கு வழமையான கொண்டி விற்கும் தொழிலான சிறு வணிகக் கடன் முதலீட்டிற்கு இசைவும் ஆதரவும் தந்தனர். மீண்டும் ஏரகத்து முருகன் துணை கொண்டு செட்டிக் கப்பல் நாட்டார், மறவர், பெருந்தச்சர் ஆகியோரின் குழுக்களுடன் வட்டித் தொழில் சிறக்க, முல்லை நிலங்கள் திருத்தி மருத நிலம் சமைத்து, தொழில் வளம் பெருக்கி, தங்களின் குடிவகையான கோட்டைகள் கட்டி வாழ்ந்தனர். சென்ற இடங்களில் வெள்ளையர்களின் அனுமதியும், அதனைத் தொடர்ந்து கி.பி 1826 ஆம் ஆண்டு தொடங்கியதும் இன்றளவும் லண்டன் ஆவணக் காப்பகம் சொல்லும் உண்மை.
அதுபோலவே நாக நாட்டு தொடர்பு என்பதை நமது பண்பாட்டின் தொடர்ச்சியாக பிள்ளையார் நோன்பு என்ற வழக்கில் இன்றும் கைவிடாமல் எடுத்து வருவதும், அதே போல் ஈழத்து மக்கள் இன்றும் இந்த பண்பாட்டு நிகழ்வினைத் தொடர்வதும் நமது வழித்தடத்தின் சான்றுகளாகும்.
சான்று நூற் பட்டியல் :
1. சோமலே – செட்டிநாடும் செந்தமிழும்
2. தேவகோட்டை சின்நயந் செட்டியார் எழுதிய நகரத்தார் வரலாறு
3. டாக்டர் தமிழண்ணல் எழுதிய பத்துப்பாட்டு ஆய்வுரைகள்
4. தஞ்சைப் பெருவுடையார் கோவில் கல்வெட்டுத் தொகுதி
5. டாக்டர் மா.ராசமாணிக்கனார் ஆய்வுப் பேரவை புதுகோட்டை கல்வெட்டுகள்
6. ஆய்வாளர்கள் நடன காசிநாதன், ஐராவதம் மகாதேவன்.7. கம்பனடிப்பொடி சா.கணேசன் வயிரவன் கோவில் கல்வெட்டுகள்8. காரைக்குடி சேவு.கதிர்.இராம.நாகப்பன் அவர்களின் நாகநாட்டு ஆய்வுக்கட்டுரைகள்.
9. பண்டிதமணி மு.கதிரேசஞ் செட்டியார் எழுதிய சுண்டைக்காட்டு வேலங்குடிக் கல்வெட்டு சாசனம்.
10. வெற்றியூர் அரு.சுந்தரம் எழுதிய நகரத்தார் பண்பாடு.
11. Ancient Jaffna – By C.RASA NAYAGAM ( 1910. A.D PUBLISHED).
12. நகரத்தார் மரபும் பண்பாடும் – மா.சந்திரமூர்த்தி.
குறிப்பு:- நாக நாடும் அதனைத் தொடர்ந்த நகரத்தார்களின் இடப்பெயர்வு குறித்த ஆய்வுகளும், தரவுகளும் காரைக்குடி அண்ணன், சேவு.கதிர்.இராம. நாகப்பண்ணன் அவர்களின் தரவுகளையும், ஆலோசனையினையும் ஏற்று, அனுமானங்களற்ற ஒரு ஆய்வாக இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. கட்டுரையின் அளவு கருதி உள்ளடக்கம் பலவற்றைத் தொடாமல் விடுபட்டுள்ளது. நன்றி.
வேணும் அருள்மிகு பொய்சொல்லா மெய்யர் துணை.
---- நெற்குப்பை காசிவிசுவநாதன். நாள் : 25-09-2015

Thursday 1 October 2015

தமிழர் பண்பாட்டில் சைவமடங்களின் பங்களிப்பு.-

தமிழகத்தின் சைவ வேளாளர் சமூகம் மேற்படி திராவிடத்தை தூக்கிப் பிடிப்பதில்லை. முதலில் திரவிடியா கூட்டம் தங்களது சீர்திருத்த சீரழிப்பில் உறவாடிக் குடி கெடுத்த எண்ணற்ற தமிழர் இனக்குழுக்களில் சைவ வேளாளர், நாட்டுக் கோட்டை நகரத்தார் இரண்டு இனக்குழுக்களும் அடங்கும். இவை இரண்டும் ஒட்டு அரசியலில் சிறுபான்மை. இது தற்கால இருபதாம் நூற்றாண்டு கண்டுபிடிப்பு, சூழல்.


ஆனால், சங்கம சகோதரர்கள், மற்றும் கே.டி.ராயன் (கிருஷ்ணதேவராயலு ) உள்ளே வந்து நிலை கொண்ட போது தமிழர் பன்பாட்டில் பாரிய தாக்குதல் நடந்தது. அவர்கள் வந்ததே வேளாண் குடி, கோவிலில் இருப்பதுதா ?? சனாதனம் முழுமையாகத் தமிழ் மண்ணில் வேர் ஊன்றாமல் தோற்பதா ??? என்ற வெஞ்சினத்துடன் வந்தவர்கள்தான். இந்த வேளையில் இவர்களின் வருகைக்கு முந்தைய ஒரே சைவ மடம் மதுரை ஆதீனமே. ஆனால் கே.டி.ராயர்களின் கே.டித்தனமான ஊடுருவலை தவிர்க்க பின்னர், தமிழர் அடையாளங்களைப் பாதுகாக்க உருவாக்கப்பட்டதே திருவாடுதுறை, தருமை ஆதீனங்கள் - சைவ மடங்கள் . மிகப் பிற்காலத்தில் உருவானதுதான் காசிவாசி குமரகுருபர சுவாமிகள் உருவாக்கிய திருப்பனந்தாள் சைவ மடம். இந்நிலையில் தமிழர்களின் மெய்யியலான பலவற்றை தன்னகத்தே போற்றிவந்தவைகள் இந்த சைவ மடங்கள். (சைவம் என்பதாக மட்டுமே இங்கு கருத வேண்டியதில்லை - அதற்கும் முந்தைய பல நூல்கள் இந்த மடங்களில் பாதுக்காப்பட்டன – தமிழர் மெய்யியல்,காப்பியங்கள் எதையும் கேடி.ராயர்கள் பாதுக்கக்கவில்லை மாறாக மணிபிரவாள தமிழ் நடையினை அரசு அதிகாரம் கொண்டு வலிந்து புகுத்தினர். இன்றைய திரவிடியா அரசுகள் தமிழில் வலிந்து ஆங்கிலத்தை கலப்பதுபோல்). வழமையாகவே நிறுவனமயமான மடங்களுக்கு உள்ள பின்னடைவு சைவ மடங்களுக்கும் பொருந்தும். ஆனால் வடுகப் பன்பாட்டை முதலில் சைவ மடங்களில் / கோவில்களில் அதிகம் நுழையாமல் பாதுக்காக்க சைவ மடங்களின் பங்களிப்பு மறத்தல் கூடாது.
இவர்களுடன் நகரத்தார்கள் கை கோர்த்து பிற்கால பாண்டிய மன்னர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு, தமிழ்க் கோவில்களைப் பாதுக்காத்து வந்தனர்.


வழமையான வடுக-ஆரியக் கூட்டுக் களவானிகளின் நீண்ட நாள் செயல் திட்டத்தில் பார்ப்பானை எதிர்க்கின்றேன் பேர்வழி என்று பார்ப்பன எதிர்ப்பில் தமிழர் இனக்குழுவின் ஒரு குடியான சைவ வேளாளர்களையும் இணைத்து, சீரழிப்பு சீர்திருத்தம் செய்யத் துவங்கினர். திருமலை நாயுடுவின் காலத்திலேயே முற்றாக தமிழர் இனக்குழுக்கள் பிளவுபட்டது. அந்தப் பிளவை என்றுமே ஊதிப்பெருக்கி, பின்னர் இரண்டு பகுதிகளாய்ப் பிரிந்த தமிழர் இனக்குழுக்களை, எண்ணிக்கையின் அடிப்படையில் அதிகமாக இருப்பவர்களை மோதவிடுவதும், சிறுபான்மை சமூகங்களை மிகப் பிற்காலமான இருபதாம் நூற்றாண்டில் தனித் தனியாகவே கட்டுடைத்தனர். இதுவே தமிழர் இனவழிப்பின் பிற்காலத் தொடக்கமாக இருந்தது. நகரத்தார்களை நயந்து உண்டைச் சோறு நிதம் தின்ற திராவிட நாதாரிகள், அவர்களின் புலம்பெயர் கட்டமைப்பை உடைத்து பொருளாதார முதுகெலும்பை நொறுக்கியது. பின்னர் சைவ மடங்களைத் தனிமைப்படுத்தியது. இப்படி பல சிக்கல்கள் உள்ள நிலையில் என்ன நடக்கின்றது என்ற அரசியல் விழிப்பு நிலை இல்லாமல் இன்று சிதறிக் கிடக்கின்றோம். இப்போது நாம் செய்ய வேண்டியது வடுக அரசியல் விபச்சாரத்தை அம்பலப்படுத்துவதும், தமிழர் இனக்குழுக்கள் ஓர்மையுடன் சிந்தித்து செயல்பட வேண்டியதும்தான்.
வேணும் அருள்மிகு பொய்சொல்லா மெய்யர் துணை,
---- நெற்குப்பை காசிவிசுவநாதன்.

Thursday 24 September 2015

கொண்டி என்றால் என்ன ???








கொண்டி என்றால் என்ன என்று எனது நண்பர் அலைபேசியில் கேட்டார்.
அவருக்கு எனது #பதில்:-

கொண்டி என்றால் பணம் அல்லது கைப்பொருள் - முதலீடு என்பதாகும்.

பண்டமாற்றுப் பொருளாதாரம் பணம் - அதாவது காசு என்ற நாணய செலாவணிக்கு மாறியபோது வந்த தமிழ் வழக்குச் சொல். தொன்றுதொட்டுநாட்டுக்கோட்டை நகரத்தார்கள் கடலாடி அயல் நாடுகள் சென்ற போது தங்களின் முதலீடுகளாகக் கொண்டிருப்பவையே கொண்டி எனப்படுவது.


நாட்டுக்கோட்டை நகரத்தார் வீடுகளில், சென்ற கணவன் அங்கேயே இறந்து போனால் கொண்டிவிற்கச் சென்ற கணவனை நினைத்து இந்தச் சொல்லாட்சிகளுடன் கூடிய அழகிய ஒப்புமை இல்லா இறங்கற்பாடல்கள் தன்னுணர்ச்சியாய் வெளிப்படுத்தியுள்ளனர் ஆச்சிமார்கள்.


கணவன் கொண்டி விற்க கப்பலேறிய பின், அவனைப் பிரிந்து வாடும் ஆச்சி, மகனையோ அல்லது மகளையோ மடியில் கிடத்தி உறங்க வைக்கப் பாடும்தால்லாட்டுப் பாடலிலும் இந்தச் சொல்லைப் பயன்படுத்தி தன் குழந்தைக்கு கணவன் சென்ற காரணத்தை நல்ல தமிழில் பாலூட்டுவது போல் தமிழை குழந்தையின் செவிகளில் ஊட்டுவாள்.


சொல்லிய தமிழும், பாடிய பாடலும் எங்கள் நகரத்தார் வீடுகளின் தூண்களில் எதிரொலித்து ஆண்டாண்டுகளாய் கொண்டிருக்கும் உணர்வுகளை, கர்ணம் (காதுகளைக் கொண்டிருக்கும் சிற்பத் தூண்கள் ) வைத்த வளவுத் தூண்கள் சங்கப் பலகைபோல் பதித்திருக்கும். பண்பாட்டின் வேர்களுக்கும் விழுதுகளாய் தன் கால்பதித்து நிற்கும் விழுமியங்களே அவை என்பதை இன்றைய தலைமுறை செவிமடுக்காமல் போவதென்ன ?????

கோயில் மாடு - கொண்டி மாடு என்று இரண்டு வகை உண்டு. கோயில் மாட்டிற்கு விலை கிடையாது. கொண்டி மாட்டிற்கு சந்தையில் விலை உண்டு. அடங்காத மாடு என்பதற்கும் வாய்ப்புண்டு. சந்தைக்கு போகும் மாடு நமக்கு இல்லை என்பதே அது. கொண்டி என்பது பொருள், கைப்பணம், முதலீடு, செலாவணி,அடக்கமுடியத.

வேணும் அருள்மிகு பொய்சொல்லா மெய்யர் துணை.


---- நெற்குப்பை காசிவிசுவநாதன்.

Tuesday 22 September 2015

நெருஞ்சி_முள்ளும், #மென்று விழுங்கும் #வெற்றிலை__பாக்கும் நெருடிக் கொண்டுதானிருக்கும்.

#நெருஞ்சி_முள்ளும், #மென்று விழுங்கும் #வெற்றிலை__பாக்கும் நெருடிக் கொண்டுதானிருக்கும்.

நாட்டுக்கோட்டை நகரத்தார் சமூகத்தை குறிவைக்கும் வடுக நாயர்களையும், வடுக நெல்லிகளையும் எப்படி அனுசரித்து வாழ்வது என்று சிந்திக்கும் நாட்டுக் கோட்டை நகரத்தார்களுக்குப் பதியப்பட்ட பதிவு. நேருடலாக இருக்கின்றது என்று நினைப்பவர்களுக்கு எழுதப்பட்ட பதிலுரை:-



#நெருடலாக இருப்பதை அப்படியே பார்த்துக்கொண்டு இருந்து, பின்னர் எழுத்தில் இடித்துரைத்தால் சமூகம் கெட்டுவிடும் என்ற வகையான உளவியல் தாக்கம் என்பது நம்மவர்களிடம் சில பலரிடம் உள்ளது.
எதுவாகிலும் நல்லிகளையும், நாயர்களையும் வெட்கமின்றி நமதுஇனக்குழு சார்ந்த பத்திரிகைகளில் வெளியிட்டு பரிவட்டம் கட்டி, நமது கோவில்களில் அனுமதித்து, விழா நிகழ்ச்சிகளில் அரங்கேற்றி, கட்டிட நிதி வாங்கி பின் அவர்கள் பெயரை நமது ஐயாக்கள் அடிக்கல் இட்டு கட்டிய அற நிலையங்கள் அனைத்திலும் வெட்கமின்றி போட்டுவிட்டு, பின்னர் இதன் அடிப்படை உரிமைகளை முறையாகப் பிறந்தவர்கள் கேட்காமல் யார் கேட்பது ???
முறையற்ற வன்மங்கள் திட்டமிட்டு அரங்கேற்றம் செய்யப்படுகின்றன. படைப்பு வீடுகளில் இனக்குழு சாராதவர்களை புள்ளிக் கணக்கில் இல்லாதவர்களை பரிவட்டதாரிகள் வந்து கலக்க விடுவதில் இனிமேல் என்ன இருக்கின்றது???? 

நெருடல்களை மென்று விழுங்குவதால் செரிமானம் ஆகிவிடும் என்று நம்பினால் இனிமேல் இந்தப் பீற்றல் வகையான பெருமைகளை தவிர்த்துவிடலாம். #நெருஞ்சி_முள்ளும், #மென்று விழுங்கும் #வெற்றிலை__பாக்கும் நெருடிக் கொண்டுதானிருக்கும்.
கண்களைக் கட்டிக் கொண்டிருந்தால் செரித்துவிடாது, இல்லை அப்படியே விட்டுவிட்டால் #நம்மையே__அரித்து__செரித்துவிடும். எழுதுவதை தவிர்ப்பது எந்த வகை நியாயம் என்பதை உறவுகள் சிந்திக்கட்டும்.
வேணும் அருள்மிகு பொய் சொல்லா மெய்யர் துணை.

---- நெற்குப்பை காசிவிசுவநாதன்.

Sunday 20 September 2015

படைப்பு :




நம் வேள்வணிகர் நகரத்தார் பழக்க வழக்கங்களில் மிகவும் தொன்மையான ஒன்று படைப்பு வழிபாடு. நம் வீட்டில் வாழ்ந்து காலத்தால் இறைவனடி சென்ற நம் வீட்டின் மூதாதையர்களை நினைத்து ஆண்டிற்கு ஒருமுறை அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை என்று, கருப்பட்டிபணியாரம் / பாற்சோறு /சைவ(மரக்காய்கறிகள்) /அசைவம் என்று மூதாதையற்கு பிடித்த வகை உணவுகளை சமைத்து கோடிச்சீலை கோடிவேட்டி மூதாதையர்கள் அணிந்து கொண்ட ஆபரணங்களை வைத்து வழிபடப்படும் வழிபாடு .இந்த வழிபாடு நம் வாழ்வில் நல்லது கெட்டது என்று அனைத்திலும் படைப்பு வழிபாடு என்பதற்கு ஒரு முக்கிய இடம் கொடுக்கப்படும். நம் செட்டிநாட்டுப் பகுதிகளுள் பல பிரபலமான பெரும் படைப்புகள் நிகழ்த்தி வழிபாடுகள் செய்யப்பட்டு வருகின்றனர். அடக்மையாத்தாள் படைப்பு / சோனையன்கோவில் படைப்பு / தெய்வானையாத்தாள் படைப்பு / இராசாத்தாள்படைப்பு / மங்களகாரிபடைப்பு /அக்கினியாத்தாள் படைப்பு என்று பற்பல படைப்பு விழாக்கள் நகரத்தார் ஊர்தோறும் நிகழ்ந்து வழிபாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. இன்றும் இந்த படைப்பு வழிபாடு எந்தவொரு தொய்வின்றி சிறப்பாக பாரம்பரிய முறையில் முடிந்தவரை நிகழ்த்தி வருகின்றோம்.



‪#‎படைப்பு_யாரால்_யாருக்கு_நிகழ்த்தப்படுகிறது_‬???
பெரும்பான்மையான படைப்பு என்பது தமிழ் சமூகத்தின் அங்கமாக விளங்கும் நம் நகரத்தார் வழிதோன்றல்களில் பிறந்து வாழ்ந்து காலத்தால் இறைவனடி சென்ற ஆணையோ பெண்ணையோ நினைத்து வழிபடப்படும் வழிபாடு. இந்த வழிபாட்டை படைப்பு தெய்வத்தின் வழியில் வந்த நகரத்தார் ஆணுக்கும் நகரத்தார் பெண்ணுக்கும் பிறந்த வழித்தோன்றல்கள் இந்த வழிபாட்டை மேற்கொள்வர். இந்த வழிபாடு மூதாதையர் வாழ்ந்த அதே ஊரில் அவர்கள் வாழ்ந்த வீட்டில் நிகழ்த்துவார்கள் படைப்பு வழிபாடு நிகழ்த்தக் காரணம் தங்கள் வாழ்வு சிறக்கவும் குடி தழைக்கவும் நிகழ்த்தப்பெரும் வழிபாடு.
‪#‎இன்றைய_படைப்பு_வீட்டின்_நிலை‬ :
நம் வேள்வணிகர் நகரத்தார்கள் இன்றும் படைப்பு வழிபாட்டை கைவிடாமல் மேற்கொள்கின்றனர். வெகுசிலர் வெள்ளை நிறமோகத்தால் தங்கள் சமூகத்தையும் மறந்து தமிழர் அடையாளம் சாராத நாயர் /நாயிடு /சவுராஷ்டிர வகைகளில் தங்களின் சுய ஆசைக்காகவும் தேவைக்காகவும் தங்கள் அடையாளம் மறந்து வெளியில் சென்று திருமணம் முடித்து வாழ்வு நடத்துபவர்களாக இன்று உள்ளனர். வெளியில் சென்று கட்டிவந்தது / ஓட்டிவந்தவைகள் எல்லாம் எப்படி புள்ளியாக கணக்கில் கொள்ளமுடியும் இதுபோன்றவர்களை முன்பு வீட்டு விழாக்கள் / படைப்பு என்று எதற்கும் அழைக்கமாட்டார்கள் அப்படியே அழைத்தாலும் அவர்களும் விழாவில் கலந்துகொள்ள தயங்குவர் ஆனால் தற்போது நகரத்தார்கள் இதுபோன்ற கலப்புகளை இரத்தின கம்பளம் விரித்து தங்கள் வீட்டின் திருமணம் விழாக்கள் முற்றோதல்கள் போன்றவற்றில் நடுவளவும் வரை கொண்டுவந்து வைத்து அழகுபார்கின்ற சம்பவங்கள் ஆங்காங்கே நிகழ்கின்றது .அது அவரவர் தனிப்பட்ட விருப்பம் .இதனை தொடர்ந்து இதுபோன்ற நாயர் நம்பூதரி வகை/ நாயிடு ரெட்டி சௌராஷ்டிர கன்னட கலப்புகளை தற்போது படைப்பு வீட்டின் உள்ளே அனுமதித்து இந்த வகை பெண்பிள்ளைகளையும் நிறத்தின் மோகத்தாலும் தன் சுயதேவைக்காக வெளியில் ஆண்மகனை தேடிச்சென்ற பெண்பிள்ளைகளும் படைப்புக்கு பாணியார மாவு இடிக்கவும் / பணியாரம் ஊத்தவதும் / படைப்பு தெய்வத்திற்கு சமயல் வேலை செய்யவும் சில இடங்களில் அதிகாரத்தில் உள்ள நகரத்தார்கள் அனுமதிக்கின்றனர் இதன் நோக்கம் என்ன ??? ஆக நிறத்திற்காக வெளியில் சென்று தமிழர் அடையாளம் சாராத கூட்டத்தில் வெளியில் திருமணம் முடித்து தன் சமூகத்தின் வரைமுறைகளை கட்டுடைத்து வெளியேறிய கூட்டத்தை புள்ளியாக்கும் முயற்சியாக இது நிகழ்கிறதா ??? அதோடு ஒரு மரபுசார் தெய்வத்திற்கும் அந்த மரபுசார் வழியில் வந்த ஆணோ பெண்ணோ அந்த பூசையில் ஒன்றிணைந்து படைப்பு வேலைகளை செய்யும் போது அந்த படைப்பு படைப்பதன் நோக்கம் நிறைவேறும். இப்படி வெளியில்இருந்து இழுத்து வந்ததைகளை படிதாண்டி ஓடியவைகள் ஒட்டிவந்தவைகளை படைப்பு வழிபாட்டில் அனுமதித்து இந்த கூட்டத்துடன் கைகோர்த்து படைப்பு படைப்பதன் மூலம் நாம் படைக்கும் படைப்பின் நோக்கமே அங்கு மறைந்து (பயனற்று ) போகிறது. ஏன் இதுபோன்ற செயலை ஆதரிக்கும் நகரத்தார்களுக்கு இவைகள் ஏன் உரைக்கவில்லை ??? இதுபோன்ற செயல்கள் மூலம் தன் சமூகத்தின் பண்பாட்டு அடையாளங்களை தங்கள் சுயதேவைக்காக சிதைத்து கட்டுடைக்கும் தடிக்கோல் கூடத்திற்கும் நம் படைப்பு தெய்வங்கள் இதுபோன்ற துர்சிந்தனைகளை மாற்றி நற்சிந்தனைகளை விதைக்கச் செய்யட்டும். இதுபோன்ற செயல்கள் எல்லாம் படைப்பு வீட்டிலும் தற்போது நிகழ்வது இல்லை பெரும்பான்மையான இடங்களில் மிகுந்த கவனத்துடன் பக்தியுடன் இனச் சிந்தனையுடன் நடத்துகின்றனர். ஆனால் ஒரு சில இடங்கலில் இதுபோன்ற வெடுவாளிக் கூட்டத்தை உள்ளே விட்டு பண்பாட்டை சிதைக்கும் செயல்கள் தலைதூக்கியுள்ளது. இவற்றை நாம் இன்று கண்டுகொண்டு கிள்ளியெறியா விட்டால் இந்தப் புல்லுருவிகள் எல்லா இடத்திலும் பரவி முளைக்கும் என்பதை நினைவில் கொள்வோம். நம் வீட்டு படைப்யு தெய்வத்தின் அருளால் இவைகளை கிள்ளியெறிவோம்.
வேணும்
‪#‎பெரியகருப்பர்_துணை‬
-----------கரு.இராமநாதன் வேள்வணிகன்

சத்குருவின் பேச்சில் எழுந்த கேள்வியும் அதற்கு பதிலும்

கேள்வி : ////////////சத்குரு அவர்கள் தனது உரையின்போது, “சிறிய சமூகமே ஆனாலும் தன் கால்தடங்களை பரவலாக பதித்துள்ள ஒரு சமூகம் நகரத்தார் சமூகம். புதிய தலைமுறைக்கு, புதுவிதமாய் அறிவை வழங்கும் ஒரு பாரம்பரியம் நமக்கு தேவை. பழையதை பற்றிப் பேசுவது பாரம்பரியம் அல்ல, மாறாக புது சாத்தியங்களைத் தேடி அறிவதுதான் பாரம்பரியம்,” என்றார்.////////// எல்லாம் சரி நகரத்தார் சமூகவிழாவில் ஏன் வெளியாட்கள் நகரத்தார் சமூகத்தை சாராதவர்கள் கலந்துகொள்ளவைப்பதன் நோக்கம் என்ன ??? பழமையை மட்டும் யாரும் இங்கு பேசவில்லை அதன் மூலம் முன்னோர்கள் அடிச்சுவட்டில் நடைபயணம் மேற்கொள்ள அது ஒரு அடிக்கோளாக அமையும் பழமையை பேசுவது பாரம்பரியம் இல்லை என்று கூறக்காரணம் என்ன ??
-------------கரு.ராமனாதன் வேள்வணிகன்

பதில் : பாரம்பரியம் என்பதன் பொருளே முன்னோர் காத்த பண்பாட்டினை கடைபிடிப்பது அதனோடு நகரத்தார் ஏற்கத்தக்க புதிய பண்பாடுகள் இணைக்கப்படலாம் அதனை விடுத்து புதியதை கைக்கொள் என்று சொல்வது மரபழிப்பு தூண்டுதலாகும் வஞ்சனையொடு நஞ்சு ஊட்டபட்டிருக்கிறது

இது குழுமச் சாமியார் சத்குரு தவறல்ல அழைத்தவர்கள் தவறு நமது பண்பாடான பிள்ளையார் நோன்பு , படைப்பு,குலதெய்வ வழிபாடு ,கோவில்களில் திருப்பணிகள் , செவ்வாய் பொங்கல் ,மகர்நோம்பு இவற்றை விட்டுவிட்டு இவருடைய இசை என்னும் புதியபண்பாட்டு வெள்ளத்தில் மூழ்கி காணாமல் போகவேண்டுமா அன்மைக்கால பட்டினத்தார் ,பாடுவாரும் தொன்மையான இயற்பகை நாயனார் காரைக்கால் அம்மையாரும் இன்னும் பல நகரத்தார் பெரியோர்களும் சொல்லிச்சென்ற பாரம்பரிய பண்பாடு காத்து கோவலன் கண்ணகி வழிவந்த நம் குலம் சிவ சிந்தையோடு தழைக்கவேண்டும்

இவர் போன்ற செல்வதில் புரளும் தெண்டுல்கர் விளம்பர குழுமசாமியார்களின் பின் செல்லல் நகரத்தார்கு அறிவுடமையாகாது தீங்கு விளையும் எச்சரிக்கை அவசியம்
------------சந்திரசேகன்  v

தமிழர்அடையாளம் காப்போம்:(கயிலை வாத்தியத்தை ஆதரிப்போம் )


தற்போது நம் நகரத்தார் குடமுழுக்கு விழாக்களில் மலையாள பகவதிகளில் வாத்தியமான செண்டமேளத்திற்கும் தான் சில இடங்களில் முன்னுரிமை தரப்படுகிறது இது தமிழ்வளர்த்த நகரத்தார் சமூகத்திற்கும் அழகல்ல முன்பு நம் ஆலயகுடமுழுக்கு விழாக்களில் நாதஸ்வரதிற்கும் பிற தமிழர்கலைகளை வளர்க்கும் விதமாக அவைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வந்தன ஆனால் இன்றோ நம் மண்ணுக்கு பொருந்தாத வேற்று மண்ணின் அடையாளங்களை நம் மண்ணில் மாற்றம் என்ற பெயரில் செண்டைமேளம் கும்மாட்டிக்களிகளை நாம் கொண்டுவந்து இறக்கி நம் மண்ணின் அடையாளமாக விளங்கும் நம் பழந்தமிழ் கலைகளை அழிக்கிறோம். இதற்குபதிலாக நாம் ஏன் ஆலயகுடமுழுக்கு விழாக்களில் கயிலாயவாத்தியக்குழுக்களை கொண்டுவந்து ஆதரிக்கக் கூடாது தமிழ் சைவசமையத்வர்களால் வாசிக்கப்படும் இந்த இசையை ஏன் கொண்டுவரக்கூடாது??

 கயிலாயவாத்தியம் என்பது “சங்கு, எக்காளம், திருச்சின்னம், பிரம்மதாளம், உடல் ஆகியவை கூட்டு இந்த வாத்தியம் சிவனுக்கு உகந்த வாத்திம். இவற்றை கயிலையில் பூதகணங்கள் இசைத்து சிவனை மகிழ்ச்சிப்படுத்துகின்றதாக நம்பப்படுகிறது. இந்த வாத்தியம் நம் மண்ணின் பழம்பெரும் இசைவாத்தியம் செண்டைமேளத்திற்கு மாறாக இவற்றை நாம் ஏன் நம் மண்ணில் ஒலிக்க்கச்செய்து நம் தமிழரின் இசையைவளர்க்கக்கூடாது ???? சிந்திப்போம் தமிழராய் தமிழரின் அடையலாம் பேணிக்காக்க ஒன்றுபடுவோம் 

------------கரு.இராமநாதன் வேள்வணிகன்

Thursday 20 August 2015

வெள்ளைத்தோலும் ஆசையும் :


சமிபத்தில் உறவினரின் அழைப்பின் பெயரில் அவர்கள் வீட்டின் படைப்பில் கலந்துகொண்டேன் அப்போது நிகழ்ந்த ஒரு சம்பவன் ஒரு 60 வயது மதிக்க தக்க பெரியவர் தனது பேரன் ஊருக்கு போகிறேன் என்று சொல்லிக்கொண்டு கிளம்பும் பொது அவர் கூறியவார்த்தை இது “பேராண்டி அடுத்த படைப்புக்கு வரும்போது நல்ல வெள்ளவெளேருன்னு அழகனா ஒரு புள்ளைய கட்டிக்கிட்டு வந்துவிடுடா எங்களுக்கு தான் கிடைக்கலை நீயாவது கட்டுடா“ என்றார் அதற்கு அந்த பையனும் சிரித்துகொண்டு சரி சரி ஐயா கிளம்பிச்சென்றார். 



நம் சமூகத்தின் பெரும்பான்மையான ஆண்கள் மற்றும் பெண்கள் நிறம் கருப்பு தான் வேகுசிலரே வெள்ளை நிறம் கொண்டவர்களாக உள்ளனர் வெள்ளையாய் இருப்பவரை தான் மணம்முடித்துகொள்வேன் என்றால் கருப்பாக உள்ளவர்கள் கதி என்ன ??தோலின் நிறத்தை மட்டும் வைத்து இன்று எடைபோடுவதும் வெள்ளைத் தோலுக்கும் முன்மரியாதை கொடுப்பது சரியல்ல எனக்கும் தான் வெள்ளை தோல் கிடைக்கவில்லை நீயாவது பார்த்து கட்டுக்கோ என்று இளம்தலைமுறையிடம் தேடியோடச் சொல்லுவது எந்த வகையில் ஞாயம் ??? இதுபோன்று கூறுவது நம் சமூகத்தில் நிறமேலான்மையை உட்புகுத்தி மறைமுகமாக வெளியில் திருமணம் செய்து கொள்ள ஊக்குவிப்பது போல் அமையும் அன்று நம் பாட்டிஆயாக்களும் பாட்டையாகளும் இன்று எள்ளிநகையாடப்படும் கருப்பு நிறம் கொண்டவர்களையும் இப்படி நிறம் பேதம் பார்த்து திருமணம் செய்துகொள்ளவில்லை கருப்போ சிவப்போ அது செட்டிபிள்ளையா என்பதை மட்டும் தான் பார்த்து மணமுடித்து வாழ்ந்தனரே தவிர இப்படி அது தெலுங்கானோ கன்னட மலையாளியா இருந்த என்ன வெள்ளையா இருக்கு சரி என்று கட்டிக்கொண்டு வாழவில்லை இது போன்ற தவறான வித்துகள் சிலஆண்டுகள் முன்பு விதிவசத்தால் விதைக்கப்பட்டு விட்டன தற்போது இதுபோன்ற விதைகளை மீண்டும் விதைக்க சில இடங்களில் இதுபோன்ற வார்த்தைகளை அவர்களுக்கே தெரியாமல்பெரியவர்கள் விதைத்து விடுகின்றனர் ///“பேராண்டி அடுத்த படைப்புக்கு வரும்போது நல்ல வெள்ளவெளேருன்னு அழகனா ஒரு புள்ளைய கட்டிக்கிட்டு வந்துவிடுடா எங்களுக்கு தான் கிடைக்கலை நீயாவது கட்டுடா“ ///இதை இப்படி சொல்லியிருந்தால் நல்ல செய்தி விதையாக விழுந்திருக்கும் ///அடுத்த படைப்புக்கு வரும்போது ஒரு நல்ல செட்டிபுள்ளைய கட்டிக்கிட்டு புள்ளியாக வந்துசேரு பேராண்டி ///என்று கூறியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் .இதுபோன்ற நிற மேலான்மையை தவிர்ப்போம் இது தவறான பாதைக்கும் கொண்டு சென்றுவிடும் என்று கூறக் காரணம் நம் ஐயாதான் வெள்ளையா ஒரு பிள்ளயை பாத்து கலியாணம் பண்ணச்சொல்லிடாக அப்பறோம் என்ன என்று வெள்ளைய ஒருபுள்ளைய கட்டிக்கிட்டு போனா ஒன்னும் சொல்லமாட்டாக என்று ஒருவித எண்ணம் உருகொல்ல வித்தாக சென்றுவிடும் 

தற்போது நம் சமூகத்தில் 40 வயதிற்கு மேல் 70திற்குள் உள்ள நூற்றில் முப்பது பேர் இதுபோன்று இன்று இளம் தலைமுறையினரை மனதில் நஞ்சுகளை கலந்து மடைமாற்றம் செய்கின்றனர். நாம் பொண்ணோ பையனோ வரன் தேடும்போது நல்ல குணம் உண்டா பண்பாடு உண்டா என்றுபாப்போம் அதைவிடுத்து வெள்ளைத்தோல்களை தேட வேண்டாம் சட்டியில் இருப்பது தானே அகப்பையில் வரும் அதை விடுத்தது அன்று எனக்கு கிடைக்கவில்லை இன்று உனக்காவது கிடைக்கட்டும் என்று கூறுவது சற்றும் அழகல்ல.இங்கு மாடைமாற்றம் செய்கின்றனர் என்று எல்லோரையும் கூறிவில்லை வெகுசிலரே உள்ளனர் அவர்கள் தானும் கேட்டது இல்லது அடுத்து வரும் தலைமுறை மனதிலும் நஞ்சு கலக்குகின்றனர் என்பது மிகவும் வருந்தத்தக்கது. இதுபோன்ற நஞ்சுகள் கலக்கும் கூட்டத்தை இனம் கண்டு அவற்றை நெறிபடுத்த வேண்டும் அல்லது இவர்களை விட்டு நாம் விலகி நிற்க வேண்டும். நம் சமூகத்திற்ககோ அல்லது பிறருக்கோ நல்லது செய்யாவிட்டாலும் சரி அல்லது செய்யாமல் இருந்தால் போதும். 
கோழிக்கோடு நம்பூதிரி ஒருவன் அலுவலகத்தில் கேட்டான் நகரத்தார்கள் பலரை எனக்கு தெரியும் பார்த்துள்ளேன்ஆனால் நீங்கள் பலரும் ஏன் கருப்பாக உள்ளீர்கள் என்றார் ஐயா நம்பூதிரியாரே நாங்கள் என்ன தான் முகத்திற்கு இன்று விற்கும் சுண்ணாம்பு பூசினாலும் அது மாறப்போவதில்லை என் மரபு சார் பாரம்பரிய நிறம் சற்றும் கருமை கலந்த நிறம் அதை பற்றி நாங்களே கவலை கொள்ளாதபொது நீங்கள் ஏன் கவலை கொள்கிறீர்கள் என்றது பதில் இல்லை .இப்படி கேட்டபது நாகரீகம் ஆல்ல என்பது கூடதெரியாமல் கேட்கும் அழகில் தெரிகிறது உங்கள் அழகு. தோலின் நிறத்தால் வெண்மை கொண்டு என்ன புண்ணியம் ஊரை வேண்டுமானால் ஏமாற்றலாம் அங்கு அகத்தில் இருள்தானே சூழ்ந்துள்ளது இங்கு எங்களிடம் புறத்தால் கருமைநிறம் இருக்கு ஆனால் அகத்தில் இல்லை என்று கூறவே அங்கிருந்து நகர்ந்தான் அந்த நம்பூதிரியான். முதிலில் நாம் இந்த வெள்ளைதோலின் மீது கொண்டுள்ள மோகத்தை களைவோம் அது பலவித இடையூறுகளை குறைக்கும் என்பது உறுதி....

------------கரு.இராமநாதன் வேள்வணிகன்

Tuesday 18 August 2015

குறுந்தாடிகளின் கனிவான கவனத்திற்கு....!!!

#பொதுவாகவே__நாட்டுகோட்டை___நகரத்தார்களின்__வரலாற்றை, தமிழர்கள் அல்லாதவர்கள் (வடுகர் கூட்டம் + ஆரிய சனாதனம் ) தங்கள் கையில் எடுத்துகொண்டு ஆராய்ச்சி செய்கிறேன் பேர்வழி என்று நம்மவர்களை மூளைச் சலவை செய்து நகரத்தார்களை அதாவது நாட்டுகோட்டை நகரத்தார்களை தமிழர்கள் அல்ல என்பதாக கதை எழுதி, அவர்களின் வேள் வணிகர் அடையாளத்தை மடைமாற்றம் செய்து தன வைசியர் - என்று உளவியல் மோசடிக்கு ஆள்ளக்கியுள்ள நிலையில், இற்றைக் காலங்களில் வடுக ஆனந்த விகடன் நகரத்தார்களின் வணிகக் கட்டமைப்பை கொச்சைப்படுத்தி அவர்களின் கால அளவை வந்தேறிய தெலுங்குச் செட்டிகளை விடவும் குறைவான வரலாறு கொண்டவர்களாக காட்டி எழுதி உள்ளனர். இதனை அரைகுறையாகப் படித்த குறுந்தாடி நகரத்தகார் இளைஞர்கள் அதுதான் வரலாறு என்று கோலம் கொண்டு சுய அடையாளம் அழிக்கத்துவங்கி விட்டனர். இவர்களிடம் வரலாறு பேசினால் அவர்கள் நம்மிடம், நமக்கே விலை பேசும் அளவிற்கு பின் புலத்துடன் உள்ளது தெரிய வருகின்றது. நிற்க. 

இந்த நிலையில் தமிழர் குடி மரபு இனக்குழுவைச் சார்ந்த இன்னொரு நண்பர் சில தவறான புரிதலுடன் நாட்டுக் கோட்டை நகரத்தார் வரலாறு குறித்து பதிவிட்ட போது, அதற்கு நான் அவரிடம் அதற்கான எனது விளக்கம் கொடுத்து, பதிவிலும், வரலாற்றிலும் தவறு உள்ளது. இது தவறான புரிதலை மக்களிடம் கொண்டு செல்லும் என்று கூறினேன். அவரும் தான் படித்த சில நகரத்தார் பற்றிய வரலாறு குறித்து சொல்லி, அதன் அடிப்படையில் எழுதினேன், தவறு இருப்பின் பதிவு நீக்கம் செய்து விடுகின்றேன் என்றவர், உடனே அந்தப் பதிவினையும் நீக்கிவிட்டார். 

ஒரு இனக்குழு பற்றிய ஆய்வு முறையாகவும், அந்த இனக்குழுவின் பண்பாட்டு,வாழ்வியல் சொல் வழக்கு, சடங்குகள் சார்ந்தும் உள்ளவற்றை எடுத்து, இலக்கிய,தொல்லியல் சார்ந்த தரவுகளுடன் பொருத்தி அதன் தன்மையுடன் கூடிய உண்மையினை ஆய்ந்து அறிவிக்க வேண்டும். இதற்கு அந்த அந்த இனக்குழு சார்ந்த அறிவர்களும் பெரியவர்களும் சேர்ந்து ஆய்வு செய்யப்பட வேண்டியது. மாற்றார் அடையாளங்களை மிக எளிதாக வேற்றார், எடை போடுதல் கூடாது. இந்த நெறிப்பாடு இயல்பாகவே அனைவருக்கும் இருக்க வேண்டும். 


ஆய்வும் ஒரு நடுவு நிலையுடன் கூடியதாக, நடந்தவை, நடப்பவை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இனி வரும் காலங்களில் அந்த அந்த இனகுழுவானது, தங்களின் தேசிய இனத்தின் ( மொழி வழியே அடையாளம் கொண்டு அறி யப்படுவதே ஒரு தேசிய இனம் ) { நிறம்,மதம் ஆகியவை ஒரு தேசிய இனத்திற்கு குறியீடு அல்ல } நலனுடன் இனைந்து வாழ்வதற்கான ஒன்றாகவே அமைய வேண்டும். இடைக்கலங்களில் மாற்றார் ஆட்சிக் காலங்களில் நடந்த ஒடுக்குதலை சீர்தூக்கி, நமது தமிழர் இனக்குழுக்களை அவர்களின் தனித்துவத்தை அடையாளம் கண்டு, நம் தேசிய இன ஓர்மைக்கு வழி வகுக்க வேண்டும். 

மேற்படி நபர் இதனை நன்கு புரிந்து கொண்டதால் எனது மறுப்பினையும் கருத்துரையினையும் உடனே ஏற்று பதிவு நீக்கம் செய்துவிட்டார். இது தமிழர் நெறி, தமிழர் அறம். 

ஆனால் சொந்த அடையாளத்தை ஆனந்த விகடன் என்ற வந்தேறி சொன்னான் என்பதற்காக அதுதான் அடையாளம் என்று வல்லடியாய் சட்டம் பேசும் குறுந்தாடி பதினேழாம் நூற்றாண்டு இளைஞர்கள், வரலாற்றை விவாதித்து ஏற்கும் நிலையில் இல்லை, மாறாக நமக்கே விலை பேசும் கயவர்களாக இருப்பதை எப்படி ஏற்க முடியும் ?? 

செட்டி என்ற சொல்லே சம்ஸ்கிருதா என்ற மொழியில் இருந்து வந்ததாக கூத்தாடிகள் சொல்லியவற்றை COPY PASTE அதாவது வெட்டி ஓட்டும் வேலையினைச் செய்து,  எளிய மக்களையும், மற்றவர்களையும் ஏமாற்றுவது எதற்கு ?? 

குறிப்பாக பதினேழாம் நூற்றாண்டு அக்மார்க் PURE NAGARATHAR என்று சொல்லும், குறுந்தாடிகளின் தோளில் தொங்கும் அதி நவீன புகைப்படக் கருவியும், அவர்களுக்கு இலவசமாய் தரப்பட்ட மண் மூளையினையும், ஒரு வடுக நாயர் வாடகைக்கு கொடுத்தால், அதனை ஏற்று இவர்கள் தங்களை நெகிழியால் ( PLASTIC NAGARATHAR WE ARE ) செய்யப்பட பிளாஸ்டிக் நகரத்தகார் என்றும் கூட சொல்லிக் கொள்வார்கள். 

காரணம் சங்கம் வைத்த மதுரையில், கலைக் கல்லூரியின் தமிழ்த்துறை எந்திரத்தை வைத்துகொண்டு, நகரத்தகார் வாழ்கின்ற ஊர்களை ஆய்வு செய்கின்றேன் பேர்வழி என்று, நகரத்தார்களைப்பற்றிய ஆய்வுகளை நிழலாகச் செய்து, அதன் அடிப்படையில் நகரத்தார் சமூகத்தில் நகரத்தார் அல்லாதவர்களை ஊடுருவச் செய்வதற்கு கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நிழல் வேலைகள் நடப்பது பற்றி அறியாதவர்கள் பலர்,இப்படிப்பட்ட அழிவுப் பாதைக்கு தாங்களே பட்டுக் கம்பளம் விரிக்கவும் தொடங்கிவிட்டனர். 


இனி நாயர் வகை, நாயுடு வகைப்பிரிவும் கலந்துறவாடி,  நாட்டுக்கோட்டை நகரத்தார்களை,  தங்கள் அடையாளம் இழந்த நிலைக்கு ஆளாக்கும் முன், நாட்டுகோட்டை நகரத்தார்கள் ஒவ்வொரு ஊர்களிலும் உள்ள பங்காளிகளை அவர்களின் சுய அடையாளத்தைக் காக்க அரசியல் அதிகாரம், பண பலம் கொண்டு ஒடுக்குபவர்களை, வந்தேறிகளை எதிர்க்கவும் நம்மை நாமே பாதுகாக்கவும் முயற்சி எடுக்க வேண்டும். அதற்கு அடிப்படையாக நிற மேலாண்மை தேடும் பதினேழாம் நூற்றாண்டு நாயர் அடிமை நகரத்தார்களைப் புறக்கணிக்க வேண்டும். இல்லை என்றால் கேடாய் முடியும். 
வேணும் அருள்மிகு பொய் சொல்லா மெய்யர் துணை, 

----- நெற்குப்பை காசிவிசுவநாதன். 07-08-2015.

Saturday 15 August 2015

காரைக்குடி செட்டிநாட்டு பகுதியின் அடையாளங்களில் ஒன்று ..........


அன்பு நகரத்தார் நண்பர்களுக்கு காரைக்குடியானது நகரத்தார் 96 ஊர்களில் முக்கியமான ஊர் . மேலும் நகரத்தார்களின் அடையாளங்களில் போற்ற பட வேண்டிய பல இங்கு அமைந்து உள்ளது .
1.இந்து மாதபிமான சங்கம் . 
2.அறுபத்தி மூவர் மேடம் .
3.காசி நகர சத்திரம் .
4.தமிழ் கல்லூரி .
5.கம்பன் மணி மண்டபம் .
6.கோவிலூர் மடாலயம் .
7.அழகப்பர் பல்கலைகழகம்
8.எஸ்.எம்.எஸ்.வீ.ஆண்கள் மேல்நிலை உயர் நிலை பள்ளி மற்றும் பெண்கள் மேல் உயர் நிலை பள்ளி .
9.காரைக்குடி நகரத்தார் ஒரு கோயில் பங்காளிகளால் நிர்வகிக்கப்படும் மேல ஊரணி முனி அய்யா கோயில் . இன்னும் இது போன்ற நகரத்தார் குடும்பங்கள் மற்றும் பங்காளிகள் நிர்வகிக்கும் 100 க்கும் மேற்பட்ட படைப்பு வீடுகள் மற்றும் கோயில்கள் .
10.மகர்நோன்பு திடல் .
11.கோயில்களை சுற்றி உள்ள ஊரணிகள் , கடைகள் , போன்ற நகரத்தார் கோயிலுக்காக நிர்மாணித்த சொத்துக்கள் .
12.100 வருடங்களும் கடந்து பொழிவுடன் அழகுடன் உள்ள 2600 க்கும் மேற்பட்ட அரண்மனை அம்சம் பொருந்திய நகரத்தார் வீடுகள் .


இவை அனைத்தும் நம் காரைக்குடி அடையாளங்களில் முக்கியமானவை .
இன்று காரைக்குடி பகுதி வந்தேறி வருவோரை வாழ வைக்கும் பகுதியாகவும் இருக்கிறது . இது ஒரு பக்கம் நல்ல செயலாக இருந்தாலும் மறு பக்கம் நகரத்தார்கள் தங்கள் சொத்துக்களை மிக கவனமாக பாதுகாக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது . ஏனெனில் பிழைக்க வரும் வந்தேறிகள் மற்றும் அவர்களின் வாரிசுகள் வந்த இடம் மறந்து தங்கள் சொந்த ஊர் போன்ற சூழ்நிலை உருவாக்க முனைகிறார்கள் இது காரைக்குடி போன்ற வளர்ந்த நகரத்தார் பகுதிகளில் அவர்களுக்கு சற்று கடினமாக இருந்தாலும் அவர்கள் செட்டிநாட்டு பகுதியை அடையாளம் மாற்றும் வேலையில் ஈடு படுகின்றனர் இதை இனி ஒரு போதும் அனுமதிக்க கூடாது .
தமிழ்நாட்டில் பல இடங்கள் இப்படி அடையாளம் மாற்றத்தில் ஈடு படும் அரைகுறை கூட்டத்தால் நல்ல அடையாளங்களை இழந்து கூத்தாடி தனமாக ஆகி உள்ளது குறிப்பிடத்தக்கது .
நகரத்தார் மக்கள் வாழும் 96 ஊரும் செல்வ செழிப்பு மற்றும் தகுதியில் உயர்ந்த ஊர்களே நாம் புதிதாக உருவாக்கம் செய்வதை விட நம்மவர்கள் உருவாக்கிய பெருமைகள் , அடையாளங்கள் , சொத்துக்கள் , மற்றும் சேவை பணிகளை பாதுகாப்பதே முக்கியம் . போனது போகட்டும் இனி காலம் உணர்ந்து செயல் படுவோம் இழந்த சில சொத்துக்களையும் மீட்க்கும் பணிகளை நகரத்தார் குடும்பங்கள் செய்து வருகின்றனர் . இது போன்ற சொத்துக்களை மீட்க்கும் பணிகளில் நகரத்தார்கள் ஈடுபடுதல் இனி முக்கியம் . அடையாளம் காப்போம் .
....வேள் வணிகர் முத்துக்கருப்பன் செட்டியார் .
( நகரத்தார் அடையாளங்கள் பற்றி தங்களுடைய கட்டுரைகள் மற்றும் கருத்துக்கள் வரவேற்க்கப்படுகிறது )

Tuesday 11 August 2015

செட்டி என்ற தமிழ் சொல் :


இன்று செட்டி என்ற சொல்லே ஆரியமொழியான சம்ஸ்கிரத்தில் இருந்து தான் வந்து என்று இந்த சொல்லில் மீது பல குழப்பங்களை கிளப்பி உள்ளனர் தற்போது வந்துள்ள ஹைப்ரிட் கலைகூத்தாடிகளும் பதர்களும் வடுக ஆரிய எடுபிடிக் கூட்டமும் இந்த சொல் சமஸ்கிரத்தில் வந்தது என்றும் கூறுவது எள்ளளவு கூட ஏற்புடையது அல்ல. செட்டி என்ற சொல் தமிழ் சொல்லே. இதற்கு பலவிதமான சான்றுகள் உள்ளன அவைகளில் சில இந்த தரவுகள் போதும் என்று நினைக்கிறன் வெள்ளைத் தோளுக்கும் அலைந்து கொண்டு தெலுங்கு கூட்டத்திற்கு சமரம் வீசுயும் ஆச்சாரம் அனுஷ்டானங்கள் பற்றி பேசும் மலையாள பகவதி கூட்டத்திற்கு விளக்கு பிடித்து திரியும் ஹப்ரிட் பத்தர்களுக்கு இந்த தரவுகளின் விளக்கம் போதுமானது என்று நினைக்கிறேன்

செட்டாக( கூட்டமாக ஓர் ஊர் விட்டு ஓர் ஊருக்கோ நாட்டிற்க்கோ ) சென்று வணிகம் செய்தனால் செட்டு செட்டாக சென்று வந்தமையால் செட்டி என்று அழைக்கப்பட்டனர். இதற்கு மேலும் சான்றாக செட்டிறை என்ற ஒருவித வணிகவரியை தமிழ் வணிகர் மரபினர் செலுத்தினர் அந்த செட்டிறை என்ற வணிகவரி வணிகர்க்குடிகளுக்கு மட்டும் செலுத்தும் வரி என்பதால் இந்த செட்டிறை என்ற சொல்லில் இருந்து செட்டி என்ற சொல் வந்து என்றும் சொல்லப்படுகிறது

சோழர்கள் காலத்தில் வணிகர்களுக்கு எட்டி என்ற பட்டம் கொடுக்கப்பட்டது அதுவே பின்னாளில் பேச்சுவழக்கில் செட்டி என்ற பெயருக்கு மாறியது என்று சொல்லப்படுகிறது இதற்கு சாட்சிகள் உண்டா என்று கேட்கும் பதர்களுக்கு மணிமேகலையும் சிலம்பும் சாட்சியாக உள்ளது எட்டிச் சாலனையும் என்று சொல்லாடல் சிலம்பில் வருகின்றது அதோடு மேகலையில் எட்டிக்குமரன் என்ற சொல்லும் பயன்படுத்தியதை காணமுடியும் எட்டி என்ற சொல்லின் மருவே இன்று செட்டி என்ற சொல் நடைநடந்து அல்லது கடல் கடக்காது பலநாடுகளுக்கு சென்று பயணம் செய்து பெருவணிகம் செய்வோரை எட்டி என்று சிலம்பு காலத்தில் பட்டம் கொடுத்து அழைத்தார்கள் அதோடு கடல் கடந்து சென்று வணிகம் செய்தவர்களை நாயகன் என்ற பட்டம் கொடுத்து அழைத்தனர். இதற்கும் நம் சிலப்பதிகாரம் வந்து சாட்சி சொல்கிறது. நம் கண்ணகி ஆத்தாள் தந்தையின் இயற்பெயரை பற்றி சிலம்பு பேசவில்லை மாநயகன் இதில் நாயகன் என்பது அவருக்கு கொடுக்கப்பட்ட பட்டம் மாநயகனுக்கு சொந்தாமாக 1௦௦௦திற்கும் அதிகமாக பெருவணிகம் செய்யும் கலன்கள் வைத்திருந்த பெருவணிகர் அதனால் அவரை மாநாயகன் என்று அழைத்தனர் நம் நகரத்தார்களுக்கும் இன்றும் வழக்கில் அவரவர் வீட்டிற்கு தனிதுவ பெயர் உண்டு என்பதை நினைவில் கொள்க
குறிப்பு : மாநாயகம் என்பது கண்ணகியின் தந்தையின் இயற்பெயர் அன்று அவரின் இயபெயர் குறித்து காப்பியத்தில் பேசப்படவில்லை அது அவரை அடையாளப்படுத்தி கூறும் அடையாளப் பெயர் கண்ணகி ஆத்தாள் வேள்வணிகர் மரபினால் என்பதற்கு இதுவும் ஒரு ஆதாரம் இந்த அடையாளப்பெயர் நம் வழக்கத்தில் இன்று உள்ளது செட்டிநாட்டில் ஒவ்வொரு நகரத்தார் வீட்டிற்கும் ஒரு தனித்துவமான அடையாளப்பெயர் இருக்கு அதுபோன்றே அன்று கண்ணகிஆத்தாள் தந்தையின் அடையாளப் பெயரே
இதற்கு மேலும் நாங்கள் இ(எ)தனை(யும்) ஏற்கமாட்டோம் நாங்கள் கூறுவதே சட்டம் என்று தெலுங்கனுக்கும் மலையாளிக்கும் கொடிபிடித்து அவன் சிதறிவிடும் சில்லரைத்தான் எனக்கு முக்கியம் என்று ஓடிவிழும் பத்தர்களுக்கும் ஹ்ப்ரிட் கலைகூத்தடி கூட்டத்திற்கு இது புரிந்தால் சரி தமிழின் தொன்மையும் அறியாத பதர்கள் தமிழராக சொல்லிக்கொள்ளவும் தமிழரின் அடையாளத்திற்கும் கிடைத்திருக்கு பெரும் களங்கம். நல்ல மாட்டிற்கு ஒரு சூடு சுரணை வந்து உண்மை நிலை புரிந்தால் சரி
------------கரு.ராமநாதன் வேள்வணிகன்