Saturday 12 December 2015

தமிழ்நாடு ஆவணக்காப்பகம்

தமிழ் நாடு ஆவணக் காப்பகம் என்று அறியப்படும், MADRAS RECORD OFFICE என்று முதலில் தொடங்கப்பட்ட சென்னை ஆவணக் காப்பகம் கடந்த 2004 ஆம் ஆண்டு ஆழிப் பேரலை பேரிடருக்குப் பின்னர் இடமாற்றம் செய்யும்படி பல வரலாற்று ஆய்வாளர்களாலும், அறிஞர்களாலும் விடுக்கப்பட்ட வேண்டுகோள்.


 இதுவரை திராவிட அரசுகள் இது குறித்து சிந்திக்கவும் செவிசாய்க்கவும் இல்லை என்பது வருந்தத் தக்கது. தற்போதைய சென்னை, கடலூர், திருநெல்வேலி, நாகர்கோவில் ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பெருமழையும் அதனைத் தொடர்ந்த பேரிடர் நெருக்கடியும் இயல்பு வாழ்க்கையினையும் அளவில்லாத பொருள்,உடமைகள் சேதத்தையும் விளைவித்துள்ளது. இந்த நேரத்தில் தமிழர்களின் ஆவணங்கள் நிறைந்த சென்னை எழும்பூர், தமிழ் நாடு ஆவணக் காப்பகத்தை முழுமையாக,‪#‎புதுகோட்டை‬ நகருக்கு விரிவான பாதுகாப்பான கட்டிடம் ஏற்படுத்தி, மாற்ற வேண்டுமாய் தமிழ் நாடு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

மக்களின் துயர் துடைத்து, இயல்பு வாழ்க்கை வந்த பின்னர் தமிழக அரசு இது குறித்து முனைப்புடனும், முதன்மையாகவும் சிந்திக்க வேண்டிய அவசியத்தில் உள்ளதையும், வரலாற்றைத் தொலைத்து, அடையாளத்தை இழந்து ஒரு தேசிய இனம் இருக்க முடியாது என்பதனையும் கருத்தில் கொண்டே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதுகாறும் திராவிட அற நிலையம் என்ற பெயரில் தமிழர் வழிபாட்டுத் தலங்கள், கல்வெட்டுகள் கேட்பாரின்றி துடைத்தெறியப்படுவதையும் கருத்தில் கொண்டு இந்த அவசியமான வேண்டுகோள்‪#‎நகரத்தார்___வரலாற்று____நடுவத்தால்‬ முன் வைக்கப்படுகின்றது. தமிழர்களும், தமிழர் அமைப்புகளும் கைகோர்த்து இந்தக் கோரிக்கையின் இன்றியமையா தன்மையினை உணர்ந்து இதனை அடுத்த செயல் கட்டத்திற்கு நகர்த்தும்படியும் வேண்டுகிறேன். நன்றி.

--- வேணும் அருள்மிகு பொய்சொல்லா மெய்யர் துணை.
--- நெற்குப்பை காசிவிசுவநாதன். 12-12-2015.

No comments:

Post a Comment