Wednesday 16 December 2015

நான் கண்ட ஆச்சிகள் -3

நான் கண்ட ஆச்சிகள் -3
ஞானம்பாள் ஆச்சி
திருமணம் முடிந்து புகுந்தவீட்டிற்கு சென்றவர்கள் கனவுகளோடு சென்றவர்கள் குடும்பவாழ்க்கை கனவாகவே போனது
கணவன் புத்தி சுவாதீனமில்லை அவருடனே வாழ்க்கை வாழ்ந்து முடித்தார் இளமை முழுதும் வீண் என்று நினைக்கவில்லை
காட்டு கத்தல் கத்தும் கணவனை உள்வீட்டில் பூட்டிவைத்து முகப்பின் வெளியே முற்றத்தில் ஓரமாய் அடுப்படி அமைத்து சமையல்
புத்தி சுவாதீனமில்லாத கணவனுக்கு நேரத்திற்கு உணவளித்து நியமங்கள் எல்லாம் பயமின்றி தனி ஆளாய் உடனிருந்து செய்தார்கள்
வெண்மை வண்ணம் வெற்றிலை மென்ற வாய் உறவினரை குழந்தைகளை காணும்போது முகம் முழுதும் புன்னகை கண்கள் சுருக்கி பார்வை எப்போதும் எதிர் நிற்பவர் மனதை ஆராய்வதுபோல்
ஒரு கட்டத்தில் கணவன் நிலை கொள்ளாது ஆட்டமிட சங்கிலியால் வளவில் பிணைத்து வைத்து பார்த்தார் ஊர் ஆயிரம் பேசியது உறம் மிகுந்த நெஞ்சம் கலங்கவில்லை களங்கமில்லை

உறவுகள் வீட்டிற்கு வந்து போய் உறவாய் இருந்ததை பலமாக மனதில் கொண்டு காலம் சென்றது முதுமை காலத்தில் கணவர் இயற்கை அடைந்தார்
அதன் பின் உறவுகள் பங்காளிகளை வைத்து பிள்ளை கூட்டினார் பேரன் பேத்திகள் கண்டார் வாழ்வில் மகிழ்ச்சியின் முகம் காலம் கடந்து கண்டார்
அவரின் கிடைத்தவாழ்வை ஏற்று கடமை செய்து இறுதியில் மன இன்பம் பேரன் பேத்திகள் மூலம் அடைந்த பூமா தேவி பொறுமை
பண்பாட்டினுள் வாழ்ந்திருந்த தன்மை பகர விளக்க முடியாத அதிசயம் உண்மை ஒருவர் தன் விருப்பமின்றி கட்டாயத்தில் இப்படி வாழ முடியாது
என்னால் இயன்றவரை எழுதி அப் பண்பாட்டு தெய்வத்தை வணங்குகிறேன்

--------- தெய்வானை சந்திரசேகரன் 

1 comment:

  1. நானும் வணங்குகிறேன் அந்த வணக்கத்திற்க்கு உரியவரை

    ReplyDelete