Tuesday 23 May 2017

#செட்டிநாட்டு_சித்திரகுப்த_நாயனார்_பூசை :::


செட்டிநாட்டு பகுதிகளில் ஆச்சிகள் கடைபிடிக்கும் வழிபாட்டு முறைகளில் ஒன்று சித்திரகுப்த நாயனார் பூசை. இந்த பூசையானது முன்பு ஆச்சிமார்கள் மத்தியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வழிபாட்டு முறையான இருந்து வந்துள்ளது. தற்போது இந்த வழிபாட்டு முறையானது நேரம் இன்மை காரணமாக பலரும் கடைபிடிப்பது கிடையாது சிலர் இன்றும் இந்த வழிபாட்டு முறையை கடைப்பிடித்து வருகின்றனர்.




சித்தரகுப்பத நாயனார் பூசையானது சித்திரை மாதத்தில் வரும் சித்திரை நட்சத்திரதமும் முழுநிலவும் கூடும் நாளில் சித்திரகுப்த நாயனாரை நினைந்து பகல்பொழுதில் எதுவும் உண்ணாது நோன்பு இருந்து மாலையில் வழிபடுவர். இந்த நோன்பின் நோக்கம் நமது வாழ்வில் புன்னியங்கள் அதிகம் செய்திடவும் பாவங்கள் செய்யதிடாமல் இருக்கவும் செய்த பாவங்களில் இருந்து விடுபட பாவ புண்ணிய கணக்கு எழுதும் சித்திரகுப்த நாயனாரை தோன்றிய சித்திரை முழுநிலவு நாளில் அவரை நினைத்து வழிபாடானதுகடைபிடிக்கப்படுகின்றது 


.
முன்பு நகரத்தார்கள் திருமணத்தில் பெண்ணுக்கு வைக்கும் சாமான்களில் வெள்ளி மற்றும் வெண்கலத்தில் இந்த வழிபாட்டு பொருட்களான நிறைகுடத்திற்கான கலசம், தேங்காய், மாவிலை , ஏடு எழுத்தாணி , பாவர்னக் கிண்ணம் ( சிறிய 16 கிண்ணங்கள் ) குலையுடன் கூடிய மாங்காய் வெற்றிலை பாக்கு போன்ற பொருட்களையும் செய்து வைப்பர் சற்று வசதிபடைத்தவர்கள் வெள்ளியிலும் வெண்கலத்திலும் ஒருப்செட் செய்து வைப்பர். முன்பு திருமணத்தில் பெண்ணுக்கு வைக்கு வெள்ளிச் சாமான்களில் ஏடு எழுத்தாணி கட்டாயம் இடம்பெற்று இருக்கும்.

இந்த நோன்பானது இரண்டு விதமாக கடைபிடிக்கப்பட்டு வந்தது. அதில் ஒரு விதம் பாவர்னக் கிண்ணத்தில் (16 சிறிய கிண்ணங்கள்) நவதானியங்கள் , பஞ்சு , உப்பு , புளி மிளகாய், தட்டைப்பயறு , அருசி போன்றவற்றை எடுத்து வைத்தும் ( சில இடங்களில் பாவவர்ன கிண்ணத்தை சுலகின் மேல் வைத்து வழிபடுவர் )
மற்றொரு வகை இந்த பாவவர்ன கிண்ணத்த்தில் தானியங்கள் எதுவும் வைக்காது வழிபடுவதும் என்பது ஒருவகையான வழிபாட்டு முறை . தானியங்கள் வைப்பது மட்டுமே மாறுபடும் மற்றபடி இம்முறைகள் எல்லாம் ஒன்றாகவே அமைந்திருக்கும் .




சித்திரகுப்த நாயனார் வழிபாடானது பெரும்பாலும் மாலையில் விளக்கு ஏற்றிவைத்து நடுவிட்டுக் கோலமிட்டு ஒரு மனையிட்டு சித்திரகுப்பதர் உருவம் வரையத் தெரிந்தவர்கள் பச்சரி மாவில் வரைந்து வைத்தும் அல்லது மனைப்பலகையில் ஏடு எழுத்தாணி வைத்து மலர்சரங்கள் கொண்டு அலங்கரித்து உப்பு மற்றும் இனிப்பு கொழுக்கட்டை , பாயசம் ,பொங்கல் , மாவிளக்கு ,நீர்மோர் , பானகம் , வெள்ளரிக்காய் , கொத்தோடு மாங்காய் , குலையுடன் தேங்காய் மற்றும் நுங்கு , முக்கனிகள் , மற்றும் தாம்பூலம் வைத்து இயன்ற பலகாரங்கள் ( தென்குழல் , அதிரசம், சீடை , சீப்புசீடை , பணியாரம் ,வடை பொன்றவை ) செய்து வைத்து சித்திரகுப்த நாயனார் கதையை குடும்பமாய் அமர்ந்து படித்து முடித்தபின் வென்சங்கு முழங்கி நிவேதனம் செய்து தீபாரதனை கண்டபின் அன்றைய இரவு முழு நிலவின் உதயத்தை கண்டு வழிபட்டதுடன் நோன்பானது நினைவு பெரும். அன்றய தினம் வீட்டு உணவில் தட்டைபயறு , எருமைப்பால் அல்லது எருமைத்தயிர் சேர்த்து கொள்வதை ஒரு மரபு . சித்திரகுப்த நாயனார் கதையை அன்றைய தினம் கேட்டாலே புண்ணியம் பாவங்கள் குறையும் என்ற நம்பிக்கையும் உள்ளது.

---ஆ.தெக்கூர் . இராம.நா.இராமு

கூட்டமும் அவை எழுப்பிய கேள்வியும்

காரைக்குடியில் கோல்டன் சிங்கார் ஹோட்டலில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 45 பேர் என அறிகிறேன்.







இந்த கூட்டத்தில் பேசிய சிலர்,சொன்ன புள்ளிவிபரம்,32-35 வயதை கடந்த 850 நகரத்தார் பையன்கள் திருமணம் செய்ய பெண் இல்லாமலும்,சுமார் 150 பெண்கள் திருமண வயதை கடந்து திருமணம் ஆகாமல்,முதிர் கண்ணியாக,இருப்பதாக சொல்லியதுடன், இதற்க்கு தீர்வாக,மற்ற இனங்களில் இருந்து பெண் எடுத்து,பெண் இல்லாத குறையை போக்கவேண்டும் என பேசினார்களாம்!

கேள்வி -1

ஒரு ஹோட்டல்,40-45 பேர் கூடி பேசி எடுக்குற முடிவு,ஒன்பது கோயிலை சேந்த,ஒன்றறை லட்சம் நகரத்தார்களை எப்படி கட்டுப்படுத்தும்? நகரத்தார் மலர் பத்திரிக்கை நடத்தும் இளங்கோ அவர்கள் இந்த கூட்டத்தை ஏற்ப்பாடு செய்து,தன்னுடைய புரட்சிகரமான கருத்துக்களை,ஒட்டு மொத்த சமுதாயத்தின் எதிர்பார்ப்பாக, நகரத்தார்களின் குரலாக்குவது ஏன்?




கேள்வி -2

இது போல கூட்டம் நடத்துவதற்க்கு பதில், திருமண வயதை கடந்த நகரத்தார் ஆண்களையும்,பெண்களையும் ஒரே
இடத்திற்க்கு அழைத்து,செட்டிநாட்டிலோ, சென்னையிலோ,சுயம்வரம் நடத்தினால் தீர்வு கிடைக்கும் அல்லவா?
நம் நகரத்தார் இனத்தை சேர்ந்த கைம் பெண்கள்,விவாகரத்து ஆன பெண்கள், ஆகியோருக்குமறுவாழ்வளித்து, திருமணத்திற்க்கு பெண்கள் இல்லாத குறையை போக்கும் நடவடிக்கையில் ஈடுபடலாம் அல்லவா?

கேள்வி -3

32-35 க்கு மேல்,திருமணமாகாமல் பையன்கள் இருக்க காரணம்...தகுதிக்கு மீறிய எதிர்பார்ப்புகளாடு பையனை பெற்றவர்கள் இருப்பதும்,
பையனுக்கு படிப்பு குறைவாகவும்,
மாத வருமானம் குறைவாகவும்,
பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியவர்களாக இருக்கும் பட்சத்தில்,
பொண்ணை பெற்றவர்கள் மனதில்,
இவன் நம் பெண்ணை வைத்து காப்பாத்தவானா?என்ற ஐய்யத்தினால்
பெண் குடுக்காமல், திருமணங்கள் தள்ளிப்போனவர்களா?
இல்லை எல்லா தகுதியும் இருந்து பெண்கள் கிடைக்காததால் திருமணம் நடக்கவில்லையா? அப்படி என்றால்,
இப்பொழுதும் வருடத்துக்கு பல நூறு திருமணங்கள் செட்டிநாட்டில் நடந்து கொண்டு தானே இருக்கின்றது?


என் மனசுல பட்டது...
பொண்ணு இல்லன்னு, அதுக்கு தீர்வா,
யார் வேண்ணா,யார வேண்ணா கலியாணம் பண்ணிக்கலாம்னு, கூட்டம் போட்டு முடிவெடுத்தா?அது இன அழிப்பை நோக்கிய பாதையே தவிர வேறு என்ன? அப்படிப்பட்ட கலப்பட இனத்துக்கு பெயர் தான் என்னவோ?மொத்தத்தில்,இது போன்ற கூட்டங்களுக்கு செல்லாமல் இருப்பதே சாலச்சிறந்தது!!

--- திரு. @Arun Muthu காரைக்குடி.

விளம்பரமும் அதற்கு எழுந்த சலசலப்பு விமர்சனமும் 1

பேராசிரியர் முத்துராமன் செட்டியார் அவர்கள் -
மதகுபட்டியில் இருந்து விடுத்திருக்கும் அவசர வேண்டுகோள்.
அன்புடையீர் வணக்கம்,
காரைக்குடியில் இன்று (01-05-2017 )நடக்க இருக்கும் கூட்டத்தில் வெளியே பெண் எடுப்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும், அதை முறைப் படுத்த எப்படிக் குழு அமைத்துச் செயல்படலாம் என்ற முடிவு எடுக்க இருப்பதாகத் தெரிகிறது.
முன்னோர்கள் பல நூற்றாண்டுகளாக நம் சமூகத்தை நல்ல ஒழுக்கத்தோடும் பாரம்பரியத்தோடும் கட்டிக் காத்து வந்திருக்கிறார்கள். இன்று திசை மாறிவிடக் கூடாது.
நம் இனத்தில் ஒருசில தவறுகள் நடந்திருக்கலாம்,
ஆனால் அவை நியாயப்படுத்தப்படவில்லை. உதாரணமாக வெளியே பெண் எடுத்தவர்கள் வெளியிலேயே இருந்துவிட்டார்கள்.


உள்ளே கொண்டுவரவில்லை. அதனால் ஜீன்(மரபும் மரபணுவும்) மாறாமல் அதே பாரம்பரியமும் திறமையும் தொடர்கிறது.
நல்ல பெயரும் மதிப்பும் மரியாதையும் இருக்கிறது. உலகில் வேறு எந்த இனத்தையும் ஒப்பிட முடியுமா தெரியவில்லை.
இன்றய கூட்டம், என்னை ஏற்காத இந்த இனத்தைச் #சீரழிக்க__வேண்டும் அல்லது இந்த மதிப்புமிக்க சமூகம் என் கட்டுப்பாட்டில் வர வேண்டும் என்று விரும்புவோர் முயற்சியாக இருக்கலாம்.
மற்றவர்கள் துணை போய்விடக் கூடாது. துணை போனால் கருங்காலிப் பட்டம் வந்துவிடும்.
தாங்கள் கலந்து கொண்டால் கலப்பு வேண்டாம் என்று வலியுறுத்துங்கள்.
செல்வோருக்கும் எடுத்துக் கூறுங்கள். முதலில் தொடர்பில் உள்ள அனைவருக்கும் இதை அனுப்புங்கள்.
உங்களை நம் பெண்களும் பிள்ளைகளும் பெரியோரும் போற்றுவார்கள்.
உங்களால் நிச்சயம் முடியும்.

பேராசிரியர் முத்துராமன் செட்டியார்,
மதகுபட்டி.
01-05-2017.
 
காரைக்குடி கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கவில்லை
என்பது மகிழ்வை தந்தாலும். பெண் பற்றாக்குறை காரணமாகவே இந்த #நயவஞ்கர்கள் சமூகத்தை திசை திருப்ப பார்க்கிறார்கள்.
நம் இனத்தில் பெண் பிள்ளைகள் பற்றாக்குறை என்பது #ஜோடிக்கப்பட்ட__கதை.
பெண்கள் அதிகம் படிப்பதில் தவறில்லை, ஆனால் அதுவே தலை கனமாக மாறி ஆடம்பர வாழ்க்கையை எதிர் பார்ப்பதும் பெற்றோர் சொல் கேளாமையும் தான் காரணம்.
நிறைய பெண்கள் காதல் திருமணம் செய்து கொண்டதும் இதனால் தான்.
இனி வரும் காலங்களில் தொழில் முனைவோரை ஊக்குவிப்பதற்காக மாநாடுகளை நடத்துவதோடு நிறுத்தி விடாமல், உண்மையிலேயே அவர்களுக்கு உதவவேண்டும்.
மாநாடுகள் வசதி படைத்தவர்களை மட்டுமே ஊக்குவிப்பதாக நான் நினைக்கிறேன்.


உண்மையிலேயே தொழில் செய்யும் நம் இளைஞர்களை ஊக்குவித்து, அதோடு பெண்ணை பெற்றவர்கள் திருமணம் செய்து வைத்தால் நிச்சயம் நம் சமுகம் வளர்ச்சி அடையும் என்பதில் சந்தேகம் இல்லை.

காசி சிதம்பரம் ,
கடியாபட்டி.
01-05-2017.



இன்று (01-05-2017) மாலை காரைக்குடியில் நடைபெற்ற கூட்டத்தில் எந்த ஒரு முடிவும் எடுக்க வில்லை.


நம் இனத்தின் மீது உள்ள உலகலாவிய உயர்ந்த நிலையை நாமும் காப்போம்.
நகரத்தார் பெரு மக்கள் அணைவரும் சிகரத்தார் என்றால் அது மிகையாகாது.
நம் பிள்ளைகளுக்கு நாம், நம் பாரம்பரியத்தை, சமுக ஒழுக்கத்தை அய்யா, ஆயா, அப்பத்தா, ஆத்தா, அயித்தை, வாழ்ந்த வாழ்க்கையை சொல்லிக்கொடுப்போம் .
#சின்ன__புள்ள__தனமா செயல்படும் ஒரு சிலரின் முயற்சிகளை முறியடிக்க
அணைவரும் இனைவோம்
வெல்வோம்.
பேராசிரியர் முத்துராமன் செட்டியார் அவர்களுக்கு நன்றி.

ரவி முருகப்பன்.
அரிமளம்.
01-05-2017.

விளம்பரமும் அதற்கு எழுந்த சலசலப்பு விமர்சனமும்

இந்த விளம்பரம் ஆச்சி வந்தாச்சு என்ற நகரத்தார் சமூகம் சார்ந்த மாதஇதழில் வெளிவந்து உள்ளது. இந்த விளம்பரத்தை அங்கீகரித்து மாத இதழில் வெளியீட்டதன் மூலம் ஆசிரியர் கூறவரும் செய்தி யாது ??
நகரத்தார் மலர் ஆசிரியரின் கருத்தை ஏற்று அதனை ஆதரித்து ஆச்சி வந்தாச்சு என்ற இதழும் தனது பயணத்தை தொடர்கின்றதா ??
இவர்கள் நகரத்தார் சமூகத்தை கலப்புர செய்திட தூண்டுகோலாக யாருக்காக செயல்படுகின்றனர் ??
ஒட்டு மொத்த நகரத்தார் சமூகத்தையும் கலப்புற்ற சமூகமாக மாற்றி யாரும் ஆச்சி ஆகலாம் யாரும் கோவில்மாலை பெறலாம் என்று நிலையினை யாருக்காக உருவாக்க முயல்கிறனர்??
இவற்றையெல்லாம் நகரத்தார்கள் கண்டும் காணாதவாறு ஒதுங்கிச் சென்றால் பண்பாடு பாரம்பரிய மிக்க கட்டுகோப்பான நகரத்தார் சமூகம்,
கலப்படத்தின் உச்சகட்ட கூடாரமாக மாறிவிடும் அபாயம் உள்ளது. கலப்புற்று செல்வதை ஆதரித்து அங்கிகரிப்பது போன்ற செய்திகள் நகரத்தார் மலரை தொடர்ந்து ,

தற்போது ஆச்சி வந்தாச்சு இதழில் விளம்பரமாகவும் வந்துள்ளது.
இதுபோல் முன்னரும் நிகழ்ந்துள்ளது. இன்று நகரத்தார்கள் விழித்துக் கொள்ளாவிட்டால் நமது தனித்துவ அடையாளங்கள் அழித்து ஒழிக்கப்படும் .
அன்று நமது பாட்டி ஆயாக்களும் அப்பதாக்களும் பாங்குடன் பண்பாடு மாறாது கூட்டுகுடும்பமாய் வாழ்ந்தது நமது வளவுகளில் தான் கவுன் அனிந்த சீனச்சிகளும் வெள்ளைக்காரிளும் தரவாட்டு வழியில் வந்த நாயர் , மேனன், நம்பியார் போன்ற வடுகச்சிகளும் மர்வாரி , குஜராத்தி , நாயிடுக்கள் , கன்னடச்சிகள் ஆச்சி என்ற பெயரில் ஒய்யாரமாய் வலம் வருவர். அப்பத்தா ஐயாக்கள் சிக்கனமாய் வாழ்ந்து கட்டிபோட்டு சென்ற வளவு வீடுகள் மற்றும் அதிகாரம் எல்லாம் தனதாக்கிக் கொள்வர்.
இது போன்று கலப்புற்று செல்ல ஆதரிக்கும் நகரத்தார் பத்திரிகைகளை இனியும் நாம் ஆதரிக்க கூடாது.இவற்றை நாம் புறக்கணித்து நமது கண்டனங்களை பதிவு செய்ய வேண்டும் . ஒரு சமூகம் சார்ந்த இதழ்கள் வெளிவரும் பொது அது அந்த சமூகத்தை வளமான பாதையில் கொண்டு செல்வதே அந்த இதழாசிரியரின் தலையாய கடமையாகும்.

---நகரத்தார் வரலாறு



/// இந்த விளம்பரத்தில் உள்ள தகவல்,என்னுடை கவனத்திற்க்கு வராமல், அச்சேறி விட்டது என்று வருத்தப்பட்டதோடு, இனி மேல்,இத்தகைய விளம்பரங்கள் ஆச்சி வந்தாச்சு இதழில் வராது என்று உறுதியாக சொன்னார். //
சரி, இவர் சொல்கின்றபடியே இவரது கடந்த கால நடவடிக்கைகள் இருந்ததா..??

நகரத்தார் மாண்புகளைப் பற்றிய கட்டுரைகளை வெளியிட்டால் அவர்களையும், அச்சடித்த அச்சகத்தையும் மிரட்டும் இரண்டாம்தரத்தினரை நாம் இன்னமும் சகித்துக்கொண்டுதான் இருக்கின்றோம்.
நகரத்தர் அல்லாதவர்களை, முகவரிக்கு கையேட்டில் பதிவு செய்து, புள்ளிகணக்கு காட்டுபவர்களை என்னெவென்று சொல்வது ????
நமது சமூகம் சார்ந்த தரவுகளையும், ஆவணப்படுத்தலையும் செய்வதற்கே பெரும் போராட்டம், மிரட்டல்.


இத்தனை காலமும் நகரத்தார் மலர் செய்யும் அணைத்தையும் வேடிக்கை பார்த்திருந்ததால் இன்று நாயர் / மேனன் வகையினர் உள்ளே உள்ள புல்லுருவிகளை ஊக்குவித்து மண்ணுளிப்பாம்பாகக் குடைந்து வருகின்றனர்.
ஆச்சி வந்தாச்சு ஆசிரியர் ஏதோ மயக்க நிலையில் இருந்து தெளிந்தது போல, என்னையறியாமல் வெளிவந்துவிட்டது என்று சொல்வது எந்த ஊர் சரக்கு என்று நமக்குத் தெரியவில்லை.
சரி, இவரது ஆச்சி வந்தாச்சு பதிப்பில் சில ஆண்டுகள் முன்னர் மேலவட்டகையில் நகரத்தார் அல்லாதவர்கள், நகரத்தார் படைப்பு வீட்டிற்கு பூசை போட்டதை படத்துடன் வெளியிட்டது இவரது சுய நினைவுடன் நடந்ததா ?? அல்லது மாற்றார் கட்டுப்பாட்டில் , அவர்கள் மேலாண்மையில் வெளிவந்ததா..????
ஒன்றரை ஆண்டுகள் முன்னர் நகரத்தார் மலர் சென்னை ஐந்து நட்சத்திர விடுதியில் பொதுப் படைப்பு நடத்துகின்றோம் என்று அறிவித்த போது எத்தனை பேர் இதனை எதிர்த்தார்கள்..?
பொதுப்படைப்பு, படைப்பு என்பதற்கான பொருளாவது அவர் அறிவாரா..?
அதற்கு முடிந்தவரை கண்டனங்கள் எழுந்தவுடன், தனது செயற்பாட்டின் வடிவத்தை மாற்றிக்கொண்டார். ஆனால் அவரது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை.
இன்று ஆச்சி வந்தாச்சு இதழில் // இனி மாலை வர இருப்பவர்களும் // என்று நுணுக்கமாக சதிராடியதும், அதனை இன்று அணைத்து நகரத்தார்களும் பக்கம் பக்கமாக பற்பல யூகங்களை / ஐயங்களை எழுதி இப்படி இருக்குமோ,அல்லது அப்படி இருக்குமோ என்று சிந்தனைகளை சிதறடிக்க வைத்தவர், கோமா நிலையிலோ அல்லது, அறியா நிலையிலோ இல்லை என்பதை நாம் உணரவேண்டும்.
காரணம் இவர்கள் பின்னிவரும் நூல்வேலியினைத் தொடர்ச்சியாகப் பார்த்தால் புரியும்.
பின்னால் இருந்து இயக்கும், ஒரு மாபெரும் மாஃபியா கூட்டம் என்பதை.
இவற்றுக்கு பல ஆண்டுகள் முன்பே திட்டமிட்டு இரண்டு தலைமுறையாக பல்முனை தாக்குதல் நடத்தி, இறுதியாக சிலபல அவசர போலி கூட்டங்களை மலையாள விடுதிகளில் சுழிபோட்டு, இன்னபிற நகரத்தர் அமைப்புகளையும் சிறுகச் சிறுக அணிசேர்த்து, நகரத்தார் சமூகத்தை சங்கரமடமாக மாற்ற முயல்வதும்,
கூடவே தலைமுறை தலைமுறையாக நீர்க்கச் செய்து, இனி மாலை வர இருப்பவர்களின் புள்ளிவிவரங்களைக் கடந்த முப்பது ஆண்டுகளாக சேகரித்தும் வைத்துள்ளனர்.
வெளியே நமக்குள்ள எதிரிகளைவிட, உள்ளே உள்ள உட்பகையினை மிகக் கவனமாகக் கையாளவும் வேண்டும், உணரவும் வேண்டும்.

நன்றி,
நகரத்தார் வரலாறு.
07-05-2017.



#மாசிலாநாதரும்__மாசற்ற__வாழ்வும் :-


நன்றாக ஞாபகம் உள்ளது. 1989 ஆம் ஆண்டு இந்தக் குறிப்பினை எனது தந்தையார் கத்தரித்து வைத்துவிட்டு என்னிடம் திரு.எட்மன்ட்ஸ் அவர்கள் பற்றிய ஞாபகம் உள்ளதா என்கிறார்.


நன்றாக உள்ளதப்பா என்றேன். அதன் உள்ளடக்கத்தைப் படித்தேன். அதற்கும் மேல் சிறிய வயதில் உள்ள ஞாபகங்கள் மட்டுமே மனதில் படமாக ஓடியது.
அவருடன் தரங்கை கோட்டையின் கொத்தளத்தில் (அவர் மூன்று சக்கர வண்டியில் அமர்ந்து கொண்டு, தானே வண்டியினை ஒட்டிக்கொண்டு தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையில் எனது தந்தையாருடன் விவாதித்துக்கொண்டிருப்பார்.



வாங்க ஆவுடையப்பன், பையன விளையாட விடுங்க நாம் பேசிக்கிட்டிருப்போம்.

புல்வெளியில் அதனை ஒட்டிய சீகன் பால்க் ஐயர் வந்திறங்கிய நினைவுத் தூண் அருகிலும் ( அப்போதே மிகவும் சிதைந்துபோயிருந்தது) சுடு மட் செங்கற்களையும், சிப்பிகளையும் எடுத்துக்கொண்டு, இடிந்த கோட்டைச் சுவர் வரை சென்று முடிந்தவரை எனது உயரத்திற்கு, எட்டி எட்டிப் பார்த்து ஆர்ப்பரிக்கும் தரங்கம்பாடி கடற்கரையினை, அதன் வேகத்தை, அந்த அலைக்கடலில் பொங்கு நுரையுடன் கொப்பளிக்கும் வரலாற்றினை புரியாமலேயே புரியாத வயதில் மூச்சுக்கு காற்றின் இறைப்புடன் உள்வாங்கிக்கொண்டிருந்தேன்.



மிதி வண்டியில் இருந்து துள்ளிக் குதித்தவுடன், டாக்டர் எட்மண்டஸ் அவர்களின் கைகளை பற்றி ஐயா வணக்கம் என்று சொன்னவுடன், எனது கடற்கரை பெருவெளிக்கு சென்றுவிடுவேன்.

கூ.. கூ... வென்று ஆர்ப்பரிக்கும் கடல் காற்று, அத்தோடு சேர்ந்து உவர்க்கும் எங்கள் பாட்டன்மார்களின் உப்பும் உடலை வருடும் போதே,
கால்கள் மணலில் பதிந்து, புதைந்து வேகத்தைக் குறைத்தாலும், அந்தக் கொத்தளத்தில் உள்ள வரலாற்றைத் தெரிந்துகொள்ளாமலேயே.... உணர்ந்துகொண்டிருப்பதும் ஒவ்வொரு வாரமும் இயல்பானது.
( டாக்டர் எட்மண்டஸ் அவர் என்ன மருத்துவரா அல்லது பேராசிரியரா என்பதை கூட 1989 ஆம் ஆண்டு தந்தையுடன் உரையாடும் போது கேட்டுக்கொள்ளவில்லை. ஏன் என்றும் தெரியவில்லை.பிழைப்பும் அதனைப் பின் தொடரும் வாழ்க்கையுமே அன்றைய மனநிலையில் இருந்தபோது நான் தவறவிட்டது எத்தனையோ.?)



பிறையாற்றுச் சோழர்களின் தலைநகராகவும் (இன்றைய பொறையாறு) , அவர்களின் முதன்மை இயற்கை துறைமுகமாகவும் (தரங்கம்பாடி), பிந்தைய வந்தேறிகளின் ஆட்சிக்காலம் வரையிலும் தமிழர்களின் கடல்சார் மேலாண்மையில் - காவிரிப்பூம்பட்டினம் (சோழநாடு) / கொற்கை, மருங்கூர்பட்டினம், தொண்டி -( பாண்டிய நாடு) போன்ற கிழக்கு கடற்கரையின் தமிழர் மேலாண்மை சொல்லும் ஒரு அறிய இயற்கை துறைமுகம் சடங்கம்பாடி என்றும் / குலசேகரன்பட்டினம் என்றும் அறியப்படும் தரங்கம்பாடி.






தமிழர்களின் சீன கடல்சார் வணிகம் பன்நெடுங்காலம் (காவிரிப் பூம்பட்டினத்தின் முடிவிற்குப் பின்னரும்) தொடர்ந்திருந்ததை தரங்கம்பாடி/சடங்கம்பாடி/ குலசேகரன்பட்டினம் என்ற ட்ராங்குபார் என்ற இந்த ஊர்.
இதற்கு சான்று சொல்வது அங்கே 20 ஆம் நூற்ராண்டு வரையில் இருந்து அதன் முற்பகுதியில் பாதிக்கும் மேல் கடல் கொண்ட மாசிலா நாதர் என்ற சிவன் கோவிலே.
நான் அன்று விளையாடிக்கொண்டிருக்கும் போது, கிட்டத்தட்ட உண்ணாழி வரை கடல் வந்திருந்தது.



அதற்கும் முந்தைய பகுதிகளான முகப்புமாடம், கொடிமரம், அர்த்தமண்டபம் அனைத்தையும் ஆர்ப்பரிக்கும் கடல் கபளீகரம் செய்திருந்தது.
அந்த மண்டபத்தின் இறுதிப்பகுதி சீனர்களின் கலைப்பாங்கில் வேயப்பட்டதாக இருந்துள்ளதை டேனிஷ் கோட்டையின் மேற்புற கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து வரைந்த ஐரோப்பிய ஓவியன் பதிவு செய்துள்ளதையும் அதன் படிவம் ஒன்று கோபன்ஹேகன் அருங்காட்சியகத்தில் உள்ளதையும் திரு.எட்மன்ட்ஸ் கூறியதாக என் தந்தையார் கூறினார்.
அந்த கத்தரித்த காகிதத்தை எனது ஆவணக் காப்பகத்தில் சேர்த்துக்கொண்டேன்.
ஆனால் அன்று அவருடன் பேசித் தெரிந்துகொள்ள வேண்டிய பலவற்றை தவறவிட்டேன்.

திரு.எட்மன்ட்ஸ் தரங்கம்பாடியில் இருந்து கங்காணிகளின் வாயிலாக பல தொழிலாளர்கள் வெள்ளையர்களால் நங்கூரமிடப்பட்ட நீராவிக்கப்பலில் பலரையும் ஏற்றிச் சென்றதாகவும் அதன் பின்னர் இந்தத்துறைமுகம் பயன்பாட்டிலிருந்து விடுபட்டதையும் கூறியிருந்தார்.
அப்படிச் சென்றவர்களின் ஒரு குடும்பம் தான் தில்லையாடி வள்ளியம்மை.
தில்லையாடி என்று தற்போது அறியப்படும் தில்லையாளி என்று சோழ சாசனங்கள் கூறப்படும் ஊர்தான் அன்னை வள்ளியம்மையின் சொந்த ஊர்.
இதற்கு 1915 ஆம் ஆண்டு வாக்கில் காந்தியடிகளும் பிறையாறு என்ற பொறையாறு வந்து தங்கி அவர்கள் குடும்பத்தை பார்த்துவிட்டுச் சென்றதும் வரலாற்றில் உண்டு.



பொறையாறு என்று தற்போது வழங்கப்படும் பிறையாறு என்ற ஊர் அப்போதைய பிறையாற்றுச் சோழர்களின் தலை நகராகவும் இருந்துள்ளது.
இந்த ஊரின் வழியாகவே காவிரியின் கிளைகளில் ஒன்றான உப்பனாறு என்ற ஆறும் (வடகிழக்கில் பாய்ந்து தரங்கம்பாடியில் கழிமுகமாய் கலக்கும்),
கூடவே காவிரியின் மற்றுமொரு கிளை நதியான நந்தலாறு (பொறையாற்றின் தெற்கு எல்லையாகவும் ) என்ற ஆற்றின் கழிமுகமும் கலக்கும்.
இந்த இடைப்பட்ட பகுதியில் அன்று உப்பனாறு வலஞ்சுழியும் (MEANDER) ஆறு பிறைபோல வந்து வளஞ் சூழ்ந்து வலம் வரும் அழகிய நிலப்பகுதிதான் இந்த சோழர்குடித் தலைநகரும் அதன் சங்ககாலம் தொட்டு வாழ்வாங்கு வாழ்ந்த குலசேகரன்பட்டினமும்.



அன்று தஞ்சை ரகுநாத் நாயுடு, தனது உல்லாச வாழ்க்கைக்காக டேனிஷ் வணிகர்களுக்கு தாரைவார்க்கப்பட்ட ஊர்தான் #தரங்கம்பாடி.
டேனிஷ் கோட்டை கட்டிய பின்னர் (1700 களில் ), தரங்கம்பாடி என்று ஊரும் அதில் உள்ள மக்களும் அதன் இயற்கை துறைமுகமாக இருந்த உப்பனாற்றின் கழிமுகமும் முழுமையாகவே கிட்டங்கி / கோட்டை / கொத்தளம் / தன்னாட்சி நிர்வாகமும் செய்துகொள்ள விட்டுவிட்டான்.
அன்றிலிருந்து அந்த நகருக்கும் கோட்டைக்குமான அரசகுடும்ப வைசிராய், காவற்படை, நிர்வாக ஆளுநர், தன்னாட்சி பெற்ற தனி நீதி மன்றம், சிறைக்கூடம், போர்தளவாடம் / வணிகப்பொருட்களுக்கான கிட்டங்கி என்று ஒரு தனி இறையாண்மை கொண்ட நாட்டினையே உருவாக்கினார்கள்.
இந்த மண் / மக்கள் என்று எல்லாவற்ரையும் தாரைவார்த்த ரகுநாத் நாயுடு தஞ்சையில் உல்லாசபோகம். இவனைத்தான் தமிழ்நாடு திராவிட அரசு கடைசி தமிழ் மன்னனாக (ஒரு தெலுங்கனை) அந்தப் பகுதி வரலாற்றில் பதிந்துள்ளனர்.

வெள்ளையனிடம் உடன் படிக்கை செய்துகொண்ட பின்னர் கோட்டை கொத்தளம் அங்கே மண்ணின் மைந்தர்களான மக்களையும் - தமிழ் கடலாடிகளையும் சேர்த்தே சில லட்சத்திற்கு விற்று முடித்துச் சென்றனர்.
அதன் பின்னரே வெள்ளையர் கொட்டமும் தமிழர்களின் புலம்பெயர் அவலங்களும் நிகழ்ந்தன.
மெல்ல மெல்ல கடல் ஆர்ப்பரித்து கரையினைக் கரைகின்றது. உப்புக்காற்றும் ஆர்பரிப்பும் ஓயவில்லை.

எம்மவர் முன்னர் வாழ்ந்த வரலாற்றின் சுவடுகள் மட்டும் மறைந்து வருகின்றது.
மாசிலாநாதரே.......!!!!
மாசற்ற தமிழர் வாழ்வை என்ன செய்ய நினைத்தீரோ...!!!???


அன்புடன்,
வேணும் அருள்மிகு பொய்சொல்லா மெய்யர் துணை.
நெற்குப்பை காசி விசுவநாதன்.
" வரலாற்றில் விழிப்பு ; எதிர் காலத்தின் மீட்பு "
11-05-2017.

கேள்வி பதில்

#குறிப்பு- :
வடுக மலையாள துணையுடன், சென்னையில் கடைவிரித்த தெலுங்குச் செட்டிகளின் அனுசரணையுடன்,
மயிலாப்பூரில் பல லட்சம் செலவு செய்து மோசடிக் கூட்டங்கள் நடைபெறுவதற்கு முன்னரே அத்தனையும்,அதனை முன்னெடுக்கும் செட்டிநாட்டு பகுதியின்
வாட்சப் நாட்டாமைகளின் பதிவுகளின் சாரத்தையும்,ஏழை எளிய நகரத்தார் மக்களின் உள்ளக்குமுறலையும் துல்லியமாக ஆய்ந்து விளக்கமளிக்கப்பட்ட கட்டுரையின் ஒரு பகுதி.



09-10-2016 தேதியில் வெளியிடப்பட்டது.
புகைப்படம் உதவி Valliappan Ramanathan அண்ணன் அவர்கள் தேவகோட்டை.
--- நகரத்தார் வரலாறு.

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

கேள்வி :-
கலப்பில் பிறந்த குழந்தைகள் தந்தை வழியில் தானே அடையாளம் காணப்படுவார்கள், அப்படியெனில் தந்தை வழி வந்தவர்களை செட்டிக்குப் பிறந்தால் செட்டி என்று நாம் ஏற்கலாமா ??


பதில் :-
#முடியாது.



அப்படி தந்தை வழி பிறந்த, தமிழ் இனக்குழுக்களில் மணமுடித்துபிறந்த எத்தனை பேரை நீங்கள் கோயில்மாலை கொண்டு ஏற்றுக்கொண்டீர்கள் ?? அதாவது, மாறிவிட்ட அரசியல் சூழலில், இருக்கின்ற அரசியல் அதிகாரத்திற்குப் பணிந்து இப்படி நயந்து போவது எந்த வகை நியாயம் ?? வெள்ளைத்தோல், கொள்ளைப்பணம் என்பது ஒரு இழிவுதான். பெருமையல்ல.
அப்படிப் பார்த்தாலும் கூட, உங்களால் விடுபட்டவர்களை அழைத்து வந்து மீண்டும் சேர்த்துக்கொள்ள முடியுமா ???
சரி, இன்று சட்டதிட்டங்களை மாற்றிவிட்டால் எல்லாம் சரியாகிவிடுமா என்ன ??
இல்லை, மாறாக தற்போதைய சூழலில் எங்கள் பிள்ளைகள் உள்ளூரில் உள்ள கருப்பான தமிழச்சிகளை தேடவில்லை, ரெட்டிகளையும் ரொட்டிகளையும், நாயுடுக்களையும், நாயர்களும், சீனர்களையும் கொண்டுவருகின்றார்கள்,
ஆகவே உள்ளூரில் இந்தியாவில் - வேற்று மாநிலத்தவரை முதலில் மெதுவாக நுழையவிட்டால், இனி எல்லாம் சுகமே, என்று சுபம் போட்டுவிடலாம் என்று #மனப்பால் குடிப்பதுதான் தவறு.
தந்தை வழியில்தான் குழந்தைகளுக்கு இனக்குழு அடையாளம் என்பது கிடையாது.
இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால்,
தந்தை வழியில் வந்த ஒரே காரணத்திற்காக குலவழிப் பெருமைகளையும், அடையாளத்தையும் தாரை வார்க்க முடியாது.
அதாவது பட்டனுக்குப் பிறந்தவர்கள் பட்டினத்தார் அடையாளத்தை களவாட முடியாது.
துணை போகும் நாட்டாமைகளை அப்படியே ஏற்கவும் முடியாது.


--- அருள்மிகு நித்ய கல்யாணி உடனாய கைலாச நாதர் துணை.
--- மேலவட்டகை மெய்கண்டான்.
09-10-2016.


இந்த photo வில் இருக்கும் நகரத்தார் ( ஆண்.பெண்.ஆண் பிள்ளை. பெண் பிள்ளைகள் ) முகங்களை பாருங்கள்.. பின் நாளில் நம் வழிதோன்றல்கள் தவறு செய்ய மாட்டார்கள்.என்ற நம்பிக்கையோடும்.. நகரத்தார் சமூகம் ஒற்றுமையோடு கட்டுப்பாட்டோடு இருக்கும் என நம்பிக்கையோடும்..வாழ்ந்து சென்றவர்கள்...காரை செடிகள் மண்டிக்கிடந்த மேட்டை.. காடு திருந்து கழனி செய்து ஊருணி அமைத்து 96 கிராமமாக.. நகரமாக மாற்றி...கடல் கடந்து சென்று சிறுக சிறுக சேமித்து தலைமுறை வாழ மாட மாளிகை கட்டி..சமூக கட்டுப்பாடுகளை வரைமுறைகளை விட்டு சென்ற இவர்களுக்கா நீங்கள் துரோகம் செய் நினைக்கீர்கள்...வேற்று இன கலப்பு திருமணம் கூடாது...  @surya preethi 

Sunday 21 May 2017

வரலாறு

வரலாற்றைப் படியுங்கள்,
வரலாற்றை விவாதியுங்கள்,
வரலாற்றை ஆய்வு செய்யுங்கள்,
வரலாற்றை பரப்புரை செய்யுங்கள்.
ஒரு துடிப்பான இனம் விழிப்புடன் இருக்கின்றதென்றால்...???
அது வரலாற்றில் இருக்கும் உயிர்ப்பும், துடிப்பும் மட்டுமே சான்று சொல்லும்.
வரலாறு மறந்தால், பண்பாட்டையும், அரசியல் இறையாண்மையினையும் இழக்க நேரிடும்.


நன்றி.
----வேணும் அருள்மிகு பொய்சொல்லா மெய்யர் துணை.
---- நெற்குப்பை காசி விசுவநாதன்.
14-05-2016.

புகைப்படம் உதவி திரு. Valliappan Ramanathan அவர்கள், தேவகோட்டை.

தமிழனிடம் அதிகமாக, சொத்து - பணம் இருந்தால், வடுகர் பெண்டுகள் நுழைந்துவிடுவார்கள்.இது ஒரு வகை குடும்ப முறை விபச்சாரம்.
அதே சமயம் இனக்கூறு அடையாளம், தெளிவின்மை கொண்ட தலைமுறை தங்கள் குடும்ப அடையாளங்களையும்,குடும்ப அமைப்புகளையும் சிதைத்துக்கொண்டனர்.
கோவலன் இழந்தது பொருளும் , உயிரும் மட்டுமல்ல.
கண்ணகியின் வாழ்வும்தான்.
இன்று சிலபல மேற்படியாளர்கள் தமிழினத்தின் அடையாளத்தையே கலப்பாக்கி குட்டையாக்குகின்றனர்.
குடும்பத்தில் தெளிவும் அமைப்பும் இனி வருங்காலங்களில் மிக மிக அவசியம்.


எதை இழந்தாலும் நமது இனம் / வரலாறு இவற்றை மறந்தால் நமது சந்ததி முழுமைக்கும் கேடுதான்.
கேடுற வாழ்ந்து, இனம் பாழ் பட வாழ்வது துரோகம்.
துரோகத்தை தெரிந்தே செய்வதைத்தான்.....என்னவென்று சொல்வது..?


வேணும் அருள்மிகு பொய்சொல்லா மெய்யர் துணை.
நெற்குப்பை காசி விசுவநாதன்.
08-05-2017.

முகநூல் செய்தி

ஐயா திரு.கம்ப ராமன் சண்முகம் அவர்கள் விடுத்துள்ள செய்தியினை இங்கே பகிர்ந்துகொள்கின்றோம்.
அன்புடையீர் வணக்கம்,
நம் சமுதாய சீர்திருத்தம் பற்றி அவரவர் நோக்கத்திற்கு கூட்டம் மாநாடு நடத்துவதை நாம் அனைவரும் ஒருசேர தடைசெய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
திரு. இளங்கோ போன்றவர்கள் திருமண சேவை என்ற பெயரில் சமூக சேவைகள் நடத்துவதை பாராட்டி வரவேற்கிறேன்,
ஆனால் உணர்வுபூர்வமான பாரம்பரிய கலாச்சார பண்பாட்டுகளுக்கு பங்கம் வரும்படி நம் இனத்தை திசை திருப்பும் செயலை நாம் ஆதரிக்க கூடாது.
இப்படியே அவரவர் தேவைக்கேற்ப பத்திரிகை நடத்துபவர்கள், காரியம் நடத்திக்கொண்டு போனால் நம் சமுதாய கூட்டங்கள் கூட்டும் உரிமைகளையும் நாம் இழந்து விடுவோம்.


கோவிலூர் 96 ஊர்கூட்டம் தான் சட்ட பூர்வமான சம்பிரதாயமான பாரம்பரியமான கூட்டமாகும்.
அதை நாம் இழந்து விடலாகாது.
இன்றைய காரைக்குடி கூட்டம் தேவையில்லாத நமக்குள் குழப்பத்தை விளைவிக்கிற கூட்டமாகும்.
இளங்கோ போன்றவர்கள் இது மாதிரி நடந்து கொண்டது எதிர்பாராதது,
அவசியமற்றது தேவையற்றது
தயை செய்து நம் நகரத்தார் பாரம்பரிய நாகரிகங்களை இழந்து விடவேண்டாம்,
நகரத்தார் சம்பந்தமாக கூடுவதாக இருந்தால் கோவிலுரில் தான் கூட வேண்டும்.
மற்றவை எல்லாம் அவரவர் சுய விருப்பம்.

அன்புடன்,
கம்ப ராமன் சண்முகம்.
01-05-2017.

Saturday 20 May 2017

அவசரச்செய்தி

அனைவரும் இன்று காரைக்குடியில் 3 மணிக்கு சிங்கார் ஒட்டலில் நடக்கும் கூட்டத்துக்கு சென்று நம் எதிர்ப்பை கடுமையாக தெரிவிக்கவும் கூட்டம் நடத்துவர்களில் நாடகத்தை வெளியில் தெரியப்படுத்துவோம்,
நகரத்தார் சமூகத்தில் திருமணம் செய்யாதவர்களை புள்ளிகளாக சேர்க்க முயற்ச்சிக்க வேண்டாம்,
அந்த முயற்ச்சி தோல்வியில் தான் முடியும்,
23-24 வயதிலேயே திருமணம் பேச ஆரம்பிக்க சொல்லவும்.

அவர்களை புள்ளிகளாக சேர்த்தால் வெளிநாட்டில் இருந்து சிலர் புள்ளியாக சேர்க்க சொல்லி வருவார்கள் மேலும் இனி திருமணம் செய்ய இருக்கும் பிள்ளைகளும் அவரவர் இஷ்டம் போல் திருமணம் செய்யும் கட்டுப்பாடு இல்லத நிலை வரும்,



மேலும் இது நகரத்தார் இனம் அழிக்கும் முயற்ச்சியாக கருதப்படும், இது போல் கூட்டம் நடத்தும் முயற்ச்சியை கைவிட்டால் நன்றாக இருக்கும்.
அவர்களை புள்ளிகளாக சேர்த்தால் பர்மா போன்ற வெளிநாட்டில் இருந்து சிலர் புள்ளியாக சேர்க்க சொல்லி வருவார்கள் மேலும் இனி திருமணம் செய்ய இருக்கும் பிள்ளைகளும் அவரவர் இஷ்டம் போல் திருமணம் செய்யும் கட்டுப்பாடு இல்லத நிலை வரும்,

மேலும் இது நகரத்தார் இனம் அழிக்கும் முயற்ச்சியாக கருதப்படும், இது போல் கூட்டம் நடத்தும் முயற்ச்சியை கைவிட்டால் நன்றாக இருக்கும்.
இந்த நகரத்தார் மலர் மூலம் நடக்கும் இந்த கூட்டத்தில் நகரத்தார் சமூகத்தில் திருமணம் செய்யாதவர்களை மற்றும் வேற்று மதத்தில் செய்ய ஊக்கப்படுத்தி தீர்மானம் நிறைவேற்றி புள்ளிகளாக சேர்க்க முயற்ச்சி நடப்பதாக அறிகிறேன் அந்த முயற்ச்சி தோல்வியில் தான் முடியும்,



இதற்க்கு பின்னால் பாதிக்கபட்ட சில பெரிய இடங்கள் இருப்பதாக கருதுகிறேன், முருகா நல்ல நகரத்தார் சமுகம் பாதுகாக்கபட வேண்டும்.
அவசரம் இதை அனைத்து நகரத்தார் குருப்புகளுக்கும் பகிரவும்

----@Mr.Adaikalavan chidambaram.

Sunday 16 April 2017

அத்தா மிக்காய் -- #திருவாசகம்


"ஆற்றின்ப வெள்ளமே #அத்தா மிக்காய் நின்ற தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்  உணர்வாய்....."

-- #திருவாசகம்





பித்தா! பிறைசூடீ! பெருமானே! அருளாளா!
எத்தால் மறவாதே நினைக்கின்றேன்? மனத்து உன்னை
வைத்தாய்; பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள்
#அத்தா! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? 

-- #சுந்தரர்__தேவாரம்.










இங்கே #அத்தா... என்ற  சொலாட்சி பழந்தமிழில் தந்தை என்றபொருளுடன் மக்கள்வழக்கில் இருந்துள்ளது. இறைவனை தந்தைஎன்று அழைப்பது வழக்கு. மாணிக்கவாசகர் திருவாசகத்தில் தந்தைக்கும் மேலானவனாய் இறைவனைக்காண்கின்றார். சுந்தரர் தன்னை ஆட்கொண்ட இறைவனை தந்தையே என்று சரணாகதி அடைகின்றார். இந்தசொல்லாட்சி வழக்கு இன்றளவும் தமிழர் வழக்கில் தமிழ் இசுலாமியர்கள் கொண்டிருக்கின்றனர். அவர்கள் தன்களின் தந்தையை #அத்தா என்றே இன்றளவும் அழைக்கின்றனர். தமிழ் சொல்லாட்சிகள், வழக்காடல் என்பதெல்லாம் வந்தேறிகளிடம் இல்லை. அதை அவர்கள் சிறுமையாகவும் நினைத்தார்கள். தமிழர் வாழ்வும் வளமும்மொழியில் உள்ளன, நமது பண்பாட்டைக் காப்பதற்கு மொழியே முதன்மை. நம்மிடம் இருக்கும் சடங்குகள், சொல்லாட்சிகள் இவைகளை நாம் கவனிக்க வேண்டும்.

 --- வேணும் அருள்மிகு பொய்சொல்லா மெய்யர் துணை.
--- நெற்குப்பை காசிவிசுவநாதன். 15-04-2016





Friday 14 April 2017

செய்தி

பேராசிரியர் முத்துராமன் செட்டியார் அவர்கள் -- மதகுப்பட்டி.
அனுப்பியுள்ள செய்தி.


நகரத்தார் மலர், மார்ச் தலையங்கத்தில் நாம் வெளியே பெண் எடுக்க வேண்டும் அதை முறைப்படுத்த 96 ஊர் கூட்டம் நடத்த வேண்டும் என்ற கருத்து கூறப்பட்டுள்ளது.



30 ஆண்டுகள் முன்பு பெண்களின் திருமணம் சிரமமாக இருந்து, பிரச்சனை தானே தீர்ந்தது போல் இப்போதும் தீர்ந்துவிடும்.
அவசரப்பட்டு வெளியில் பெண் எடுக்க வேண்டாம்.



முன்னோர்கள் ஒரு முறை வெளியே பெண் எடுத்தார்கள் என்று கூறி மறுபடியும் கலப்படம் பற்றி சிந்திக்க வேண்டாம்.
நகரத்தார் பெருமையும் பாரம்பரியமும் காக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் நம் குழந்தைகளுக்கான 4 நாள் Residential Camp Dr.அழகப்ப செட்டியார் இல்லத்தில் ஒன்றும் சோழபுரத்தில் ஒன்றும் நடத்தினோம்.
உள் நாடு, மற்றும் வெளி நாட்டுக் குழந்தைகள் பெற்றோர்கள் மிக ஆர்வமாகப் பங்கேற்றனர். யாரும் கலப்படத்தை விரும்பவில்லை.
 மேலும் முகாம்கள் நடக்க இருக்கிறது.


பேராசிரியர் MSமுத்துராமன் செட்டியார்,
மதகுபட்டி.

மொழியியல்

அரபு மொழியும் பாரசீக மொழியும் இந்தியாவில் ஆட்சி மொழியாகவும், அதிகார மொழியாகவும் இருந்துள்ளன. இது வரலாற்று உண்மை.

முகலாயர்கள் அராபியர்கள் அல்ல. ஆனால் அவர்கள் உஸ்பெக் என்ற தேசிய இனத்தைச் சார்ந்தவர்கள். இது தவிர முகலாயர்களின் காலத்தில் மெல்ல உருப்பெற்றதே உருது.








உருது மொழி என்பது ஏறக்குறைய இந்திதான். ஆனால் எழுத்துரு வேறு. பற்பல அரபு / பாரசீக மொழிகளின் கலப்பும் கொண்டிருக்கும்.





ஆகவே தான் தற்போதைய பாகிஸ்தான் என்பது தாங்கள் பேசுவது உருது என்றும், உத்திரப் பிரதேசத்தவர்கள் போஜ்பூரி என்றும், பாலிவுட்டில் சேர்த்து வித்தை திரைப்படங்கள் எடுப்பவர்கள் இந்தி என்றும் வேறு வேறு நாமகரணம் சூட்டுகின்றனர்.

எதுவாயினும் ஆற்காட்டு நவாபின் ஆட்சியிலும் கூட பாரசீகம் முன்னிலைப்படுத்தப்பட்டது. ஆட்சி மொழியாகவும் இருந்தது.

ஆங்கிலேயர்களின் ஆட்சியில் எப்படி ஆங்கிலம் அலுவல் /ஆட்சி மொழியாகி பின்னர் கல்வி மொழியாகவும் ஆகி, அதுவே அறிவு என்று நிலைபெற்றதோ அதுபோலத்தான்.

ஆட்சியில் உள்ளவர்களிடம் அவர்களின் அணுக்கத்தைப் பெறுவது மொழியின் வழியாகவேதான் என்பது இயல்பாகிவிட்டது.



இதற்கிடையில் நமது தமிழர்களுக்கு, மேலும் ஒரு சுமையாக வந்தேறி மாடுகளின் ஆட்சியில் தெலுங்கு என்பது ஆட்சி மொழியாக இருந்தது. அரசவைகளில் கீர்த்தனைகள் புனையப்பட்டது.

வடுக மராட்டியும் ஆட்சிமொழி என்பதை இன்றைய தமிழர்கள் மறந்துவிட வேண்டாம்.

அப்படியிருக்க இத்தனை சுமைகளையும் சுமந்து மூச்சுப் பிடித்து தன்னளவில் தன்னை தற்காத்துக்கொண்டது தமிழ்.

ஏனைய மொழிகள் எல்லாம் ஆட்சி / அரசியல் / அதிகாரம் என்று செழுமையான பாதுகாப்பில் வளர்ந்த போது, கேட்பாரின்றி இருந்த தமிழ், தன்னைத் தானே நிலை நிறுத்திக்கொண்டது காலத்தின் ஆகூழ்.

ஆகவே இசுலாமிய ஆட்சியாளர்கள் மொழியினை திணிக்கவில்லை என்பது பொய்.

அவர்களால் சிலபல பேச்சு மொழிகளும், நிலையான மொழிகளும் உருப்பெற்று இலக்கிய வளம் பெற்றன.



அவர்கள் இல்லை என்றால் ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் இருந்த போஜ்பூரி -- ஹிந்தி என்றும், உருது என்றும், இன்று பேய் உருவெடுத்து

சனாதன சண்டியர்களுக்கு ஒற்றை இந்தியா இன்ற கனவு மெய்ப்படுமா...???

இது தவிர மேற்படி அரசியலால் தமிழகத்தில் நாவப்புகளின் ஆட்சி அதிகாரம், தமிழ் இசுலாமியர்களுக்கு, அவர்களின் மதக் கட்டமைப்புகளின் உரிமைகளையும் கைக்கெட்டாமல் செய்துள்ளது,

அதாவது

எப்படி இந்து என்ற பெயரில் தமிழ்ச் சைவமும்,சைவர்களும், தமிழ் வைணவமும் மாலிய வழிபாட்டு தளங்களும் தெலுங்கு-கன்னட-மராட்டியர்கள் பிடியில் சென்று, தமிழர்களை தள்ளி வைத்துள்ளதோ...???? அதுபோலவே.......

தமிழ் இசுலாமியர்களின் மத ஆளுமையினையும் / கட்டமைப்புகளையும் அவர்கள் பிடித்து வைத்துள்ளனர்,

கூடவே அண்ணல் காயிதே மில்லத் என்ற தமிழர் ஆளுமை கொண்ட முஸ்லீம் லீக் மீண்டும் உருதுவாசிகளிடம் உள்ளது.

அதாவது எப்படி கமலாலயமும், அறிவாலயமும் கன்னட-தெலுங்கு-மராட்டிய-மார்வாடி இத்யாதிகள் கைகளில் உள்ளதோ அதுபோல.

ஆகவே தான் மன்னர் மானிய ஒழிப்பிற்கு பின்னரும் இந்திரா காந்தி தமிழகத்தில் வந்தேறிய நவாபிற்கு இறுதிவரை இளவரசர் பட்டம் கொடுத்து வைத்திருந்தார்.

தமிழர்களின் சுயாதீனத்தை யார் கைக்கொண்டாலும் / கெடுத்தாலும் அவர்களுக்கு இந்திரா-நேரு போன்ற முகமூடி ஆர்.எஸ்.எஸ் கூட்டம் வெஞ்சாமரம் வீசும். மகுடம் சூட்டும்.

இது வரலாற்று உண்மை.


அப்படியிருக்க நாம் இசுலாமியர்களால் நமது மொழிக்கு எந்த குந்தகமும் இல்லை என்று சொல்வது எந்த வகை நியாயம்...???

ஆகவே சனாதனிகளை எதிர்க்கின்றோம் என்று வந்தேறிய வேற்று வகையினரையும் நாம் ஏற்க முடியாது.

மண்ணின் மைந்தர்களை, அவர்களின் உரிமைகளை மதம் என்ற போர்வையில் சிக்குண்டு அடிமைகொள்வது யாராக இருந்தாலும் தவறுதான்.

இதனை எதிர்த்து களமாடுவதே உண்மையான சுயாதீன விடுதலையாகும்.

நன்றி,

அன்புடன்,
வேணும் அருள்மிகு பொய்சொல்லா மெய்யர் துணை.
நெற்குப்பை காசி விசுவநாதன்.
09-04-2017.

Sunday 12 March 2017

கேள்வியும்___பதிலும்: 2

#கேள்வி

பட்டிணத்தார் படம் பார்த்தேன் அதில் திருவெண்காடருக்கு மருதவாணன் ஒரு ஒலையில் ஒருவாசகம் எழுதி தந்திருப்பான் காதறுந்த ஊசியும் வாராது காணும் கடை வழிக்கே. இதன் பொருள் என்ன ? 



#பதில் :
காதற்ற ஊசியும் வாராதுகாண் கடைவழிக்கே....!!
இது எளிமையான விளக்கம் தான்.

ஊசி என்பது தைப்பதற்கு இன்றியமையாத ஒரு கருவி.அந்த ஊசியில் உள்ள துளை தான் அந்த ஊசியின் காது. அந்த காது முனை உடைந்துபோனால், அதில் நூல் நுழையாது, அதாவது நூலினை நுழைத்தால்தானே பின்னர் அதனைக்கொண்டு ஆடைகளையே, அல்லது கிழிசலையோ தைக்கமுடியும் ???

அப்படிப்பட்ட துளையற்ற ஊசி என்பது எதற்கும் பயன்படாது...
அதுபோலவே சேர்க்கும் பொருள் எதுவாயினும், நமது இறுதிக்கு இறுதிவழிக்கு நம்முடன், நமக்காக வரப்போவது இல்லை.
அதிலும் கூட இந்த எதற்கும் பயனற்ற காதற்ற ஊசியும் கூட வரப்போவதில்லை என்பதே உண்மை.

இதுதான் மருதவாணர் திருவெண்காடருக்கு உணர்த்தி பட்டினத்தாராக நமக்கு மாற்றித்தந்தது.

நிலையாமைத் தத்துவத்தை இறைவன் ஒற்றை வரியில் சொல்ல அதனை பட்டினத்தார் தனது இறுதிக்காலம் வரையிலும் சொல்லி வாழ்ந்தார்.

#பேய்க்கரும்பு__இனிக்கின்றது__பேரின்பம்__பிறக்கின்றது.

--- நகரத்தர் வரலாறு.
10-03-2017.

கேள்வியும்___பதிலும்: 1


#கேள்வி::
 
@Adaikkalavan chidambaram :: மீண்டும் 96 ஊர்கள் அதே இடங்களில் நகரத்தார்களாள் வீடுகள் கட்டப்பட்டு உருவாக்கபட வேண்டும், இது நம் ஒருங்கினைப்புக்கான ஆலோசனை கூட்டமாகவே கருதப்படுகிறது, நகர கோவில்கள் அனுமதி இல்லாமல் யாரும் எந்த முடிவும் எடுக்க அனுமதி இல்லை, நியாயமான முறையில் நகரத்தார்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு மட்டுமே ஆலோசிக்கப்படும், சமுதாயத்தில் என்ன மாற்றங்கள் ஏற்பட்டாலும் நகரத்தார்களை மட்டுமே ஏற்ட்டுக்கொள்ளப்படும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம், இது போன்ற பல ஆலோசனை கூட்டங்கள் நம் ஒற்றுமையான வளர்ச்சிக்கு நன்மை தரும், இது ஒரு ஆரம்பம் தான், கருத்துகள் வரவேற்க்கபடுகின்றன..சந்திப்போம் சாதிப்போம் பாரம்பரியம் காப்போம் வாழ்க வளமுடம் மகிழ்ச்சி


#பதில் ::

@Avaddayappan Kasi visvanathan ::: /// சமுதாயத்தில் என்ன மாற்றங்கள் ஏற்பட்டாலும் நகரத்தார்களை மட்டுமே ஏற்ட்டுக்கொள்ளப்படும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம், /// தங்களின் இந்த தீர்க்கமான உறுதிப்பாடு நம்பிக்கையளிக்கின்றது. அதே சமயம் காலத்தால் அகப்புறச்சூழல்களால் இடம்பெயர்ந்து அருகாமையில் உள்ள ஊர்களில் குடியேறியது காலத்தின் அவசியம். அதனை தற்போதைய நிலையில் அங்கே செல்வது என்பது ஒரு அதிகப்படியான முயற்சியே. அதைவிட இருக்கின்ற ஊர்களில் வீடுகளை பராமரிக்கும் ஆர்வத்தை மக்களிடம் விதைப்பதும், இருக்கின்ற கட்டுமானங்களை காப்பதற்கு இளம் நகரத்தார்களிடம் கருத்தியல் உருவாக்குவதும் அவசியமானது. கூடுதலாக ஓவ்வொரு ஊர்களிலும் நகரத்தகர்களில் பண பலம், அரசியல் பலம் கொண்டு ஊடுருவல் செய்யம் தமிழர் அல்லாத கலப்புகளை அதுவும் படைப்பு வீடுகளில் நடக்கும் கொடுமைகளை இந்தக் கூட்டம் கருத்தில் எடுத்து, ஏழ்மையில், சராசரி வாழ்வியலில் உள்ள எளிய உண்மை நகரத்தார்கள் படைப்பு வீடுகளில் ஒடுக்குதலுக்கும், உரிமை கோருவதற்கும் விடாமல் கைத்தடிகள் சகிதமாக பங்காளிகள் துணையுடன் நடக்கும் அக்கிரமங்களை எளிய நகரத்தார்கள் மனதில் ஊமையாய் குலதெய்வ சன்னிதானத்தில் மட்டுமே சொல்லிவிட்டு செல்கின்றனர். ஊடுருவும் அயலாரிடமிருந்து குறைந்தபட்ச பாதுகாப்பும் இல்லாமல் ஒவ்வொரு ஊரிலும் பங்காளிமுறைமைகள் உள்ளன. ஊர்க்கூட்டங்கள் கூடி நகரத்தார் முறைமைகளை மீறும் அத்துமீறிகளை கண்டித்து நேர்மையாய் வாழும் நகரத்தார்களுக்கு இனியும் பாதுகாப்பில்லை என்றால் இந்த சமூகம் தமிழர் அடையாளத்தில் இருந்து கடத்தப்பட்டு வந்தேறிகள், வந்தொட்டிகளின் கைகளில் சிக்கும். இதனை சிந்தனையுடன் கருத்தில் கொண்டு களத்தில் உள்ளவர்கள் செயல்பட வேண்டும். வீட்டு தெய்வங்களின் படைப்பில் கிஞ்சித்தும் மரபுவழி வராமல் பணம்/ அரசியல்பலம் /ஆள்பலம் என்று ஏறி மேயும் கொடுங்கோலர்கள் நித்தம் நித்தம் எத்தி விளையாடுவதற்கு விடிவில்லையென்றாலும் மூததையர் துணையுடனும், குலதெய்வங்களின் பெயர்களை உச்சரித்தும் வாழும் நகரத்தார்களுக்கு விடியல் கிடைக்குமா என்று பொறுமையுடன் காத்திருக்கின்றனர். பாப்போம்.

-- வேணும் அருள்மிகு பொய்சொல்லா மெய்யர் துணை.
-- நெற்குப்பை காசிவிசுவநாதன்.

Friday 3 March 2017

#கூட்டமும்__முடிவும் ---- #சேருவது___இனம்.

திருமதி. ஏகம்மை முத்து அவர்கள் தொடர்புகொண்டு கேட்ட கேள்விக்கு இந்த பதில் நகரத்தார் வரலாறு - Nagarathar Varalaru என்ற பக்கத்தில் பதில் கொடுத்துள்ளனர் ஆச்சியின் கேள்விக்கு விடைகிடைத்து இருக்கும் என்று நம்புகிறோம் 


/////// #கூட்டமும்__முடிவும் ---- #சேருவது___இனம்.

#கேள்வி :-

ஐயா வணக்கம் இந்த செய்தி எனக்கு வாட்சப்பில் வந்தது உங்கள் பக்கத்தில் பார்தேன் உங்களின் பல நகரத்தார் சார்ந்த செய்திகளை வெளியிடுகிறிர்கள் என் ஐயப்பாட்டையும் தீர்த்து வையுங்கள்
அது என்ன 96 ஊர் கூட்டம் ?? இந்த கூட்டம் நடத்துபவர்களின் நோக்கம் என்ன ?? இது போன்ற கூட்டங்களின் எடுக்கும் முடிவுகளுக்கு அனைவரும் கட்டுபடுவார்களா ??


#பதில் :-

தொண்ணூற்றாறு ஊர் என்று சொல்வது, இதில் யாரை சேர்க்கப்பயன்படுவது என்று புரியவில்லை. காரணம் சொல்லாடலில் உள்ளது அரசியல். கி.பி 1800 களில் மருதிருவர் வீழ்ச்சிக்குப் பின்னர் நிகழ்ந்த வடுகக் கலகத்தை அடுத்து, நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் தங்களின் வாழ்விடங்களை விட்டு பாதுகாப்பான பகுதியாக உள்ள ஊர்களுக்கு ஒன்று கூடிப் புலம்பெயர்ந்தனர். சென்ற ஊர்களில் வந்த ஊர்களின் பெயர் அடையாளங்களையும் கொண்டிருந்தனர். இன்றைய காலங்களில் இதனைப் பலர் மறந்திருக்கலாம்.
தற்போது வாழ்விட ஊர்களின் எண்ணிக்கையும் மாறியுள்ளது. ஆனால் மீண்டும் தொண்ணூற்றாறு ஊர் என்ற சொல்லாடல் நமக்கு வேறு பாதையினைக் காட்டிவிடும். இதன் அரசியலை நகரத்தார்கள் நன்கு உணர வேண்டும்.

பெண் பிள்ளைகள் குறைவு என்பதையும், தொழில் முனைதல் இல்லாமல் போய்விட்டதே என்பதாக காரணங்களையும் முன்வைக்கப்பட்டு, பின்னர் தொண்ணூற்று ஆறு ஊர்களில் என்ன செய்யப்போகின்றனர் என்பது தெரியவில்லை. நல்லது.



முன்னர் சென்னையில் பொதுப்படைப்பு செய்யப்போகின்றோம் என்று நகரத்தார் மலர் வெளியிட்டது. படைப்பின் அடிப்படைக் கூறுகளின் தன்மை புரிந்தவர்கள் பொதுப்படைப்பு என்பதனை கார்ப்பரேட் படைப்பாக மாற்றும் துணிவினைப் பெற மாட்டார்கள்.

எனினும் தொடர்ச்சியான விவாதம், கடிதங்கள் வாயிலாக அது நடக்கவில்லை, நடத்தவிடாமல் பண்பாட்டில் உறுதிகொண்டவர்கள் பாதுகாத்தனர். மேலும் நகரத்தார் சமூகப் பத்திரிகைகள் என்பதில் பெரும்பாலானவை நகரத்தார் ஒன்பதுகோவில் முறைமைகளுக்கு மாறான செயல்பாடுகளையும், அதில் நகரத்தார்கள் அல்லாதவர்களை முன்னிலைப்படுத்தி நகரத்தர்கள் குடும்பத்திற்கு தவறான முன்னுதாரணமும், நகரத்தார்களின் கட்டுக்கோப்பு கட்டுடைவதற்கும் காரணமானவர்களே ஆவார்கள்.வெறும் பத்திரிகை என்பதிலேயே நம்மை அந்நிய சக்திகள் மெல்ல மெல்ல ஊடுருவின. ஊடுருவிகின்றன.

இவைகள்தான் இன்றைய படித்த பிள்ளைகள், அதுவும் தமிழினம் சாராத வேற்று இனத்தில் திருமணம் செய்வதும், அதனைப் பக்கம் பக்கமாக புகைப்படம் போட்டு, நகரத்தார்கள் புள்ளிகள் / பெண் பிள்ளைகள் குறைவதற்கு காரணமாகவும் இருந்தார்கள். இது மறுக்கமுடியாத உண்மை.
மேலும் குடும்பக் கட்டுப்பாடு, சீர் முறைகளால், பிள்ளைகள் பெற்றுக்கொள்வதை குறைத்தது பெருங்கேடு.



நமது இனக்குழுவிற்கு அதிகமாக் குழந்தைகள் வேண்டும். ஆகவே மூன்று குளந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதைக் கருத்தியலாக ஒவ்வொருவரும் உணர வேண்டும். அதை விடுத்து பிள்ளைகள் இல்லை என்பது தவறு. கூடவே பெண்பிள்ளைகள் பற்றா குறை இந்தியாமுழுமையும் உள்ளது என்பதை அறிக. எல்லா மொழி இனங்களிலும், இனக்குழுக்களிலும் ( சாதிகளிலும் ) இந்த இடர்பாடு உள்ளன.

இன்று கடந்த 60 ஆண்டுகளாக முறைமைகளை மாற்றி, வெறும் பரிவட்டம் கட்டும் நகரத்தார் சங்கங்கள், விளம்பரத்திற்கு நெல்லிகளையோ, அல்லது வடுகர்களையோ புகைபடம்போட்டு விற்பனை செய்யும் பத்திரிகையினரும்தான் நகரத்தார்கள் ஏகபோகப் பிரதிநிதிகளாக முன்னிலைப்படுத்தப்படுகின்றனர்.

அது போக கூடவே, வாட்சப் நாட்டாமைகள் - இவர்களையும் புறந்தள்ளி பழைய நாட்டாமைகளின் தீர்ப்பை பக்குவமாய் கூடிக் கும்மியடித்து, நியாயஸ்தம் செய்வதையும் இன்று பார்க்கலாம். இவர்கள் எல்லாம் நகரத்தார்களைக் கட்டுப்படுத்தும் உரிமையுடையவர்கள் அல்ல.
நகரத்தார் மலர் ஆசிரியர் அவர்கள், இல்லாத உறுதிக்கோட்டை என்ற சொல்லாத வட்டகையினை, தரவுகளுடன் கேள்வியினை வைத்து மறுத்து எழுதியதை வரவேற்கின்றோம். இது ஒரு பத்திரிகை செய்யவேண்டிய அவசியமான, பொறுப்பான செயல்பாடு.

அதே சமயம், இல்லாத தொண்ணூற்றாறு ஊர் என்ற சொல்லாடலை தலைப்பு வைத்து, முன்பு போலவே ( கூடாத பொதுப்படைப்பு போல) , சென்னையில் தனியார் ( நகரத்தார் அல்லாத ) திருமண மண்டபம் பிடிப்பதும், ஆலோசனை செய்வதும் யாருக்கா, யாரைக் கட்டுப்படுத்த என்பதையும் கவனிக்க வேண்டும். கவனமாகவும் இருக்க வேண்டும்.

காரணம் தலைப்பிற்கு கீழே பெண்கள் குறைவு என்று அச்சாரம் போட்டு, பெண் இல்லை என்றால், நாயுடு வீட்டிலும், நாயர் வீட்டிலும், போன இடங்களில் இருந்து கொண்டு வந்ததையுமே ஏற்கலாம் என்ற உளவியல் தாக்கத்தைப் பரிகாரமாக அதாவது நகரத்தார்கள் மனதில் பொதுக் கருத்தாக உருவேற்றினால், உருவாக்க முயன்றால் அதை ஏற்க முடியாது. விழிப்புடன் இருக்க வேண்டும்.

மேலும், நகரத்தர் சங்கங்கள், நகரத்தர் பத்திரிகைகள் ( கூடவே வாட்சப் நாட்டாமைகள் ) இவர்கள் வேண்டுமானால் மக்களுக்கு செய்தி கொண்டு செல்லும் பணியினைச் செய்யட்டும்.

கூட்டங்கள் / ஆலோசனைகள் / கருத்துரைகள் நகரத்தார்களின் நகரக் கோவில்களில் தான் நடக்க வேண்டும். அதற்கு ஒன்பது கோவில் புள்ளிகளும் பங்கெடுக்க வேண்டும். அதுவல்லாமல் பலரும் தனிப்பட்ட முறையில் கூடியும், அதில் நமக்கு மாறான பொதுக் கருத்துக்களை மெல்ல, மெல்ல வலுபெறச் செய்து, பின்னர் அதனையே தீர்வாக முன்வைத்து ஒப்புதல் பெற்று, இதற்காக காத்திருப்பவர்களை உள்ளே நுழையவிடலாம் என்றால்...??? அப்படியொரு உள்ளடி நுண் அரசியல் செய்து சாதித்து விடலாம் என்றாலும், அதனை வீடாக கூடாது. இதில் நாம் விழிப்புடன் செயல்படவேண்டும்.
இதையும்அ மீறிய நுண் அரசியல் செய்து கடந்து செல்வோம், கலப்புறுவோம் என்று செய்யப்படும் வெளியார் முயற்சிகளை ஈடேறாமல் பார்த்துக்கொள்வோம்.

இதனை சிறிய அளவிலோ, அல்லது பகுதிவாரியாகவோ ஒன்பது கோவில் நகரக் கூட்டங்களை கூடச் செய்து பழைய நெறிமுறைகளை, அவர்களின் வரையறையில் நின்று சீர்தூக்கி சிந்தித்தால் நன்மை.
சேருவது இனம். அப்படியெனில் நகரத்தார்களுக்கு தற்போதைய தேவை தமிழர் யார், தமிழர் அல்லாதவர்கள் யார் என்ற புரிதலே.

-- வேணும் அருள்மிகு நித்ய கல்யாணி உடனாய கைலாசநாதர் துணை.
-- மேலவட்டகை மெய்கண்டான்.

02-03-2017. /////

Thursday 2 February 2017

மலேயா மண்ணில் தமிழர் நிறுவிய கோவில்கள்



        மலேயா மண்ணில் தமிழர்கள் இரண்டு நூற்றாண்டுக்கு முன்பு வெள்ளையர் ஆட்சி காலத்தில் தோட்ட தொழிலாளர்களாகவும் கூலிகளாகவும் குடியமர்த்தப்பட்டனர். அப்படி குடியமர்த்தப்பட்ட தமிழர்கள் தாங்கள் சென்ற இடமெல்லாம் தங்கள் மரபு மாறாது முருகனையும் அம்மனையும் கொண்டு சென்று வழிபட்டு வந்தனர். அப்படி முதல் முதலில் மலேயாவின் பினாங் நகரில் உள்ள ஹல்டாப் அருவி அருகில் தமிழகத்தில் இருந்து மலேயா வந்த சாது ஒருவர் நீர்வீழ்ச்சி அருகில் வேலை நிறுவிவழிபட துவங்கினார். அதுவே பின்னாளில் அங்கு பணியாற்றிய தமிழர்களும் வேலை தண்ணீர்மலையானாக முருகனாக பாவித்து வழிபட்டு வந்தனர். இந்த கோவில் 1782களில் உருவானது என்றும் சிலர் 1800 களுக்கு பின் உருவானது என்றும் சொல்லுகின்றனர். இதற்கான முழு அதிகார சான்றுகள் கிடைக்கவில்லை. நீர்விழ்ச்சி அருகில் அமைந்த கோவிலில் அனைத்து வித பினாங்கு வாழ் தமிழர்களும் வந்து வழிபட்டு தைபூசநாளில் விழா எடுத்து வழிபட்டு வந்தனர்.


பினாங்கு செட்டியார் கோவில்  வெள்ளி இரதம் அன்றைய தோற்றமும் இன்றைய தோற்றமும்


பினாங்கில் கி.பி. 1818ஆம் ஆண்டு ஆரம்பத்தில் தொழில் துவங்கிய நகரத்தார்களும் தண்ணீர்மலையானை வழிபட்டு வந்தனர்.அதன் பின் 1850களில் நீர்விழ்ச்சி பகுதிகளில் வழிபட மக்கள் கூட்டம் அதிகரிப்பாலும் நீர்விழ்ச்சியின் இயற்கை சூழல் மாசுபடுவதை கண்ட பிரித்தானிய அரசு அருவிபகுதிக்கு செல்ல தடை விதித்து அந்த பகுதியை தாவரவியல் பூங்காவாக மாற்றியது. பின் தமிழ் மக்களில் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கும் வகையிலும் நீர்விழ்ச்சியில் இருந்து மூன்று கிலோமீட்டர் முன்பாகவே 11ஏக்கர் நிலம் தந்து கோவில் அமைத்து வழிபட வழிவகை செய்தது. அந்த இடத்தில் தான் தற்போது 511 படிகள் ஏறி முருகனை தரிசனம் செய்யும் வகையில் ஒரு சிறுகோவிலாக பாலதண்டாயுதபாணி கோவில் நிறுவப்பட்டது. அதன் பின் ஒவ்வொரு குடமுழுக்கின் போதும் ஆலயம் விரிவு படுத்தி கட்டப்பட்டத்து. கோவில் உள்ள இடம் தமிழரின் உணர்வை புரிந்தது கொண்ட பிரித்தானியர்கள் தமிழருக்கும் முருகனுக்கும் கொடையாக கொடுத்த நிலமாகும். இன்றும் அவற்றை இந்துஸ் என்று சொல்லி மலையாளிகள், தெலுங்கர்கள், கன்னடர்கள் தமிழன் என்னும் போர்வையில் ஆட்சியும் அதிகாரம் செய்து தமிழனை மேல்எழும்பி வராதவண்ணம் பார்த்து கொள்கின்றனர்.


பினாங்கு ஹில் டாப் கோவில் அன்றைய தோற்றமும் இன்றைய தோற்றமும்

ஆங்கிலேய அரசு நீர்விழ்ச்சியில் அமைத்துள்ள முருகன் கோவிலுக்கு செல்ல தடை வித்தித்ததன் எதிரொலியாக நகரத்தார்கள் தண்ணீர்மலை தண்டாயுதபாணிக்கு , 9-8-1850ல் பினாங்கு வீதியில் 138, எண் கொண்ட கோவில் வீட்டில் தண்டாயுதபாணியின் தங்க உற்சவ மூர்த்தியை நிறுவி வழிபட்டு வந்தனர்.


 பினாங்கு கூயின் வீதி முத்துமாரியம்மன் கோவில் இன்றைய தோற்றம் பெரிய லிங்கப்ப செட்டி என்னும் தமிழர் நிறுவிய கோவில்

அதன் பின் பினாங்கு வாட்டர்பால் ரோட்டில் 5 ஏக்கர் பரப்பளவு உள்ள நிலம் ஒன்றை நகரத்தார்கள் 1854ல் வாங்கி 12-12-1857ல் தண்ணீர்மலை தண்டாயுதபாணி ஆலயம் அமைத்து குடமுழுக்கு செய்ததாக வரலாற்றுச் சான்றுகள் உள்ளன.தென் கிழக்கு ஆசியாவில் பினாங்கில் தான் முதல் தண்டாயுதபாணி கோவில் அமைந்ததாக சிறப்பித்துச் சொல்லப்படுகிறது.

1894ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழ் நாட்டின், செட்டிநாட்டுப் பகுதியின் காரைக்குடி நகரிலிருந்து இந்த வெள்ளி இரதம் செய்யப்பட்டு "எஸ். எஸ். ரோனா" என்ற கப்பலில் அனுப்பிவைக்கப்பட்டு பினாங்கு நகர் வந்து இரதம் பூட்டப்பெற்று இன்று வரை எந்தப் பழுதுமில்லாமல் சிறப்பாக வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்த இரதத்தோடு உபரிப் பாகங்களாக வந்தது, 4 சக்கரங்களும்,மூக்கணைப் பகுதியும் 1994ல் புதுச் சக்கரங்களை மாற்றினார்கள். பழைய சக்கரங்கள் 99 ஆண்டுகள் உபயோகப் படுத்தப்பட்டுள்ளன. இந்த இரதமே மலேயா மண்ணில் பவனிவந்த முதல் வெள்ளிரதமாகும்.

இந்த இரதத்தின் உயரம் 25 அடி, அகலம், அதாவது சுவாமி பீடமுள்ள பகுதி 10 1/2 அடி. சக்கரம் தவிர இரதத்தின் முழுப் பகுதியும் மிக கனமான வெள்ளிக் கவசத்தால் (தகடுகளால்) பூட்டப்பெற்றது.
நூற்றாண்டுக்கு மேலாகியும் எந்தவிதப் பெரிய பழுதுபார்ப்பும் செய்யப்படவில்லை. அது அவ்வளவு உறுதியானதாகும்.ஒவ்வொரு வருடமும் இந்த இரதம் மெருகு மட்டும் போட்டு துடைத்து ஒளி பெறுகின்றது.

சுமார் 90 ஆண்டுகளுக்கு முன்பு தண்டாயுதபாணிக்கு 5 நாட்கள் வரை தைப்பூசத் திருவிழா பெருங் கோலாகலமாக நடைபெற்றது . பிறகு அது 3 நாட்களாகக் குறைக்கப் பெற்றுத் தற்போதைய முறைப்படி சிறப்பாக நகரத்தார்கள் நடத்திவருகிறனர் .

மலேசிய அரசாங்கமும் தைப்பூச திருநாளைப் பொது விடுமுறையாக அறிவித்து தமிழர்களை கவுரவித்துள்ளனர்.

பினாங்கு நகரின் மையப்பகுதியில் குயின் வீதியில் ஆங்கிலேயர் காலத்தில் 1800களில் பெரிய லிங்கம் செட்டி என்ற தமிழர் தான் கொண்டு வந்த அம்மன் சிலையை நிறுவி முத்துமாரியம்மன் என்று பெயரிட்டு தமிழர்கள் அனைவரும் வழிபட்டு வந்தனர். அதன் பின் 1833 வாக்கில் தமிழர்களால் மிக சிறிய அளவில் ஒரு கோவில் நிறுவப்பட்டு குடமுழுக்கும் காணப்பட்டது. அதன் பின் தமிழர்கள் ஒருங்கினைந்து குழுவமைத்து 1904வரை கோவில் நிர்வாகத்தை செவ்வனே செய்துவந்தனர். அதன் பின் கோவில் நிர்வாகம் ஹிந்து எண்டவன் போர்ட் என்னும் அரசு அமைப்பு கோவில் நிர்வாகத்தை செய்துவருகிறது. இந்தகோவில் 1980களில் கோவிலின் பெயர் மாரியம்மன் கோவில் என்று மாற்றப்பட்டது. இன்று வரை இந்த கோவிலும் பினாங்கு ஹில் டாப் தண்டாயுதபாணி கோவிலும் ஹிந்து எண்டவன் போர்ட் கட்டுபாட்டில் இருக்கிறது. இந்த போர்டில் பொறுப்பில் வருபவர்கள் ஹிந்துஸ் என்னும் அடிப்படையில் கூறிக்கொண்டும் தமிழர் என்னும் போர்வையில் நிர்வாகத்தை தங்கள் கைகளுக்குள் வைத்துள்ளனர்.

மலேயாவின் தை பூசவிழா என்றவுடன் பலரின் நினைவுக்கு வருவது பத்துமலை முருகன் கோவில். சுண்ணாம்பு பாறைகளால் இயற்கையாக அமைந்த மிகப் பழமையான மலையில் இயற்கையாவே உருவான குகையமைப்புகள் பல கொண்டது. 1890களில் பத்துமலை பகுதிக்கு வணிகத்திற்காக வந்த தம்புசாமிபிள்ளை பத்துமலை உள்ள வேல் போன்ற குகையின் அமைப்பைக் கண்டு குகையில் வேலை ஒன்றை உன்றி வழிபட துவங்கினார். மற்றும் மலாயாவின் கோலாலம்பூர் நகரில் தம்புசாமிபிள்ளை 1873களில் நிர்மாணித்து சிறப்புற வழிபாடுகள் செய்து வந்தார். அதோடு 1892களில் இருந்து தை பூச விழாவும் கோலாகலமாக துவங்கியது தரைமட்டத்திலிருந்து 100மீட்டர் உரமான மலையில் உள்ள’ கோவிலுக்கு 272 மரப்படிக்கட்டுகள் அமைத்தார். அதன் பின் 1920களில் மரப்படிக்கட்டுகளை கான்கிர்ட் படிகட்டாக மாற்றப்பட்டது.

கோலாலம்பூர் பத்துமலை முருகன் கோவில் அன்றைய
தோற்றமும் இன்றைய தோற்றம் தம்பிப்பிள்ளை என்னும் தமிழர் நிறுவிய கோவில்

இக் கோவிலுக்கு 1893களில் தம்புசாமிப்பிள்ளையின் முயற்சியால் மரத்தேர் உருவாகப்பட்டு கோலாலம்பூர் மாரியம்மன் கோவிலில் இருந்து பத்துமலை வரை ரதத்தில் முருகனை எழுந்தருள செய்து தமிழர்கள் விழாயெடுத்து வழிபடுகின்றனர். 1930வாக்கில் மரத்தேர் வெள்ளித்தேராக மாற்றப்பட்டு தைபூச விழாவை மிகவும் சிறப்புற செய்துவருகின்றனர். இன்றளவும் பத்துமலையில் வேல் வழிபாடு நிகழ்கிறது. 1920களில் கோலாலம்பூர் மாரியம்மன் கோவில் நிர்வாகத்தை தம்புசாமிப்பிள்ளை குடும்பத்தார் அரசின் வசம் கொடுக்கப்பட்டது. மலேயா அரசின் நேரடி நிர்வாகத்தில் இந்த கோவில் உள்ளது .பத்துமலை முருகன் கோவில் இவர்கள் கட்டுபாட்டில் தான் உள்ளது.

கோலாலம்பூர் மகாமாரியம்மன் கோவில் இன்றைய தோற்றம் தம்பிப்பிள்ளை என்னும் தமிழர் நிறுவிய கோவில்

இப்படி மலேயா மண்ணில் தமிழன் நிர்மாணித்த புரனதமான கோவில்கள் அனைத்தின் நிர்வாகமும் தமிழர்கள் தலைமை பொறுப்பில் இல்லாமல் ஹிந்துஸ் எனும் போர்வையில் தமிழர் அல்லாதோரே தமிழர் எனும் போர்வையில் பதவிவகித்து அதிகாரத்தில் உள்ளனர். இவர்கள் வீதியில் தமிழ் பேசியும் வீட்டின் உள்ளே தெலுங்கு மலையாளம் கன்னடம் என்று பிற மொழிபேசியும் தங்கள் திராவிட திருகுதாள வேலையை சிரியாக செய்து தமிழனை தன் கை பாவையாக வைத்துக்கொண்டு கொள்ள இந்த ஹிந்துஸ் முயற்சிகள் செய்துவருகின்றனர். அரசியல் , போதுஊடங்கள் , அரசுசார் நிர்வாகத்துறைகளில் இந்தியர்கள் தென்னிந்தியர்கள் என்றும் இந்துஸ் என்னும் போர்வையில் தமிழருக்கும் சேர வேண்டிய பதவிகளையும் அதிகாரங்கள் அனைத்தும் தமிழர் அல்லாதவர்கள் கையில் உள்ளது வருந்ததக்கது. தமிழ் பேசுபவர் எல்லாம் தமிழர்கள் அல்ல என்பதை தமிழர்களாகிய நாம் உணரவேண்டிய கட்டாய சுழலில் உள்ளோம் நாம்.

தமிழர்வாழ்வும் வளமும் சிறக்க எல்லாம் வல்ல தண்ணீர்மலையான் வழிவகை செய்யட்டும்!!!

----கரு.இராமநாதன் வேள்வணிகன்