Sunday 12 March 2017

கேள்வியும்___பதிலும்: 1


#கேள்வி::
 
@Adaikkalavan chidambaram :: மீண்டும் 96 ஊர்கள் அதே இடங்களில் நகரத்தார்களாள் வீடுகள் கட்டப்பட்டு உருவாக்கபட வேண்டும், இது நம் ஒருங்கினைப்புக்கான ஆலோசனை கூட்டமாகவே கருதப்படுகிறது, நகர கோவில்கள் அனுமதி இல்லாமல் யாரும் எந்த முடிவும் எடுக்க அனுமதி இல்லை, நியாயமான முறையில் நகரத்தார்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு மட்டுமே ஆலோசிக்கப்படும், சமுதாயத்தில் என்ன மாற்றங்கள் ஏற்பட்டாலும் நகரத்தார்களை மட்டுமே ஏற்ட்டுக்கொள்ளப்படும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம், இது போன்ற பல ஆலோசனை கூட்டங்கள் நம் ஒற்றுமையான வளர்ச்சிக்கு நன்மை தரும், இது ஒரு ஆரம்பம் தான், கருத்துகள் வரவேற்க்கபடுகின்றன..சந்திப்போம் சாதிப்போம் பாரம்பரியம் காப்போம் வாழ்க வளமுடம் மகிழ்ச்சி


#பதில் ::

@Avaddayappan Kasi visvanathan ::: /// சமுதாயத்தில் என்ன மாற்றங்கள் ஏற்பட்டாலும் நகரத்தார்களை மட்டுமே ஏற்ட்டுக்கொள்ளப்படும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம், /// தங்களின் இந்த தீர்க்கமான உறுதிப்பாடு நம்பிக்கையளிக்கின்றது. அதே சமயம் காலத்தால் அகப்புறச்சூழல்களால் இடம்பெயர்ந்து அருகாமையில் உள்ள ஊர்களில் குடியேறியது காலத்தின் அவசியம். அதனை தற்போதைய நிலையில் அங்கே செல்வது என்பது ஒரு அதிகப்படியான முயற்சியே. அதைவிட இருக்கின்ற ஊர்களில் வீடுகளை பராமரிக்கும் ஆர்வத்தை மக்களிடம் விதைப்பதும், இருக்கின்ற கட்டுமானங்களை காப்பதற்கு இளம் நகரத்தார்களிடம் கருத்தியல் உருவாக்குவதும் அவசியமானது. கூடுதலாக ஓவ்வொரு ஊர்களிலும் நகரத்தகர்களில் பண பலம், அரசியல் பலம் கொண்டு ஊடுருவல் செய்யம் தமிழர் அல்லாத கலப்புகளை அதுவும் படைப்பு வீடுகளில் நடக்கும் கொடுமைகளை இந்தக் கூட்டம் கருத்தில் எடுத்து, ஏழ்மையில், சராசரி வாழ்வியலில் உள்ள எளிய உண்மை நகரத்தார்கள் படைப்பு வீடுகளில் ஒடுக்குதலுக்கும், உரிமை கோருவதற்கும் விடாமல் கைத்தடிகள் சகிதமாக பங்காளிகள் துணையுடன் நடக்கும் அக்கிரமங்களை எளிய நகரத்தார்கள் மனதில் ஊமையாய் குலதெய்வ சன்னிதானத்தில் மட்டுமே சொல்லிவிட்டு செல்கின்றனர். ஊடுருவும் அயலாரிடமிருந்து குறைந்தபட்ச பாதுகாப்பும் இல்லாமல் ஒவ்வொரு ஊரிலும் பங்காளிமுறைமைகள் உள்ளன. ஊர்க்கூட்டங்கள் கூடி நகரத்தார் முறைமைகளை மீறும் அத்துமீறிகளை கண்டித்து நேர்மையாய் வாழும் நகரத்தார்களுக்கு இனியும் பாதுகாப்பில்லை என்றால் இந்த சமூகம் தமிழர் அடையாளத்தில் இருந்து கடத்தப்பட்டு வந்தேறிகள், வந்தொட்டிகளின் கைகளில் சிக்கும். இதனை சிந்தனையுடன் கருத்தில் கொண்டு களத்தில் உள்ளவர்கள் செயல்பட வேண்டும். வீட்டு தெய்வங்களின் படைப்பில் கிஞ்சித்தும் மரபுவழி வராமல் பணம்/ அரசியல்பலம் /ஆள்பலம் என்று ஏறி மேயும் கொடுங்கோலர்கள் நித்தம் நித்தம் எத்தி விளையாடுவதற்கு விடிவில்லையென்றாலும் மூததையர் துணையுடனும், குலதெய்வங்களின் பெயர்களை உச்சரித்தும் வாழும் நகரத்தார்களுக்கு விடியல் கிடைக்குமா என்று பொறுமையுடன் காத்திருக்கின்றனர். பாப்போம்.

-- வேணும் அருள்மிகு பொய்சொல்லா மெய்யர் துணை.
-- நெற்குப்பை காசிவிசுவநாதன்.

No comments:

Post a Comment