Sunday 12 March 2017

கேள்வியும்___பதிலும்: 2

#கேள்வி

பட்டிணத்தார் படம் பார்த்தேன் அதில் திருவெண்காடருக்கு மருதவாணன் ஒரு ஒலையில் ஒருவாசகம் எழுதி தந்திருப்பான் காதறுந்த ஊசியும் வாராது காணும் கடை வழிக்கே. இதன் பொருள் என்ன ? 



#பதில் :
காதற்ற ஊசியும் வாராதுகாண் கடைவழிக்கே....!!
இது எளிமையான விளக்கம் தான்.

ஊசி என்பது தைப்பதற்கு இன்றியமையாத ஒரு கருவி.அந்த ஊசியில் உள்ள துளை தான் அந்த ஊசியின் காது. அந்த காது முனை உடைந்துபோனால், அதில் நூல் நுழையாது, அதாவது நூலினை நுழைத்தால்தானே பின்னர் அதனைக்கொண்டு ஆடைகளையே, அல்லது கிழிசலையோ தைக்கமுடியும் ???

அப்படிப்பட்ட துளையற்ற ஊசி என்பது எதற்கும் பயன்படாது...
அதுபோலவே சேர்க்கும் பொருள் எதுவாயினும், நமது இறுதிக்கு இறுதிவழிக்கு நம்முடன், நமக்காக வரப்போவது இல்லை.
அதிலும் கூட இந்த எதற்கும் பயனற்ற காதற்ற ஊசியும் கூட வரப்போவதில்லை என்பதே உண்மை.

இதுதான் மருதவாணர் திருவெண்காடருக்கு உணர்த்தி பட்டினத்தாராக நமக்கு மாற்றித்தந்தது.

நிலையாமைத் தத்துவத்தை இறைவன் ஒற்றை வரியில் சொல்ல அதனை பட்டினத்தார் தனது இறுதிக்காலம் வரையிலும் சொல்லி வாழ்ந்தார்.

#பேய்க்கரும்பு__இனிக்கின்றது__பேரின்பம்__பிறக்கின்றது.

--- நகரத்தர் வரலாறு.
10-03-2017.

No comments:

Post a Comment