Tuesday 23 May 2017

விளம்பரமும் அதற்கு எழுந்த சலசலப்பு விமர்சனமும் 1

பேராசிரியர் முத்துராமன் செட்டியார் அவர்கள் -
மதகுபட்டியில் இருந்து விடுத்திருக்கும் அவசர வேண்டுகோள்.
அன்புடையீர் வணக்கம்,
காரைக்குடியில் இன்று (01-05-2017 )நடக்க இருக்கும் கூட்டத்தில் வெளியே பெண் எடுப்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும், அதை முறைப் படுத்த எப்படிக் குழு அமைத்துச் செயல்படலாம் என்ற முடிவு எடுக்க இருப்பதாகத் தெரிகிறது.
முன்னோர்கள் பல நூற்றாண்டுகளாக நம் சமூகத்தை நல்ல ஒழுக்கத்தோடும் பாரம்பரியத்தோடும் கட்டிக் காத்து வந்திருக்கிறார்கள். இன்று திசை மாறிவிடக் கூடாது.
நம் இனத்தில் ஒருசில தவறுகள் நடந்திருக்கலாம்,
ஆனால் அவை நியாயப்படுத்தப்படவில்லை. உதாரணமாக வெளியே பெண் எடுத்தவர்கள் வெளியிலேயே இருந்துவிட்டார்கள்.


உள்ளே கொண்டுவரவில்லை. அதனால் ஜீன்(மரபும் மரபணுவும்) மாறாமல் அதே பாரம்பரியமும் திறமையும் தொடர்கிறது.
நல்ல பெயரும் மதிப்பும் மரியாதையும் இருக்கிறது. உலகில் வேறு எந்த இனத்தையும் ஒப்பிட முடியுமா தெரியவில்லை.
இன்றய கூட்டம், என்னை ஏற்காத இந்த இனத்தைச் #சீரழிக்க__வேண்டும் அல்லது இந்த மதிப்புமிக்க சமூகம் என் கட்டுப்பாட்டில் வர வேண்டும் என்று விரும்புவோர் முயற்சியாக இருக்கலாம்.
மற்றவர்கள் துணை போய்விடக் கூடாது. துணை போனால் கருங்காலிப் பட்டம் வந்துவிடும்.
தாங்கள் கலந்து கொண்டால் கலப்பு வேண்டாம் என்று வலியுறுத்துங்கள்.
செல்வோருக்கும் எடுத்துக் கூறுங்கள். முதலில் தொடர்பில் உள்ள அனைவருக்கும் இதை அனுப்புங்கள்.
உங்களை நம் பெண்களும் பிள்ளைகளும் பெரியோரும் போற்றுவார்கள்.
உங்களால் நிச்சயம் முடியும்.

பேராசிரியர் முத்துராமன் செட்டியார்,
மதகுபட்டி.
01-05-2017.
 
காரைக்குடி கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கவில்லை
என்பது மகிழ்வை தந்தாலும். பெண் பற்றாக்குறை காரணமாகவே இந்த #நயவஞ்கர்கள் சமூகத்தை திசை திருப்ப பார்க்கிறார்கள்.
நம் இனத்தில் பெண் பிள்ளைகள் பற்றாக்குறை என்பது #ஜோடிக்கப்பட்ட__கதை.
பெண்கள் அதிகம் படிப்பதில் தவறில்லை, ஆனால் அதுவே தலை கனமாக மாறி ஆடம்பர வாழ்க்கையை எதிர் பார்ப்பதும் பெற்றோர் சொல் கேளாமையும் தான் காரணம்.
நிறைய பெண்கள் காதல் திருமணம் செய்து கொண்டதும் இதனால் தான்.
இனி வரும் காலங்களில் தொழில் முனைவோரை ஊக்குவிப்பதற்காக மாநாடுகளை நடத்துவதோடு நிறுத்தி விடாமல், உண்மையிலேயே அவர்களுக்கு உதவவேண்டும்.
மாநாடுகள் வசதி படைத்தவர்களை மட்டுமே ஊக்குவிப்பதாக நான் நினைக்கிறேன்.


உண்மையிலேயே தொழில் செய்யும் நம் இளைஞர்களை ஊக்குவித்து, அதோடு பெண்ணை பெற்றவர்கள் திருமணம் செய்து வைத்தால் நிச்சயம் நம் சமுகம் வளர்ச்சி அடையும் என்பதில் சந்தேகம் இல்லை.

காசி சிதம்பரம் ,
கடியாபட்டி.
01-05-2017.



இன்று (01-05-2017) மாலை காரைக்குடியில் நடைபெற்ற கூட்டத்தில் எந்த ஒரு முடிவும் எடுக்க வில்லை.


நம் இனத்தின் மீது உள்ள உலகலாவிய உயர்ந்த நிலையை நாமும் காப்போம்.
நகரத்தார் பெரு மக்கள் அணைவரும் சிகரத்தார் என்றால் அது மிகையாகாது.
நம் பிள்ளைகளுக்கு நாம், நம் பாரம்பரியத்தை, சமுக ஒழுக்கத்தை அய்யா, ஆயா, அப்பத்தா, ஆத்தா, அயித்தை, வாழ்ந்த வாழ்க்கையை சொல்லிக்கொடுப்போம் .
#சின்ன__புள்ள__தனமா செயல்படும் ஒரு சிலரின் முயற்சிகளை முறியடிக்க
அணைவரும் இனைவோம்
வெல்வோம்.
பேராசிரியர் முத்துராமன் செட்டியார் அவர்களுக்கு நன்றி.

ரவி முருகப்பன்.
அரிமளம்.
01-05-2017.

No comments:

Post a Comment