Sunday 21 May 2017

முகநூல் செய்தி

ஐயா திரு.கம்ப ராமன் சண்முகம் அவர்கள் விடுத்துள்ள செய்தியினை இங்கே பகிர்ந்துகொள்கின்றோம்.
அன்புடையீர் வணக்கம்,
நம் சமுதாய சீர்திருத்தம் பற்றி அவரவர் நோக்கத்திற்கு கூட்டம் மாநாடு நடத்துவதை நாம் அனைவரும் ஒருசேர தடைசெய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
திரு. இளங்கோ போன்றவர்கள் திருமண சேவை என்ற பெயரில் சமூக சேவைகள் நடத்துவதை பாராட்டி வரவேற்கிறேன்,
ஆனால் உணர்வுபூர்வமான பாரம்பரிய கலாச்சார பண்பாட்டுகளுக்கு பங்கம் வரும்படி நம் இனத்தை திசை திருப்பும் செயலை நாம் ஆதரிக்க கூடாது.
இப்படியே அவரவர் தேவைக்கேற்ப பத்திரிகை நடத்துபவர்கள், காரியம் நடத்திக்கொண்டு போனால் நம் சமுதாய கூட்டங்கள் கூட்டும் உரிமைகளையும் நாம் இழந்து விடுவோம்.


கோவிலூர் 96 ஊர்கூட்டம் தான் சட்ட பூர்வமான சம்பிரதாயமான பாரம்பரியமான கூட்டமாகும்.
அதை நாம் இழந்து விடலாகாது.
இன்றைய காரைக்குடி கூட்டம் தேவையில்லாத நமக்குள் குழப்பத்தை விளைவிக்கிற கூட்டமாகும்.
இளங்கோ போன்றவர்கள் இது மாதிரி நடந்து கொண்டது எதிர்பாராதது,
அவசியமற்றது தேவையற்றது
தயை செய்து நம் நகரத்தார் பாரம்பரிய நாகரிகங்களை இழந்து விடவேண்டாம்,
நகரத்தார் சம்பந்தமாக கூடுவதாக இருந்தால் கோவிலுரில் தான் கூட வேண்டும்.
மற்றவை எல்லாம் அவரவர் சுய விருப்பம்.

அன்புடன்,
கம்ப ராமன் சண்முகம்.
01-05-2017.

No comments:

Post a Comment