Tuesday 23 May 2017

கூட்டமும் அவை எழுப்பிய கேள்வியும்

காரைக்குடியில் கோல்டன் சிங்கார் ஹோட்டலில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 45 பேர் என அறிகிறேன்.







இந்த கூட்டத்தில் பேசிய சிலர்,சொன்ன புள்ளிவிபரம்,32-35 வயதை கடந்த 850 நகரத்தார் பையன்கள் திருமணம் செய்ய பெண் இல்லாமலும்,சுமார் 150 பெண்கள் திருமண வயதை கடந்து திருமணம் ஆகாமல்,முதிர் கண்ணியாக,இருப்பதாக சொல்லியதுடன், இதற்க்கு தீர்வாக,மற்ற இனங்களில் இருந்து பெண் எடுத்து,பெண் இல்லாத குறையை போக்கவேண்டும் என பேசினார்களாம்!

கேள்வி -1

ஒரு ஹோட்டல்,40-45 பேர் கூடி பேசி எடுக்குற முடிவு,ஒன்பது கோயிலை சேந்த,ஒன்றறை லட்சம் நகரத்தார்களை எப்படி கட்டுப்படுத்தும்? நகரத்தார் மலர் பத்திரிக்கை நடத்தும் இளங்கோ அவர்கள் இந்த கூட்டத்தை ஏற்ப்பாடு செய்து,தன்னுடைய புரட்சிகரமான கருத்துக்களை,ஒட்டு மொத்த சமுதாயத்தின் எதிர்பார்ப்பாக, நகரத்தார்களின் குரலாக்குவது ஏன்?




கேள்வி -2

இது போல கூட்டம் நடத்துவதற்க்கு பதில், திருமண வயதை கடந்த நகரத்தார் ஆண்களையும்,பெண்களையும் ஒரே
இடத்திற்க்கு அழைத்து,செட்டிநாட்டிலோ, சென்னையிலோ,சுயம்வரம் நடத்தினால் தீர்வு கிடைக்கும் அல்லவா?
நம் நகரத்தார் இனத்தை சேர்ந்த கைம் பெண்கள்,விவாகரத்து ஆன பெண்கள், ஆகியோருக்குமறுவாழ்வளித்து, திருமணத்திற்க்கு பெண்கள் இல்லாத குறையை போக்கும் நடவடிக்கையில் ஈடுபடலாம் அல்லவா?

கேள்வி -3

32-35 க்கு மேல்,திருமணமாகாமல் பையன்கள் இருக்க காரணம்...தகுதிக்கு மீறிய எதிர்பார்ப்புகளாடு பையனை பெற்றவர்கள் இருப்பதும்,
பையனுக்கு படிப்பு குறைவாகவும்,
மாத வருமானம் குறைவாகவும்,
பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியவர்களாக இருக்கும் பட்சத்தில்,
பொண்ணை பெற்றவர்கள் மனதில்,
இவன் நம் பெண்ணை வைத்து காப்பாத்தவானா?என்ற ஐய்யத்தினால்
பெண் குடுக்காமல், திருமணங்கள் தள்ளிப்போனவர்களா?
இல்லை எல்லா தகுதியும் இருந்து பெண்கள் கிடைக்காததால் திருமணம் நடக்கவில்லையா? அப்படி என்றால்,
இப்பொழுதும் வருடத்துக்கு பல நூறு திருமணங்கள் செட்டிநாட்டில் நடந்து கொண்டு தானே இருக்கின்றது?


என் மனசுல பட்டது...
பொண்ணு இல்லன்னு, அதுக்கு தீர்வா,
யார் வேண்ணா,யார வேண்ணா கலியாணம் பண்ணிக்கலாம்னு, கூட்டம் போட்டு முடிவெடுத்தா?அது இன அழிப்பை நோக்கிய பாதையே தவிர வேறு என்ன? அப்படிப்பட்ட கலப்பட இனத்துக்கு பெயர் தான் என்னவோ?மொத்தத்தில்,இது போன்ற கூட்டங்களுக்கு செல்லாமல் இருப்பதே சாலச்சிறந்தது!!

--- திரு. @Arun Muthu காரைக்குடி.

2 comments:

  1. Seri Arun Muthu Annan. I have one question for you. Marriage enpathu two family matter and if suppose they marry a girl from different community means who can hos generation can be removed from puli....is it legally correct... community is a address and identity of an individual... how can u remove his identity and address since he married from a different caste... as per the law son should be same caste as his father no one can remove that... so puli and kovil malai should be given for their entire generation...

    ReplyDelete
  2. Seri Arun Muthu Annan. I have one question for you. Marriage enpathu two family matter and if suppose they marry a girl from different community means who can his generation can be removed from puli....is it legally correct... community is a address and identity of an individual... how can u remove his identity and address since he married from a different caste... as per the law son should be same caste as his father no one can remove that... so puli and kovil malai should be given for their entire generation...

    ReplyDelete