Saturday 12 December 2015

மெய்கீர்த்தி





‪#‎ஐயா‬ அவர்களுக்கு எழுதப்பட்ட ‪#‎மெய்கீர்த்தி‬ :-

அண்ணாமலையரசன் மடி தவழ்ந்து
முத்தைய வேள் மார் புரண்டு – சிலம்பு
நெறிச் செல்வர் தனக்கே மைந்தன் என,
தன்னை வரித்துக் கொண்டு ஆதரவாய்
அண்ணவரின் தோள் சேர்ந்த வரலாறு..
ஆகட்டும் உனக்கு மெய்கீர்த்திஎன..!!!
ராணி சீதையவள் செய்வித்த அரண் வளர்ந்து,
மெய்யம்மை மகனாக எங்கள் ஐயா ராமசாமி
வேழத்தின் முடியமர்ந்து, இசைக் காவலர் அரண்
காத்து, கொற்றத்தின் கொடி பறக்க – முற்றத்தின்
முன் வந்த, கூற்றத்தை எதிர்கொண்டு, நாளும்
சோராத வாழ்வதனை வாழ்வாங்கு வாழுகின்ற
நெஞ்சுரத்தின் உறைவிடம், தேற்றத்தால் தேடியதை
நாட்டத்தால் நற்கதிக்கு மனமுவந்து கொடுத்தானை,
பாசமென்ற சொல்லிற்கு பாங்குடனே தேடியவன்,
பணமென்று ஒன்றிற்காய் வேடிக்கை பார்த்திருக்கும்
விந்தை மனிதர்களையும் தான் பார்க்க, செய் திருவின்
நோக்கத்தால், நோகவில்லை, முட்டா(த) காழ்புணர்ச்சி,
மிகு வஞ்சம் கொண்டலையும், பித்தர்கள் முன் நிற்கும்
உலகினையும் பார்த்திடுவாய் மகனே...!!!!
என்று, நாளும் நீ வணங்கிச் செய்வித்த
பூசையினை ஏற்று, தில்லை
அம்பலத்தான் மனமுவந்து,

நன்றி கொன்று வாழுகின்றோர்,

உன்னிடம் நத்திப் பிழைத்த,
பிழைபட்ட மனிதர்களாய்வாழ்ந்து

வரும் பிணங்களையும் பார்த்திடுவாய்

என்றே பணித்திட்டார்.
செத்தாரை போலே நடைப் பிணங்கள் உலவுகின்ற
மானிடர்க்கு நன்றி உண்டோ....!!!???

கேள்...!!!!! ஐயா...


பட்டத்து யானை உனக்காக... பரிவட்டக் குதிரையும்
உனக்காக... கைகட்டி வேடிக்கை பார்த்த குருடருக்கெல்லாம்
மீண்டெழுந்த கதை கேட்க...
செவிட்டுப் பறை கிழிந்தனவே..
தெரு முட்டும் சந்தியிலே, முதுகுரசும் கழுதைக்கு தெரிந்திடுமோ..??!!!
யானையது படுத்தால் குதிரையது மட்டம்....
பட்டத்து யானைக்கும், பரிவட்டக் குதிரைக்கும் கழுதைகளா குஞ்சம்..???!!!
இசைத்தமிழ் ஒலித்திருக்க, சிலம்பின் ஓசையினால் முத்தைய வேள்
மகனுக்கு, சிதம்பரனார் மகன் முத்தையா துணை நிற்கும் கோலத்தில்,
கொற்றத்து முற்றத்தில், தேற்றத்தால் தேடியவை உன் நாட்டத்தே
இருக்கட்டும்....!!! வரலாற்றில் முழுமை பெற்றாய், வஞ்சகத்தை
உணர்வதற்கு சிற்றம்பலத்தான் சொல்வதெல்லாம் நடக்கட்டும்

நல்லவிதமாய், வாழிய வாழ்வாங்கு....!!!!


----வேணும் அருள்மிகு பொய்சொல்லா மெய்யர் துணை.

---- நெற்குப்பை காசிவிசுவநாதன்.
21-06-2015 ‪#‎தந்தையர்__தினம்‬. அன்று எழுதப்பட்ட ஒரு கவிதை

No comments:

Post a Comment