Friday 18 December 2015

நான் கண்ட ஆச்சிகள்-4


நான் கண்ட ஆச்சிகள்-4
தேனம்மை ஆச்சி
என்பது வயதில் கணவர் சிவபதவி அடைந்தபின் குழந்தைகள் இல்லாததால் எடுத்து வளர்த்த கொழுந்தன் பிள்ளை, அயித்தியாண்டி ,ஆச்சி மக்கள் ஆதரவோடு 70வயதை கடந்தாச்சு

கட்டிக்கொண்ட கணவருக்கு இறப்பர் தோட்ட நிர்வாக வேலை இளவயதில் மகிழ்வான வாழ்கை வரும் உறவினர் நண்பர்களுக்கு ருசியான நல்லுணவோடு விருந்தோம்பல்
கொழுந்தன் மணைவி இழந்து இரண்டாம் திருமணம் செய்கிறார் அவருக்கு அப்போது 5வயது பையனும் கைக்குழந்தையாய் ஒரு பையனும் பெரியவனை விடுதியில் சேர்த்து கைகுழந்தையை வளர்க்கும்படி அண்ணன் காலில் விழுந்து அழுகிறார்
கொழுந்தன் சுயநலம் இளம் மனைவியோடு சுகமாகவாழ குழந்தையை இடைஞ்சலாக கருத, இந்த ஆச்சி கணவனிடம் குழந்தையை நாம் வளர்ப்போம் என்று கணவனை ஏற்க சொல்லுகிறார் எந்தவித ஒப்பந்தமும் எதிர்பார்ப்பும் இல்லாமல்
பையன் வளர்ந்து 6ம் வகுப்பு படிக்கையில் ஓரகத்தி கொழுந்தன் மூலம் பையனை இவர்களிடமிருந்து பிரித்து கூட்டி செல்கிறார் பின் அவனை காண அனுமதிக்கவும் இல்லை
இந்நிலையில் கணவரின் உடலில் மாற்றங்கள் பரிசோதித்ததில் தொழுநோய் என தெரியவருகிறது கணவனின் நல் வேலை போய் சொற்ப சம்பளத்தில் வேலை
தான் பிறந்த வீட்டில் இருந்து கொண்டுவந்த சாமான்களை விற்று பற்றாக்குறையை சரி செய்து வாழ்க்கை ஓட்டம் ஆச்சிக்கு அப்போதும் தன்னல எண்ணம் வரவில்லை எப்போதும் போல் உறவு நண்பர்களுக்கு விருந்தோம்பல்
கல்கி சாண்டில்யன் கதைகள் படிப்பார் வார இதழ்கள் குமுதம் கல்கியில் வரும் தொடர்கதைகளை படித்து அவைகளை தைத்து வைப்பார் திரைப்படம் ஒன்று விடாமல் பார்ப்பார் புதிய சேலைகள் பூ இவைகளில் சராசரி பெண்டிரைவிட அதிக நாட்டம் உள்ளவர் இவைகள்தான் அவரது மன அழுத்த வடிகால்களாக இருந்திருக்கும்
நோயுள்ள கணவரை வெறுப்பு ஏதுமின்றி நேசித்து உடன் வாழ்ந்தார் அவரின் வாழ்வின் மகிழ்வு இறுதி காலத்தில் தான் வளர்த்த கொழுந்தன் மகன் தன்னை தாயக ஏற்று கொண்டதே
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கிடைத்த வாழ்வை பிறழாமல் வாழும் இவர்களே நம் பண்பாட்டின் காவல் தெய்வங்கள்

----------தெய்வானை சந்திரசேகரன் 

No comments:

Post a Comment