Tuesday 15 December 2015

நான் கண்ட ஆச்சிகள்



நான் கண்ட ஆச்சிகள்
நாச்சம்மை ஆச்சி
 மூக்குத்தி மின்ன மஞ்சள் பூசிய மகாலக்சுமி சிரிப்போடு வாழ்ந்தவர்கள் ஆண் பெண் பிள்ளைகள் பெற்ற வாஞ்சைஉள்ள மகராசி
கொண்டுவிற்க சென்ற கணவன் வெளிநாடு சென்று ஆண்டுகள் பல ஆகியும் ஊர்வரவில்லை பணங்காசு வந்தாலும் கணவன் பசித்த முகம் பார்த்து பரிமாற வாய்ப்பில்லை என ஏங்கும் மனத்தோடு வாழ்ந்தார்கள்

பிள்ளைகள் கல்யாணங்கள் பேசி முடித்து பெற்றவர் வராமலே நடத்த வேண்டிய நிலை வந்த போதும் வாழ்வை எளிதாக எதிர் கொண்ட வாழ்வரசி
சம்மந்தங்கள் அனைத்தையும் சரிசெய்து கொண்டு பிள்ளைகளின் பிள்ளை பேறு பார்த்து பேரன்பேத்தி கண்டார் நல்லதும் கெட்டதும் தனித்து நின்றே கண்டார்
சுமார் முப்பது ஆண்டுகள் கழித்து வந்தார் கணவர், முகம் மலர்ந்தார் ஆச்சி வயதுகள் போனபின்பும் வருத்தமில்லா வரவேற்பு, மனதில் ஆழமாய் கண்ட கனம் முதல் வரித்த காரணத்தால் இருக்குமோ?
வயதான காலத்தில் கணவரோடு சிலகாலம் வாழும் பேரே கிடைத்தாலும் பண்பாடு காத்து பாசத்தோடு குடும்பம் காத்த மாதரசி இப்படி எத்தனை மாதரசிகள் எம் குலத்தில் இருந்து சென்றார் அறியேன்
நானும் இக்குலத்தின் பண்பாட்டை காப்பதே அவர்களுக்கு நானளிக்கும் மரியாதை

----------தெய்வானை சந்திரசேகரன் 

3 comments: