Tuesday 15 December 2015

நான் கண்ட ஆச்சிகள் -2

நான் கண்ட ஆச்சிகள் -2
பரிபூரணாச்சி இளமையில் கணவரை இழந்தவர்கள் கருத்த வண்ணம் கடுத்த முகம் வெள்ளை சேலை நகை ஒன்றும் அணியாத ஆச்சி
சிடுசிடுப்பான பேச்சே பிறர் அவரிடம் பேசினால் வரும் அவராக வந்து பேசும்போது அமைதியாக பேசுவார்கள் பெரும்பாலும் பேசமாட்டார்கள்

அடுத்த அடுப்படியில் பிள்ளைக்கு சாப்பாடு போட்டு கொண்டிருக்கும் சற்று எதவான ஆச்சியிடம் அடி இவளே கத்திரிக்காய் குழம்பு இருக்குடி பிள்ளைக்கு ஊத்தி சோறு போடுடி ரசம் வேண்டாண்டி என்று கொடுக்கும் குணம்
கொழுதுனாமிண்டி வெளியூரில் வாழ்பவள் வாவரசி ஊருக்கு கணவனுடன் வந்து இவர் முன்னாள் சிலுப்புவார் ஒரே அடுப்படியில் சமைக்கும் போது ஆச்சி மன அடுப்பில் ஆற்றாமை வெடித்து வார்த்தையாய் சிதறும்
அவள் சென்றபின் பாத்தியாடி இவளே என்று பக்கத்து அடுப்படியில் கொட்டி பழைய நிலைக்கு வருவார்கள் இரு பெண் ஒரு ஆண் பிள்ளைகளை பெற்றவர்
அடுத்த வீட்டு அதிகம் பிள்ளையுள்ள ஆச்சிக்கு பொருள் கடன் கொடுப்பார் தன் பிள்ளைகளை படிக்கவைத்து திருமணம் செய்துவைத்து பேரன் பேத்திகள் கண்டார்
முதுமையடைந்து நோய்வாய்பட்டு சென்றார் இளமையில் இச்சமூக பண்பாட்டை காத்து வாழத்தான் சிடு சிடு கடுத்த முகம் காட்டி வாழ்ந்தாரோ என்ரெண்ணத்தொன்றுகிறது
இப் பண்பாடு காப்பதற்கு இப்படி எத்தனை தியாகங்கள் நினைத்து காப்போம்
------------தெய்வானை சந்திரசேகரன்

No comments:

Post a Comment