Saturday 15 August 2015

காரைக்குடி செட்டிநாட்டு பகுதியின் அடையாளங்களில் ஒன்று ..........


அன்பு நகரத்தார் நண்பர்களுக்கு காரைக்குடியானது நகரத்தார் 96 ஊர்களில் முக்கியமான ஊர் . மேலும் நகரத்தார்களின் அடையாளங்களில் போற்ற பட வேண்டிய பல இங்கு அமைந்து உள்ளது .
1.இந்து மாதபிமான சங்கம் . 
2.அறுபத்தி மூவர் மேடம் .
3.காசி நகர சத்திரம் .
4.தமிழ் கல்லூரி .
5.கம்பன் மணி மண்டபம் .
6.கோவிலூர் மடாலயம் .
7.அழகப்பர் பல்கலைகழகம்
8.எஸ்.எம்.எஸ்.வீ.ஆண்கள் மேல்நிலை உயர் நிலை பள்ளி மற்றும் பெண்கள் மேல் உயர் நிலை பள்ளி .
9.காரைக்குடி நகரத்தார் ஒரு கோயில் பங்காளிகளால் நிர்வகிக்கப்படும் மேல ஊரணி முனி அய்யா கோயில் . இன்னும் இது போன்ற நகரத்தார் குடும்பங்கள் மற்றும் பங்காளிகள் நிர்வகிக்கும் 100 க்கும் மேற்பட்ட படைப்பு வீடுகள் மற்றும் கோயில்கள் .
10.மகர்நோன்பு திடல் .
11.கோயில்களை சுற்றி உள்ள ஊரணிகள் , கடைகள் , போன்ற நகரத்தார் கோயிலுக்காக நிர்மாணித்த சொத்துக்கள் .
12.100 வருடங்களும் கடந்து பொழிவுடன் அழகுடன் உள்ள 2600 க்கும் மேற்பட்ட அரண்மனை அம்சம் பொருந்திய நகரத்தார் வீடுகள் .


இவை அனைத்தும் நம் காரைக்குடி அடையாளங்களில் முக்கியமானவை .
இன்று காரைக்குடி பகுதி வந்தேறி வருவோரை வாழ வைக்கும் பகுதியாகவும் இருக்கிறது . இது ஒரு பக்கம் நல்ல செயலாக இருந்தாலும் மறு பக்கம் நகரத்தார்கள் தங்கள் சொத்துக்களை மிக கவனமாக பாதுகாக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது . ஏனெனில் பிழைக்க வரும் வந்தேறிகள் மற்றும் அவர்களின் வாரிசுகள் வந்த இடம் மறந்து தங்கள் சொந்த ஊர் போன்ற சூழ்நிலை உருவாக்க முனைகிறார்கள் இது காரைக்குடி போன்ற வளர்ந்த நகரத்தார் பகுதிகளில் அவர்களுக்கு சற்று கடினமாக இருந்தாலும் அவர்கள் செட்டிநாட்டு பகுதியை அடையாளம் மாற்றும் வேலையில் ஈடு படுகின்றனர் இதை இனி ஒரு போதும் அனுமதிக்க கூடாது .
தமிழ்நாட்டில் பல இடங்கள் இப்படி அடையாளம் மாற்றத்தில் ஈடு படும் அரைகுறை கூட்டத்தால் நல்ல அடையாளங்களை இழந்து கூத்தாடி தனமாக ஆகி உள்ளது குறிப்பிடத்தக்கது .
நகரத்தார் மக்கள் வாழும் 96 ஊரும் செல்வ செழிப்பு மற்றும் தகுதியில் உயர்ந்த ஊர்களே நாம் புதிதாக உருவாக்கம் செய்வதை விட நம்மவர்கள் உருவாக்கிய பெருமைகள் , அடையாளங்கள் , சொத்துக்கள் , மற்றும் சேவை பணிகளை பாதுகாப்பதே முக்கியம் . போனது போகட்டும் இனி காலம் உணர்ந்து செயல் படுவோம் இழந்த சில சொத்துக்களையும் மீட்க்கும் பணிகளை நகரத்தார் குடும்பங்கள் செய்து வருகின்றனர் . இது போன்ற சொத்துக்களை மீட்க்கும் பணிகளில் நகரத்தார்கள் ஈடுபடுதல் இனி முக்கியம் . அடையாளம் காப்போம் .
....வேள் வணிகர் முத்துக்கருப்பன் செட்டியார் .
( நகரத்தார் அடையாளங்கள் பற்றி தங்களுடைய கட்டுரைகள் மற்றும் கருத்துக்கள் வரவேற்க்கப்படுகிறது )

No comments:

Post a Comment