Tuesday 11 August 2015

செட்டி என்ற தமிழ் சொல் :


இன்று செட்டி என்ற சொல்லே ஆரியமொழியான சம்ஸ்கிரத்தில் இருந்து தான் வந்து என்று இந்த சொல்லில் மீது பல குழப்பங்களை கிளப்பி உள்ளனர் தற்போது வந்துள்ள ஹைப்ரிட் கலைகூத்தாடிகளும் பதர்களும் வடுக ஆரிய எடுபிடிக் கூட்டமும் இந்த சொல் சமஸ்கிரத்தில் வந்தது என்றும் கூறுவது எள்ளளவு கூட ஏற்புடையது அல்ல. செட்டி என்ற சொல் தமிழ் சொல்லே. இதற்கு பலவிதமான சான்றுகள் உள்ளன அவைகளில் சில இந்த தரவுகள் போதும் என்று நினைக்கிறன் வெள்ளைத் தோளுக்கும் அலைந்து கொண்டு தெலுங்கு கூட்டத்திற்கு சமரம் வீசுயும் ஆச்சாரம் அனுஷ்டானங்கள் பற்றி பேசும் மலையாள பகவதி கூட்டத்திற்கு விளக்கு பிடித்து திரியும் ஹப்ரிட் பத்தர்களுக்கு இந்த தரவுகளின் விளக்கம் போதுமானது என்று நினைக்கிறேன்

செட்டாக( கூட்டமாக ஓர் ஊர் விட்டு ஓர் ஊருக்கோ நாட்டிற்க்கோ ) சென்று வணிகம் செய்தனால் செட்டு செட்டாக சென்று வந்தமையால் செட்டி என்று அழைக்கப்பட்டனர். இதற்கு மேலும் சான்றாக செட்டிறை என்ற ஒருவித வணிகவரியை தமிழ் வணிகர் மரபினர் செலுத்தினர் அந்த செட்டிறை என்ற வணிகவரி வணிகர்க்குடிகளுக்கு மட்டும் செலுத்தும் வரி என்பதால் இந்த செட்டிறை என்ற சொல்லில் இருந்து செட்டி என்ற சொல் வந்து என்றும் சொல்லப்படுகிறது

சோழர்கள் காலத்தில் வணிகர்களுக்கு எட்டி என்ற பட்டம் கொடுக்கப்பட்டது அதுவே பின்னாளில் பேச்சுவழக்கில் செட்டி என்ற பெயருக்கு மாறியது என்று சொல்லப்படுகிறது இதற்கு சாட்சிகள் உண்டா என்று கேட்கும் பதர்களுக்கு மணிமேகலையும் சிலம்பும் சாட்சியாக உள்ளது எட்டிச் சாலனையும் என்று சொல்லாடல் சிலம்பில் வருகின்றது அதோடு மேகலையில் எட்டிக்குமரன் என்ற சொல்லும் பயன்படுத்தியதை காணமுடியும் எட்டி என்ற சொல்லின் மருவே இன்று செட்டி என்ற சொல் நடைநடந்து அல்லது கடல் கடக்காது பலநாடுகளுக்கு சென்று பயணம் செய்து பெருவணிகம் செய்வோரை எட்டி என்று சிலம்பு காலத்தில் பட்டம் கொடுத்து அழைத்தார்கள் அதோடு கடல் கடந்து சென்று வணிகம் செய்தவர்களை நாயகன் என்ற பட்டம் கொடுத்து அழைத்தனர். இதற்கும் நம் சிலப்பதிகாரம் வந்து சாட்சி சொல்கிறது. நம் கண்ணகி ஆத்தாள் தந்தையின் இயற்பெயரை பற்றி சிலம்பு பேசவில்லை மாநயகன் இதில் நாயகன் என்பது அவருக்கு கொடுக்கப்பட்ட பட்டம் மாநயகனுக்கு சொந்தாமாக 1௦௦௦திற்கும் அதிகமாக பெருவணிகம் செய்யும் கலன்கள் வைத்திருந்த பெருவணிகர் அதனால் அவரை மாநாயகன் என்று அழைத்தனர் நம் நகரத்தார்களுக்கும் இன்றும் வழக்கில் அவரவர் வீட்டிற்கு தனிதுவ பெயர் உண்டு என்பதை நினைவில் கொள்க
குறிப்பு : மாநாயகம் என்பது கண்ணகியின் தந்தையின் இயற்பெயர் அன்று அவரின் இயபெயர் குறித்து காப்பியத்தில் பேசப்படவில்லை அது அவரை அடையாளப்படுத்தி கூறும் அடையாளப் பெயர் கண்ணகி ஆத்தாள் வேள்வணிகர் மரபினால் என்பதற்கு இதுவும் ஒரு ஆதாரம் இந்த அடையாளப்பெயர் நம் வழக்கத்தில் இன்று உள்ளது செட்டிநாட்டில் ஒவ்வொரு நகரத்தார் வீட்டிற்கும் ஒரு தனித்துவமான அடையாளப்பெயர் இருக்கு அதுபோன்றே அன்று கண்ணகிஆத்தாள் தந்தையின் அடையாளப் பெயரே
இதற்கு மேலும் நாங்கள் இ(எ)தனை(யும்) ஏற்கமாட்டோம் நாங்கள் கூறுவதே சட்டம் என்று தெலுங்கனுக்கும் மலையாளிக்கும் கொடிபிடித்து அவன் சிதறிவிடும் சில்லரைத்தான் எனக்கு முக்கியம் என்று ஓடிவிழும் பத்தர்களுக்கும் ஹ்ப்ரிட் கலைகூத்தடி கூட்டத்திற்கு இது புரிந்தால் சரி தமிழின் தொன்மையும் அறியாத பதர்கள் தமிழராக சொல்லிக்கொள்ளவும் தமிழரின் அடையாளத்திற்கும் கிடைத்திருக்கு பெரும் களங்கம். நல்ல மாட்டிற்கு ஒரு சூடு சுரணை வந்து உண்மை நிலை புரிந்தால் சரி
------------கரு.ராமநாதன் வேள்வணிகன்

No comments:

Post a Comment