Thursday 20 August 2015

வெள்ளைத்தோலும் ஆசையும் :


சமிபத்தில் உறவினரின் அழைப்பின் பெயரில் அவர்கள் வீட்டின் படைப்பில் கலந்துகொண்டேன் அப்போது நிகழ்ந்த ஒரு சம்பவன் ஒரு 60 வயது மதிக்க தக்க பெரியவர் தனது பேரன் ஊருக்கு போகிறேன் என்று சொல்லிக்கொண்டு கிளம்பும் பொது அவர் கூறியவார்த்தை இது “பேராண்டி அடுத்த படைப்புக்கு வரும்போது நல்ல வெள்ளவெளேருன்னு அழகனா ஒரு புள்ளைய கட்டிக்கிட்டு வந்துவிடுடா எங்களுக்கு தான் கிடைக்கலை நீயாவது கட்டுடா“ என்றார் அதற்கு அந்த பையனும் சிரித்துகொண்டு சரி சரி ஐயா கிளம்பிச்சென்றார். 



நம் சமூகத்தின் பெரும்பான்மையான ஆண்கள் மற்றும் பெண்கள் நிறம் கருப்பு தான் வேகுசிலரே வெள்ளை நிறம் கொண்டவர்களாக உள்ளனர் வெள்ளையாய் இருப்பவரை தான் மணம்முடித்துகொள்வேன் என்றால் கருப்பாக உள்ளவர்கள் கதி என்ன ??தோலின் நிறத்தை மட்டும் வைத்து இன்று எடைபோடுவதும் வெள்ளைத் தோலுக்கும் முன்மரியாதை கொடுப்பது சரியல்ல எனக்கும் தான் வெள்ளை தோல் கிடைக்கவில்லை நீயாவது பார்த்து கட்டுக்கோ என்று இளம்தலைமுறையிடம் தேடியோடச் சொல்லுவது எந்த வகையில் ஞாயம் ??? இதுபோன்று கூறுவது நம் சமூகத்தில் நிறமேலான்மையை உட்புகுத்தி மறைமுகமாக வெளியில் திருமணம் செய்து கொள்ள ஊக்குவிப்பது போல் அமையும் அன்று நம் பாட்டிஆயாக்களும் பாட்டையாகளும் இன்று எள்ளிநகையாடப்படும் கருப்பு நிறம் கொண்டவர்களையும் இப்படி நிறம் பேதம் பார்த்து திருமணம் செய்துகொள்ளவில்லை கருப்போ சிவப்போ அது செட்டிபிள்ளையா என்பதை மட்டும் தான் பார்த்து மணமுடித்து வாழ்ந்தனரே தவிர இப்படி அது தெலுங்கானோ கன்னட மலையாளியா இருந்த என்ன வெள்ளையா இருக்கு சரி என்று கட்டிக்கொண்டு வாழவில்லை இது போன்ற தவறான வித்துகள் சிலஆண்டுகள் முன்பு விதிவசத்தால் விதைக்கப்பட்டு விட்டன தற்போது இதுபோன்ற விதைகளை மீண்டும் விதைக்க சில இடங்களில் இதுபோன்ற வார்த்தைகளை அவர்களுக்கே தெரியாமல்பெரியவர்கள் விதைத்து விடுகின்றனர் ///“பேராண்டி அடுத்த படைப்புக்கு வரும்போது நல்ல வெள்ளவெளேருன்னு அழகனா ஒரு புள்ளைய கட்டிக்கிட்டு வந்துவிடுடா எங்களுக்கு தான் கிடைக்கலை நீயாவது கட்டுடா“ ///இதை இப்படி சொல்லியிருந்தால் நல்ல செய்தி விதையாக விழுந்திருக்கும் ///அடுத்த படைப்புக்கு வரும்போது ஒரு நல்ல செட்டிபுள்ளைய கட்டிக்கிட்டு புள்ளியாக வந்துசேரு பேராண்டி ///என்று கூறியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் .இதுபோன்ற நிற மேலான்மையை தவிர்ப்போம் இது தவறான பாதைக்கும் கொண்டு சென்றுவிடும் என்று கூறக் காரணம் நம் ஐயாதான் வெள்ளையா ஒரு பிள்ளயை பாத்து கலியாணம் பண்ணச்சொல்லிடாக அப்பறோம் என்ன என்று வெள்ளைய ஒருபுள்ளைய கட்டிக்கிட்டு போனா ஒன்னும் சொல்லமாட்டாக என்று ஒருவித எண்ணம் உருகொல்ல வித்தாக சென்றுவிடும் 

தற்போது நம் சமூகத்தில் 40 வயதிற்கு மேல் 70திற்குள் உள்ள நூற்றில் முப்பது பேர் இதுபோன்று இன்று இளம் தலைமுறையினரை மனதில் நஞ்சுகளை கலந்து மடைமாற்றம் செய்கின்றனர். நாம் பொண்ணோ பையனோ வரன் தேடும்போது நல்ல குணம் உண்டா பண்பாடு உண்டா என்றுபாப்போம் அதைவிடுத்து வெள்ளைத்தோல்களை தேட வேண்டாம் சட்டியில் இருப்பது தானே அகப்பையில் வரும் அதை விடுத்தது அன்று எனக்கு கிடைக்கவில்லை இன்று உனக்காவது கிடைக்கட்டும் என்று கூறுவது சற்றும் அழகல்ல.இங்கு மாடைமாற்றம் செய்கின்றனர் என்று எல்லோரையும் கூறிவில்லை வெகுசிலரே உள்ளனர் அவர்கள் தானும் கேட்டது இல்லது அடுத்து வரும் தலைமுறை மனதிலும் நஞ்சு கலக்குகின்றனர் என்பது மிகவும் வருந்தத்தக்கது. இதுபோன்ற நஞ்சுகள் கலக்கும் கூட்டத்தை இனம் கண்டு அவற்றை நெறிபடுத்த வேண்டும் அல்லது இவர்களை விட்டு நாம் விலகி நிற்க வேண்டும். நம் சமூகத்திற்ககோ அல்லது பிறருக்கோ நல்லது செய்யாவிட்டாலும் சரி அல்லது செய்யாமல் இருந்தால் போதும். 
கோழிக்கோடு நம்பூதிரி ஒருவன் அலுவலகத்தில் கேட்டான் நகரத்தார்கள் பலரை எனக்கு தெரியும் பார்த்துள்ளேன்ஆனால் நீங்கள் பலரும் ஏன் கருப்பாக உள்ளீர்கள் என்றார் ஐயா நம்பூதிரியாரே நாங்கள் என்ன தான் முகத்திற்கு இன்று விற்கும் சுண்ணாம்பு பூசினாலும் அது மாறப்போவதில்லை என் மரபு சார் பாரம்பரிய நிறம் சற்றும் கருமை கலந்த நிறம் அதை பற்றி நாங்களே கவலை கொள்ளாதபொது நீங்கள் ஏன் கவலை கொள்கிறீர்கள் என்றது பதில் இல்லை .இப்படி கேட்டபது நாகரீகம் ஆல்ல என்பது கூடதெரியாமல் கேட்கும் அழகில் தெரிகிறது உங்கள் அழகு. தோலின் நிறத்தால் வெண்மை கொண்டு என்ன புண்ணியம் ஊரை வேண்டுமானால் ஏமாற்றலாம் அங்கு அகத்தில் இருள்தானே சூழ்ந்துள்ளது இங்கு எங்களிடம் புறத்தால் கருமைநிறம் இருக்கு ஆனால் அகத்தில் இல்லை என்று கூறவே அங்கிருந்து நகர்ந்தான் அந்த நம்பூதிரியான். முதிலில் நாம் இந்த வெள்ளைதோலின் மீது கொண்டுள்ள மோகத்தை களைவோம் அது பலவித இடையூறுகளை குறைக்கும் என்பது உறுதி....

------------கரு.இராமநாதன் வேள்வணிகன்

1 comment:

  1. அருமையாகச் சொன்னீர்கள்

    ReplyDelete