Tuesday 18 August 2015

குறுந்தாடிகளின் கனிவான கவனத்திற்கு....!!!

#பொதுவாகவே__நாட்டுகோட்டை___நகரத்தார்களின்__வரலாற்றை, தமிழர்கள் அல்லாதவர்கள் (வடுகர் கூட்டம் + ஆரிய சனாதனம் ) தங்கள் கையில் எடுத்துகொண்டு ஆராய்ச்சி செய்கிறேன் பேர்வழி என்று நம்மவர்களை மூளைச் சலவை செய்து நகரத்தார்களை அதாவது நாட்டுகோட்டை நகரத்தார்களை தமிழர்கள் அல்ல என்பதாக கதை எழுதி, அவர்களின் வேள் வணிகர் அடையாளத்தை மடைமாற்றம் செய்து தன வைசியர் - என்று உளவியல் மோசடிக்கு ஆள்ளக்கியுள்ள நிலையில், இற்றைக் காலங்களில் வடுக ஆனந்த விகடன் நகரத்தார்களின் வணிகக் கட்டமைப்பை கொச்சைப்படுத்தி அவர்களின் கால அளவை வந்தேறிய தெலுங்குச் செட்டிகளை விடவும் குறைவான வரலாறு கொண்டவர்களாக காட்டி எழுதி உள்ளனர். இதனை அரைகுறையாகப் படித்த குறுந்தாடி நகரத்தகார் இளைஞர்கள் அதுதான் வரலாறு என்று கோலம் கொண்டு சுய அடையாளம் அழிக்கத்துவங்கி விட்டனர். இவர்களிடம் வரலாறு பேசினால் அவர்கள் நம்மிடம், நமக்கே விலை பேசும் அளவிற்கு பின் புலத்துடன் உள்ளது தெரிய வருகின்றது. நிற்க. 

இந்த நிலையில் தமிழர் குடி மரபு இனக்குழுவைச் சார்ந்த இன்னொரு நண்பர் சில தவறான புரிதலுடன் நாட்டுக் கோட்டை நகரத்தார் வரலாறு குறித்து பதிவிட்ட போது, அதற்கு நான் அவரிடம் அதற்கான எனது விளக்கம் கொடுத்து, பதிவிலும், வரலாற்றிலும் தவறு உள்ளது. இது தவறான புரிதலை மக்களிடம் கொண்டு செல்லும் என்று கூறினேன். அவரும் தான் படித்த சில நகரத்தார் பற்றிய வரலாறு குறித்து சொல்லி, அதன் அடிப்படையில் எழுதினேன், தவறு இருப்பின் பதிவு நீக்கம் செய்து விடுகின்றேன் என்றவர், உடனே அந்தப் பதிவினையும் நீக்கிவிட்டார். 

ஒரு இனக்குழு பற்றிய ஆய்வு முறையாகவும், அந்த இனக்குழுவின் பண்பாட்டு,வாழ்வியல் சொல் வழக்கு, சடங்குகள் சார்ந்தும் உள்ளவற்றை எடுத்து, இலக்கிய,தொல்லியல் சார்ந்த தரவுகளுடன் பொருத்தி அதன் தன்மையுடன் கூடிய உண்மையினை ஆய்ந்து அறிவிக்க வேண்டும். இதற்கு அந்த அந்த இனக்குழு சார்ந்த அறிவர்களும் பெரியவர்களும் சேர்ந்து ஆய்வு செய்யப்பட வேண்டியது. மாற்றார் அடையாளங்களை மிக எளிதாக வேற்றார், எடை போடுதல் கூடாது. இந்த நெறிப்பாடு இயல்பாகவே அனைவருக்கும் இருக்க வேண்டும். 


ஆய்வும் ஒரு நடுவு நிலையுடன் கூடியதாக, நடந்தவை, நடப்பவை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இனி வரும் காலங்களில் அந்த அந்த இனகுழுவானது, தங்களின் தேசிய இனத்தின் ( மொழி வழியே அடையாளம் கொண்டு அறி யப்படுவதே ஒரு தேசிய இனம் ) { நிறம்,மதம் ஆகியவை ஒரு தேசிய இனத்திற்கு குறியீடு அல்ல } நலனுடன் இனைந்து வாழ்வதற்கான ஒன்றாகவே அமைய வேண்டும். இடைக்கலங்களில் மாற்றார் ஆட்சிக் காலங்களில் நடந்த ஒடுக்குதலை சீர்தூக்கி, நமது தமிழர் இனக்குழுக்களை அவர்களின் தனித்துவத்தை அடையாளம் கண்டு, நம் தேசிய இன ஓர்மைக்கு வழி வகுக்க வேண்டும். 

மேற்படி நபர் இதனை நன்கு புரிந்து கொண்டதால் எனது மறுப்பினையும் கருத்துரையினையும் உடனே ஏற்று பதிவு நீக்கம் செய்துவிட்டார். இது தமிழர் நெறி, தமிழர் அறம். 

ஆனால் சொந்த அடையாளத்தை ஆனந்த விகடன் என்ற வந்தேறி சொன்னான் என்பதற்காக அதுதான் அடையாளம் என்று வல்லடியாய் சட்டம் பேசும் குறுந்தாடி பதினேழாம் நூற்றாண்டு இளைஞர்கள், வரலாற்றை விவாதித்து ஏற்கும் நிலையில் இல்லை, மாறாக நமக்கே விலை பேசும் கயவர்களாக இருப்பதை எப்படி ஏற்க முடியும் ?? 

செட்டி என்ற சொல்லே சம்ஸ்கிருதா என்ற மொழியில் இருந்து வந்ததாக கூத்தாடிகள் சொல்லியவற்றை COPY PASTE அதாவது வெட்டி ஓட்டும் வேலையினைச் செய்து,  எளிய மக்களையும், மற்றவர்களையும் ஏமாற்றுவது எதற்கு ?? 

குறிப்பாக பதினேழாம் நூற்றாண்டு அக்மார்க் PURE NAGARATHAR என்று சொல்லும், குறுந்தாடிகளின் தோளில் தொங்கும் அதி நவீன புகைப்படக் கருவியும், அவர்களுக்கு இலவசமாய் தரப்பட்ட மண் மூளையினையும், ஒரு வடுக நாயர் வாடகைக்கு கொடுத்தால், அதனை ஏற்று இவர்கள் தங்களை நெகிழியால் ( PLASTIC NAGARATHAR WE ARE ) செய்யப்பட பிளாஸ்டிக் நகரத்தகார் என்றும் கூட சொல்லிக் கொள்வார்கள். 

காரணம் சங்கம் வைத்த மதுரையில், கலைக் கல்லூரியின் தமிழ்த்துறை எந்திரத்தை வைத்துகொண்டு, நகரத்தகார் வாழ்கின்ற ஊர்களை ஆய்வு செய்கின்றேன் பேர்வழி என்று, நகரத்தார்களைப்பற்றிய ஆய்வுகளை நிழலாகச் செய்து, அதன் அடிப்படையில் நகரத்தார் சமூகத்தில் நகரத்தார் அல்லாதவர்களை ஊடுருவச் செய்வதற்கு கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நிழல் வேலைகள் நடப்பது பற்றி அறியாதவர்கள் பலர்,இப்படிப்பட்ட அழிவுப் பாதைக்கு தாங்களே பட்டுக் கம்பளம் விரிக்கவும் தொடங்கிவிட்டனர். 


இனி நாயர் வகை, நாயுடு வகைப்பிரிவும் கலந்துறவாடி,  நாட்டுக்கோட்டை நகரத்தார்களை,  தங்கள் அடையாளம் இழந்த நிலைக்கு ஆளாக்கும் முன், நாட்டுகோட்டை நகரத்தார்கள் ஒவ்வொரு ஊர்களிலும் உள்ள பங்காளிகளை அவர்களின் சுய அடையாளத்தைக் காக்க அரசியல் அதிகாரம், பண பலம் கொண்டு ஒடுக்குபவர்களை, வந்தேறிகளை எதிர்க்கவும் நம்மை நாமே பாதுகாக்கவும் முயற்சி எடுக்க வேண்டும். அதற்கு அடிப்படையாக நிற மேலாண்மை தேடும் பதினேழாம் நூற்றாண்டு நாயர் அடிமை நகரத்தார்களைப் புறக்கணிக்க வேண்டும். இல்லை என்றால் கேடாய் முடியும். 
வேணும் அருள்மிகு பொய் சொல்லா மெய்யர் துணை, 

----- நெற்குப்பை காசிவிசுவநாதன். 07-08-2015.

No comments:

Post a Comment