Tuesday 16 September 2014

புரட்டாசி மாதமும் செட்டிநாடும் :



பொதுவாக நம் செட்டிநாட்டில் ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் ஒவ்வொரு விழாக்கள் நிகழும் இந்த புரட்டாசி மாதம் சற்று விசேஷம் நிறைந்த மாதம் .இந்த மாதம் பிறப்பதற்கு முன்பே ஓர் இரு நாட்களின் முன்பே அமைத்து பொருட்களும் சுத்தம் செய்து அடுப்படி சாமான்கள் கழுவி சுத்தம் செய்தும் . புது பாத்திரங்கள் இந்த மாதத்திற்கு என்று தனியாக பாத்திரங்கள் வைத்திருப்பர் .அவற்றையே இந்த புரட்டாசி மாதத்தில் மட்டும் பயன்படுத்துவர் . இந்த மாதத்தில் மிகுந்து செட்டிநாட்டு பகுதி மக்கள் அனைவரும் சைவ உணவே எடுதுகொள்வர்.

செட்டிநாடும் ராமாயணமும் :

இந்த மாதத்தில் நம் செட்டிநாட்டுப் பகுதியெங்கும் (ஏடு படித்தல் ) இராமயணம் ஊரின் பொதுவில் உள்ள கச்சேரிகூடம் , பிள்ளையார்கோயில் , சிவாலயம் , வீடுகள் , அரசமரத்தடிகள் போன்ற இடங்களில் ஓதப்படும் .சில இடங்களில் காலையிலும்
மிகுந்து இந்த இராமாயணம் படிப்பது மலையிலும் நிகழும் . இந்த நிகழ்வி அணைத்து சமூகத்தவர்களாலும் நிகழ்த்தப்படும்.
இந்த விழா ஊரின் பொதுவில் அனைவரும் ஒன்றாக இணைத்து 1௦ ,15 , 21 என்று இராமர் பட்டாபிஷேகம் படம் வைத்து மாலையில் படிப்பர் . அப்போது தங்களால் இயன்றதை நாட்டார்களும் நகரத்தார்களும் தினம் ஒருவராக கதை கேட்க வருபவர்களுக்கும் ராமருக்கு நிவேதனமாக சுண்டல் , வடை , பாயசம் , போன்ற நிவேதம் செய்தும் தருவர் .

இதை தொடர்ந்து மற்றும் நகரத்தார்கள் தங்கள் வீடுகளில் ஏடு படிப்பர் . தங்கள் வீடுகளில் 7 , 9 , 11 நாட்கள் என்று ஏடு படிப்பர் . இந்த நிகழ்விற்கு நகரத்தார்கள் தங்கள் வீடுகளில் மாலையில் ஏடு படிப்பர் .இதற்கு நகரத்தார்கள் தங்களும் தெரிந்தவர்கள் , சுற்றத்தார்கள் , பங்காளிகள் , தாயபிள்ளைகள் என்று இந்த நிகழ்விற்கும் அனைவரையும் வீட்டிற்கு திருமணத்திற்கு அழைப்பது போல் அனைவரையும் அழைப்பர்

மாலையில் வீட்டில் விளக்கேற்றி ராமர்(பட்டாபிஷேகம் ) படத்திற்கு மாலைகளும் பூக்களும் சாற்றி பூரணகும்பம் வைத்து வழிபடுவர் . நாள் ஒன்றுக்கு ஒரு விதமாக இராமர் பிறப்பு முதல் பட்டாபிஷகம் வரையான நிகழ்வுகளை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகுதியாக படிப்பர் .இதை கேட்க அருகில் உள்ள நகரத்தார்கள் மற்றும் தெரிந்தவர்கள் வந்து மாலையில் கதை கேட்பார்கள் . இந்த நிகழ்வில் மூன்று நாட்கள் சிறப்பாக நிகழும் . இராமர் பிறப்பு நிகழ்வு .மற்றும் சீதா கலியாணம் சிறப்பாக நிகழும் . வீடுகள் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு மாலையில் ஏடு படித்து இராமர் சீதை திருமணம் சிறப்பாக நிகழும் .திருமனத்திற்கு தாயபிள்ளைகள் பங்காளிகள் என்று அனைவரையும் அழைத்து சிறப்பாக நிகழ்த்துவார் . சீதா கலியாணத்தில் மலையில் வீட்டில் திருமண விருந்தும் நிகழும் . இதேபோல் இறுதி நாள் பட்டாபிஷேகம் நிகழும்போது சிறப்பாக இருக்கும்

ஏடு படித்தலின் தாத்பரியம் :

இராமாயணம் படிப்பதில் ஒரு சூட்சமம் வைத்திருந்தனர் நம் முன்னோர்கள். இராமாயணம்தில் இராமர் மற்றும் அவர் தம்பிகளின் ஒற்றுமையை காட்டுகிறது .நம் செட்டிநாட்டில் முன்பு வீட்டில் 5 அல்லது 6 பிள்ளைகள் இருக்கும் . அவர்கள் ராமன் , லெட்சுமணன் , பரதன் , சத்ருகன் ஆகிய நால்வர் போன்று ஒற்றுமையாய் வாழவேண்டும் அறவழியில் நடக்கவேண்டும். என்பதையும் .குடும்ப ஒற்றுமை பலப்பட வேண்டும் என்பதை மனதில் கொண்டு இந்த நிகழ்வை தொடங்கிவைத்தனர் .
மேலும் ஊர் பொதுவாக இராமாயணம் படிப்பது நிகழ்வதன் நோக்கம் . அணைத்து மக்களும் ஒற்றுமையாக இருக்கவேண்டும்.அயோத்தி மற்றும் மீதலை நகரத்தில் எப்படி மகிழிச்சி நிலவியோதோ அதுபோன்று நம் ஊரிலும் நிலவவேண்டும் என்றும் மக்கள் நல்வழியில் செல்லவேண்டும். தவறான வழியில் சென்றால் ஏற்படும் விளைவுகளை ராமாயணத்தில் கதையில் மூலம் உணர்ந்து நல்வழியில் செல்லவேண்டும் என்பதன் நோக்கில் நிகழ்த்தப்படுகிறது .
மேலும் தற்போது நகரதர்களும் நாட்டார்களும் சரி தொழில் வேலை நிமித்தமாக நாம் நம் கிராமங்களை விட்டு வெளியேறி பல பகுதிகளில் வசிக்கிறோம் . நம் இந்த மாத்ததில் நாம் உள்ள வீட்டில் ராமர் படம் வைத்து ராமாயணம் படிக்கலாம் . நம் ஐயாக்களும் ஆயாககள் , அப்பதாகள் நமக்கும் சொல்லி சென்றவரை நாமும் நம் பிள்ளைகளும் சொல்லி புரிய வைக்க வேண்டும் . இது நம் பண்பாடு . நம் பண்பாடை நாம் தான் பாதுகாக்க வேண்டும் .

மற்றும் இந்த மாதத்தில் வரும் அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்தது.
மற்றும் அதை தொடர்ந்து 9 நாட்கள் நவராத்திரி விழா சிறப்பாக நிகழும் மாலையில் அம்மனை சிறப்பாக அலங்காரத்தில் திருவீதி உலாவும் நிகழும். 1௦ நாள் விஜய தசமி விழா மிகவும் கோலாகலமாக நிகழும்

செட்டிநாட்டில் விஜதசமி (மகர்நோன்பு ):

இந்த விழாவின் போது கோயிலில் இருந்து அம்மன் குதிரை வாகனத்தில் ஏறி கையில் வில் அம்பு ஏந்தி பவனிவருவாள் . அதற்கும் முன்பு மக்கள் மாவிளக்கு வைத்து அர்ச்சனை செய்வர் பின் நகர்வலம் வந்த அம்பாள் மகர்நோன்பு பொட்டலை நோக்கி செல்வர் . அங்கு ஒரு வாழை மரத்துடன் வன்னிமரம் கிளைகளை ஒன்றாக கட்டி வைக்கப்பட்டிருக்கும். நாட்டார்கள் மற்றும் நகரத்தார்கள் ஒன்றாக இணைந்து இந்த விழாவை சிறப்பாக நிகழ்த்துவர். கோயிலில் இருந்து மகர்நோன்பு போட்டால் செல்லும் வழியெங்கும் நீர்மோர் ,பானகம் ,சர்பத் , பழங்கள் , புளிசாதம் , கதம்பசாதம் , எலுமிச்சசாதம் ,பொங்கல் [போன்ற வகை வகையாக செய்து தம்மால் இயன்றவற்றை மக்களுக்கு கொடுப்பர் . மற்றும் மகர்நோன்பு பொட்டலில் சுவாமி வாழை மரத்தை நோக்கி மூன்று முறை அம்பு எய்துவார் . எய்த அம்பை வீட்டிற்கும் பிடித்து சென்றால் தங்கள் அந்த ஆண்டு சுபிட்சமாக இருக்கும் என்பது நம்பிக்கை .
சுவாமி அம்பு போட்ட பின் சுவாமி அங்குள்ள கொட்டகையின் சில மணிநேரம் தங்கி பக்தர்களுக்கு அருள்புரிவார் .

நகரத்தார்களும் மகர்நோன்பு :

நகரத்தார்கள் வீடுகளில் வாசலில் அழகான பெரிய கோலங்கள் இடப்பட்டு வாயில்களில் தொரணங்கள் தொங்கவிடப்பட்டும் . வீட்டில் திருமணமான புதிய தம்பதிகள் தங்கள் குழந்தையுடன் இந்த விழாவில் பங்கு பெறுவார் . இதற்காகவே திருமணத்தின் போது பெண்ணுக்கு வெள்ளியில் ஒரு அம்பு(அ) கிளுக்கி செய்து வைத்திருப்பார்கள். இந்த அம்பை கையில் எடுத்துக் கொண்டு வீட்டின் உள்ள படைக்கிற அறையில் விளக்கேற்றி வைத்துவிட்டு வாசலின் முகப்பில் ஒரு தீபமும் ஆலம் கரைத்து வைத்து பிள்ளையை தூக்கி கொண்டு செல்வர் . சுவாமி அம்பு இட்டபின் அனைவருக்கும் தங்கள் பிள்ளைகளை தூக்கிகொண்டு அம்பு போடுபர் (பிள்ளையின் கையில் அம்பை கொடுத்து பெற்றோர் குழந்தையின் கையை பிடித்து அந்த வாழை மாரத்தில் குத்திவிட்டு அந்த வாழை மரத்தில் இருந்து சிறிது நாரை எடுத்தும் வன்னிமாரத்தில் இருந்து சிறுது இலையை எடுத்து அந்த அம்பின் முன்பு கட்டிவிடுவர் .

அம்புடன் பிள்ளையை கொட்டகையில் உள்ள சுவாமியை தரிசித்து விட்டு வீடு திரும்புவர் .வீட்டில் வாசலில் பெற்றோரும் குழந்தையும் நிற்கசெய்து ஆலத்தி எடுத்தி வீட்டிற்குள் பிரவேசித்து . படைக்கும் வீட்டில் சென்று அம்பை வைத்து வழிபாடுசெய்வர் .செட்டிநாட்டில் தாய்க்குத் தலைமகன் அம்பு போடுதல் விசேஷம். “ என்னப்பா, தாய்க்குத் தலைமகன், எண்ணெய் தேய்ச்சுக் குளிச்சுட்டு கசாப்புக் குழம்பு சாப்பிட்டு அம்பு போடப் போகலையா ?” என்று கேட்டபர் இந்த நிகழ்வுகள் 2௦ முதல் 3௦ வருடகளுக்கு முன்பு வரை சிறப்பாக அணைத்து நகரத்தார் இல்லங்களிலும் நிகழும் . தற்போது இந்த நிகழ்வு குறைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- ஆ.தெக்கூர் கண.இராம.நா.இராமு

No comments:

Post a Comment