Thursday 11 September 2014

கொழும்பு நாட்டுகோட்டை நகரத்தார் கோயில் ஆடிவேல் பூசை

கெட்டாலும் செட்டி! கிழிந்தாலும் பட்டு! என்பதைப்போல நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் வர்த்தகத்தில் சிறப்புற்று விளங்கியதோடல்லாமல் வழிபாட்டுத் தலங்களை அமைப்பதிலும் தனியிடம் பிடித்தவர்கள்.

தமிழகத்தின் செட்டி நாட்டிலிருந்து 1790 ஆம் ஆண்டு வர்த்தக நோக்குடன் இலங்கைக்கு வந்த நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் தமது சொந்தச் செலவில் நாட்டின் பல நகரங்களில் கோயில்களைக் கட்டி நிர்வகித்து வந்தார்கள். செட்டியார்கள் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த கொழும்பு, காலி, கதிர்காமம், கண்டி, திருகோணமலை, மாத்தளை, யாழ்ப்பாணம், கம்பளை, இரத்தினபுரி, குருணாகல், புசல்லாவை, நாவலப்பிட்டி, நீர்கொழும்பு, மாதம்பை, புத்தளம் ஆகிய நகரங்களில் கோயில்களை அமைத்தார்கள்.
பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சிக் காலத்தில் நாட்டுக் கோட்டைச் செட்டியார்கள் கதிர்காமக் கந்தன் ஆலய உற்சவத்திற்காகக் கொழும்பிலிருந்து வருடா வருடம் யாத்திரை சென்று வந்தார்கள்.

1874 ஆம் ஆண்டு காலரா நோய் பரவியதன் காரணமாக கொழும்பிலிருந்து கதிர்காமத்திற்கு யாத்திரை செல்வதற்கு பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் தடுத்துவிட்டனர். இதனால் அந்த ஆண்டு பழைய கதிரேசன் ஆலயத்தில் கதிர்காமக் கந்தன் உற்சவத்தை நடத்தத் தீர்மானித்தார்கள் நாட்டுக்கோட்டை நகரத்தார். இதுதான் கொழும்பில் ஆடிவேல் பிறந்த வரலாறு.

கொழும்பு செட்டியாளர் தெருவில் 1939 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட ஸ்ரீ புதிய கதிரேசன் ஆலயம், முதலாம் குறுக்குத் தெரு சம்மாங்கோடு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்துடன் இணைந்து ஆடிவேல் விழாவினை நடத்துகிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக 1983 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆடிவேல் விழா பக்தர்கள் மத்தியில் இன்னமும் மறக்க முடியாத காட்சியாக இருக்கின்றது.

‘செட்டியார் தெரு புதிய கதிரேசன் ஆலயத்திலிருந்து பம்பலப்பிட்டி பழைய கதிரேசன் ஆலயத்திற்குச் சென்ற வெள்ளி ரதம் 1983 யூலை 24 ஆம் திகதி இரவு மீண்டும் ஆலயம் திரும்புவதற்காக கொள்ளுப்பிட்டி வரை வந்துகொண்டிருக்கிறது. வர வர உடன் வந்த பக்தர்கள் சிறிது சிறிதாகக் காணாமற் போகிறார்கள். பின்னர்தான் தகவல் கிடைத்தது.

பொரளை மயானத்தில் இராணுவ வீரர்களின் இறுதிக் கிரியைகளில் கலந்துகொண்ட சில குண்டர்கள் கலவரத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று. உடனே வெள்ளி ரதத்தை மீண்டும் பம்பலப்பிட்டிக்கே கொண்டு சென்றனராம்  அன்றிரவு வானொன்றில் சுவாமிச் சிலையைக் கொண்டு சென்றனராம். ஒரு வாரம் கழித்து ரதத்தைக் கொண்டு வரப்பட்டதாம் .’

நம்மவர்களால் சிறப்பாக நிகழ்த்த பட்ட இந்த விழா மிகவும் சிறப்பாக நிகழ்ந்து வருகிறது


ஆடிவேல் பூசை ஆடி மாதத்தில் வரும் பௌர்ணமி நாளில் முருகன் தேரில் பவனி வருவார் முருகனின் திரு உருவுடன் அவரது கைவேலும் தேரில் வைத்து பவனி வருவர் .இங்கு ஆடி வேல் பூசை பழைய கதிர்வேலாயுதசுவாமி மரத் தேரிலும் புதிய கதிர்வேலாயுதர் வெள்ளித் தேரிலும் பவனி வருவார் . மாசி மகத்தின் போது நம் சென்னை மண்ணடி பவளக் காரத்தெருவில் உள்ள பழைய தன்னடாயுதபாணி புதிய தண்டாயுதபாணி வளம் வருவது போல் இங்கும் பழைய புதிய என இரண்டு முருகன் உள்ளனர் . இங்கு உள்ள வெள்ளித் தேரின் வயது 140 இந்த தேர்

1983வரை இந்த விழா தொடர்ந்து மிகவும் கோலாகலமாக நிகழ்த்து வந்தது .கரகாட்டம் , காவடியாட்டம் , மயிலாட்டம் , போன்ற நிகழ்சிகளுடன் நிகழும் .1983 ஆம் ஆண்டு விழாவின் இரவு ஊர்வலத்தில் ஏற்பட்ட இனக் கலவரத்திற்கு பின் இந்த விழா 1983க்கு பின் நிகழ வில்லை. இந்த விழா 1993, 2002, 2004 ,2010 ஆண்டுகளில் விழா நடைபெற்றிருக்கிறது. பின் 2012 பின் இந்த விழா இலங்கையின் தேசிய விழாவாக அறிவிக்கப்பட்டு(சுற்றுலா துறையில் வருமானம் குறைந்ததால் தேசிய விழாவாக அறிவிக்கப்பட்டது) . நிகழ்ந்துவருகிறது. இந்த ஆலயம் இலங்கையின் தலைநகராம் கொழும்புவில் உள்ளது . இது சிங்களவர்கள் அதிகம் உள்ள பகுதி .

வண்ண அலங்காரத்தில் யானை

தீவட்டி பிடிக்கப்படுகிறது 

தேரில் பவனிக்கு வரும் புதியகதிர்வேலாயுதர் 

வள்ளி தெய்வானையுடன் புதியகதிர்வேலாயுதர் 

புதியகதிர்வேலாயுதர்  தேரில் பவனி வரவுள்ள காட்சி 

தேரின் மீதுள்ள கலைவெளிப்பாடுகள்














மேலே உள்ளவை புதிய கதிர்வேலாயுதர் வெள்ளித்தேரில் பவனிவந்த காட்சிகள் கிழே உள்ளவை பழைய கதிர்வேலாயுதர் ஆலய பழைய கதிர்வேலாயுதர் மரத்தேரில் பவனி வந்த காட்சி












No comments:

Post a Comment