Thursday 16 April 2020

கழுத்துரு / கழுத்திரு

கழுத்துரு / கழுத்திரு 
 
நாட்டுக்கோட்டை நகரத்தார்களின்  திருமங்கலநாண்  (தமிழில் தாலி வடமொழி கலப்பில்   திரு மாங்கல்யம் ) கழுத்துரு அல்லது கழுத்திரு எனப்படும்.

மணமகளின் கழுத்தில் உருக்கொண்டிருப்பதால் கழுத்துரு 

மணமகளின் கழுத்தில் 
திருவாக இருப்பதால்   கழுத்திரு  

மணமகளின் கழுத்தில் மணமகன் திருவாகிய திருமங்கலநாணை, கடைமணிகளில்   இருந்து வரும் புற (வெளி) அக (உள்) நாண்களின்(தாலிக்கயிறுகளின்) இருமுனையையும்     குச்சி,, தூம்பு(தும்பு ) இடை,,  துவாளை(தூவாளை);  இட்டு  பூட்டுவதால் திருப்பூட்டுதல்.

இலக்குமி ஏத்தனம் -௧ 1 
ஏத்தனம் -௪ 4 திருமங்கலம்(திருமாங்கல்யம்)-௧ 1 
உரு. ௧௯ 19 ,
சரிமணி. ௪ 4 
கடைமணி   ௨ 2 
துவாளை(தூவாளை) ௧ 1 ,
 குச்சி;;;;; ௧ 1 ,
தும்பு (தூம்பு) ௧ 1 
ஆக,, திருமங்கல நாணின் உருப்படிகள்(பாகங்கள்)௩௪ 34.

 முப்பத்திநான்கின் தமிழ் பெயர் விளக்கமும் பின் அதன் வடிவமைப்பின் உள் பொதிந்த செய்தியும்காண விழைந்ததன் விளைவு.

இலக்குமி ஏத்தனம். ௧ 1

நகரத்தார் ஆசிவகம் ,,சமணம்,,சைவம் ஆகியவற்றை பின்பற்றி வந்து இன்று சைவத்தில் நிலை கொண்டுள்ளார்கள். ஆசிவகத்தில் வந்த இருயானை நான்கு கைகளுடன்கூடிய இலக்குமியே அவர்தம் இல்லங்களின் நுழைவாயிலிலும்,,முகப்பு,சாமி வீட்டு நிலைகளிலும் இருக்கும் .இது இலக்குமியை ஈர்க்கும் கருவியாகும். எனவே இது மணமகன் செய்யும் வணிகத்தில்,, இலக்குமியை ஈர்க்க புறநாணில்(வெளிக்கயிற்றில்) நடுவில் சேர்க்கப்பட்டுள்ளது.

 ஏத்தனம். ௪ 4

இச் சொல்லுக்கு தமிழ் அகராதியில் கருவி,,பாத்திரம் என இருபொருள் கொடுக்கப்பட்டிருக்கிறது.புறநாணில்(வெளிக்கயிற்றில்)உள்ள இரு ஏத்தனம் மணமகனின் கைகளையும்,, அக நாணில் (உள்கயிற்றில்) உள்ள இரு ஏத்தனம் மணமகளின் கைகளையும் குறிக்கின்றன .

திருமங்கலம் (திருமாங்கல்யம்) ௧ 1

இது அக நாணில் (உள்கயிற்றில்) நடுவில் வருமாறு அமைக்கப்பட்டிருக்கிறது.இதன் வடிவமைப்பு வள்ளுவரின் ///// மங்கலம் என்ப மனைமாட்சி/////என்பதை காட்டுவதுபோல் வீட்டின் கடகால் (அஸ்திவாரக்கால்) இரண்டு ,, வாசல்,, கூரைஆகியவற்றோடு நீள் சதுரமாக வீடு வடிவில் ,, வாசலின் உள்நோக்கினால் இலக்குமி இருப்பதாக இருக்கும் .

௧௯ 19 ,

உரு = வடிவம். நிறம், பாட்டு, அச்சம், பொருள், மந்திரம் என தமிழில் பொருள் கூறப்பட்டுள்ளது.மேலும் /////உரு ஏற திரு ஏறும் திருமூலர்///// திருமந்திரம் இயற்றிய சித்தர் வாக்கு,,இப்படிப்பட்ட உரு ௧௧ 11 புறநாணில்(வெளிக்கயிற்றில்) ௮ 8 அக நாணில் (உள்கயிற்றில்) அமைக்கப்பட்டிருக்கும் .

சரிமணி. ௪ 4 ,

இது வலம்,இடம்  பக்கத்திற்கு இரண்டாக அக நாணிலும்,,புறநாணிலும் கடைமணி நடுவிருக்க  அமைந்து,,  இருநாணும் சரிந்து உரசிக் கொள்ளா வண்ணம் பார்த்துக்கொள்ளும் பணியை செய்வதால்,, இது சரிமணி எனப்படுகிறது.

கடைமணி  ௨ 2 ,

இது அக ,புற நாண்களின் கடைசியில் வலம் இடம் பக்கத்திற்கு ஒன்றாக  அமைவதால் கடைமணி எனப்படுகிறது.

துவாளை(தூவாளை) ௧ 1

புறநானூறு - 334. தூவாள் தூவான்!

பாடியவர்: மதுரைத் தமிழக் கூத்தனார்
திணை: வாகை 
துறை : மூதின் முல்லை 

காகரு பழனக் கண்பின் அன்ன
தூமயிர்க் குறுந்தாள் நெடுஞ்செவிக் குறுமுயல்,
புன்றலைச் சிறாஅர் மன்றத்து ஆர்ப்பின்,
படப்புஒடுங் கும்மே.. .. .. .. பின்பு .. .. ..
.. .. .. .. .. .. னூரே மனையோள்5பாணர் ஆர்த்தவும், பரிசிலர் ஓம்பவும்,
ஊணொலி அரவமொடு கைதூ வாளே;
உயர்மருப்பு யானைப் புகர்முகத்து அணிந்த
பொலம் .. .. .. .. .. .. .. ப்
பரிசில் பரிசிலர்க்கு ஈய,10உரவேற் காளையும் கைதூ வானே. 

மன்றத்தில் விளையாடும் சிறுவர்களின் ஆரவார ஒலியைக் கேட்டதும் முயல் படப்பையில் ஒடுங்கிக்கொள்ளுமாம். அந்தச் சிறுவர்கள் விளையாட்டு மண்டை கொண்டவர்கள். முயல் பழனத்தில் விளைந்திருக்கும் கண்புப் புல் போன்ற மயிரினை உடையது. மனையோள் உணவு வழங்கும் அரவம் பாணரின் வயிற்றுப் பசியைப் போக்குவதாலும், நாடி வந்தவர்களுக்குப் பரிசில் வழங்குவதாலும் உணவு உண்ணும் அரவ ஒலியை உண்டாக்கும் மனைவி அந்த அரவ ஒலி உண்டாக்குவதைக் கைவிடவே மாட்டாள். காளை வழங்கும் அரவம் அந்த மூதில்லில் வாழும் காளை பகையரசன் யானையை வீழ்த்தி அது அணிந்திருந்த ஓடைப் பொன்னைத் தன் அரசனிடமிருந்து பரிசிலாகப் பெற்றுவந்ததைத் தன்னிடம் பரிசில் நாடி வந்தவர்களுக்கு வழங்குவதைக் கைவிடமாட்டான். 

தூவாளே என்ற சொல் பற்றிக்கொள்ளும் (பூட்டிக்கொள்ளும்) என்பதை குறிக்கிறது,,இதிலிருந்து தூவாளை    பிறந்து,,துவாளை என்று,,இந்த அணிகலன் பெயரும்  அதிலிருந்து மருவியிருக்கலாம்  ஏனெனில் இருநாணும் சேரும் இடத்தில் பூட்டின் அமைப்பை செயலாக்கும் மூன்றில் ஒன்றாக இது  இருக்கிறது.

குச்சி ௧ 1 ,

கழுத்துருவின்,,பெண்கழுத்தின் வலது நாணின் நுனியில் துவாளை,,இடது நாணின் நுனியில் குச்சி கட்டப்பட்டிருக்கும் .பருமனில் மிக்க குறைந்த கோலின் வடிவு குச்சி .

தும்பு (தூம்பு) ௧ 1

தும்பு எனில் தமிழில் நார்,,கயிறு ,என்றே பொருள் சொல்லப்பட்டிருக்கிறது தூம்பு என்பதற்கு குழாய் வடிவமுள்ள இசைக்கருவி,,நீர்த்தாரை ஆகியன குறிக்கப்படுகிறது.இந்த அணிகலன் நடுவில் குழாய் போன்றே வருகிறது எனவே இது தூம்பு ஆக இருந்து,,அதனுள் தும்பு (கயிறு) நுழைக்கப்படுவதால் நாளடைவில் மருவி தும்பு ஆகிவிட்டது.

உள்ளார்ந்த பொருள் ,செய்தி,தத்துவம் 

புறநாணில்(வெளிக்கயிற்றில்)
வணிகனின் இல்வாழ்க்கையில்,, வணிகம் சார்ந்த புற (வெளி)பணிகளை வணிகனான  மணமகன்,, இலக்குமி ஏத்தன(கருவி)துணையை  மனதில் உரு ஏற்றி,, பல உருவாக தன் இரு கைகள் எனும் ஏத்தனத்தால்(கருவியால்),, அறவழியில் செய்து திருவை (பொருளை) ஈட்டுதல்.

அக நாணில் (உள்கயிற்றில்)
மணமகள் கணவன் ஈட்டிய திருவை (பொருளை) தன் இருகை ஏத்தனம் (பாத்திரம்)கொண்டு சிந்தாமல் சிதறாமல் பெற்று அதை பல உரு ஆக்கி திருமங்கல (திருமாங்கல்ய)    இலக்குமியாய் அகத்தில் என்றென்றும் கொலு வீற்றிருப்பது..

கழுத்துருவில் அகம் புறப் பணிகள் யார் யாருடையதென தெளிவு படுத்தப்பட்டதுடன் -புறத்தில் ஆண் நாண்,, அகத்தில் பெண் நாண்,, என அமைத்ததும் மிக அறிவார்ந்த ஒன்று.

ஆண்,,பெண் இருபாலர் குறியீடாக கழுத்துரு (திருமங்கலமாகிய திருமாங்கல்யம்) இருப்பது ,,நம் முன்னோரின் சம பார்வையை அறிவுத்திறனை வெளிப்படுத்துகிறதன்றோ!! !!!!!

மேலும் நிறைவாக 
தற்காலத்தில் குச்சி ,,தும்பு,,துவாளை மூன்றும் திருப்பூட்டுதலின் போது கழுத்துருவில் இணைக்காமல் மணமகன் மூன்று முடிச்சை போடுகிறார்,,பின்னர் இம் மூன்றும் இணைக்கப்படுகிறது.

கழுத்துரு எனப்படும் கழுத்திரு பண்டைய காலங்களில்,, முன்பு கடற்கரை நகரமான பூம்புகார் போன்ற இடங்களில் வாழ்ந்தபோது இயற்கை பொருட்களான,,நண்டின் கால்களை பதப்படுத்தியும்,,முத்து,,பவளம் சேர்த்தும் செய்ததாகவும் பின்னர் உலோகங்களான-வெள்ளீயம்,,பித்தளை,,வெள்ளிக்குமாறி,,தற்போது நூற்றாண்டுகளுக்கு  மேல் தங்கத்தில் செய்துவருவதாகவும் இனப் பெரியவர்களால் சொல்லப்படுகிறது.

---இராமு இராமநாதன்.இராம.நா 

No comments:

Post a Comment