Wednesday 22 July 2015

நகரத்தார்களின்___இன்றைய_நிலையும் அதன் ___உண்மை____நிலைமையும்


#நகரத்தார்கள் பழைய வீழ்ச்சிக்குப் பின் மீண்டும் எழுந்துவிட்டார்கள், வசதியாக உள்ளார்கள். இப்படி நகரத்தார்களில் சிலர், இல்லை, இல்லை பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றாகள். இப்படிப்பட்ட ஒரு பொய்யான மாயையில் அவர்கள் தங்களை தாங்களே சமாதானம் செய்துகொள்கின்றார்கள். ஏன் இப்படி ஒரு உளவியல் சிக்கல் இன்றைய நகரத்தார்களிடம் உள்ளது ???

நகரத்தார்கள் 
காரணம், தங்களின் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கையின் உண்மை நிலை உணரும் நிலையிலோ அல்லது உணர்ந்த நிலையிலோ இன்றைய தலைமுறையினர் இல்லை. கூடுதல் காரணம் தங்களின் உண்மை வரலாறு கூட இவர்களுக்குத் தெரியாது. நம் ஐயாக்களின் பழைய வாழ்க்கை பொருள் பொதிந்ததாகவும், வெறும் பொருள் தேடுவது மட்டுமே நோக்கமானதாகவும் இல்லவே இல்லை. அவர்களின் நெடிய பண்பாட்டு மரபு, சிக்கனம், எந்த சூழ் நிலையினையும் எதிர்கொள்ளும் மனப்பக்குவம். காலவோட்டத்தில் மாற்றங்களையும் பண்பாட்டின் நுட்பமும், மரபுவழி தமிழர்களுடன் இனைந்து, இயைந்து செல்லும் தன்னுனர்ச்சியும் கொண்டிருந்தார்கள். நமது ஐயாக்கள் செய்த தொழில், சேர்த்த செல்வம் எதிலும் ஒருவரையறையும், அடையாளம் பாதுகாக்கும் உணர்வும் தொட்டுத் தொடர்ந்தது. அது பெயர் வைப்பதிலும் சரி, வீடு கட்டுவதிலும் சரி, தொழில் செய்யும் போதும் - தன்னுடன் யார் உள்ளார்கள், தாம் யாருடன் உள்ளோம் என்று விழிப்பும் இருந்தது இன்றைய தலைமுறை மறந்த ஒன்று. 

எல்லாவற்றிகும் மேல் சுருக்கமாக நான் சொல்ல வருவது :-தரையில் இருந்து #முப்பதாயிரம் அடி உயரத்தில்#வானூர்தியில் ஒய்யாரமாகப் பறந்த ஒருவன்#திடீர் என கீழே வாநூர்த்தியுடன் நொறுங்கி வீழ்ந்த பின் உயிர் தப்பியவுடன்,#வானூர்தியின்______சக்கரங்களை எடுத்து நிமிர்த்தி கைகளால்#உருட்டிக் கொண்டு - நான் மீண்டும் அதே நிலைக்கு வந்துவிட்டதாக #நினைப்பது என்பது எவ்வகையோ .....??? அதுதான் இன்று சில பல இளைஞர்கள் பன்னாட்டு கார்ப்பறேட்டுகளிடம் சில ஆயிரம் டாலர்களில், தங்கள் வாழ்க்கை இனிதே பயணிப்பதாக நினைப்பதும். ஆகவே நமது உண்மை நிலையினையும், இன்றைய நிலையினையும் ஒப்பீட்டு அளவில் கூட நினைக்க முடியாதது. 

காரணம் அன்று நகரத்தார்கள் சிறு வணிகக் கடன் வழங்கும் முறைகளிலும் கூட தங்களுக்கான நியமங்களை வகுத்து, அவர்கள் செல்லும் பட்டி தொட்டிகளிலும் தங்கள் வருவாயில், நீராதாரம் பெருக்கி, உள்ளூர் மக்களின் பாதுகாப்பில் வாழ்ந்தனர். இன்று நமக்கு கொடுக்கப்பட்ட அடிக்குப் பின் தமிழ் நாட்டில் அரசியல் ஆதரவுடன் களமிறங்கிய வடுக மலையாளிகளிடம் நமது தமிழக மக்கள் மனப்புரத்தில் மனசாட்சியினை தொலைத்து, முதூட்டில் முட்டி விழி பிதுங்கி நிற்கும் போது பாதுகாப்பின்றி நிற்கின்றனர். இதுகுறித்த விழிப்புணர்ச்சி என்பது சிறிதும் இல்லாத நிலையில் அரசியல் தலைமை இல்லாத இனமாக ஒட்டுமொத்த தமிழர்களும் இருக்கும் போது, நிலைமை சீர் செய்ய மீண்டும் ஓர்மையுடன் நமது மரபு வழி இனக் குழுக்களுடன் கை கோர்க்க வேண்டும். இது அனைத்து தமிழர்களுக்கும் பொருந்தும். இந்த சிந்தனை மனதில் எழாமல் வடுக நாயர்களும் நகரத்தார்கல்தான், நல்லிகளிடம் நெல்லி எலும்பைத் தேடும் பதர்களும் நகரத்தார்கள்தான் என்று நினைத்தால், சுய அடையாளம் இழந்து மாற்றார் வஞ்சத்தில் கரைந்து நீர்த்துப் போக நேரிடும் என்பதை அனைவரும் மனதில் வைக்க வேண்டும்.

---- நெற்குப்பை காசிவிசுவநாதன். 21-07-2015 .

No comments:

Post a Comment