Sunday 27 November 2016

நகரத்தார்களும் வங்கித்தொழிலும்


நகரத்தார்கள் பர்மாவில் இருந்து முடக்கப்பட்டு பின்னர் வெளியேற்றப்பட்டனர்.
இதற்கு பல காரணங்கள் உண்டு.
1. முதலில் தொழிலில் போட்டியிட முடியாத குஜராத்திகளும் - ராஜஸ்தான் மார்வாடிகளும்.


2.அணித்தமாக இருந்த வங்காளிகளை விட தமிழ் வணிகர்களான நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் மக்களிடம் கொண்டிருந்த செல்வாக்கு.
3. சீனர்களும், அமெரிக்க வங்கிகளும் தமிழ் வணிகர்களின் வங்கித்துறையுடன் போட்டியிடாமல் ஒதுங்கி கொண்ட நிலையில் -- பிரித்தானிய அரசிற்கும் நகரத்தார்களுக்கும் ஏற்பட்ட பூசல் (இரண்டாம் உலகப்போர் )

மேற்ப்படி காரணிகளைக் கண்டறிந்து அதற்கு தோதாக விடுதலைபெற்ற பர்மா மன்னருடன், நேரு காங்கிரஸ் கைகோர்த்து செய்யப்பட்ட செயல்வடிவம் கொடுத்து முடிக்கப்பட்டதே நகரத்தார் வெளியேற்றம்.
ஆனால் இன்று நாம் நினைப்பது போல குஜராத்திகளின் வலைப்பின்னல் அப்படியானது அல்ல. குஜராத்திகள் அரசாங்கத்திற்கு எதிரானவர்கள் அல்ல. மக்களுக்கு எதிரானவர்கள். ஆகவே தான் மோடி பதவிக்கு வருவதற்கு முன்னரே குஜராத்திகள் வங்கிகள் இந்தியாவை ஆளத்துவங்கி விட்டன.
சுருக்கமாக சொல்லப்போனால் எமர்ஜன்சி காலத்தில் இந்தியாவில் எஞ்சியிருந்த நகரத்தார் வங்கிகளை நாட்டுடைமையாக்கியதும், வங்கிகள் கொண்டு மக்களை சுரண்டுவதற்கும் உள்ள செயல்திட்டம் வெளிப்படும்.
இன்று வங்கிகளை வைத்து நாட்டிற்கு பொருள் ஈட்டுவதை விட வங்கிகளே அதன் உரிமையாளர்களே நாடாள்வது என்ற கருத்தியல் செயல்வடிவம் கொண்டுள்ளதை நாம் உணர வேண்டும்.

27-11-2016.
வேணும் அருள்மிகு பொய்சொல்லா மெய்யர் துணை.
நெற்குப்பை காசி விசுவநாதன்.
" வரலாற்றில் விழிப்பு ; எதிர் காலத்தின் மீட்பு "

No comments:

Post a Comment