Monday 28 November 2016

#மூதாதையர்__வழிபாடும் -- #தென்புலமும்.



தென் புலத்தார் என்பது தமிழர் வாழ்வியலில் மூதாதையர் அல்லது 

இறந்தோர் என்பதே பொருளாகும். 

 தமிழர் வாழ்வியலும், வாழ்முறையும் நிலம் சார்ந்த ஒன்று. 



அந்த வகையில், ஒவ்வொரு ஊரின் தெற்கேயும் ஈம முறைமைகள் செய்வதற்கான புலம் (இறந்தவர்களுக்கான இடம் ) தெரிவு செய்யப்படும். அதுவே இடுகாடு / சுடு காடு என்பதாகும் . 



தமிழர்களின் ஒவ்வொரு ஊரின் தெற்கு எல்லையிலும் இவை இருக்கும் .
 ( TOWN PLANNING OF TAMILS ) தெற்கு - தென் திசை என்பது ஒரு வாழ்விடத்தின் -- அந்த ஊரின் தென் பகுதியே ஆகும். அங்கே தங்கள் மூதாதையர் உள்ளனர் என்பதும் ஒரு குறியீடு. தென்புலம் என்பதற்கு வேறு பொருள் இருப்பதாகத் தெரியவில்லை. ஐயன் வள்ளுவர் கடவுள் என்று யாரையும் குறிப்பிடவில்லை. தெய்வம் என்பதே அவர் குறிப்பிடும் சொல். தெய்வம் என்பது வணங்கப்படுவது. 




அதுவே வடமொழி என்று கூறப்படும் பாகத்தில், பாழி , சம்கிரிதம் ஆகியவற்றில் தெய்வம் - தெய்வதா - தேவதா - அதிதேவதா - இஷ்ட தேவதா - தேவா - தேவ் என்பது வரை நீட்சி பெற்றது. இது தவிர இறந்தவர்களுக்கு உடன் செய்யப்படும் கடமைகள் வேறு. இது உடல் அடக்கம், குடும்பத்தினர் ஒன்று கூடல், துயரப் பரிமாற்றம், ஆறுதல் , பண்பாட்டு சடங்குகள் ஆகியவை. 

ஆனால் இறந்தவர்களை நினைத்து ஆண்டுகள் கழித்து செய்யப்படும் திதி முதலிய கிரியையைகள் என்பன தமிழர் வழக்காக இருந்ததில்லை. காரணம் படைப்பு - படையல், மூதாதையர் வழிபாடு ஆகியன வேறு. 

 

புரோகிதரை அழைத்து வந்து இல்லாத ஊருக்கு வழிதேடுவது என்பது வேறு. ஆனால் பலவற்றில் மக்கள் ஈடுபாட்டுடன் பண்பாட்டிலும் நுழைத்துவிட்டனர். இதனை மெதுவாகவே தெளிவிக்க முடியும். அதற்கும் மேலாக சைவ நெறியான சிவஞான போதம் விளக்கவுரை எழுதிய அண்ணல் சிதம்பரனார் திதி கொடுப்பதை எதிர்க்கின்றார். 



அது தேவையற்றது என்றும் திடமாக வாதிடுகின்றார். மக்களின் ஆசை போகும்வரை வேண்டுமானால் ஸ்மார்த்தாவை விடுத்து, ஆதி சைவர்களை வைத்து செய்யலாம் என்ற கருத்தினை முன் வைக்கின்றார். 

27-11-2016 
வேணும் அருள்மிகு பொய்சொல்லா மெய்யர் துணை. 
நெற்குப்பை காசி விசுவநாதன். 
" வரலாற்றில் விழிப்பு ; எதிர் காலத்தின் மீட்பு

No comments:

Post a Comment