Wednesday 30 November 2016

மண்ணுக்கேற்ற மார்க்சீயம் போல மண்ணுக்கேற்ற மதம் என்பதும் வந்துவிட்டது.


மண்ணுக்கேற்ற மார்க்சீயம் போல மண்ணுக்கேற்ற மதம் என்பதும் வந்துவிட்டது. மதத்தைக் கொண்டு உலகாள வேண்டும் என்ற சிந்தனையே தவறு. அது பண்பாட்டை, மரபினை பிறர் மேல் திணிப்பதாகும்.




அதனை தமிழன் தன் இனத்தின் மீதே திணித்ததில்லை.
ஆனால் நமக்கான மெய்யியல் ஒன்று இயக்க நடையில் தன்மாற்றம்
 பெற்று வருவதையும் நாம் உணர வேண்டும்.
இன்று இருக்கும் ஒரு நிலையினை வைத்து அன்று நடந்தவைகளை யூகிக்கவும் முடியாது.



அதற்கும் மேலாக ஆரியன் எதை நம்மிடம் இருந்து திருடினான்,
எதை பட்டா மாற்றினான் என்பதெல்லாம் தகுந்த வாழ்வியல் நடைமுறைகளில் கண்டறியவேண்டும்.

தமிழர்களின் மெய்யியல் அறம்சார்ந்து உளம்சார்ந்து ஏதோ ஒரு வகையில் நம்முடன் பயணிக்கின்றது.




இன்று நமக்குத் தேவை இன அடையாளம், அதற்கான ஓர்மை, அரசியல் வலிமை, மொழி ஆளுமை ஆகியவைகளே. இவைகளை உறுதி செய்தபின்னர் மெய்யியல் விளக்கம் தேடுவது சாலச் சிறந்தது.

நமது பண்பாட்டில் பலவகையான ஊடக தாக்குதல் நடந்த வண்ணம் இருக்கின்றது. நமது குடும்ப வாழ்வியல் முறைகளை வடுகர்கள் கலசம் கலக்கி குழப்பம் விளைத்து சுக்கு சுக்களாக கட்டுடைக்கின்றனர்.





இவற்றிற்கான பாதுகாப்பை உறுதி செய்வோம். அரசியல் வலிமை பெறுவோம். அனைவரும் அமர்ந்து மெய்யியல்,வாழ்வியல் முறைமைகளை சீர்மை செய்வோம். அதுவரை அரசியல் வலிமையே நமது முதன்மை என்பதை உணருங்கள்.


வேணும் அருள்மிகு பொய்சொல்லா மெய்யர் துணை.
நெற்குப்பை காசி விசுவநாதன்.
" வரலாற்றில் விழிப்பு ; எதிர் காலத்தின் மீட்பு "

No comments:

Post a Comment