Sunday 27 November 2016

#வங்கித்துறையும் #தமிழர்__ஆளுமையும்.



ஒரு காலத்தில் வங்கித் தொழிலில் பிரிடிஷ் இந்தியாவின் காலத்தில் இருந்து, இந்திரா காங்கிரஸ் எமர்ஜன்சி காலம் வரையிலும் கோலோச்சியவர்கள் தமிழர்களே.

இந்தியர்கள் ஆரம்பித்த வங்கிகளில் அதிகமாக வெளிநாட்டில் கிளைபரப்பிய சாதனை தமிழர்களுக்கு மட்டுமே.
இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, செட்டிநாடு பாங்கிங் கார்ப்பரேஷன், சிலோன் வங்கி, மதுரை வங்கி லிமிடட்ஆகியவை.



 தெற்காசியாவில் கால்பதிக்காத நாடுகள் இல்லை.
பர்மாவில் 1920 களில் சிட்டி சார்ட்டட் பாங்க் எனப்பட்ட இன்றைய சிட்டி பாங்க் ( அமெரிக்கனுடைய அதே வங்கி ) டெல்லி வைசிராயிடம், ஒரு ஒப்புதல் பத்திரத்தையே கொடுத்துவிட்டு தங்கள் வங்கிகளை மூடிச் சென்றனர்.
அதாவது, தமிழ் வணிகர்களான நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் எளிமையான வங்கிப் பரிவர்த்தனை முறைகளும், சிக்கனமான வாடிக்கையாளர் அணுகுமுறையும், அவர்களின் துரித சேவைக்கும் நிகரான வங்கித்துறை சேவையினை எங்களால் கொடுக்க முடியவில்லை என்பதே அந்த சாசனம்.

அதாவது, இரவு பகல் எந்த நேரமும் வங்கியில் பணம் பெறலாம், கொடுக்கலாம் என்ற நிலையினை நகரத்தார்கள் அங்கே ஒழுங்கு முறை செய்திருந்தனர்.

அதற்கும் மேலாக வாடிக்கையாளர்களிடம், எளிய தவணை, அல்லது சேவைக்கான எளிய விலை ஆகியவற்றை நடைமுறையில் கொண்டிருந்தனர். எல்லாவற்றிக்கும் மேலாக வெவ்வேறு சிறு / பெரு நகரத்தார் வங்கிகளில் உள்ள வட்டி விகிதத்தை ஒழுங்கு முறை செய்ய தெரிவு செய்யப்பட்ட நகரத்தார்கள் சங்கத்தில் கூடி வட்டி விகிதத்தை உறுதி செய்வார்கள்.



அதனையே வரைமுறையாகக் கொண்டு அணைத்து வங்கிகளும் நடந்தமையால் அங்கே வட்டி விகிதத்தில் ஏற்ற தாழ்வு அல்லது நெருக்கடி காலங்களில் கடன் நிலுவைக்கான கால அவகாசம் ஆகியவற்றை
நெறிப்படுத்தினர்.

ஆனால் சிட்டி வங்கி 9 டு 5 என்ற அலுவல் நேரம், வட்டி விகிதத்திலும், ஈடு வைக்கும் பொருளிலும் சமநிலை இல்லாமை ஆகியவை கண்டு மக்கள் வரவும் இல்லை. இதனை அடுத்தே அவர்கள் அன்றே கடை கட்டினர்.
மேற்படி ஒழுங்கு முறையே பின்னர் இம்பீரியல் வங்கியும் தனதாக்கிக் கொண்டது.

இன்று தமிழ் நாட்டில் தமிழர்களிடம் ஏதேனும் வங்கிகள் உள்ளனவா ?? ஒன்றே ஒன்று நாடார் சமூக மக்களால் நடத்தப்படும் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி மட்டுமே.

காரணம் அவர்களின் ஒற்றுமையும், அந்த சமூகத்தினரின் ஒட்டு வங்கியுமேதான். அந்த அளவில் இன்று தமிழர்கள் வசம் உள்ள ஒற்றை வங்கி அதுமட்டுமே.



மற்றபடி சிறு வங்கிகள் முதல், சிட்பண்ட்ஸ் எனபப்டும் சிறு முதலீட்டு சேமிப்பு முறைகளும் கூட முற்று முழுதாக வடுகர் வசமே.
காரணம் அரசியல் தலைமையும், நிர்வாக எந்திரமும் முற்று முழுதாக வடுகர் வசம்.

முத்தூட் / மனபுரம் போன்ற வடுக நாயர்வகை மலையாளிகள் செழித்து கொழிப்பதற்கு காரணம், இங்கே உள்ள நகரத்தார்கள் சிறு வணிகக் கடன் கொடுத்து வந்த வட்டிக்கடைகள் ஒடுக்கப்பட்டு, அவர்களை அந்த இடத்தில இருந்து அகற்றியதே.

இதனால் சிறு வணிகள் கடன் கொடுத்து வந்த நகரத்தார்கள் அந்த அந்த ஊரில் ஒரு அடகு கடை வைத்து உள்ளூர் மக்களின் ஒத்துழைப்புடன் தங்கள் வருமானம், மற்றும் மீமிகத் தொகையினை குளம் வெட்டுதல், நீர் நிலை பெருக்குதல் என்ற எளிமையான வாழ்க்கை வாழ்ந்தனர்.
அவர்களை 1970 களில் ஒடுக்கியபின்னர் இங்கே மார்வாடிகளும், கடந்த இருப்பது ஆண்டுகளாக மலையாளிகளின் மனபுரம் / முத்தூட் நிறுவனங்கள் உருட்டுக் கட்டை / நாயர் போலீஸ் சகிதமாக கோவணத்தோடு உருவிச் செல்வதை நாம் பார்த்துதான் வருகின்றோம்.

இத்தனைக்கும் ஊடாக , மேற்படி மனபுரம் / முத்தூட் நிறுவனங்களிடம் பொருக்கித் தின்று வரும் மலையாள கம்யூனிஸ்டுகள், தமிழ் நாட்டில் நாட்டுக்கோட்டை செட்டியார்களின் சுரண்டலை ஒழித்துவிட்டோம் பாருங்கள் என்று நம்மிடமே சில்லறை குளுக்குவதையும் கேட்டுக்கொண்டுதான் இருக்கின்றோம்.


ஆகவே தமிழர் வசம் மீண்டும் முதலீட்டு நிறுவனங்கள் வரவேண்டும்.
நமக்கு ஊடாக இருந்து நம்மை கட்டுடைப்பவர்கள் யார் என்ற தெளிவுடன் இனி வரும் காலத்தை நாம் எதிர்கொள்ள வேண்டும்.
நன்றி.


அன்புடன்,
வேணும் அருள்மிகு பொய்சொல்லா மெய்யர் துணை.
நெற்குப்பை காசி விசுவநாதன்.
" வரலாற்றில் விழிப்பு ; எதிர் காலத்தின் மீட்பு "

3 comments: