Monday 5 September 2016

மலேயா மண்ணில் நம்பியார்களின் கரிசனம்.


என்ன ஒரு அக்கறை பாருங்கள். புலம் பெயர்ந்தாலும் தமிழர்கள் தங்கள் சாதி பெயரைப் போடாதீர்கள் என்று சீர் திருத்தம் செய்து திரும்பிய ராமசாமி நாயுடு அப்படியே நம்பியார்களையும் கோவிந்த ராஜு நாயுடுகளையும் அங்கேயே விட்டு விட்டு வந்துவிட்டார். காரணம் நூறு ஆண்டுகள் கழித்து இங்கே எவனும் தமிழன் அடையாளத்துடன் இருத்தல் கூடாது, அதற்கு ஆகா வேண்டிய காரியங்களை செய்யுங்கள் என்பதற்கே.


அங்கே பினாங்கில் ராமசாமிகளும், நம்பியார்களும் தங்கள் சாதி அடையாளத்துடன், இல்லை... இல்லை.... தங்கள் வடுக இன அடையாளத்துடன் சதிராட்டமும், சதியாட்டமும் ஆடி வருகின்றனர். தமிழன் முதுகுப் புறத்தையும், புட்டத்தையும் பற்றிக்கொண்டு மலேயா, சாவகம் போன்ற தீவுகளுக்கு சென்றவர்கள், அந்தத் தமிழன் முதுகில் ஏறிக்கொண்டே அரசியல் அதிகாரத்தையும் கைக்கொண்டனர்.

இன்று இந்த மேற்படி வடுக சாத்தான்கள் தமிழர்களுக்கு வேதம் ஒத்துகின்றது.
நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் கட்டிய ஆலயங்களில் அவர்களே நிர்வாகம் செயகின்றனர், நிர்வாகத்தில் என்ன நடக்கின்றது என்று தமிழர்களுக்கு தெரிவதில்லை. --- மலேயா நம்பியார்.

நம்பியார் எங்கே பிறந்தாலும், எங்கே இருந்தாலும் வடுகன்தானே. இந்த வடுகனுக்கு தமிழர்கள் பற்றிய கவலை என்ன ??
ஆகம வழிபாடு என்பது தமிழர்களுக்கு தனித்துவமானது. அதில் ஆலயங்கள் சிறப்புற நடத்த என்ன செய்ய வேண்டும் என்பதை தமிழர்கள் அறிவர்.
அப்படியிருக்க குடும்ப அமைப்பு, பாரம்பரியம் என்ற எதுவுமற்ற வடுக நம்பியவர்களுக்கு, தமிழர் - நாட்டுக்கோட்டை நகரத்தார் கட்டிய ஆலயங்கள் குறித்த கவலை வேண்டாம்.

நம்பியாரின் பின்னே நிற்கும் மலேசிய ராமசாமி திராவிடமும் சரி, அந்த ராமசாமிக்கு இங்கே கொம்பு சீவும் தமிழகத்து திராவிடவாதிகளும், தொடர் அரசியல் செய்வது நன்றாகவே தெரிகின்றது.
தமிழகத்தில் உள்ள நாயுடுகள் உருவாக்கிய அண்மைக்கால பெருமாள் கோவில்களில் நீக்கமற தீண்டாமையும், முழுக்க முழுக்க அவர்களின் நிர்வாகமும் நடந்து வருகின்றது. நம்பியார்களும் நம்ம ஊரு நாயுடுகளும் ஒரு முறை கூட வாய் திறக்கவேயில்லை.


அவ்வளவு ஏன் ?? உயிர்மை என்ற போலி புரட்டு ஊடகம் நடத்தி வரும் முத்துகிருஷ்ண தேவராயன் என்ற தெலுங்கு எழுத்தாளன், ( தமிழில் எழுதி சேவை செய்யும் தெலுங்கர் ), முன்னர் வடுக நாயுடுகளால் நடந்த சாதி வன்கொடுமையினை, சிறுபான்மையினர் இனக்குழுவின் தனிப்பட்ட நியதிகளில் பெரும்பான்மை மக்கள் தலையிடக் கூடாது என்று அறிக்கையும் வாசித்தார்.

இவர்தான் ஊர் ஊறாகச் சென்று சாதி எதிர்ப்பு மாநாடுகள் நடத்துபவர். இவருடன் கைகோர்த்த நம்பியாரும், பினாங்கு திராவிட ராமசாமியும் தற்போது தமிழர் கைகளில் ஒரு கோவில் நிர்வாகமும் இருக்கக் கூடாது என்பதை கால அட்டவணையிட்டு காரியமாற்றுகின்றனர். நிற்க.
மலேசியாவில் முதலீட்டு வணிகத்திற்கு சென்ற நகரத்தார்கள், வழிபாட்டிற்கான கோவில்களை வழமையாகவே கட்டி, திருப்பணி செய்து பரிபாலனம் செய்தும் வருகின்றனர். தாங்கள் கட்டிய கோவில்களை நிர்வாகம் செய்வதில் கேரளத்தவருக்கோ, மலேசிய வாழ் நாயுடுகளுக்கோ என்ன வகையான பொச்சரிப்பு என்றுதான் தெரியவில்லை.

எப்பவுமே தமிழர்கள் உருவாக்கிய எந்த ஒரு அமைப்பையும் காத்திருந்து கொத்திச் செல்வது வடுக வந்தேறிகளின் இயல்பு. அவர்கள் நிலைப்பாடு இப்படியிருக்க, தமிழர்களான நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் தங்களின் தமிழ் அடையாளத்தை விடுத்து, தன வைசியர் என்று மலேசியாவில் கோலம் கொள்வதும் எந்தவகை நியாயம் என்று புரியவில்லை.
அதே வேளையில் தன வைசிய என்ற அடையாளத்தை விடுத்து, ஏனைய தமிழர் இனக்குழுக்களுடன் தொடர்ந்து பண்பாட்டு ஒருங்கிணைப்பை பேணிவரவேண்டியது அங்கே உள்ள நகரத்தகர்களின் தலையாய கடமையாகும்.

இன்றைய தலைமுறையினருக்கு மலேசிய மண் சார்ந்த புலம்பெயர் இனக்குழுக்களில் யார் தமிழர் ?? யார் தமிழர் அல்லாதவர் ?? என்பதை நன்கு கண்டுணர வேண்டும்.
இல்லை என்றால் தொடர்ச்சியாக நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் செய்த பல அறிய பண்பாட்டுத் தடையங்களை, தடம் இல்லாமல் கபளீகரம் செய்துவிடுவார்கள் இந்த வடுகர்கள்.
காலம் காத்திருப்பதில்லை. ஆனால் நாம் விழிப்படையாமல் இருந்தால் கடவுளாலும் உதவ முடியாத சூழல் வந்தடையும்.
நாம் யாருடன் இருக்க வேண்டும்; நம்முடன் யார் இருக்க வேண்டும் என்பதில் ஒவ்வொரு தேசிய இனமும் விழிப்பாய் இருக்க வேண்டும். மாற்றானை உறவென்று நம்பாமல், தமிழர் இனக்குழுக்களின் ஓர்மையினை நோக்கிய பயணத்தை தொடங்க வேண்டும்.

ஏரகத்து முருகன் துணை நிற்பான்.

கட்டுரை ஆக்கம் :
வேணும் நித்ய கல்யாணி உடனாய கைலாசநாதர் துணை.
--- மேலவட்டகை மெய்கண்டான் .

No comments:

Post a Comment