Saturday 16 August 2014

கிருஷ்ண ஜெயந்தி

கண்ணன் பிறந்தான் – எங்கள்
கண்ணன் பிறந்தான் – இந்தக்
காற்று அதை எட்டுத் திசையிலும் கூறிடும்
திண்ணம் உடையான் – மணி
வண்ணம் உடையான் – உயர்
தேவர் தலைவன் புவிமிசைத் தோன்றினன்
பண்ணை இசைப்பீர் – நெஞ்சில்
புண்ணை ஒழிப்பீர் – இந்தப்
பாரினிலே துயர் நீங்கிடும் என்று இதை
எண்ணிடைக் கொள்வீர் – நன்கு
கண்ணை விழிப்பீர் – இனி
ஏதும் குறைவில்லை, வேதம் துணையுண்டு
அக்கினி வந்தான் – அவன்
திக்கை வளைத்தான் – புவியார்
இருள் பொய்மைக் கலியை மடித்தனன்
துக்கம் கெடுத்தான் – சுரர்
ஒக்கலும் வந்தார் – சுடர்ச்
சூரியன், இந்திரன், வாயு, மருத்துக்கள்
மிக்க திரளாய் – சுரர்,
இக்கணம் தன்னில் – இங்கு
மேவி நிறைந்தனர், பாவி அசுரர்கள்
பொக்கென வீழ்ந்தார் – உயிர்
கக்கி முடித்தார் – கடல்
போல ஒலிக்குது வேதம் புவிமிசை
சங்கரன் வந்தான் – இங்கு
மங்கலம் என்றான் – நல்ல
சந்திரன் வந்து இன்னமுதைப் பொழிந்தனன்,
பங்கம் ஒன்று இல்லை – ஒளி
மங்குவதில்லை, – இந்தப்
பாரின்கண் முன்பு வானத்திலே நின்று
கங்கையும் வந்தாள் – கலை
மங்கையும் வந்தாள் – இன்பக்
காளி, பராசக்தி அன்புடன் எய்தினள்,
செங்கமலத்தாள் – எழில்
பொங்கும் முகத்தாள் – திருத்
தேவியும் வந்து சிறப்புற நின்றனள்

கண்ணன் பிறப்பு 

நம் பாரத நாட்டில் பல நூற்றாண்டுகளாக கலாசாரம்பண்பாட்டை பேணிக் காக்கும்வகையில் பல உற்சவங்கள்பண்டிகைகள்விரதங்கள்திருவிழாக்கள்கொண்டாடப்பட்டு வருகின்றன
இதன்மூலம் நம்மை வாழ வைக்கும்இறைவனுக்கும்இயற்கை சக்திகளுக்கும் நன்றியையும் பிரார்த்தனையும்சமர்ப்பிக்கின்றனர்இவ்வாறு நாடு முழுவதும் உற்சாகமாகவும் பக்திப்பெருக்குடனும் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று கிருஷ்ண ஜெயந்திஇதுஸ்ரீஜெயந்திஜென்மாஷ்டமிகோகுலாஷ்டமிராச லீலாதகிஅண்டி என பலபெயர்களில்பல வடிவங்களில் அவரவர் வழக்கப்படி இப்பண்டிகையை கொண்டாடிமகிழ்கின்றனர்.



5222 ஆண்டுகளுக்கு முன்பு பகுள அஷ்டமிதேய்பிறை திதியில் ரிஷப லக்னம்ரிஷபராசிரோகிணி நட்சத்திரத்தில் கிருஷ்ணாவதாரம் நிகழ்ந்ததாக சாஸ்திர அளவியல்கணக்குகள் மூலம் தெரிய வருகிறதுவேத காலத்தில் இருந்து வழிபட்டு வரப்படும்ஒரு வழிமுறைதான் ஸ்ரீநாராயண வழிபாடுவேதத்தில் நாராயண சூக்தம் என்ற பகுதிஉள்ளதுஇதன்மூலம் கிருஷ்ண வழிபாடு மிகவும் தொன்மை வாய்ந்தது என்பதைஅறியலாம்ஜோதிட சாஸ்திரத்தில் அஷ்டமிநவமி ஆகிய இரண்டு திதிகள் மிகவும்பிரசித்தம்இந்த திதிகளில் எந்தவிதமான சுபகாரியங்கள்புதிய முயற்சிகளைதொடங்குவதில்லை என்பதை மக்கள் வழக்கமாக வைத்திருக்கின்றனர்இந்தநடைமுறைகூட நமது பழக்க வழக்கங்களில் ஏற்பட்டதுதான்.

மற்ற திதிகள்போல இந்த இரண்டும் நல்ல திதிகளே என்பதை உணர்த்தும் பொருட்டேராமாவதாரத்தில் மகா விஷ்ணுநவமி திதியில் புனர்பூச நட்சத்திரத்தில் அவதரித்ததினத்தை ஸ்ரீராமநவமி என்று கொண்டாடுகிறோம்கிருஷ்ணாவதாரத்தில் அஷ்டமிதிதியில் ரோகிணி நட்சத்திரத்தில் ஸ்ரீ கண்ணனாக அவதரித்த தினத்தைகோகுலாஷ்டமி என்று கொண்டாடுகிறோம். ‘எல்லாவற்றிலும் நான் உறைகின்றேன்என்று பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் நமக்கு உணர்த்தியிருப்பதன்வெளிப்பாடே இதுஇப்படி ஒவ்வொரு பண்டிகையிலும் பல சூட்சும கருத்துகள்,தத்துவங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.


பகவான் கிருஷ்ணர் குழந்தை அவதாரமாக நம் வீட்டுக்கு வந்து அருள்பாலிப்பதேகோகுலாஷ்டமி பண்டிகையின் முக்கிய அம்சமும்நோக்கமும் ஆகும்.அதனால்தான் கிருஷ்ண ஜெயந்தியன்று வீட்டை கழுவி சுத்தம் செய்துஅரிசிமாவால் கோலமிட்டுமாவிலை தோரணங்களால் அழகுபடுத்துவர்வாசலில்தொடங்கி பூஜை அறை வரை குழந்தையின் கால் தடங்களை அரிசி மாவால்பதிப்பார்கள்ஆலிலை கிருஷ்ணன் தனது பிஞ்சு பாதங்களை அடிமேல் அடி வைத்துவீட்டுக்குள் தத்தித்தத்தி நடந்து வருவதாக ஐதீகம்.


கிருஷ்ணனின் படத்தை அலங்கரித்துமாலைகளும்மலர்களும் சூடி அவனுக்குபிடித்தமான வெண்ணெய்இனிப்பு வகைகள்சீடைமுறுக்குதேன்குழல்பொங்கல்போன்ற நைவேத்யங்கள் படைத்து அவரவர் குடும்ப வழக்கப்படி விரதம் இருந்துபூஜைகள் செய்து வழிபடுவர்அந்த நீல வண்ண கண்ணன் நம் இல்லம் வந்துஅருள்புரிய மனதார வேண்டி பிரார்த்தனை செய்கின்றோம்இதைத்தான்சூடிக்கொடுத்த சுடர்க்கொடியான ஆண்டாள் தனது திருப்பாவையில் இவ்வாறுபாடியருளியுள்ளார்.



மாயனை மன்னு வடமதுரை மைந்தனை
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை
தாயை குடல்விளக்கஞ் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்து நாம் தூவித்தொழுது
வாயினாற்பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவா னின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய்...’


என்று பாடியருளிவிஷ்ணுவை வழிபட்டால் எல்லா விதமான தடைகளும்,பிழைகளும் தீயினில்பட்ட தூசாக அழியும் வேண்டும் என்று கூறியுள்ளார்.
பெரும்பாலும் ஆவணி மாதத்தில்தான் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படும்இந்தஆண்டு ஆடி மாதத்தில் ஒன்றும் ஆவணி மாதத்தில் ஒன்றும் வருகிறதுநாளைகோகுலாஷ்டமி கொண்டாடப்படுகிறதுஒரு மாதம் கழித்து கிருஷ்ண ஜெயந்திவருகிறது.

 

No comments:

Post a Comment