Wednesday 27 August 2014

விநாயகர் சதுர்த்தி பிறந்த கதையும் விரத முறையும்


விநாயகர் சதுர்த்தி விழா ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் வளர்பிறை  சதுர்த்தி திதியன்று இந்துக்களால் கொண்டாடப்படுகிறது .
விநாயகர் பார்வதிக்கும் சிவபெருமானுக்கும் முத்த மகனாக கொள்ளபடுகிறார்

காய் கனி அலங்காரம்
.

ஒருமுறை பார்வதி தேவி  நீராட செல்லும் போது தமக்கு ஒருஅழாகான பிள்ளை வேண்டும் என்று ஆசைப்பட்டார் . அப்போது அவர் தாம் குளிக்க வைத்திருந்த மங்கலப்பொருட்களான சந்தனம் , மஞ்சள் , பன்னீர் போன்ற பொருட்களின் கலவையால் ஒரு அழகிய பாலகனின் உருவம் செய்து அதற்கு உயிர் கொடுத்தார் அதுவே பிள்ளையார் . (குறிப்பு : பிள்ளையாரை பார்வதி தம் உடலில் உள்ள அழுக்குகளை திரட்டு செய்யவில்லை ) பின் தனது மகனை காவலுக்கு வைத்து விட்டு நீராட சென்றார் .
 அந்த சமயத்தியில் சிவபெருமான் உள்ளே பிரவேசிக்க முற்படும்போது தம் தாயின் அணையை  ஏற்று அவரை விநாயகர் தடுக்கிறார் . அப்போது இருவருக்கும் கடும் போர் நடைபெறுகிறது .போரில் விநாயகர் தலையை சிவன் கொய்துவிடுகிறார் .
குளித்து விட்டு வெளியில் வந்த அம்மை இந்த காட்சியை கண்டு நடந்தவற்றை கூறி அழுகிறார் .உடனே நந்தி தேவரை அழைத்து வடக்கு நோக்கி செல்லச்செல்ல உன் வழியில் எந்த உயிரினம் தென்படுகிறதோ அவற்றின் தலையை கொய்து வரும்படி கட்டளையிடுகிறார் . அவ்வாரே நந்தியும் செல்லுகையில்  வழியில் ஒரு யானை தென்பட அதன் தலையை கொய்து வந்து சிவன் முன் வைக்க அவர் அந்த தலையை உடலுடன் இணைத்து உயிர் கொடுத்தார். அன்றில் இருந்து கஜானனர் என்று பெயர் பெற்றார் . பிள்ளையாருக்கு `கணேசன்' என நாமம் சூட்டித் தமது கணங்களுக்கு கணபதியாகவும், நியமித்தார் என `நாரதபுராணத்தில்' தெரி விக்கப்பட்டுள்ளது. இதுவே பிள்ளையாரின் அவதார சரிதம். இந்த நிகழ்ச்சி நடந்தது. சுக்கில பட்ஷ சதுர்த்தியன்றாகும். அன்றிலிருந்து அத்தினம் விநாயகர் சதுர்த்தி என்ற புனித தினமாக ஆகிவிட்டது. 


அப்போது எல்லா தேவர்களும் விநாயகரின்   அழகு கண்டு வியந்தனர் .இதைப்பற்றி தேவலோகம் முழுவது பேசப்பட்டது அப்போது சந்திரன் தம்மைவிட  அந்த பாலகன் அழகா என்று காண கைலாயம் சென்றான் . அப்போது விநாயகர் ஆனந்தமாய்த் திருநடனம் செய்து கொண்டிருந்த வேளையில் அங்கே வந்த சந்திரன், விநாயகரின் பெருத்த தொந்தியையும், துதிக்கையையும், அவற்றைத் தூக்கிக் கொண்டு அவர் ஆடுவதையும் பார்த்து விட்டுப் பெரிதாய்ச் சிரித்தான். அவன் தன்னைப் பார்த்து எள்ளி நகையாடியதைக் கண்ட விநாயகர் அவனின் கலைகள் தேய்ந்து அழகற்று போனவை, தேய்ந்தவையாகவே இருக்கும் எனக் கூறவே, மனம் வருந்திய சந்திரன் அதற்குப் பரிகாரமாகவும், தன்னுடைய தவற்றை நீக்கவும் சதுர்த்தி தினத்தன்று விரதம் இருந்து விநாயகரின் அருளைப் பெற்றான்.
அப்போது விநாயகர் சந்திரனிடம், “இன்று முதல் சுக்கில பட்சச் சதுர்த்திகளில் உன்னைப் பார்ப்பவர்களுக்குப் பாவம் சம்பவிக்கும், எனவும், அதைப் போக்கிக் கொள்ளச் சதுர்த்தி விரதம் இருந்து பூஜித்தால் அவர்களுக்கு நன்மையே விளையும்!” 

 எனவும் நீ மாதத்தில் சதுர்த்தசி முதல் அமாவசை வரை தேய்ந்தும் அமாவசை முதல் பௌர்ணமி வரை வளர்ந்தும் காணப்படுவாய் என்று சொன்னார்.  இந்த விரதமே சங்கடஹர சதுர்த்தி விரதம் என அழைக்கப் படுகிறது. ஒவ்வொரு பெளர்ணமிக்குப் பின்னரும் வரும் ஒவ்வொரு சதுர்த்தியும் சங்கடஹர சதுர்த்தி எனவும், ஆவணி பெளர்ணமியின் பின்னர் வரும் சங்கடஹர சதுர்த்தி, மகா சதுர்த்தி எனவும் சொல்லப் படுகிறது. வருடம் பூராவுமோ அல்லது மகா சங்கடஹர சதுர்த்தி அன்றிலிருந்தோ விரதம் இருக்க ஆரம்பித்து, சுக்ல பட்சச் சதுர்த்தி ஆன விநாயக சதுர்த்தி அன்று விநாயகருக்குப் பூஜைகள், செய்து வழிபட்டு வருவோருக்குச் சகல நன்மைகளும் கிட்டும் எனவும் கூறினார். 



விநாயகர் சதுர்த்தி விரதம் :

இந்த விரதம் மிகவும் எளிமையான விரதம் . மஞ்சள் , பசுஞ்சாணம் , மண் , மாவு இவைகளை கையால் பிடித்து சந்தனம் குங்குமம் இட்டு சிறிது புஸ்பம் சார்த்தி நமக்கும் தெறித்த கணபதி மந்திரத்தை சொல்லி வழிபடலாம் . 

சங்கடஹர சதுர்த்தி நாளில் அதிகாலையில் நீராடி, விநாயகர் படத்திற்கோ , செப்பு அல்லது வெள்ளித் திருமேனி விநாயகருக்ககோ அல்லது மன்னால் செய்த கணபதிகோ  நம்மால் முயன்ற பூக்களையும் அருகம்புல் மாலை சார்த்தியும் எளிய நிவதேனம் செய்து விரதமிருந்து பிள்ளையாரை வழிபட நல்ல பலன் கிட்டும் என்பது ஐதீகம். சங்கடஹர சதுர்த்தி அன்று மாலை வரை உணவு அருந்தாமல் விரதம் இருக்க வேண்டும். முடியாதவர்கள் நீர் ஆகாரம் மட்டும் அருந்தி விரதமிருக்கலாம். மாலையில் அருகில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சென்று விளக்கு ஏற்றியோ அல்லது வீட்டில் விளகேற்றி மாலையில் சந்திரனை கண்டபின் விரதத்தை நிறைவு செய்யவேண்டும் . 

  வருடத்தின் அனைத்து சங்கடஹர சதுர்த்தி வழிபாடுகளையும் செய்த பலன் ஒரு மஹா சங்கடஹர சதுர்த்தியில் வழிபாடு செய்வது கிடைக்கப் பெறும்.


No comments:

Post a Comment