Monday 4 August 2014

சாமான் பரப்புதல் பற்றி ஒரு பா

நமது நகரத்தார் திருமணங்களில்  சாமான் பரப்புவது என்பது சம்பிரதாயம் மட்டுமல்ல .ஒரு கலையாகவும் இருக்கும் .அடுக்கி வைக்கபட்டிருக்கும் . சாமான்களைக் பற்றி ஒரு  பவாக்கம் இதோ

" பொங்கலிடும் உருளியுடன் ,  விளகுச்சட்டி
 புதுவிதத்தில் அன்னமுள்ள சரவி  ளக்கு
 மங்கலத்தைத் தரும்மாட விளக்கு ,கூசா
 மணக்கவைக்கும் டிக்காசப்  போணி மூன்று
  தங்கநிறம்  போல்தாயும்  முடிச் சட்டி
 தாமிரத்தில் மிகப்பெரிய தண்ணி அண்டா
 சிங்கரா மாப்பிள்ளைக்கு சோறே டுக்க
 தெளிவான டிபன்பாக்ஸ்ம் சேர்த்து வைத்தார் 

 முக்காலி , தீவட்டிஅண்டா தட்டு
 முளைப்பாரி ,சருவங்கள் எட்டு மேலும்
 எக்காலும் தண்ணீரைத் தூக்கி வந்து
 இயல்பாக வைத்திருக்க குடங்கள் பத்து
 தக்காளிப் பழநிறத்துப் பெண்ணுக் காக
 தங்கம்போல் மின்னலிட  வெங்கலத்தில்
 சொக்கவைக்கும் சாமான்கள் நிறையச் சேர்த்தார் !
 தொழிலகம் போல் வீட்டிற்குள் அடுக்கிவைத்தார் !  "


சாமான் பரப்புதல் 

No comments:

Post a Comment