Monday 4 August 2014

எங்கள் ஆயா ..



ஆத்தா அப்பச்சி அப்பத்தா ஆயா
அயித்த அம்மான் ஐயா என 
நகரத்தார் உறவுகள் 
எத்தனையோ இங்கிருக்க
அனைத்து உறவுகளையும்
அனுசரிக்கும் ஆயாவை
கவிஎழுதி வருணிக்கும்
சிறுமுயற்சி இதுவென்பேன்

கருவிலே நான்தூங்கி
காலம் கழிக்கையிலே
கண்ணும் கருத்துமாய்
கருவளர காத்தவளே

ஆத்தா என்னை பொறந்தள்ள
ஆதரவாய் இருந்தவளே
அங்கமெல்லாம் நொந்தவள
அருகிருந்து பார்த்தவளே

பச்சஉடம்புக்காரி உன்மகளுக்கு
பத்தியமா சமைச்சவளே
பச்சபுள்ள நான்தேறிவர
பக்குவங்கள் சொன்னவளே

பசிக்குநான் அழுகையில
பக்குவமா பால்கொடுக்க
ஆத்தாளுக்கு பழகிகொடுத்த
அன்பான ஆயாளே

பால்குடிச்சும் நான் அழுதா
பூச்சி கடிச்சோ, வயிறு வலிச்சோ
மப்பு தட்டுச்சோ, மடிதான் தேடுச்சோ
என்றெல்லாம் பதரிடுவா அன்பான என்னாத்தா

பதராதே என்மகளே
பட்டியலும் போடாதே
இதுஇதுக்கு இப்படித்தான்அழுகுமுன்னு
இலக்கணங்கள் சொன்னவளே

ஆசையாகபெத்தாலும் ஆஸ்த்தியாகபெத்தாலும்
மல மலன்னு பெத்தாலும்
மலைப்பேதும் இல்லாம
மனதாரப் பார்பவளே

ஊருக்கு தட்டுவைத்து
உள்வீட்டில் அழைத்துவந்து
சங்கிலிகாப்போடு தண்டையுமிட்டுச்
பிஞ்சுவிரலில் மோதிரமும்போட்டு

முத்தமிட்டு மகள் கையில்
கொடுத்து மகிழிகின்ற
குணம்படைத்த ஆயாளே

அம்மான் பிள்ளைகளோ
அழுதுகொண்டே கீழிருக்க
என்னை மட்டும் மடிமீது
எபொழுதும் வைச்சவளே

பொன்னே மணியே
புதுவைர ரத்தினமே
காணகிடைக்காத
கனகமனி பூச்சரமே
என்றுதினம் தாலாட்டி
என்னையே துங்கவைப்ப
என்னலமே பெரிதென்று
தன்னலத்தை கருதமாட்ட

கோடைக்கால விடுமுறைய
என்னாளும் மறந்தததில்ல
ஆயாவீடு செல்லாம
விடுமுறையும் கழிந்ததில்ல

பரமபதம் பல்லாங்குழி
பலமுறைதான் ஆடினாலும்
பேரன்பேத்தி புன்முகத்தை
பாத்துபாத்து தோத்துபோவ

கந்தரப்பம் பணியாரம்
நெய்முருக்கு அதிரசம்
வகைவகையா பலகாரம்
வேளைக்கொன்னு தந்திடுவ

அய்யாவின் அருமைபெருமைகளை
மறக்காம சொல்லிடுவ
ஆன்மீக அறநெறிகளை
கதை கதையா சொல்லிடுவ

விடுமுறைய விட்டுட்டு
வீடுவரத் மறுத்திடுவோம்
ஏக்கத்த உள்ள வைச்சு
ஆத்தா வீட்டுக்கு அனுப்பிவைப்ப

உடன் அனுப்பும் மனகோலம்
முனைமுறியா முறுக்கு
தேங்குழல் சீடைவகை
என்றைக்கும் நாவினிக்கும்

சித்தாடைகட்டும் சிறுவயது முதற்கொண்டே
பூப்படைவதற்கும் மணவரைக்கும்
சீர்கொடுக்கும் ஆயாளை
செட்டிநாட்டின் சிகரத்தில் வைத்திடுவோம்

மொறை எதுவும் வாங்காம
சடங்கு எதுவும் செய்யாம
முழுநேர ஆயாவாய்
முத்தலைமுறைக்கு உழைப்பவளே



அனுபவமே படிப்பாக
மகப்பேறு மருத்துவராய்
குழந்தை மருத்துவராய்
பேரப்பிள்ளை வளர்ப்பவராய்

வகைவகையாய் சமைப்பவராய்
ஓய்வின்றி உழைப்பவராய்
மொத்ததில் நீ
Speed 1 Tera Hertz
Memory 1Gira Byte
எந்திரனுக்கும் மேலாவாய்
வள்ளலாய் ஆயாவை
வாழ்விலே பார்கிறேன் .

- சிட்டாள் திருநாவிற்கரசு

No comments:

Post a Comment