Monday 4 August 2014

இல்லறத்தில் இருந்துத் துறவு ............




இல்லறத்தில் இனிமை கண்டபின் துறவு ப+ணுவது என்பது தமிழ் இலக்கண நூல்கள் தரும் முறைமை ஆகும். இந்நிலைப்பட்ட வாழ்வு இவர்களிடம் காணப்படுகிறது. மணநாளில் மணிமுடி கொண்டு மாப்பிள்ளை அலங்காரம் செய்யப் பெறுவார். அறுபதாம் ஆண்டு நிறைவை இவர்கள் மணிவிழா எனக் கொண்டாடுகிறார்கள். இவர்களின் பெரும்பான்மை நடைமுறை மற்ற குலங்களிலும் ஏற்கப் பெற்றுள்ளது. இந்த அறுபதாம் ஆண்டு நிறைவில் வைக்கப்படும் அணியப்பெறும் முடி, அணிகள் போன்ற வாழ்வின் நிறைவை, துறவை , ஆன்மீக நிலையை எடுத்துரைப்பதாக அடையாளமாக உள்ளது. இந்நடைமுறை சமண சமய வயப்பட்டதாகும். இம்மதத்தில் இருந்து இவர்கள் இதனைப் பெற்றிருக்க வேண்டும்.

அறுபதாண்டு மணிவிழா பெற்றவர்கள் உபதேசம் பெற்று தினமும் சிவப+சை செய்ய வேண்டும் என்பது கட்டளையாகும். இந்நிலையில் தங்கள் வாழ்வு முழுவதும் பக்திச் சிந்தனையிலேயே இருக்கின்றனர் என்பது அறியத்தக்கது.

No comments:

Post a Comment